ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!!

ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!! இந்தியா ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரும் ஏப்ரல் 6 -ல் வெளியிடவுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த பாதையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!! வெளிவந்த புதிய தகவல்!!

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டிடலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீடிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்? தமிழ்நாட்டில் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறித்தியுள்ளது. மேலும் H3N2 என்ற புதிய வகை வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு இந்தியால் இருவர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதே இதற்க்கு காரணம் என்று மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது.ஆகையால் மக்கள் அனைவரும் … Read more

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!! வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு!!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தேசிய பட்டியலின ஆணையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க., செயலாளர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியலின ஆணையம், கடந்த 2019ம் ஆண்டு … Read more

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும் திரவிய பொடிகளால் அபிஷேகம்!!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும்-பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர்’ கரும்புசாறு, எலுமிச்சைசாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொடிகளால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்திருந்து … Read more

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! நாளை காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் உலா. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால துவக்கத்தில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதி மலையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த … Read more

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!! சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மேற்கொள்ளும் மெட்ரோ பயணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மெட்ரோ நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் அந்த நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாடுகளை செய்து தர மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளது. பெட்ரோல்,காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோ பயன்பாட்டை … Read more

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு!

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு! கேரள முதல்வருக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா மாறுபட்ட தீர்ப்பு. இதையடுத்து விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றம் , வரும் 12 தேதி விசாரணை . கேரளாவில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கடந்த அமைச்சரவையில் இருந்த 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!!

வருகைப்பதிவு இல்லையா அபராதம்  ரூ. 1000!! தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம் அதிரடி!! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க ரூபாய் 1000 அபராத கட்டணமாக வசூல் செய்து கல்லூரிகள் கட்ட வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு … Read more