Home Blog Page 198

நெருப்பு போல் உடல் சுடுதா? அப்போ இந்த ரசம் வைத்து சாப்பிட்டு சூட்டை குறைக்கலாம்!!

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் உஷ்ணத்தை குறைக்க சீரகம்,வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி ரசம் தாயரித்து சாப்பிடலாம்.

உடல் சூட்டை குறைக்கும் மூலிகை ரசம்:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கருப்பு மிளகு – 10
4)புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
5)தக்காளி – ஒன்று
6)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
7)வர மிளகாய் – ஒன்று
8)கொத்தமல்லி தழை – சிறிதளவு
9)கடுகு – கால் தேக்கரண்டி
10)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
11)பூண்டு பல் – நான்கு
12)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பூண்டு,மிளகு,மிளகாய்,வெந்தயம் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து கடுகு போட்டு பொரியவிட வேண்டும்.

அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி பழம் ஒன்றை பொடியாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இடித்த கலவையை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்ற வேண்டும்.அடுத்து உப்பு,மஞ்சள் தூள் போட்டு குறைவான தீயில் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு இந்த ரசத்தில் பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு கொத்தமல்லி தழையை தூவ வேண்டும்.இதை இளஞ்சூட்டில் பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

இரத்த அழுத்தம்? இந்த இலை போதும்.. BP பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிவிடலாம்!!

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் சூப் செய்து சாப்பிடலாம்.

முருங்கை கீரை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு – நான்கு
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும்.அதன் பிறகு கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை போட வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு சீரகம்,மிளகு மற்றும் பூண்டு பற்களை உரலில் இடித்து வதக்கி கொண்டிருக்கும் கலவையில் போட வேண்டும்.

அடுத்து சுத்தப்படுத்தி இருக்கும் முருங்கை கீரையை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த முருங்கை கீரை பானம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பிறகு இந்த பானத்தை கிண்ணம் ஒன்றிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறை மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலைவேளையில் செய்து பருகி வந்தால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

குடிக்கும் பாலில் 2 பொருள் சேர்த்து பாருங்கள்!! இன்னைக்கு நைட் நிம்மதியாக தூங்குவீங்க!!

நல்ல நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க பாலில் சில பொருட்களை கலந்து பருகலாம்.இப்படி பால் குடித்து வந்தால் தொந்தரவு இல்லாத தூக்கம் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)அஸ்வகந்தா பொடி – ஒரு ஸ்பூன்
3)கரு மிளகுப்பொடி – அரை ஸ்பூன்
4)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

பால் கால்சியம் சத்து நிறைந்த ஒரு ஆரோக்கிய பானமாகும்.பாக்கட் பாலுக்கு பதில் பசும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த பசும் பாலை தூக்கத்தை வர வைக்கும் ஒரு மேஜிக் பானமாக மாற்றலாம்.அதற்கு முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு பசும் பால் எடுத்து பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பால் ஒரு கொதி வந்த பிறகு அரை ஸ்பூன் இடித்த மிளகு சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி சேர்க்க வேண்டும்.

இறுதியாக சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி இரவில் தூங்கக் செல்வதற்கு முன்னர் பருகினால் எந்தஒரு தொந்தரவும் இன்றி நிம்மதியான தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)ஜாதிக்காய் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பால் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்பு இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அரைத்த ஜாதிக்காய் பொடியை அதில் மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த ஜாதிக்காய் பாலை தினமும் பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

குளிக்கும் நீரில் இதை கலந்தால்.. சருமம் தகதகன்னு தங்கம் போல் மின்னும்!!

உடல் சூடு குறைய சரும நோய்கள் அண்டாமல் இருக்க குளிக்கும் நீரில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.இது பற்றி கீழே விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள்
2)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு அலசி எடுக்க வேண்டும்.இதை குளிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை அதில் போட்டு ஊறவிட வேண்டும்.

இந்த நீரை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊறவைத்த பிறகு குளிக்க வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் எந்தஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

ஐந்து கொத்து வேப்பிலையை உருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை குளிக்கும் தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை குளிக்கும் நீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு இந்நீரை பயன்படுத்தி குளிக்கலாம்.இப்படி குளித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெட்டி வேர்
2)சந்தனம்
3)கற்றாழை

செய்முறை விளக்கம்:-

முதலில் குளுமையான நீரை பாக்கெட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் கைப்பிடி வெட்டி வேர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பீஸ் சந்தனத்தை தூளாக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கற்றாழை துண்டுகளை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

இந்த நீரை பயன்படுத்தி குளித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

வாழைப்பழம் போல் மலம் வழுக்கிக் கொண்டு வரணுமா? அப்போ பிரண்டையை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீள பிரண்டை,ஓமம்,மிளகு உள்ளிட்ட பொருட்களை வைத்து வடகம் தயாரித்து உட்கொள்ளலாம்.நார்ச்சத்து நிறைந்த இந்த பிரண்டை வடகம் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பிரண்டை – ஒரு கைப்பிடி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)அதிமதுரம் – சிறிதளவு
5)கரு மிளகு – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஓமம்,சீரகம்,அதிமதுரம் மற்றும் மிளகு ஆகியவற்றை வாணலியில் கொட்டி லேசாக வறுக்க வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை பிரண்டை பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த கலவையை ஒரு காட்டன் துணியில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வெயிலில் ஒரு வாரத்திற்கு காய வைக்க வேண்டும்.பிரண்டை வடகம் நன்றாக காய்ந்து வந்த பிறகு ஒரு ஈரம் இல்லாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளா வேண்டும்.

இந்த வடகத்தை பொரித்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.பிரண்டை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருள்.அதேபோல் ஓமம்,மிளகு,அதிமதுரம் போன்றவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இவை அனைத்தையும் கொண்டு வடகம் தயாரித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

பிரண்டையில் சூப் செய்து பருகலாம்.பிரண்டை சட்னி,பிரண்டை தொக்கு,பிரண்டையை மாத்திரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பெண்களே முகத்தில் மீசை தாடி முடி வளருதா? அப்போ இதுதான் பெஸ்ட் தீர்வு!!

ஆண்களுக்கு மீசை,தாடி அழகு மற்றும் வீரத்தை காட்டுகிறது.அதுவே ஒரு பெண்ணிற்கு மீசை,தாடி வளர்ந்தால் அவை அழகையே பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற அற்புத குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தீர்வு 01:

வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி மற்றும் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மீசை,தாடி முடிகள் மீது தடவி நன்றாக காயவிட வேண்டும்.பின்னர் தண்ணீர் கொண்டு தேய்த்தால் மீசை முடி,தாடி முடி உதிர்ந்துவிடும்.

தீர்வு 02:

படிகாரத் தூள் – ஒரு தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – ஒன்றரை தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு படிகாரத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை சை,தாடி முடிகள் மீது தடவி நன்றாக காயவிட வேண்டும்.பின்னர் தண்ணீர் கொண்டு தேய்த்தால் மீசை முடி,தாடி முடி உதிர்ந்துவிடும்.

தீர்வு 03:

சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து தாடி,மீசை முடிகள் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு சுத்தம் செய்தால் தேவையற்ற முடிகள் வேரோடு உதிர்ந்துவிடும்.

தீர்வு 04:

கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி

இந்த மூன்றையும் கிண்ணத்தில் சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பேஸ்டை பெண்கள் முகத்தில் உள்ள தாடி,மீசை மீது தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மீசை,தாடி முடி உதிர்ந்துவிடும்.

கொழுப்பு கல்லீரல்? இந்த தூளை தண்ணீரில் கலந்து குடிங்க!! ஒரே நாளில் கொழுப்பு கரைந்துவிடும்!!

மனித உடலின் பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.இதில் அழுக்கு,கொழுப்பு சேர்ந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே கல்லீரலை சுத்தம் செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள்.

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.இவற்றை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

இந்த பொடியை சூடாகி கொண்டிருக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி பருகினால் கல்லீரல் கொழுப்பு முழுமையாக கரையும்.

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – அரை தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை பிழிந்து பருகினால் கல்லீரல் கொழுப்பு கரையும்.

1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை லேசாக ஆறவைத்து பருகினால் கல்லீரலில் தேங்கிய கொழுப்பு மற்றும் கழிவுகள் வெளியேறிவிடும்.

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

கால் பாதத்தில் வீக்கம்,வலி இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த கால் பாத வீக்கத்தை குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

கால் வீக்கம் குறைக்கும் வீட்டு வைத்தியம் ஒன்று:

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

கிளாஸ் ஒன்றில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தண்ணீரில் பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த எலுமிச்சை பானத்தை தினமும் பருகி வந்தால் கால் வீங்குவது கட்டுப்படும்.

1)கல் உப்பு
2)தண்ணீர்

ஒரு அகலமான பக்கெட்டில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கல் உப்பு சிறிதளவு போட்டுக் கொள்ள வேண்டும்.

இவை நன்றாக கரைந்த பிறகு கால் பாதங்களை அதில் வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.இப்படி செய்தால் கால் வீக்கம் குறையும்.

1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை லேசாக சூடுபடுத்தி கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

1)பூண்டு பற்கள்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணைய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வீக்கம் வத்தும்.

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

0

நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த நாளில் செய்யக் கூடாது என்ற கணக்கும் உள்ளது.

வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான்.இருப்பினும் சில காரியங்களை சில தினங்களில் செய்யக் கூடாது.அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நாளில் எந்த விஷயம் செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாத விஷயங்கள்:

1)திருமணம்,நிச்சயம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாது.

2)செவ்வாய் கிழமை நாளில் பிறருக்கு பணம் தரக் கூடாது.செவ்வாய் கிழமை நாளில் பணம் சம்மந்தப்பட்ட எந்தஒரு விஷயத்தையும் தொடங்கக் கூடாது.

3)செவ்வாய்க்கிழமை நாளில் நீண்ட பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய்க்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.

4)அதேபோல் செவ்வாய்க்கிழமை நாளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் செவ்வாய்க்கிழமை கருப்பு நிறத்தில் ஆடை வாங்கவோ அல்லது அணியவோ கூடாது.

5)செவ்வாய்க்கிழமை நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக உப்பு நிறைந்த உணவுகளை செவ்வாய்க்கிழமை நாளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

6)செவ்வாய்க்கிழமை நாளில் ஷேவிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய்க்கிழமை நாளில் தங்க நகைகளை அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும்.

7)செவ்வாய்க்கிழமை நாளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய் நாளில் வீடு கட்ட பூமி பூஜை செய்வதை தவிர்க்க வேண்டும்.

8)இந்த செவ்வாய்க்கிழமை நாளில் கண்ணாடி பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

0

உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு பகுதியை கிள்ள வேண்டும்.அடுத்து இந்த வெற்றிலையின் நடுப் பகுதியில் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும்.

இந்த வெற்றிலையை ஒன்றன் மீது ஒன்றாக வைக்க வேண்டும்.அதன் மீது பூ வைக்க வேண்டும்.அடுத்து ஒரு மண் விளக்கு எடுத்து வெற்றிலை மீது வைக்க வேண்டும்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலை காம்பை அதில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.இந்த தீபத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து முருகப் பெருமானை மனதார வழிபட வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமை நாளில் செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்த முருகப் பெருமான் வழிபாடு தடைபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.