Home Blog Page 188

பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

0

நம்முடைய ஒவ்வொரு நாள் காலை பொழுதும் டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களுடன் தொடங்குகிறது.இந்தியர்கள் வாழ்வில் ஒரு அங்கமாகவே இந்த டீ,காபி மாறிவிட்டது.சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

தினமும் நான்கு அல்லது ஐந்து டீ,காபி குடிக்கும் பழக்கத்தை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.உண்மையில் டீ,காபி சுவையே அதற்கு அடிமையாக காரணம்.டீ,காபி குடித்தால் உடலுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்தது போன்ற உணர்வு தோன்றுவதால் இதை களைப்பை போக்கும் பானமாக பலரும் கருதுகின்றனர்.

அதேபோல் தலைவலி வந்தாலும் காபி,டீ குடித்து சரி செய்யலாம் என்பதை பலரும் நம்புகின்றனர்.டீ,காபி போன்றவற்றில் காஃபின் என்ற இரசாயனம் இருக்கிறது.இது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் இதில் சில தீமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

டீ,காபி போன்ற பானங்களில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அதை தொடர்ந்து பருகும் நபர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.காஃபின் நிறைந்த இந்த டீ,காபி பானங்களை பருகும் குழந்தைகளின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காஃபின் பானங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து?

1)டீ,காபி போன்ற பானங்களை தொடர்ந்து பருகும் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.இந்த பிரச்சனை பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.

2)குழந்தைகளுக்கு டீ,காபி போன்ற பானங்களை பருக கொடுப்பதால் அவர்களுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படும்.இதனால் அவர்கள் உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிக்க நேரிடுகிறது.

3)டீ,காபி போன்ற பானங்களை பருகுவதால் கோபம்,பதற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

4)சில குழந்தைகளுக்கு டீ,காபி போன்ற பானங்கள் உடல் சோர்வு,குமட்டல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

5)காஃபின் பானங்களை குழந்தைகள் தொடர்ந்து பருகினால் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

முகத்தில் உள்ள தேவையில்லா முடிகளை அகற்ற அற்புதமான டிப்ஸ் இதோ!!

0

பெண்களுக்கு கூந்தல் அவர்களின் அழகை கூட்டுகிறது.ஆனால் முகத்தில் வளரும் முடி அவர்களின் அழகை கெடுகிறது.உதடு,தாடை போன்ற இடங்களில் ஆண்களை போன்ற மீசை,தாடி முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம.

முகத்தில் முடி வளர காரணங்கள்:

1)ஹார்மோன் பிரச்சனை
2)மாத்திரை பக்க விளைவு
3)ஆரோக்கிய குறைபாடு

தீர்வு:

மஞ்சள்
எலுமிச்சை சாறு
தேன்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை மஞ்சள் தூளில் பிழிந்துவிட வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் கொட்டவிடும்.

எலுமிச்சை சாறு
சர்க்கரை

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் மீசை,தாடி மீது தடவி நன்றாக உலரவிட வேண்டும்.இவை நன்றாக காய்ந்த பிறகு முகத்தை கழுவி சுத்தம் செய்யலாம்.

பாசி பருப்பு மாவு
சர்க்கரை
முட்டையின் வெள்ளைக்கரு

கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பாசி பருப்பு மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.இதை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவினால் மீசை,தாடி முடி உதிர்ந்துவிடும்.

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? இதை செய்தால் கருப்பு நீங்கும்!!

0

உடலில் சில இடங்களில் சம்மந்தம் இல்லாத நிறத்தில் காணப்படும்.குறிப்பாக கை,கால் முட்டியில் அதிக கருமை இருக்கும்.இந்த கருப்பு நிறம் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ செய்யுங்கள்.

கை கால் முட்டி கருமையாக காரணங்கள்:

1)இறந்த செல்கள்
2)சூரிய ஒளி
3)தோல் அலர்ஜி
4)வறண்ட சருமம்
5)கருமை சருமம்
6)காயம்

கை கால் முட்டி கருமையை குறைக்கும் டிப்ஸ்:

**மஞ்சள் பொடி
**ரோஸ் வாட்டர்

இவை இரண்டையும் தேவையான அளவு எடுத்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதை கை கால் முட்டி பகுதியில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு தண்ணீர் கொண்டு அவ்விடத்தை க்ளீன் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் கை கால் முட்டி கருமை நீங்கிவிடும்.

**கற்றாழை ஜெல்
**சர்க்கரை

ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.இதை கை கால் முட்டி மீது அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் கருமை நீங்கும்.

**எலுமிச்சை சாறு
**தேங்காய் எண்ணெய்

எலுமிச்சம் பழத்தின் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.இதை கை கால் முட்டி மீது தடவி வந்தால் கருப்பான இடத்தில் மாற்றம் ஏற்படும்.

**தயிர்
*ஓட்ஸ்

ஒரு தேக்கரண்டி தயிரில் ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் போட்டு ஊற வைக்க வேண்டும்.பிறகு இதை மசித்து கை கால் மூட்டு மீது தடவி நன்றாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் கருமை நீங்கிவிடும்.அதேபோல் தக்காளி பழத்தை அரைத்து சர்க்கரை சேர்த்து முட்டி மீது தேய்த்தால் கருமை நீங்கும்.

மீல் மேக்கர் ஹெல்த்துக்கு நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

0

அசைவ சுவைக்கு இணையான சைவப் பொருள் மீல் மேக்கர்.இது கோழி இறைச்சியை போன்ற சுவையை கொடுக்கிறது.இந்த மீல் மேக்கரில் பிரியாணி,கிரேவி,குழம்பு,சுக்கா,வறுவல்,பிரட்டல் என்று பலசுவையான
உணவுகள் தயாரித்து சாப்பிடப்படுகிறது.

இறைச்சியைவிட மிகவும் மலிவு விலையில் இந்த மீல் மேக்கர் கிடைக்கின்ற காரணத்தால் பலரும் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.இந்த மீல் மேக்கர் சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.சோயா பீனில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் இந்த மீல் மேக்கரில் கால்சியம்,வைட்டமின் டி,வைட்டமின் பி,போலேட்,மாங்கனீசு,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

**இந்த மீல் மேக்கரை சாப்பிடுவதால் உடல் எலும்புகள் பலப்படும்.மீல் மேக்கர் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சன்னைகளே வராது.

**மீல் மேக்கர் உணவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதில் இருக்கின்ற ஒமேகா
3 கொழுப்பு அமிலம் உடலில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

**இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மீல் மேக்கர் சாப்பிடலாம்.உடல் எடையை குறைக்க மீல் மேக்கர் உணவு சாப்பிடலாம்.

**செரிமானப் பிரச்சனையை சரி செய்ய மீல் மேக்கர் சாப்பிடலாம்.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆனால் அளவிற்கு அதிகமாக மீல் மேக்கர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.நாம் அடிக்கடி மீல் மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படும்.

**அதிக மீல் மேக்கர் உணவு வயிற்றுவலியை உண்டாக்கும்.அதேபோல் சிலருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.

**அடிக்கடி மீல் மேக்கர் உணவு சாப்பிட்டால் தலைவலி உண்டாகும்.அதிக மீல் மேக்கர் சாப்பிடுவதால் தசை மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்.

**மீல் மேக்கர் உணவை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படலாம்.

உலர் திராட்சை ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் 08 ஆரோக்கிய பலன்கள்!!

0

நம் அனைவருக்கும் பழங்கள் சாப்பிடுவது பிடித்த விஷயமாக இருக்கிறது.பழங்களில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக உலர்ந்த பழங்களில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

உலர் திராட்சை,உலர் அத்தி,பேரிச்சை போன்ற உலர் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்:

1)இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சை நீர் உதவுகிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கரைக்க உலர் திராட்சை நீர் பருகலாம்.

2)உலர் திராட்சையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.

3)உடல் சோர்வு நீங்க உலர் திராட்சை நீர் பருகலாம்.உலர் திராட்சையில் இருக்கின்ற ஆன்டி ஆகஸிடன்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

4)உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் பாஸ்பரஸ்,தாதுக்கள் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

5)இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம்.உடல் கொலஸ்ட்ரால் அளவு குறைய உலர் திராட்சை நீர் பருகலாம்.

6)சரும ஆரோக்கியம் மேம்பட உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.உலர் திராட்சையில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

7)குடல் ஆரோக்கியம் மேம்பட உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த உலர் திராட்சை நீர் பருகலாம்.

8)உடல் சூடு தணிய உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

0

உடலில் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்கிறது.ஆண்,பெண் அனைவருக்கும்வயிற்றுப் பகுதியில்தான் அதிக கொழுப்பு சேர்க்கிறது.அதேபோல் பிரசவித்த பெண்களுக்கு வயிற்று தொப்பை போடுகிறது.வயிற்றுப் பகுதியில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு டம்ளர்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வறுத்த சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை வடித்து எலுமிச்சை சாறு கலந்து பருகினால் அடிவயிற்று தொப்பை,பிரசவ தொப்பை குறையும் .

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பெருஞ்சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் அடிவயிற்று கொழுப்ப,பிரசவ கொழுப்பு குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இஞ்சி துண்டை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி கலந்து பருக வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் அடிவயிற்று கொழுப்பு கரையும்.

தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணி பெண்கள் சுடுநீரில் குளிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

0

பெண்கள் தங்கள் வாழ்நாள் பலனை தாய்மையின் மூலம் பெறுகின்றனர்.திருமணமான பெண்களுக்கு சீக்கிரம் தாய்மை வரம் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது.பெண்கள் தங்கள் கருவுற்ற காலத்தில் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.கருவில் வளரும் குழந்தையின் நலனிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர்.

உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர்.பெண்கள் தாங்கள் கருவுற்றமுதல் மூன்று மாதம் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்.முதல் மூன்று மாதத்தில் சிறு தவறு நேர்ந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.

குறிப்பாக கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் சுடுநீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் சாப்பிடுதல்,உடல் சூட்டை அதிகரிக்கும் விஷயங்களை செய்தல் போன்ற காரணங்களால் கருச்சிதைவு ஏற்படலாம்.

பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்கும் ஒரு பழம் என்பதால்தான் கருவுற்ற பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.அதேபோல் அன்னாசி பழம்,கருப்பு எள் போன்றவை உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்பதாலே அதையும் கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.

அப்படி இருக்கையில் உடலை சூடாக்கும் சுடுநீர் குளியல் நிச்சயம் கருவில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கருவுற்ற பெண்களுக்கு கை,கால் வீக்கம் ஏற்படுவதால் சுடுநீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றும்.ஆனால் சுடுநீர் குளியல் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

கருவுற்ற பெண்கள் உடலில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டக் கூடாது.சில பெண்கள் அதிக சூடான நீரில் குளிப்பதை விரும்புகின்றனர்.ஆனால் இதுபோன்று செய்வது மிகவும் தவறான பழக்கமாகும்.சுடுநீர் குளிக்க தோன்றினால் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்.அதேபோல் சுடுநீர் குளியல் 10 நிமிடத்திற்கு மேல் தாண்டக் கூடாது.

எந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!!

0

நமக்கு மலிவு விலையில் கிடைத்த புரத உணவு முட்டை.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் வறுவல்,பொரியல்,ஆம்லெட்,கலக்கி,முட்டை பரோட்டா,தொக்கு,குழம்பு,கிரேவி என்று பல வித விதமான உணவுகள் செய்து சாப்பிடப்படுகிறது.

முட்டையில் புரதம்,கோலின்,வைட்டமின்கள் முதலானவை நிறைந்து காணப்படுகிறது.ஒரு முட்டையில் 6 கிராம் பபுரதம் நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.இதை சாப்பிடுவதால் பல் வலிமை அதிகரிக்கும்.முட்டையில் இருக்கின்ற புரதம் உடல் வலிமையை அதிகரிக்கிறது.தரளந்த தசைகள் இறுக முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.வேக வைத்த முட்டை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது.

பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.அதன் பிறகு வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.

ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் அரை முட்டை சாப்பிட கொடுக்கலாம்.பெரியவர்கள் நாளொன்றில் இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.உடல்
பருமன்,கொலஸட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தவிர்த்துவிட வேண்டும்.

50 வயதை கடந்தவர்கள் தினம் ஒரு முட்டை சாப்பிடலாம்.இதய நோய்,சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.உடலில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை தவிர்ப்பது நல்லது.

இந்த 4 எண்ணையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஹெல்த் நல்லா இருக்கும்!!

0

தற்பொழுது எண்ணெய் இல்லாத உணவுகள் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கிறது.சைவ,அசைவ உணவுகள் அனைத்தும் தயாரிக்க எண்ணெய் அடிப்படை பொருளாக உள்ளது.குழந்தைகள,பெரியவர்கள் அனைவரும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ருசிக்க ஆசைப்படுகின்றனர்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் உள்ளது.

உடலுக்கு கொழுப்புசத்து அவசியமான ஒன்று என்றாலும் அதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது.

எனவே நம் உடலுக்கு கெடுதல் தரும் எண்ணையில் சமைப்பதை தவிர்த்துவிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

நாம் உணவு சமைக்க தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள்:

1)சோயாபீன் எண்ணெய்
2)சூரியகாந்தி எண்ணெய்
3)பாமாயில்

உணவு சமைக்க பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்:

1)சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்
2)சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்
3)ஆர்கானிக் நெய்
4)அவகேடோ எண்ணெய்

இந்த நான்கு எண்ணெய்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த நான்கு எண்ணெய்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த எண்ணெய்களில் உணவுகளை வறுத்து,பொரித்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக கெடுதல் ஏற்படாது என்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உடல் பருமன்,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை உணவு சமைக்க பயன்படுத்தலாம்.

பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி நீங்க.. இந்த எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

0

நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு பகுதியில் பிடிப்பு,வலி போன்றவை ஏற்படுவது இயல்பான விஷயம்தான்.ஆனால் இந்த முதுகுவலி தீவிரமானால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இலுப்பை எண்ணெய்
2)கற்றாழை துண்டுகள்

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 மில்லி இலுப்பை எண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு நான்கு அல்லது ஐந்து கற்றாழை துண்டுகளை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து முதுகில் வலி உள்ள இடத்தில் அப்ளை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு முழு வெற்றிலை எடுத்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தாளிப்பு கரண்டியில் இந்த வெற்றிலை சாறு ஊற்றி இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி முதுகில் தேய்த்தால் வலி குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – தேவையான அளவு
2)காட்டன் துணி – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.சூடு பொறுக்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது.

பிறகு காட்டன் துணியை அதில் போட்டு பிழிந்து முதுகில் வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் முதுகு வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)யூக்கலிப்டஸ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதுகில் வலி உள்ள இடத்தில் யூக்கலிப்டஸ் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதேபோல் நல்லெண்ணெயில் சூடத்தை போட்டு சூடாக்கி முதுகில் ஊற்றி தேய்த்தால் வலி தானாக குறையும்.