தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

0
174

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

கற்றாழையை அதன் மணம் மற்றும் கசப்பு தெரியாமல் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்ப்போம்.

இதற்கு நன்கு முற்றிய கற்றாழையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை நறுக்கும் பொழுது மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அது விஷத்தன்மை மிக்கது. எனவே அது சற்று வடிந்ததும் நன்றாக கழுவி விட்டு பின் பயன்படுத்தவும்.

கற்றாழையில் வைட்டமின் ஏ, பி1, பி6, சி, ஈ, ஆகியன உள்ளன. பொட்டாசியம், கால்சியம், மாங்கனிசு மற்றும் 18 வகையான அமினோ அமிலங்களும் உள்ளன. இதை ஜூஸாக வீட்டில் செய்து சாப்பிட்டு வருவது தான் நல்லது.

மஞ்சள் நிற திரவம் வடிந்ததும் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கி நடுவில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்துக் கொள்ளவும். இதில் அலோயின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. எனவே கற்றாழை ஜெல்லை ஏழு முறை நீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கழுவிய கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி, 2 ஸ்பூன் தயிர், அரை மூடி எலுமிச்சை சாறு, சுவைக்கு சிறிது உப்பு, சேர்க்கவும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு சேர்க்க வேண்டாம். இதை அரைத்து எடுத்தால் கற்றாழை ஜூஸ் ரெடி.

இந்த கற்றாழையை 3-லிருந்து 6 வாரம் வரை தொடர்ந்து குடிக்கலாம். பிறகு சிறிது இடைவெளி விட வேண்டியது அவசியம். இதை தயாரித்த அரை மணி  நேரத்திற்குள் குடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான பலன்கள் கிடைக்கும். அதேபோல் இந்த பானத்தை குடித்த பின் அடுத்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது.

1. உடல் எடை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடையை குறைக்க உதவும். நடைப்பயிற்சி முடிந்த பின்னால் இதைக் குடித்து வர விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.

2. சிலர் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவர். இவர்கள் இந்த பானத்தை அருந்தி வர உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

3. இது நமது மலக்குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் இதை குடித்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. செரிமான கோளாறுகளையும் நீக்கிவிடும்.

4. வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் போக்கும்.

5. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பானம் ஒரு அருமையான மருந்து. ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்ட உடன் இந்த பானத்தை அருந்தக்கூடாது. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடனடியாக குறைக்கக்கூடியது.

6. உடலில் எந்தப் பக்கத்தில் நச்சுக்கள் இருந்தாலும் அதை நீக்கக்கூடியது. உடலில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்களை மீண்டும் புதுப்பிக்கும்.

7. ரத்த அழுத்தம்,  புற்றுநோய் கட்டி பிரச்சனைகள், ஹீமோகுளோபின் குறைவு, போன்றவைகளுக்கு இது நல்ல தீர்வு தரும்.

8. சருமத்தில் ஏற்படும் அரிப்பு வெடிப்பு போன்றவற்றை போக்கக்கூடியது.

9. எலும்பு பகுதியில் ஏற்படும் வீக்கம் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கும்.

10. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை எலுமிச்சை சாறு சேர்க்காமல் குடித்து வர வயிற்றில் உள்ள புண்களை சீக்கிரம் ஆற்றும். வாய்ப்புண்ணையும் நீங்க செய்யும்.