Home Blog Page 175

நாடு முழுவதும் நக்சல் அச்சுறுத்தலை நசுக்கும் மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை 

0

இந்தியாவின் நக்சலிசதுக்கு எதிரான போர் என்பது புதியது அல்ல. பல ஆண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மாவோவாத தீவிரவாதத்தின் நிழலில் இருந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களாட்சிக்கான பிரதிநிதிகள், கொடூர தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்குப் பலியாகி உள்ளனர். முந்தைய அரசு தலைமையிலான அனைத்து நிர்வாகங்களும் இடதுசாரி தீவிரவாதத்தை (Left Wing Extremism – LWE) ஒரு தீவிர உள்நாட்டு அச்சுறுத்தலாக ஏற்றுக்கொண்டாலும், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசும், பாஜக தலைமையிலான NDA அரசும் (மோடி தலைமையில்) எடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் முடிவுகள் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் தெளிவாக தெரிகிறது.

மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை

2004 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசு நக்சல் பிரச்சனையின் பரவலான தன்மையை உணர்ந்தது. அதனால் ஒருங்கிணைந்த செயல்திட்டம் (Integrated Action Plan – IAP) மற்றும் பெரிதும் பிரசாரம் செய்யப்பட்ட ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ போன்றவை தொடங்கப்பட்டன. இது பாதுகாப்பையும் வளர்ச்சியையும் இணைக்கும் முயற்சியாக இருந்தாலும், நடைமுறையில் பல இடங்களில் தோல்வியடைந்தது. UPA அரசு பெரும்பாலும் மென்மையான அணுகுமுறையை, சமூகவியல் திட்டங்களை முன்வைத்து வன்முறையைத் தவிர்க்க முயன்றது. ஆனால் அந்த அணுகுமுறை போதுமான சிக்கனமான உளவுத்தகவல்கள் இல்லாமல் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது. வன்முறையை கைவிடாத தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நக்சல்கள் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பரந்த பகுதிகளில் ஆட்சியைக் கடைபிடித்து, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கான நிலை தொடர்ந்தது.

2014க்குப் பிறகு நிலைமையின் மாற்றம்

2014 இல் மோடி தலைமையிலான NDA அரசு பதவியேற்றதுடன், தெளிவான திட்டம், உறுதியான நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உளவுத்தகவல் அடிப்படையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், ‘ஆபரேஷன் பிரஹார்’, ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ போன்ற பல பரந்த அளவிலான பறக்கும் படையணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை செயற்கைக்கோள் கண்காணிப்பு, ட்ரோன் ரீகான், தரைமட்ட மனித உளவுத்தகவல்கள் மூலம் நக்சல் தலங்களை அழிக்க உதவின.

வளர்ச்சி = பாதுகாப்பு + இணைப்பு

துப்பாக்கிச் செயல்களில் மட்டுமின்றி, NDA அரசு வளர்ச்சியையும் முக்கியமாகக் கொண்டது. பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா (PMGSY) மற்றும் பாரத்மாலா பரியோஜனா திட்டங்கள் மூலமாக, நக்சல் ஆதிக்கம் கொண்ட பழங்குடி பகுதிகள் நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டன. பள்ளிகள், சந்தைகள் மட்டுமல்ல, நிர்வாகம், பொது சேவைகள் ஆகியவை இப்பகுதிகளுக்குச் சென்றன. பயிற்சி, பணதொகை ஊக்கங்கள் போன்ற வசதிகள் மூலம் நூற்றுக்கணக்கான முன்னாள் நக்சல்கள் ஒழுக்கமான வாழ்க்கையைத் தழுவினர்.

விளைவுகள்: வன்முறை குறைந்தது, நிர்வாகம் உயர்ந்தது

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நக்சல் சம்பந்தப்பட்ட வன்முறை 77% குறைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகள் 85% வரை குறைந்துள்ளன. இது வெறும் எண்கள் அல்ல — உயிர்கள் காப்பாற்றப்பட்டன, குடும்பங்கள் அழிவிலிருந்து தப்பின.

ஆபரேஷன் காகர்: மீண்டும் எழும் இந்தியாவின் அடையாளம்

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் உள்ள காரேகுட்டாலு காட்டுப் பகுதியில் நடக்கும் ‘ஆபரேஷன் காகர்’ பாஜக அரசின் உறுதியான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட نیم படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை, 3 பெண் நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர், 44 பேர் சீர்திரும்பியுள்ளனர். மூத்த நக்சல் தலைவர்கள் எவacuate செய்திருப்பதற்கான சந்தேகமும் எழுந்துள்ளது.

2024 மற்றும் 2025 நக்சல் நிலை தரவுகள்

ஆண்டு கொல்லப்பட்டோர் கைது செய்யப்பட்டோர் சீர்திரும்பியோர் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
2024 287 1,000+ 837 38
2025 (ஜன-மே) 150+ நடைமுறையில் உள்ளது நடைமுறையில் உள்ளது 6

அந்தரங்கமான காடுகள், 1,000 ஆயுதமேந்திய நக்சல்களின் அபாயங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. முக்கிய மேடுகளை கைப்பற்றி, தேசிய கொடி ஏற்றப்பட்டு, ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புடன் கூடிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வெறும் நடவடிக்கை அல்ல – இது இந்திய அரசு தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண்டிருப்பதை காட்டுகிறது.

மறுப்பும் குழப்பமும்: காங்கிரஸ் மற்றும் BRS தலைமையிலான குழப்பப்படுத்தும் முயற்சிகள்

BJP அரசு தீவிரவாதத்துக்கு எதிராக ஒழுங்காக போராடும் நிலையில், காங்கிரஸ் மற்றும் BRS போன்ற எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கின்றன. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, KCR மகள் கவிதா ஆகியோர் UPA வின் தோல்வியடைந்த பயணத்தை மீண்டும் முன்வைக்க முயல்கின்றனர். மேலும், முக்கிய நக்சல் தலைவர்கள் ஓடச் சொல்லப்பட்டதாகவும் புகார்கள் எழுகின்றன.

பாஜக: ஒரு உறுதியான தேசிய பாதுகாப்பு கண்ணோட்டம்

உள்துறை இராஜிய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுவது போல, துப்பாக்கி ஏந்தி மக்களை கொல்வோருடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தையே கிடையாது. நிலைமையை கட்டுப்படுத்திய பிறகு மட்டுமே நீடித்த அமைதி கிடைக்கும். ஒரு காலத்தில் மக்கள் போர்குழுக்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதிகளை ஆட்சி செய்தார்கள். இன்று, பாஜக தலைமையிலான பயணத்தின் மூலம், நாட்டின் பெரும்பகுதி நக்சல்களில் இருந்து விடுபட்டுள்ளது.

தீர்மானம்: 2026ல் நக்சலிசத்தை முழுமையாக அழிக்க முடிவு

UPA இன் தயக்கம் எங்கே? NDA இன் உறுதி அங்கே. BJP உருவாக்கும் இந்தியா — பாதுகாப்புடன், இணைந்ததாகவும், நக்சல் அச்சுறுத்தலின்றி இருக்கும். 2026க்குள் நக்சலிசத்தை அழிக்க உறுதியுடன் செயல்படும் அரசு, இன்று பாரதத்தில் இருக்கிறது.

வருஷத்துக்கு 2 லட்சம்.. கிளாமர் உடையில் பொண்ணுங்க நைட் FULL ஆ பார்ட்டி!! போலீஸ் வலையில் சிக்கிய கும்பல்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியில் கக்கனூர் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும். அதுபோல கர்நாடகவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு அந்த சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த காரை சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் பின்தொடர்ந்து சென்ற பொழுது அந்த கார் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்துள்ளது. மேலும் அந்த காரை பின் தொடர்ந்து சென்ற போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த தென்னந்தோப்பில் டிஜே பார்ட்டி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் அரைகுறை ஆடையுடன் போதையில் தள்ளாடியபடி ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர்.போலீஸ் வருவதை கூட கண்டுகொள்ளாமல் அவர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது விலை உயர்ந்த போதை மாத்திரைகள், வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா போதை பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். போலீசார் காரில் தப்பி வந்த பெங்களூரைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கோவையைச் சேர்ந்த இக்னேசஸ் லாரன்ஸ் காமிலோ, பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் தோப்பை ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

அங்கு பண்ணை வீடு அமைத்து இரவு விருந்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு இரவு மது போதையுடன் நடன நிகழ்ச்சி நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அடுத்த கட்டம் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ரேஷனில் இனி இப்படித்தான் பொருட்கள் கிடைக்கும்.. தூள் கிளப்பும் நடவடிக்கை!!

0

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது.

தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை எனவும் பல வகையில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் அடிப்படையில் பி ஓ எஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கப்பட்டு சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு எடை தராசானது வைபை ப்ளூடூத் வசதியுடன் பி ஓ எஸ் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஊழியர் தராசில் வைக்கக்கூடிய பொருளின் எடை கருவியில் பதிவாகும் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலமாக நுகர்வோருக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவு தராசில் காட்டப்படும் பொருட்களின் அளவும் சரியாக இருந்தால் மட்டுமே பி ஓ எஸ் கருவி அடுத்த கட்ட செயல்முறைக்கு செல்லும்.

இந்த நடைமுறையின் மூலமாக சரியான எடைக்குப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைக்க முடியாது என்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை அடிப்படையில் சென்னையில் ஒரு சில கடைகளில் தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் 50 வயது பெண் மறு பக்கம் விலங்குகள்.. பாலியல் தொல்லை உச்சக்கட்டம்!! குமுறும் மனைவி!!

நாகை மாவட்டத்தில் பெரிய புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் உதய ஜோதி இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது என்னுடைய கணவர் கவாஸ்கர். இவர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கிடைத்துள்ளது.

மேலும் அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என தன்னுடைய கணவரை வற்புறுத்தி அடிக்கடி கொடுமைப்படுத்தி வருகின்றனர், என் கணவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது மட்டுமல்லாமல் அங்குள்ள விலங்குகளுடனும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. 

மேலும் இது குறித்து தனது கணவர் தொலைபேசி மூலம் தன்னிடம் கூறி கதறி அழுதார். அவர் இருக்கும் இடத்தை என் கணவரால் கூற முடியவில்லை. அதனால் பலவிதமாக பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருகின்றார். தயவு செய்து அவரை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வந்தது அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தற்போது பாமக இல்லாத காரணத்தால் மீண்டும் அன்புமணிக்கு பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக மாநிலங்களவை எம்பிகளாக அன்புமணி, வைகோ, பி வில்சன், எம் சண்முகம், எம் முகமது அப்துல்லா, என் சந்திரசேகரன் ஆகிய ஆறு பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அன்புமணி மற்றும் என் சந்திரசேகரன் ஆகியோர் கடந்த முறை அதிமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். மற்ற நான்கு பேரும் திமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மாநிலங்களவை எம்பிக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் திமுகவுக்கு 4 மற்றும் அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைக்கும்.

இந்நிலையில் திமுக சார்பாக தற்போது எம்பி யாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூத்த வழக்கறிஞர் சி வில்சன் ஆகியோர் மீண்டும் தேர்வாக இருக்கும் நிலையில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லா தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது, நான்காவது எம்பியாக சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு கமலஹாசன் தோல்வியை சந்தித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. அதனால் முன்னதாக செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்பி பதவி கமலுக்கு வழங்கப்படும் என திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

அதிமுக சார்பாக இரண்டு எம்பிகளில் ஒருவர் அன்புமணி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால், பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் நிலவி வருகின்றது. அன்புமணியின் எம்பி பதவிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இரண்டு இடங்களையும் அதிமுக சார்பாக உள்ள உறுப்பினர்களை நிரப்ப முடியும் அந்த பதவிகளை பிடிக்கப் போவது யார் என கட்சியின் மத்தியில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தென் தமிழகத்தில் இருந்து ஒருவருக்கும் வட தமிழகத்திலிருந்து ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன், நடிகை விந்தியா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றது. மேலும் பதவி காலம் நிறைவடையும் சந்திரசேகர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதினால் ஆதிதிராவிடர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிக்காக கடுமையாக உழைத்து வரும் அவருக்கு கொடுக்கலாமா அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாமா என பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகரில் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி வருகின்றார். அப்போது விஜய் பரிசு பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

ஆனால் தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 2026 ஆம் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூறியிருந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் புதுச்சேரியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து விஜய் பாராட்ட இருக்கும் நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி தழகத்தின் பொதுச்செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ செல்வங்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட இருக்கின்றார்.

முதற்கட்டமாக மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, திண்டுக்கல் ,தேனி, நாகப்பட்டினம், திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது அந்த கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை காரணமாக தற்போது வெயில் தாக்கம் தணிந்து காணப்படுகின்றது. 2025 – 26 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதனை தற்போது பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களையும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளை கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலரர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அதனால் அறிவுரைகளைப் பின்பற்றி உரிய செயல்பாடுகள் மேற்கொண்டு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பள்ளி தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, மற்றும் ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளில் இருக்கக்கூடிய தளவாடப் பொருட்கள் கதவு மற்றும் ஜன்னல்கள், உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியம்.

மேலும் ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் காலாவதியாகி இருந்தால் முறையாக பதிவேட்டில் பதிவு செய்து அதனை நீக்கம் செய்ய வேண்டும். பள்ளியின் மேற்கூரையில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள சமையலறை, சமையல் பாத்திரங்கள் ஆகியவை நன்கு தூய்மை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் இல்லாமல் தூய்மைப்படுத்துவது அவசியம். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பொறுப்பு என்பதினால் அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்து பேசி தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! 18 வயது முடிந்தவர்களுக்கு 4 லட்சம் வரை கடன்!!

சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற ஏழை ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக சுய தொழில் தொடங்குவதற்காக வங்கி கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் வழங்கப்படுகின்றது. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டுள்ள மாவட்ட அளவிலான தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன் பெற ஒரு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் தொழில் கடன் பெறுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு 4 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.

மேலும் குழு தொழில் கடன் பெற 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளில் இரண்டு நபர் முதல் ஐந்து நபர்கள் வரை கொண்ட தொழில் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்குவோர் எந்தவித அச்சமும் இல்லாமல் சுய தொழிலை தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுய தொழிலை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

DMK: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் என்பது இந்த இரண்டு கட்சிக்கு இடையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என மக்கள் மனதில் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளது.

கட்சி தலைமையின் உத்தரவை அனைவரும் பின்பற்றி பணியாற்றி வருகின்றனர். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்து வந்த நிலையில் அவருடைய மறைவிற்குப் பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பதவி வகித்து வருகின்றார். ஆனால் இவர் முன்கூட்டியே கட்சியில் பணியாற்றி வரும் நிலையில் இளைஞர் அணி நிர்வாகி, துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.

மேலும் இவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் தயாரிப்பது மற்றும் திரைப்படங்களில் நடிப்பது என பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இவருடைய பிரச்சாரம் மக்களை கவர்ந்தது அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் இவருடைய பிரச்சாரத்திற்கு பரிசாக 2019 ஆம் ஆண்டு நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதால் ஓராண்டுக்கு பிறகு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சில மாதத்திலேயே துணை முதலமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த உடனே அடுத்தடுத்து பொறுப்புகள் உதயநிதிக்கு கிடைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உதயநிதிக்கு பதவி உயர்வு வழங்க திமுக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு பத்து மாதமே உள்ள நிலையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளராக பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் பரவி வருகின்றது. ஆனால் தற்போது திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ பெரியசாமி, ஆர் ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோர் இருக்கின்றனர். இதில் யாராவது ராஜினாமா செய்தால் மட்டுமே உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

திமுகவில் முழு நேர அரசியலில் இறங்கி கடந்த ஏழு வருடங்களுக்குள் இளைஞர் அணி செயலாளர் பதவி, அமைச்சர் பதவி மற்றும் துணை முதலமைச்சர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பெரிய பதவி வழங்குவதற்கு திமுகவின் மூத்த தலைவர்களுக்கு விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது. இன்னும் ஒரு வார காலகட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அந்தக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

0

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கின்றன.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 18 முதல் 30 மணி நேரம் வரை தரிசன டோக்கன் பெற்றவர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் இருக்கின்றது. கூட்டத்தில் சிக்காமல் எப்படி தரிசனம் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம். திருப்பதி தேவஸ்தானம் கோவிலை பராமரித்து வரும் நிலையில் பக்தர்களின் நன்மைக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருப்பதியில் சிறப்பு உற்சவங்கள் மற்றும் திருவிழா சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இருக்கும் கூட்டத்தை விட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதினால் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் ஜூலை மாதம் தரிசனத்திற்கு செல்பவர்கள் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்வது அவசியம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியும்.

மேலும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் 10 நாட்கள் வரை மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும், அதனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கூட தரிசனத்திற்கு சென்றால் அதிக நேரம் வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் செய்ய முடியும்.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாட்களில் திருப்பதியில் கூட்டம் மிக குறைவாக காணப்படும் என்பதினால் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அந்த நாட்களில் சென்றால் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.