தீராத முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலியில் இருக்கிறீர்களா!! இந்த பாலை குடியுங்கள்!!

0
40

தீராத முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலியில் இருக்கிறீர்களா!! இந்த பாலை குடியுங்கள்!!

முழங்கால் வலியால் பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்களும் தினமும் அவதிப்படுகின்றன. நம்முடைய முழு எடையையும் இந்த முழங்கால் தாங்குவதால் முழங்கால் வலி ஏற்படுகிறது. எனவே அனைவருக்கும் இருக்கக்கூடிய முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றை வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கசகசா
சோம்பு
கொப்பரை தேங்காய்
கற்கண்டு
நெய்
பால்

முழங்கால் வலி ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு. இந்த கால்சியம் கசகசாவில் மிகுந்து காணப்படுகிறது. அடுத்து இந்த சோம்பிலும் கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கிறது இந்த கால்சியம் நம் உடலுக்கு கிடைப்பதால் எலும்புகள் பலமாக காணப்படும்.

மேலும் சோம்பு வாயு பிரச்சனை அசிடிட்டி தலைவலி மலச்சிக்கல் என்று பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது. சோம்பு கண்பார்வை பிரச்சனையை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படக்கூடிய முழங்கால் வலி இடுப்பு வலி மூட்டு வலி என அனைத்தையும் நொடியில் குணமாக்குகிறது.

கொப்பரை தேங்காயில் நமக்கு தேவையான அளவு கால்சியம் இருக்கிறது. இது எலும்புகளுக்கு பலத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சொத்தையும் அளிக்கிறது.

கற்கண்டு நம் உடலுக்கு கால்சியம் சத்தை கொடுத்து நம் உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

செய்முறை:
1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு நெய்விட்டு ஒரு ஸ்பூன் அளவு கசகசாவை சேர்த்து நெய்யில் வறுக்க வேண்டும்.

2. கசகசாவை நெய்யில் வறுத்த பிறகு அதனுடன் ஒரு கப் அளவு பாலை சேர்த்துக் கொள்ளவும்.

3. அடுத்து இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சோம்பை சேர்த்துக் கொள்ளவும்.

4. அடுத்து கால் பங்கு அளவு கொப்பரை தேங்காயை இதில் சேர்த்து பிறகு சிறிதளவு கற்கண்டையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. இவ்வாறு இந்த பாலை நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்து பிறகு ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.

6. இதை வடிகட்டாமல் அப்படியே குடித்து வரலாம். மேலும் இதில் சேர்த்து இருக்கக்கூடிய கொப்பரை தேங்காயை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தயாரித்த இந்த பாலை இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வருவதால் முழங்கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி என உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து வலிகளும் உடனடியாக சரியாகிவிடும். மேலும் எலும்புகளுக்கு நல்ல ஒரு பலத்தை அளிக்கும்.

இது மட்டுமல்லாமல் உடல் சோர்வு தொண்டையில் கரகரப்பு தொண்டை வலி அசிடிட்டி மலச்சிக்கல் கண்பார்வை குறைபாடு வாயு பிரச்சனை என ஏராளமான வலிகளை இந்த பாலின் மூலம் தடுக்க முடியும்.

author avatar
CineDesk