புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்கள் கைது!

புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்கள் கைது!

புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நள்ளிரவில் மது போதையில் சிகிச்சை பெறுவது போல் வந்து மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலமாக அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் காலில் அடிப்பட்டு காயம் என்று சொல்லி நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கு அப்போது பணியில் … Read more

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு.நான்கு கேரளா மாலுமிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக தலையிடக் கோரி தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி முருகன் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு மாற்றம். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதிய மாவட்ட நீதிபதியாக நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தின் மூலையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 … Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பில் சேர வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்கு … Read more

மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

இன்று நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று வருகை தந்தனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும் , வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஆண்டுதோறும் 28 கோடிப் பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வருகை தருகின்றனர். தமிழகத்தில் சிறந்த மருத்துவம் , குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை … Read more

நில ஆக்கிரமிப்பு விதிகளை பின்பற்றாத தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம்-உயர் நீதிமன்ற உத்தரவு!

நில ஆக்கிரமிப்பு விதிகளை பின்பற்றாத தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம்-உயர் நீதிமன்ற உத்தரவு!

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிமுறைகளை பின்பற்றாத, தேவகோட்டை தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. நில ஆக்கிரமிப்பு சட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டால், விதிமுறைகளை பின்பற்றாதா தாசிலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்/ நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தேவகோட்டை பகுதியில் நான் … Read more

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை அவரை நான் மதிக்கவே இல்லை என ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் … Read more

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் டெல்லி காவல்துறை சரண் சிங் மீது இரண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரண் சிங் தான் ராஜினாமா … Read more

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறுகையில். தமிழக நிதி அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக … Read more

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்! சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி  சார்பாக வழக்கறிஞர் மனுராஜ்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில்,  “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான … Read more