Home Blog Page 222

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.. ஆனா 24 பெத்துக்க ஆசை!! நடிகை ரோஜா வாழ்வில் நடந்த சோகம்!!

நடிகை ரோஜா அவர்கள் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் காலூன்றி வருகிறார். கணவர் இயக்குனர் செல்வமணி இவர்கள் இருவருக்கும் இருந்த மிகப்பெரிய கனவு மற்றும் இவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களை youtube சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர். 

 

அதன்படி, இந்தியா கிளிப்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகை ரோஜா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-

 

தனக்கு திருமணத்திற்கு முன்பாக கர்ப்பப்பையில் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் அதனால் தனக்கு குழந்தை பிறப்பது மிகவும் கடினமான ஒன்றாக அல்லது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இருக்காது என்பது போல மருத்துவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அது தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய முதல் குழந்தை கன்ஃபார்ம் செய்த பொழுது மருத்துவர் உடனடியாக தெரிவித்ததாகவும் அவர் அதனை மிகவும் ஆச்சரியமாக சந்தோஷமாகவும் எடுத்து பேசிய பொழுது இதற்கு ஏன் இவ்வளவு ஆச்சரியப்பட வேண்டும் என்பது போல சந்தேகித்து கேட்ட பொழுதுதான் நடந்து உண்மை அனைத்தையும் தன்னிடத்தில் மருத்துவர் கூறியதாக நடிகை ரோஜா தெரிவித்திருக்கிறார்.

 

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை எனக் கூறிய தனக்கு கர்ப்பம் உருவானதை அனைவரும் ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டதாகவும் அதனால் தன் மிகவும் கவனத்தோடு இருந்து அந்த குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் நடிகை ரோஜா தெரிவித்ததோடு தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தின் பொழுது சரியாக 5 ஆவது மாதத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்பொழுது தனக்கு கருப்பையில் இருந்து ரத்தம் வழிந்ததை எடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மிகவும் சீரியசான நிலமைக்கு சென்றதாகவும் அதனை தொடர்ந்து 7 ஆவது மாதத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும் ஆனால் அவன் தன் உயிரோடும் கிடைப்பானோ இல்லையோ என்பது போன்ற ஏக்கம் இருந்ததாகவும் அதனால் அவன் மீது தனக்கு தனி பாசம் என்றும் நடிகை ரோஜா தெரிவித்திருக்கிறார்.

 

இயக்குனர் செல்வமணி இது குறித்து கூறுகையில் தங்களுக்கு 24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்றும் அதில் 12 குழந்தைகளை நாங்கள் இருவரும் இணைந்து கற்றுக்கொள்ள நினைத்தோம் என்றும் மீதி 12 குழந்தைகளை உலகத்தில் உள்ள வெவ்வேறு நாடுகளில் இருந்து தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது என்றும் வெளிப்படையாக தெருவித்திருக்கிறார்.

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. 

 

ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய ஒரு கட்டமாக தான் தற்பொழுது ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளை எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு உடன் இலவச பயிற்சி வகுப்புகள் 6 மாத காலத்திற்கு எடுக்க இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

 

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் மார்ச் 7ஆம் தேதி என்று துவங்கப்பட்ட போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக வெற்றி பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. 2024 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசினுடைய முக்கிய போட்டி தேர்வுகளான ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உணவு தங்குமிடம் போன்றவற்றை கொடுத்து அதோடு 6 மாதகாலப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் மே 13 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை https://www.naanmudhalvan.tn.gov.in என்ற அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் அந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பிங்க் நிற ஆட்டோக்களை ஊட்டிய ஆண்களை கைது செய்ததோடு அந்த ஆட்டோக்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்திருக்கிறது.

 

பெண்களின் உடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடைய பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கி கடனுதவியையும் பெற்றுக் கொடுத்து இந்த பிங்க் நிற ஆட்டோக்கள் பெண்களுக்காக வழங்கப்பட்டது. ஆனால் இதனை பெண்கள் ஊட்டாமல் ஆண்களோட குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமூக நலத்துறை தரப்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வின் பொழுது 2 பிங்க் நிற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

 

ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது :-

 

குடியுரிமைக்கான சான்று மாற்றப்பட்டிருப்பது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய தொடர்ச்சியான விவாதத்தால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக வங்கதேசம் மற்றும் பல சமூகத்தை சேர்ந்த சட்டவிரோத மக்கள் குடியேற்றத்தை தடுப்பதற்காக இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவில் தங்கி ஆதார் கார்டு போன்றவற்றை பெற்று தங்களை இந்திய குடியுரிமை வாசிகளாக காட்டிக் கொள்ளும் நிலையில் இதனை தடுக்கும் விதமாகவே இது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது. 

 

இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :-

 

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று நாகையிலிருந்து காங்கேயம் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில் இருநாட்டிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்பொழுது கப்பல் பயணத்திற்கான டிக்கெட் விலை ₹8,500 இல் இருந்து 8000 ரூபாயாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் எடுத்துச் செல்லக்கூடிய உடமைகள் 10 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை ஏழு கிலோ ஹேண்ட்பேக் எடையாகவும் 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்து செல்ல அனுமதி வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 15,000 ரூபாய்க்கு 2 இரவு பயணம் உட்பட 3 நாள் கொண்ட சுற்றுலா திட்டமானது 30,000 ரூபாய்க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் ஆக மாற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2025யில் 20000 ஆயிரம் புதிய ஊழியர்கள் நியமனம்!! காக்னிசண்ட் நிறுவனம் திடீர் அறிவிப்பு!!

0

தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான காக்னிசன்ட், 2025 ஆம் ஆண்டில் 20,000 புதிய ஊழியர்களை  வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

20,000 புதியவர்கள் இப்போது எங்கள் பிரமிட்டை வடிவமைப்பார்கள், ஏனெனில் நாங்கள் இப்போது நிறைய நிர்வகிக்கப்பட்ட சேவைகளைப் பெறுகிறோம். எனவே, அது எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை துரிதப்படுத்தத் தொடங்கும்,” என்று மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் கூறினார். “இப்போது கரிம வளர்ச்சி மீண்டும் வந்துவிட்டது, பிரமிட்டை மீண்டும் அடித்தளமாக்க இது ஒரு நல்ல நேரம்” என்று குமார் மேலும் கூறினார்.

ஐடி துறையில் பிரமிடு அமைப்பு என்பது பொதுவாக குறைந்த அனுபவமுள்ள அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களையும், அதிக அனுபவமுள்ள குறைவான ஊழியர்களையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது, இதன் விளைவாக சம்பளக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.

25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐடி சேவை நிறுவனம்,  சுகாதார அறிவியல் மற்றும் நிதி சேவைகள் துறைகளில் பெரிய ஒப்பந்தங்களின் பின்னணியில், அதன் வருவாயை கணக்கீட முடிந்தது.

தேவை சூழலில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, காக்னிசண்டின் இந்திய சகாக்கள் நிதியாண்டு 26 க்கான சரியான பணியமர்த்தல் இலக்குகளைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்ட நேரத்தில், புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது.

இருப்பினும், இதுவரையிலான நிர்வாகக் கருத்துகளின்படி, முதல் ஐந்து ஐடி நிறுவனங்கள்  நடப்பு நிதியாண்டில் 80 முதல் 80 ஆயிரம் ஊழியர்கள் சேரலாம். நிறுவன நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, உண்மையான எண்ணிக்கை மாறுபடலாம்.

புதிய ஊழியர்களுக்கு, காக்னிசண்டின் மனித மற்றும் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட குறியீட்டை இணைக்கும் உள் டெவலப்பர் கருவியான ஃப்ளோசோர்ஸில் பயிற்சி அளிக்கப்படும். “நீங்கள் அதை முதல் முறையாகச் செய்து, அதன் வழி பின்பற்றும் போது ​​குறியீட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும், முதல் நாளிலிருந்தே குறியீட்டு உதவி தளங்களைப் பயன்படுத்துவது வளர்ச்சி சுழற்சி முழுவதும் உற்பத்தித்திறன் ஆதாயங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காக்னிசண்ட் நிறுவனம் அதன் பவர் புரோகிராமர்கள் மற்றும் முழு அளவிலான டெவலப்பர் பணிகளுக்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITகள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NITகள்) ஆகியவற்றிலிருந்து சிறப்பு பணியமர்த்தலைத் தொடர்கிறது.

இந்த நிறுவனம், அதன் சகாக்களைப் போலவே, AI எவ்வளவு தூரம் விநியோக கட்டமைப்புகளை மறுவடிவமைக்கும் என்பதை எதிர்பார்க்க முயற்சிக்கிறது. “பிரமிடு ஒரு பிரமிடாக இருக்குமா, அது ஒரு வைரமாக மாறுமா, அல்லது அது ஒரு சிலிண்டராக மாறுமா? இவை அனைத்தும் AI எவ்வாறு முன்னேறுகிறது என்பதைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.

பெல்கானை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ‘முகமையாக்கத்தின் வெக்டர் 3’ என்று விவரிக்கும் ஒரு பகுதியாக புதிய பாத்திரங்களை உருவாக்குவதையும் ஆராய்ந்து வருகிறது. பாரம்பரிய பொறியியல் திறன்கள் தேவையில்லாத அடுத்த தலைமுறை சேவை மாதிரிகளைக் குறிப்பிடுகிறது. “இவை கடந்த காலத்தில் நாங்கள் கவனிக்காத தொழிலாளர் குளங்கள்,” என்று தலைமை நிர்வாகி கூறினார், செயல்பாடுகள், கள அறிவு போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் அல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறார்.

சேவைத் துறையில் சுமார் 60,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், கல்லூரிப் படிப்பிலிருந்து உடனடியாகச் சேர்ந்துள்ளதாகவும் ரவி தெரிவித்தார். “அதுதான் நிறுவனத்தின் மையக்கரு, அதுதான் நிறுவனத்தின் நடுத்தர நிர்வாகம்.”

GCC-களில் இரட்டிப்பு குறைவு

பல்வேறு துறைகளில் காக்னிசன்ட்டின் ஆழமான கள நிபுணத்துவம், உலகளாவிய திறன் மையத்தில் (GCC) தனித்து நிற்கிறது என்றும், இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் திறமை ஆழம் உள்ளது என்றும் குமார் கூறினார்.

நிறுவனம் தற்போது 6 GCC ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, மேலும் 20 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பைப்லைனில் உள்ளன.

“எங்கள் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க ஐந்து கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக உலகளாவிய திறன் மையங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். மெகா ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதற்கும் GCC களில் முதலீடு செய்வதற்கும் எங்கள் பெரிய ஒப்பந்த உந்துதலை விரிவுபடுத்துகிறோம்,” என்று குமார் கூறினார்.

காக்னிசண்ட் நிறுவனம், நீண்ட கால, அதிக மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மூலம் GCC-களுடன் இணைந்து செயல்படுகிறது. இவை அமைவு மற்றும் மாற்றத்திற்கு அப்பாற்பட்டவை. வாடிக்கையாளர் முதிர்ச்சியைப் பொறுத்து, நிறுவனம் GCC முழுவதும் மைக்ரோ சேவைகளை வழங்குகிறது அல்லது முழு திறன்களையும் உருவாக்குகிறது, இயக்குகிறது மற்றும் மாற்றுகிறது (BOT).

இதில் AI-க்கான நிரந்தர சேவைகள் மற்றும் உற்பத்தித்திறன் கருவிகள் ஆகியவை அடங்கும், இதை காக்னிசண்ட் அதன் சலுகையின் மையமாகக் கருதுகிறது. குமார் தலைமையிலான நிறுவனம் இந்த மாதிரியை ஒரு ஒட்டும், வருடாந்திரம் மற்றும் நிரந்தர வருவாய் நீரோட்டமாக பந்தயம் கட்டுகிறது, குறிப்பாக வரலாற்று ரீதியாக குறைந்த அவுட்சோர்சிங் கொண்ட ஒரு பிரிவான பொறியியல் திறக்கப்படுவதால்.

அத்தகைய ஒரு முக்கிய GCC, சிட்டிசன்ஸ் ஃபைனான்சியல் குழுமத்திற்கான காக்னிசண்டின் ஹைதராபாத் வளாகத்தில் அமைந்துள்ளது.

பாஜக-வை உதறி தள்ளும் பாமக.. கூட்டணி வெச்சு தான் எல்லாம் போச்சு!! 11 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

PMK: பாமகவின் முழு நிலவு மாநாடானது இம்மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்து பத்து தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டு மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சி அதிகாரம் பறிபோனது.

இவையனைத்திற்கும் காரணம் அன்புமணி தான் அவர்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என கட்சி நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி யாரெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கட்சி அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் கூறினர். இதனையெல்லாம் ராமதாஸ் மனதில் வைத்து தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இவர் மீண்டும் பதவியிலிருந்தால் கட்டாயம் பாஜகவுடன் கைகோர்த்து விடுவார், இம்முறை அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா சென்னை வருகை புரிவதற்கு முன் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். மேற்கொண்டு நடக்கப் போகும் முழு நிலவு மாநாட்டில் கட்டாயம் எந்த கட்சியுடன், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கப் போகிறோம் பாஜக-வுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு என்ன?? என்பது குறித்து விரிவாக தெரிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்சியில் பங்கு தருவோம் என கூறிய விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி இது குறித்து அறிவிப்பு மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. ATM யில் பணம் எடுப்பதற்கு முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!!

0

ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும்.

முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பல வங்கிகள் இதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கியும் வரும் 9 ஆம் தேதி முதல் வரம்பை மீறி ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ 21 ஆகவும், இருப்பை பார்க்கும் பட்சத்தில் ரூ 11 வசூல் செய்யப்படும் என கூறியுள்ளனர்.

அடுத்து, வீட்டுக்கடன்கள் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6% ஆக குறைத்துள்ளது. இது தற்போதைய வீட்டுக்கடன் தவணைகளில் சற்று நிவாரணம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் இந்த மாற்றங்களை உடனடியாகப் பயன்படுத்துமா என்ற கேள்வி உள்ளது.

மேலும், வருமான வரி தாக்கலுக்கான முதலீட்டு சான்றுகள், வாடகை ரசீதுகள், வங்கி வட்டி அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை சர்ப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களை தாமதமின்றி தாக்கல் செய்வதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்க முடியும்.

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

0

IRTC: இந்தியாவின் முக்கிய போக்குவரத்து துறை எனப்படும் ரயில்வே, நாளுக்கு நாள் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இன்று (மே 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவின் விதிமுறைகள், தட்கல் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதலாவது, அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முன்பதிவால் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும்.

இரண்டாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒரு ஐடி மூலம் ஒரு நாளில் இரண்டே தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவுசெய்ய முடியும். மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 11 மணிக்கு இருந்ததை 10 மணிக்கு மாற்றி, பயணிகள் விரைவில் டிக்கெட் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு 30% இருக்கைகள் தட்கல் சேவைக்கு ஒதுக்கப்படும்.

மூன்றாவது, டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 75%, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% மட்டுமே திரும்ப பெற முடியும். 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது. ஆனால், வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கன்ஃபார்ம் ஆகாத பயணிகளுக்கு முழு பணம் திரும்ப கிடைக்கும்.

இந்த புதிய விதிமுறைகள், அனைத்து பயணிகளும் தெரிந்து கொண்டு தங்களின் பயண திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட சேவைக்கு வழிவகுக்கும்.

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

0

Cylinder Price: மே 1ஆம் தேதியுடன், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைந்துள்ளது. இப்போது சென்னை நகரில் இந்த வணிக சிலிண்டர் ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை மாற்றத்தின் பின்னணியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகள் உள்ளன. இது மாதந்தோறும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வணிக சிலிண்டர் விலை குறைந்தாலும், வீட்டில் உபயோகிக்கும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.868.50 என அதே நிலையில் தான் தொடர்கிறது. மேலும், 5 கிலோ சிலிண்டர் ரூ.323க்கும், 47.5 கிலோ வணிக சிலிண்டர் ரூ.4761-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களிலும் விலை மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. டெல்லியில் வணிக சிலிண்டர் விலை ரூ.1747.50, மும்பையில் ரூ.852.50, பெங்களூருவில் ரூ.855 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பீகாரின் பாட்னாவில் ரூ.1997.50 என அதிக விலையில் உள்ளது.

இந்த மாற்றம், உணவகங்கள், கடைகள் மற்றும் வணிக சார்ந்த சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.