பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

Photo of author

By Parthipan K

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

Parthipan K

Banner family dispute! The wrong decision taken by the husband?

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலாக பணிபுரிந்து வருபவர்  திருநாவுக்கரசு இவருடைய வயது 39. இவர் ஆவடி அருகே உள்ள கோவிலில் பதாகை பகுதியில் தன் குடும்பத்தோடு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள்.

பத்து வயதில் ராசிகா என்ற மகளும் ஆறு வயதில் ரக்சன் என்ற மகளும் உள்ளார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் காவல்துறை திருநாவுக்கரசர் கோவில் பதாகையில் வசித்து வந்தார்.இவர் மது அருந்தும் வழக்கம் கொண்டவர். இதனால் மது அருந்துவதாக கூறி மனைவி அவ்வப்போது சண்டை போட்டுள்ளார்.

இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் திருநாவுக்கரசரின் மனைவி கலைச்செல்வி புரசைவாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அப்போது திருநாவுக்கரசு தன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

தனியாக இருந்து வந்த திருநாவுக்கரசு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விபத்தை பற்றி திருநாவுக்கரசர் நண்பன் சுரேந்தர்  ஆவடி டேஸ்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் திருநாவுக்கரசரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.