குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!  அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார். இதனை அடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய … Read more

இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்!

இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்!

இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்!  தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியிலிருந்து விலகி பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் பொருளாளர் மனோகர் என்பவரும் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளாக டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். … Read more

தொழில் முதலீடு ஈர்ப்பு! முதல்வர் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடு ஈர்ப்பு! முதல்வர் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடு ஈர்ப்பு! முதல்வர் வெளிநாடு பயணம்!  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துபாய் சென்று அங்கு நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் அரங்கை திறந்து வைத்தார். இதனையடுத்து அந்த நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். முதல்வரின் … Read more

திருப்பதியில் செம்மர கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது! 

திருப்பதியில் செம்மர கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது! 

திருப்பதியில் செம்மர கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது! ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாக்கராப்பேட்டை அருகே உள்ள எர்ரவாரி பாளையம் பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் ஆந்திரா மாநில போலிசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். நேற்று மாலை வனப் பகுதியில் இருந்து ஒரு இருசக்கர வாகனம், கார் ஆகியவை வெளியே வந்தன. இதனை கவனித்த போலீசார், அந்தக் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது … Read more

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்!  கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  காந்திநகர் மற்றும் கோலார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். பெங்களூரூ புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை வேட்பாளராக பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், கோலார் தங்கவயலில் ஆனந்த்ராஜூம் மற்றும் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக … Read more

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்

ரஹானே அதிரடி ! தோனி குறித்து ருசிகர தகவல்   16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.   கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், … Read more

12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

AM Vikrama Raja

12 மணி நேர வேலை விக்கரம ராஜா வரவேற்பு! தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு   தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேலை நீட்டிப்பு சட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற மசோதாவை அரசே நிறைவேற்றியதற்கு பேரமைப்பு சார்பில் மனமார்ந்த வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.   இன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. … Read more

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்! மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மதுரை சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்விக்கு தனது காட்டமான பதிலை தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை [அண்ணாமலை]பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் … Read more

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் தியாகராஜன் மறுப்பு!

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் தியாகராஜன் மறுப்பு!

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் தியாகராஜன் மறுப்பு! கடந்த 14-ம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் எனக் கூறி, சில தகவல்களை வெளியிட்டார். அது தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து அண்மையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டார். 24 விநாடிகள் ஓடும் அந்த ஆடியோவில் 30,000 கோடி … Read more

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய … Read more