அடேங்கப்பா!! 1.59 லட்சம் பேரா?… திக்குமுக்காடும் தேர்தல் ஆணையம்!!

Election

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் … Read more

முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் … Read more

செம டென்ஷனில் விஜய்… அதிமுகவுக்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பு…!

vijay

தமிழக தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து தொண்டர்களும் தீயாய் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அரசியலில் பெரிதாக நாட்டமில்லாத விஜய், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயல்கிறார் என்ற செய்தி கேட்டதுமே அதிர்ந்து போனார். அப்பா என்றும் பார்க்காமல் அவருடைய … Read more

ஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!

Tasmac

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கூட்டம், கூட்டமாக குவியும் தொண்டர்களை குஷியாக்குவதற்கு கோழி பிரியாணியும், குவாட்டாரும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரம் என்றாலே பணத்தை விட அதிக அளவில் மதுபானங்களின் விநியோகம் தான் களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க … Read more

இந்த 8 நகராட்சிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… ஏப்ரல் 10 வரை விடுமுறை அறிவிப்பு…!

School

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,276 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அகமதாபாத், வதோரா, சூரத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாய்ந்தது நடவடிக்கை… சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

police

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி.யை தன்னுடைய காரில் ஏற்றிச் சென்ற சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் கண்டுகொள்ளப்படாத இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதானதை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதோடு, அவரை விசாரிக்கவும் கூடுதல்தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்தது. மேலும் பெண் எஸ்.பி-யை புகார் … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

‘பேசாதே… திரும்பி போ’ அதிமுக வேட்பாளரை பேசவிடாமல் துரத்தியடித்த பெண்கள்… பகீர் வீடியோ…!

ADMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி அலுவலகங்கள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியன எல்லாம் முடிவடைந்து, தற்போது களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பலரும் தங்களுடைய தொகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையின் படி வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் , … Read more

BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு… முக்கிய கட்சியின் நட்சத்திர வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்து வருவது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு தன்னுடைய பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு சென்னை ஆஃபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் … Read more

கொரோனா 2ம் அலை தீவிரம்: இன்று முதல் பேருந்துகள் இயங்காது…!

கொரோனா 2ம் அலை தீவிரம்: இன்று முதல் பேருந்துகள் இயங்காது...!

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி … Read more