Home Blog Page 212

வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!

வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.வெந்தயம்,நுங்கு,கற்றாழை போன்றவை வியர்க்குரு வராமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
2)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தண்ணீரில் மூழ்கும் வரை வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.இரவில் ஊறவைத்தால் மறுநாள் இதை பயன்படுத்தலாம்.

ஒரு கிளாஸில் மோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.10 முதல் 15 நிமிடங்களுக்கு வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.பிறகு ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு மோரை பருக வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் வியர்க்குரு புண்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – இரண்டு
2)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் கற்றாழை மடல் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கிளாஸில் பசு மோர் ஊற்றி கற்றாழை துண்டுகளை போட்டு ஊறவைத்து குடித்தால் வியர்க்குரு பாதிப்பு குணமாகும்.அதேபோல் நுங்கு சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து உடல் முழுவதும் பூசினால் வியர்க்குரு வராமல் இருக்கும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் வியர்க்குரு பாதிப்பை சந்திக்காமல் இருக்கலாம்.

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

சருமத்தில் காணப்படும் வியர்க்குரு கொப்பளங்கள் மறைய,சரும எரிச்சல்,அரிப்பு வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:-

கற்றாழை ஜெல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பொருள் கற்றாழை.செடியில் இருந்து பிரஸான கற்றாழை மடல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு முதல் எட்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.இந்த ஜெல்லை ஒரு சுத்தமான டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் வியர்வை கொப்பளம் மறையும்.

தீர்வு 02:-

சந்தனம் மற்றும் மஞ்சள்

ஒரு துண்டு சநதனம் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வியர்க்குரு கொப்பளம் மீது தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தீர்வு 03:-

வெட்டி வேர் பொடி மற்றும் மஞ்சள் தூள்

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அளவு வெட்டி வேர் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை சருமத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் வியர்க்குரு கொப்பளங்கள் மறைந்துவிடும்.

அதேபோல் அருகம்புல்லை பொடித்து மஞ்சள் கலந்து வியர்க்குரு கொப்பளங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.

சீப்பா கிடைக்கும் இந்த 1 கீரை சாப்பிட்டால் டாப் 10 நோய்களையும் அசால்டாக சரி செய்யும்!!

கீரைகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை புளிச்ச கீரை.இந்த ஒரு கீரை மலச்சிக்கல்,இரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த கீரையை கடையலாக சாப்பிட சுவையாக இருக்கும்.

புளிச்ச கீரை ஊட்டச்சத்துக்கள்:

1.வைட்டமின் ஏ 2.வைட்டமின் சி 3.கால்சியம் 4.பாஸ்பரஸ் 5.இரும்பு 6.நார்ச்சத்து

புளிச்ச கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:-

1)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.தொண்டை வலி இருப்பவர்கள் இந்த கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம்.

2)உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இந்த புளிக்க கீரையை கடையலாக சாப்பிடலாம்.

3)சருமம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தையும் இந்த கீரை சரி செய்கிறது.கீரையில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4)காய்ச்சல்,இருமல் இருப்பவர்கள் இந்த கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.

5)பசி உணர்வை கட்டுப்படுத்த இந்த கீரையை கடையலாக சாப்பிடலாம்.இந்த கீரையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இதை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

6)இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

7)இரத்த உற்பத்தியை அதிகரிக்க,இரத்த சோகை நோய் குணமாக புளிச்ச கீரை சாப்பிடலாம்.

8)காசநோய் பாதிப்பில் இருந்து மீள புளிச்ச கீரை சாப்பிடலாம்.இந்த கீரை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறும்.

9)சொறி சிரங்கு பாதிப்பில் இருந்தும் மீள புளிச்ச கீரை சட்னி செய்து சாப்பிடலாம்.புளிச்ச கீரை பூவை இடித்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

10)சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து மீள புளிச்ச கீரையை உட்கொள்ளலாம்.

அடேங்கப்பா ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை.. இந்த 10 நோய்களை குணப்படுத்துமா?

கோடை காலத்தில் நாம் சாப்பிடும் வெள்ளரிக்காய் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்த வெள்ளரிக்காயில் இருக்கின்ற விதை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

இந்த வெள்ளரி விதையை தினமும் ஒரு ஸ்பூன் என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.வெள்ளரி விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

**நார்ச்சத்து **வைட்டமின் இ **துத்தநாகம் **மெக்னீசியம் **ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்

வெள்ளரி விதை பயன்கள்:

1)சரும வறட்சியை போக்கி மிருதுவான சருமம் பெற வெள்ளரி விதையை சாப்பிடலாம்.ஒரு ஸ்பூன் வெள்ளரி விதையை பொடித்து தயிரில் கலந்து குடித்தால் சரும கொப்பளங்கள் வராமல் இருக்கும்.

2)வெள்ளரி விதை பொடியை பாலில் கலந்து குடித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்பில் இருந்து மீளலாம்.சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் பாலில் வெள்ளரி விதை பொடி கலந்து குடிக்கலாம்.

3)தினமும் வெள்ளரி விதை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கப்படும்.

4)மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் வெள்ளரி விதை ஊறவைத்து சாப்பிடலாம்.

5)சிறுநீர் கடுப்பு இருப்பவர்கள் வெள்ளரி விதையை ஊறவைத்து அரைத்து தொப்புளை சுற்றி பற்றுப்போட்டால் பலன் கிடைக்கும்.

6)தினமும் வெள்ளரி விதை தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் கொழுப்பு குறையும்.

7)கர்ப்பிணி பெண்கள் வெள்ளரி விதை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

8)தைராய்டு பாதிப்பில் இருந்து மீள தினமும் வெள்ளரி விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

9)முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய தினமும் வெள்ளரிவிதை ஊறவைத்து சாப்பிடலாம்.

10)வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை வெள்ளரி விதை சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம்.வெள்ளரி விதையை பொடித்த மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும்.

தேவையான பொருட்கள்:-

**புடலங்காய் – 100 கிராம்
**வெண் பூசணி – 200 கிராம்
**மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
**உப்பு – சிறிதளவு
**தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெண் பூசணிக்காயை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் புடலங்காய் துண்டுகள் மற்றும் வெண் பூசணி துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த புடலங்காய் கலவையை அதில் போட்டு கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

**பால் – ஒரு கிளாஸ்
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**ஜாதிக்காய் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை இரவில் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:-

1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

3)இளநீர்,நுங்கு போன்றவை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தயிர்,மோர் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

4)தக்காளி,கத்தரிக்காய் போன்றவற்றை உணவாக சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.வெந்தயம்,குடைமிளகாய் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் மோர் பருக வேண்டும்.

5)கற்றாழை ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.புடலங்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.நன்னாரி வேரை ஊறவைத்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

ஆனால் காபி,டீ போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.கோழி இறைச்சி அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சூடான நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

0

நாம் மன நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.கோயிலுக்கு சென்றால் நம் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.வாழ்வில் திருப்பம் கிடைக்க கோயிலுக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர்.

சிலர் கோயிலுக்கு பக்தியுடன் செல்கின்றனர்.சிலர் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக கோயிலுக்கு செல்கின்றனர்.எப்படி இருந்தாலும் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம்.

நாம் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் நமது வீட்டில் செய்யக் கூடாத சில முக்கிய விஷயங்கள்:

1)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்லக் கூடாது.

2)கோயிலில் கொடுக்கும் திருநீறு,குங்குமம் ஆகியவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து கண்ட இடத்தில் கொட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

3)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்றால் நேராக வீட்டிற்கு வர வேண்டும்.இப்படி செய்தால் மட்டுமே தெய்வ சக்தி உங்கள் வீட்டிற்கு வரும்.

4)கடவுளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மாலை மற்றும் பூக்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்று வந்த பின்னர் தகாத வார்த்தையில் பேசுவது,சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

5)கோயிலுக்கு சென்று வந்த உடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.கோயிலுக்கு சென்று வீடு திருப்பும் பொழுது உணவகங்களில் சாப்பிடுதல்,உறவினர் இல்லத்திற்கு செல்லுதல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

6)கோயிலுக்கு சென்று வந்த பின்னர் வீட்டு பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் மன நிறைவு கிடைக்கும்.

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

0

நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது.

மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது.

புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு அவ்வப்போது மஞ்சள் பூசி அதை பழுதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல சுப முகூர்த்த தின நாளில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது நல்லது.தாலி கயிறை அம்மா மற்றும் கணவரை தவிர பிறர் முன் மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பிறரிடம் தாலி கயிற்றை மாற்றிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பம் தரித்த பெண்கள் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம்.தாலிக்கயிற்றில் சேப்டி பின் போன்றவற்றை மாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் தாலிக்கயிறு மாற்றுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை நாளில் தாலி கயிற்றுக்கு மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.இந்த வெள்ளிக்கிழமை நாளில் தலைக்கு குங்குமம் வைப்பதை பழக்கமாக்கி கொள்ளவும்.அதேபோல் அஷ்டமி,பிரதமை போன்ற திதிகளில் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

நைலான் தாலி கயிறு அணிவதை தவிர்த்துவிட்டு நூல் தாலி கயிறு அணிய வேண்டும்.அடிக்கடி தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

0

தற்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.அனைத்து விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.இந்த சமுதாயத்தில் பணம்தான் நமக்கு மதிப்பு மரியாதையை கொடுக்கிறது.

நாம் பணம் சம்பாதிப்பதைவிட அதை சரியான முறையில் சேமிக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் ஆன்மீக ரீதியாக நாம் சில தவறுகளை செய்தால் எப்பொழுதும் பணக் கஷ்டத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

செல்வ செழிப்புடன் வாழ நாம் பணத்தை மதிக்க வேண்டும்.அதேபோல் வீட்டில் பணம் குவிய லட்சுமி தாயாரின் பார்வை நம் இல்லத்தின் மீது விழ வேண்டும்.ஆனால் நாம் செய்யும் சிறு தவறுகள்கூட பணம் சேராமல் போக காரணமாகிவிடும்.

பணக் கஷ்டம் வர காரணங்கள்:

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் லட்சுமி தேவி குடி இருக்க மாட்டார்.இதனால் பணக் கஷ்டம்,பண விரையம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் ஒட்டடை,பாசி,அழுக்கு படிந்திருந்தால் பணம் தங்காது.

உடைந்த கண்ணாடி பொருட்கள்,நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

மாலை நேரத்தில் அதாவது சூரியன் மறைந்த பின்னர் வீட்டை துடைப்பது,பெருக்குவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் வீட்டில் தலைவிரி கோலத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பூஜை அறையில் தலைவிரி கோலத்தில் இருக்கக் கூடாது.

வாரம் ஒருமுறை குறிப்பாக வெள்ளிக்கிழமை நாளில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கடவுள் படத்தை அலங்கரித்து மனதார வழிபட வேண்டும்.

சாப்பிட்ட பிறகு தட்டை சுத்தம் செய்யாமல் வைத்தல்,வீட்டில் குப்பை தேங்கி இருத்தல் போன்ற செயல்களை செய்தால் வீட்டில் பணம் சேராது.

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

0

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் சொந்தங்களுக்கு இடையில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.அதிலும் மூத்த மகள் மற்றும் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த வழக்கம் உறவு முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அன்னிய உறவில் இருந்து திருமண செய்வதாக இருந்தால் இது பொருந்தாது.குடும்ப உறவு,நெருங்கிய பந்தத்தில் இருக்கும் தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பயனுக்கு திருமணம் செய்யக் கூடாது.

தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையனுக்கு திருமணம் நடந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு,ஊனம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் நடந்தால் அவர்கள் இருவரும் இரு குடும்பத்தின் பொறுப்பை சசுமக்க நேரிடும்.

அதேபோல் ஆணி மாதத்தில் பிறந்த தலைச்சம் பயனுக்கும் அதே மாதத்தில் பிறந்த தலைச்சம் பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது.ஆனால் இளைய மகன் மற்றும் இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.ஜோதிடப்படி அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ஆனால் இந்த காலத்தில் சட்டப்படி தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையன் திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பையன் திருமணம் செய்தாலும் காதல் இருந்தால் மற்றவை தடையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.