மோசமான வாயு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் அஷ்ட சூரணம் – தயார் செய்வது எப்படி?

0
184
#image_title

மோசமான வாயு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் அஷ்ட சூரணம் – தயார் செய்வது எப்படி?

உடலில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருந்தால் அவை உடலை பாதிக்கச் செய்து விடும். மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் இந்த வாயுப் பிரச்சனையை சரி செய்ய அஷ்ட சூரணம் பயன்படுத்துங்கள். 8 வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த அஷ்ட சூரணம் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு – 20 கிராம்
*திப்பிலி – 20 கிராம்
*கட்டி பெருங்காயம் – 20 கிராம்
*சீரகம் – 20 கிராம்
*கருஞ்சீரகம் – 20 கிராம்
*ஓமம் – 20 கிராம்
*மிளகு – 20 கிராம்
*இந்துப்பு – 20 கிராம்

செய்முறை….

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் திப்பிலி, கட்டி பெருங்காயம், சீரகம், கருஞ்சீரம், ஓமம், மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜார் அல்லது உரலில் போட்டுக் கொள்ளவும்.

இதனுடன் சுக்கு மற்றும் இந்துப்பு சேர்த்து நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை….

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் அரைத்த பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து காய்ச்சவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு பின் சாப்பிடவும். இந்த பானம் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை அகற்ற உதவும். செரிமானப் பிரச்சனையை சரி செய்யும்.