அமாவாசை நாளில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வளர்பிறை நாட்கள் என்பது அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் ஆகும். எனவே, வளர்பிறையில் புதிய காரியங்களை தொடங்குவது நிறையப்பேர் நலமென்று நம்புகிறார்கள். மேலும் அமாவாசை என்பது சந்திரன் அல்லாத நாள் அதாவது பூமிக்கு அன்று சந்திரன் தெரியாது இருட்டாகவே காட்சியளிக்கும். எனவே, இருட்டாக காட்சியளிக்கும் அந்நேரத்தில் நற்காரியங்களை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்கள். இவற்றில் எது சரி? எது தவறு? என முடிவெடுப்பது சிரமமான காரியம் ஆகும். இதனை வானியல் சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க … Read more

திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உணவுக்கு பின் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை மிக முக்கியம் என்று அவர் கூறி உள்ளார். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இன்று 4:45 மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் … Read more

முதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்கவிருந்த ஆய்வுக்கூடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வெளியூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் தலைமை செயலகத்திற்கு காலையில் வருவதை அவர் வழக்கமாக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய உணவுக்கு அவர் வீட்டிற்கு செல்வார். மீண்டும் மாலை வந்து, இரவு அவர் வீடு திரும்புவார். பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தினமும் இரண்டு துறைகளின் செயல்பாடுகளை … Read more

இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பைக்குகளில் பந்தாவாக வலம் வந்தவர்கள் இப்போது மணிவாசகத்திடம் சரணடைந்து இருக்கின்றனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாசகம் கடைக்கு தான் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். ஏனெனில், கொத்தமங்கலத்தில் பெட்ரோல் விலை மிகவும் வேகமாக அதிகமாகி கொண்டிருப்பதால் கையில் பணம் இல்லாமல் வேறு வழி இன்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர்.பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் … Read more

ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா என்பது ஒரு வகையான கொசு மூலம் பரவும் வைரஸ் என்று சுகாதாரத்துறையில் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறியுள்ளார். வைரஸை பரப்பும் கொசு, நல்ல … Read more

டிஜிட்டல் முறையில் தங்கத்திற்கு தள்ளுபடி!! புதிய திட்டத்தால் பல சலுகைகள்!!

ரிசர் வங்கி தங்கபத்திரத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இத்திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி எனப்படுகிறது. தங்கத்தின் நான்காம் கட்ட விநியோகம் நாளை 12.7.2021 முதல் தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க பத்திரங்கள் கிராம் 4807ரூபாய் என இந்த முறை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. குறைந்த செலவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க பத்திர திட்டம் மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவதற்கு கிராமுக்கு … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்தம்! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இங்கு மக்கள் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதன் காரணமாக உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களை குறைத்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு … Read more

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்! அரசு எடுத்த திடீர் முடிவால் ஷாக்!

இமாச்சல பிரதேசத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஒரு மாதத்திற்குள் சுமார் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்ந்துள்ளனர். சிம்லா மற்றும் மணாலி மலைவாச தலங்களில் சுற்றுலா பயணிகள் விதி முறையை பின்பற்றாமல், மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதனால் கோபமடைந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இமாச்சல பிரதேசத்தை மிகவும் கண்டித்தது. இதன் காரணமாக இமாச்சல பிரதேச அரசு முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் சுற்றுலாப்பயணிகளை ஒடுக்க … Read more

அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள்மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12ஆம் தேதி ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி படங்களை மறந்தாலும் கூட அவரது அரசியல் என்ட்ரி குறித்த பெரிய பில்ட் அப்பை மறக்க முடியாது. ஆனால், அனைத்திற்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து … Read more

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டே வருகிறது. அதில் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more