திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன?

Sasikala Quit from Politics

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன? சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகிய சசிகலா தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின்  எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி … Read more

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்

TTV Dhinakaran

தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முக்கிய கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும், தேமுதிக … Read more

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கெளதமி கூறியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் பாஜக சார்பில் கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. அந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார். இந்த … Read more

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Candidate Selection Issue in AIADMK

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வில் தான் … Read more

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

களவானி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரபல நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்‌ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்‌ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் அக்‌ஷயா. விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் … Read more

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு சுமார் 50 லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியது. அந்த இணையதளத்தில் இதுவரை சுமார் 50 லட்சம்பேர் … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

பிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..!

How to worship Ganapathy

பிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..! நாம் எவ்வித நல்ல காரியங்களை தொடங்கினாலும், முதலில் முழு முதல் கடவுளான பிள்ளையாரை வணங்கியப் பின்னர்தான், எவ்வித காரியத்தையும் தொடங்குவோம். அவ்வாறு அவரை எந்த திசையில் வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்… பிள்ளையார் வழிபாடு சிறந்த பலனை தரும். பிள்லையார் தும்பிக்கையானது எப்போது இடது புறமுள்ள அவரின் தாயார் கெளரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பிள்ளையாரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே பிள்ளையாரின் பின்புறம் வீட்டின் … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more