தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு! பேரவைத் தலைவர் தகவல்!

Kalaivanar Arangam

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. அப்போது அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் அப்பாவு போட்டியின்றி அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே அவர் பதவி ஏற்றார். கொரோனா பரவல் காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி … Read more

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து! வேளாண்துறை எச்சரிக்கை!

Fertilizer

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளி சந்தை கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. விவசாயிகள் சங்கத்தினரும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் வேளாண்துறை இயக்குநர் தெட்சிணா மூர்த்தி, மாவட்ட ஆட்சியருடன் சென்று குறுவை … Read more

11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Dr Ramadoss

9ம் வகுப்பு மதிப்பெண் மூலம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் எனக்கூறி மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்பக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நுழைவுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் … Read more

வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

Chennai High Court

வனப்பகுதி நிலத்தை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் சொகுசு விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாது காவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் … Read more

மத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் இடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமுடக்க நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது என்றார். கறுப்புப் பூஞ்சை நோயால் 1,502 பேர் … Read more

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Kodaikanal E-Pass

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி … Read more

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Chennai High Court

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு … Read more

மின்னல் தாக்கி 3 பேர் பலி! கோவிலுக்கு சென்ற இடத்தில் சோகம்!

Lighting

சாத்தூர் அருகே கோவிலுக்கு சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராத்தை சேர்ந்த 6 பேர், வனப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் பலத்த பழை பெய்தது. இதனால், 6 பேரும் கோவில் வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர். இதில், சோலைராஜ் என்பவரின் மனைவி … Read more

தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

Dpi office chennai

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் … Read more

லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து! 17 பேர் உடல் நசுங்கி பலி!

UP Accident

உத்தரப்பிரதேசத்தில் லோடு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சச்சென்டி பகுதியில் லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த லோடு ஆட்டோ மீது மோதிய பேருந்து, பாலத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த … Read more