ரஜினியின் 3 நாள் சாதனையை ஒரே நாளில் முறியடித்த சூர்யாவின் ஜெய்பீம்.!!

.நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகியது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். … Read more

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் ‘பாக்கியலட்சுமி’ஷீரோ எழில்.!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் விஷால். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமூக வலைதளங்களில் இவரை நிறைய பேர் பின் தொடர்கின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் எழில். அதனால் இவரை பலரும் எழில் என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு … Read more

சினிமாவில் அறிமுகமாகும் ‘தெய்வமகள்’ அன்னியாரின் மகள்.!! இவருக்கு இப்படிப்பட்ட மகளா.!!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்ற ரேகா கிருஷ்ணப்பாவின் மகள் பூஜா கிருஷ்ணப்பா தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது குறித்த தகவலை ரேகா கிருஷ்ணப்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஹீரோயினாக அறிமுகம் ஆவதற்கு முன்பு பூஜா கிருஷ்ணப்பா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக இருந்தது தெய்வமகள். இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். சின்னத்திரையிலிருந்து முன்னேறிய அவர் தற்போது வெள்ளித்திரையில் … Read more

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா மரியாதை செலுத்தியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து காரில் அதிமுக கொடியுடன் சென்று சசிகலா கண்ணீருடன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா திமுக முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன் விழா தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று … Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த உரையாடலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசுகையில் அதிமுகவை தலைமை ஏற்க வருமாறு தெரிவிக்கின்றனர். சசிகலாவும் … Read more

ஒரே நாளில் 400 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 400ரூபாய் குறைந்து ரூபாய் 35,720-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கம் … Read more

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கொடுத்துள்ளது. இது பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி குழித்துறை பகுதியைச் சேர்ந்த யூடியூபே சர்ச் என்ற இளைஞன் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அதில் அவர் பயணம் செய்யும் பொழுது இது ஆண்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்துனரின் செயல்கள் ஆகியவற்றை படமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்தில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகிற நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தொடக்க … Read more

இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா.!! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!!

நாளை, அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் … Read more

ஐபில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து.!!

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 … Read more