மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகிறீர்களா..? அப்போ நல்லெண்ணெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அங்கு தடவுங்கள்!!

0
55
#image_title

மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகிறீர்களா..? அப்போ நல்லெண்ணெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அங்கு தடவுங்கள்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த வேண்டும். அதுவும் இயற்கை முறையில் குணப்படுத்திக் கொண்டால் இன்னும் நல்லது.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

ஆரோக்கியமற்ற உணவு, ஜவ்வு தேய்மானம் ஆகுதல், எலும்பு தேய்மானம் ஆகுதல், வயது மூப்பு
வேலை பளு, உடல் பருமன்

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*முடக்கத்தான் கீரை

*நல்லெண்ணெய்

செய்முறை…

ஒரு கப் முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள முடக்கத்தான் கீரையை சேர்த்து ஒரு சூத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை விழுதை சேர்த்துக் கிளறி கொள்ளவும்.பிறகு 1/2 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும். முடக்கத்தான் கீரையின் சாறு நல்லெண்ணெயில் கலந்து நன்கு கொதித்து வர வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இதை மூட்டுகளில் மேல் தினமும் தடவி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமாகும்.