Home Blog Page 226

முடங்கியவர்களை எழுந்து ஓட வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு!! இதன் பிற நன்மைகள் என்னென்ன?

0

மருத்துவ குணம் கொண்ட கிழங்குகளில் ஒன்று முடவாட்டுக்கால் கிழங்கு.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முடவாட்டுக்கால் கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கிழங்கு பெயருக்கு ஏற்றவாறு முடக்கு வாத வலியை குணப்படுத்தச் செய்கிறது.

முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்கள்:

1)எலும்பு வலிமையை அதிகரிக்க முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள இந்த கிழங்கை சாப்பிடலாம்.

2)தோள் பட்டை வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.கால் வலி குணமாக முடவாட்டுக்கால் சூப் செய்து குடிக்கலாம்.

3)செரிமானப் பிரச்சனை சரியாக முடவாட்டுக்கால் கிழங்கு உட்கொள்ளலாம்.கை கால் வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கை உட்கொள்ளலாம்.

4)முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள முடவாட்டுக்கால் கிழங்கை உட்கொள்ளலாம்.முடவாட்டுகால் கிழங்கில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

**முடவாட்டுக்கால் கிழங்கு – ஒன்று
**பூண்டு – நான்கு பல்
**தக்காளி – ஒன்று
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**இஞ்சி – ஒரு பீஸ்
**மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
**வெங்காயம் – ஒன்று
**கறிவேப்பிலை – ஒரு கொத்து
**கொத்தமல்லி தழை – சிறிதளவு
**எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
**உப்பு – தேவையான அளவு
**தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு முடவாட்டுக்கால் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து சூடாக்க வேண்டும்.

அடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி,பூண்டு துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள முடவாட்டுக்கால் கிழங்கு துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள்,மிளகுத் தூளை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும்.பின்னர் கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை இலைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூட வேண்டும்.மூன்று விசில் வந்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

நான் வெஜ் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!! தவறாமல் செக் பண்ணிக்கோங்க!!

0

பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக அசைவம் இருக்கின்றது.கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவை புரதம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.அசைவத்தில் கிரேவி,குழம்பு,வறுவல்,பிரட்டல் என்று பல வகைகள் செய்யப்படுகிறது.

சிலர் தினமும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.அசைவ உணவுகள் வாய் ருசிக்கு நன்றாக இருக்கும்.இருப்பினும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.அசைவ உணவுகள் சிலருக்கு செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதிக அசைவ உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.தொடர்ந்து அசைவ உணவுகளை உட்கொண்டால் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.அசைவ உணவுகளை சூடாக இருக்கும் பொழுதே சாப்பிட்டுவிட வேண்டும்.ஆறிய பிறகு உட்கொண்டால் அவை செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்பை அதிகப்படுத்தும்.

எந்த அசைவ உணவுகளை உட்கொண்டாலும் கூடவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.அசைவ உணவுகளை உட்கொண்ட உடனே உறங்கக் கூடாது.அசைவ உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

அசைவ உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஒருமுறை சமைத்த அசைவ உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் குடல் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துவிடும்.

கறி உணவுகளை அதிக எண்ணையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.நன்றாக வேகவைக்கப்பட்ட அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

0

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள தானியங்கள்,பயறு வகைகளை உட்கொள்ளலாம்.குறிப்பாக பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.முளைகட்டிய பயிர் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முளைகட்டிய பயிறை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த முளைகட்டிய பயறை சாப்பிடலாம்.வைட்டமின் கே,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் பயறு வகைகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

தினமும் ஒரு பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிறுப் புண்,அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் முளைகட்டிய பயறு சாப்பிடலாம்.உடல் எடையை குறையாக முளைகட்டிய தானியங்கள்,பயறு வகைகளை சாலட்டாக சாப்பிடலாம்.

பச்சை பயறு,கோதுமை,வெந்தயம்,கம்பு,கருப்பு உளுந்து,தட்டை பயறு போன்றவற்றை ஊறவைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

1)பச்சை பயறு(முளைகட்டியது) – இரண்டு தேக்கரண்டி
2)வெந்தயம்(முளைகட்டியது) இரண்டு தேக்கரண்டி
3)வெங்காயம்(நறுக்கியது) – இரண்டு தேக்கரண்டி
4)தக்காளி(பொடியாக நறுக்கியது) – ஒன்று
5)சாட் மசாலா – கால் தேக்கரண்டி
6)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து முளைகட்டிய பச்சை பயறு,வெந்தயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி அளவு சாட் மசாலா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

0

ஆண்,பெண் அனைவரும் குதிகால் வலியை அனுபவித்து வருகின்றனர்.அதிக நேரம் நின்றபடி வேலைபார்த்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் குதிகால் பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த குதிகால் வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

1)ஐஸ் தெரபி

வலி இருக்கின்ற குதிகால் பகுதியில் ஐஸ் தெரபி மேற்கொள்ளலாம்.ஒரு கவரில் ஐஸ்கட்டிகளை கொட்டி குதிகால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.குதிகால் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக ஐஸ் தெரபி திகழ்கிறது.

2)மசாஜ்

தினமும் ஏதேனும் ஒரு எண்ணெய் கொண்டு குதிகால் பகுதியை மசாஜ் செய்து வந்தால் வலி தானாக குறையும்.

3)உடற்பயிற்சி

குதிகால் வலியை குணப்படுத்தும் உடற்பயிற்சி செய்யலாம்.உங்களுக்கு அடிக்கடி குதிகால் வலி இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அவ்வப்போது ஓய்வு எடுக்க வேண்டும்.உங்களுக்கு குதிகால் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

குதிகால் வலியை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

**உப்பு
**தண்ணீர்

நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொண்டால் குதிகால் வலியை குணப்படுத்திவிடலாம்.

**எருக்கன் இலை
**விளக்கெண்ணெய்

ஒரு எருக்கன் இலையை எடுத்து நெருப்பில் சிறிது வாட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து எருக்கன் இலையை சுற்றி விளக்கெண்ணெய் தடவி குதிகால் மீது அழுத்தம் கொடுத்தால் வலி நீங்கிவிடும்.

**நொச்சி இலை
**தண்ணீர்

முதலில் சிறிதளவு நொச்சி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த விழுதை குதிகால் மீது அப்ளை செய்து கட்டினால் வலி குணமாகும்.

**வெது வெதுப்பான தண்ணீர்

இரவு நேரத்தில் ஒரு பக்கெட்டில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி குதிகாலை அதில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்.

உங்கள் உடலை குளுகுளுனு வச்சிக்க.. இந்த ஒரு பச்சை காயை அரைத்து குடிங்க!!

0

வெயில் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து குடித்து வாருங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.நெல்லி விதையை மட்டும் அப்புறப்படுத்திவிடுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டு கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரை தேக்கரண்டி சீரகத்தை அதில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை குடித்தால் உடல் சூடு தணிந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் ஒரு முழு வெள்ளரிக்காயை எடுத்துக்க கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெள்ளரி துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த வெள்ளரி ஜூஸை குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முழு நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து தேன் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

0

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பேன்,பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து விடுதலை கிடைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் கைகொடுக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்
2)வெற்றிலை – இரண்டு
3)புதினா இலை – பத்து
4)பூண்டு பற்கள் – ஐந்து
5)வேப்பிலை – இரண்டு கொத்து
6)வெந்தயம் – அரை தேக்கரண்டி
7)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.அடுத்து இரண்டு வேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பத்து புதினா இலைகளை அதில் சேர்க்க வேண்டும்.அடுத்து ஐந்து பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு தேங்காய் எண்ணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு கொத்து வேப்பிலை,இரண்டு தேக்கரண்டி வேப்பம் பூ ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் போட வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை தேங்காய் எண்ணையில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த எண்ணையை ஆறவைக்க வேண்டும்.இதனை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணையை தேய்ப்பதன் மூலம் உரிய பலனை காணலாம்.

தேங்காய் எண்ணையில் வேப்பிலை,வேப்பம் பட்டையை ஊறவைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.எலுமிச்சையை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்,பொடுகு பாதிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணையில் பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணையை ஆறவைத்து தலைக்கு தடவினால் பேன் தொல்லை அடியோடு ஒழியும்.

ஒரு ஸ்பூன் நெய்யும் நான்கு மிளகும் இருந்தால் படர் தாமரை பாதிப்பை விரட்டலாம்!!

0

சரும நோய்களில் ஒன்றான படர் தாமரையை குணமாக்க உதவும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.

தீர்வு 01:

நெய் – ஒரு தேக்கரண்டி
கருப்பு மிளகு – நான்கு

முதலில் நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு லேசாக தட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த கருப்பு மிளகை அதில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்க வேண்டும்.

அடுப்பை அணைத்த பிறகு இதை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த எண்ணையை படர்தாமரை மீது அப்ளை செய்தால் பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 02:

வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு

கிண்ணம் ஒன்றில் வினிகர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இதை படர் தாமரை மீது அப்ளை செய்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

தீர்வு 03:

கடுகு எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல்

அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு பல் வெள்ளைப்பூண்டை போட்டு சூடாக்க வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து படர் தாமரை மீது வைத்து அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 04:

குப்பைமேனி இலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

வாணலி ஒன்றில் தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் குப்பைமேனி இலையை போட்டு காய்ச்ச வேண்டும்.

இதை ஆறவைத்து படர் தாமரை மீது தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.குப்பைமேனி இலை சருமம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தையும் குணப்படுத்தும்.

சோர்ந்து போன உடலை சுறுசுறுப்பாக்க.. முருங்கையை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் முருங்கையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.

தீர்வு ஒன்று:

1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி

2)ஒரு தேக்கரண்டி தேன்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை கீரை பொடி போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த முருங்கை கீரை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

தீர்வு இரண்டு:

1)அரை தேக்கரண்டி முருங்கை காய் பொடி

2)ஒரு கிளாஸ் பால்

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் சிறிது கொதித்து வந்த பின்னர் அரை தேக்கரண்டி முருங்கை காய் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

தீர்வு மூன்று:

1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி
2)ஒரு தேக்கரண்டி நெய்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியை அதில் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

தீர்வு நான்கு:

1)ஒரு தேக்கரண்டி முருங்கை பூ
2)ஒரு தேக்கரண்டி தேன்

முருங்கை பூவை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை பூ பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

0

நம் பாரம்பரிய மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக பார்க்கப்படுகிறது.சளி,காய்ச்சல் என்று பல பிரச்சனைகளுக்கு தேன் சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் தேன் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.தேனில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு வலிமை அளிக்கிறது.

பலவித நன்மைகள் கொண்டிருக்கும் தேனை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.இருமல்,காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை உங்களில் பலர் வழக்கமாக வைத்திருப்பீர்.ஆனால் ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுத்தால் அவர்களின் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுவிடும்.இது தவிர சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும்.இதனால் உடல் பலவீனமடைந்து காய்ச்சல் பாதிப்பை சந்திக்க நேரிடும்.அதேபோல் தேனில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால் அதை ஒரு வயதிற்கு கீழ் இருக்கின்ற குழந்தைக்கு கொடுத்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

ஆனால் ஒரு வயது குழந்தைக்கு தேன் கொடுக்கலாம்.தினமும் சிறிதளவு தேன் கொடுத்தால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் சிறிதளவு தேனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் ஆற்றல் அதிகரிக்கும்.குழந்தைகளின் சரும ஆரோக்கியம் மேம்பட தேன் சாப்பிட கொடுக்கலாம். இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாம்.ஆனால் ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைக்கு தேன் கொடுப்பதை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும்.

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

0

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.

நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் கதி என்று கிடக்கிறேன், ஆனால் சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டே தான் இருக்கிறது எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை” என்று புலம்புபவர்களும் உள்ளனர்.

முருகனுக்கே ஒரு காலத்தில் சோதனைகள் வந்ததால்தான் கோபித்துக் கொண்டு பழனிக்கு சென்றார். அப்படி இருக்கையில் முருகனுடைய பக்தர்களாகிய நமக்கும் பல சோதனைகளை கொடுத்து தான் உயர்வுக்கு கொண்டு வருவார். உங்களுடைய சோதனைகள் மற்றும் வேதனைகளை, சாதனைகளாக மாற்றும் பொறுப்பு அப்பன் முருகருக்கு உண்டு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக அப்பன் முருகனை வழிபட்டு வருவார்கள். ஒரு சிலர் முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல் இதுபோன்ற பாடல்களை பாராயணம் செய்தும் வருவார்கள். ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான திருப்புகழ் உண்டு என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றனர்.

அதாவது அவரவர் பிரச்சனைக்கு உரிய திருப்புகழை பாராயணம் செய்தால் மட்டுமே அவருடைய பிரச்சனை விரைவில் சரியாகும். எனவே எந்தெந்த பிரச்சனைக்கு எந்தெந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

உங்களது வேண்டுதலுக்கு உரிய திருப்புகழை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 6 முறை, 9 முறை, 12 முறை என தினமும் உங்களது வேண்டுதல் நிறைவேறும் வரை திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.

1. குழந்தை வரம் வேண்டுபவர்கள் “செகமாயையுற்று திருப்புகழை” பாராயணம் செய்ய வேண்டும்.

2. திருமண வரம் வேண்டுபவர்கள் “நீலங்கொள் மேகத்தின் திருப்புகழை” பாராயணம் செய்ய வேண்டும்.

3. கல்வியில் வெற்றி பெற “மதியால் வித்தகனாகி” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.

4. சொந்த வீடு அமைய வேண்டும் என்றால் “அண்டர்பதி குடியேற திருப்புகழை” படிக்க வேண்டும்.

5. தீராத நோய்கள் குணமாக “இருமலு ரோக திருப்புகழை” படிக்க வேண்டும்.

6. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால் “நினைத்தது எத்தனையில்” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.

7. வருமானம் பெருகி பணம் கையில் தங்க வேண்டும் என்றால் “பெருக்க சஞ்சலித்து” என்ற திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.

8. அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் “ஆங்குடல் வளைந்து” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.

9. சொத்து வழக்கு பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் “கண்கயற்பிணை” திருப்புகழை படிக்க வேண்டும்.

10. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்பட “தொந்தி சரியாய் திருப்புகழை” படிக்க வேண்டும்.

11. எதிரிகளின் தொல்லை நீங்க “தரிக்குங்கலை” என்ற திருப்புகழை படிக்க வேண்டும்.

12. உங்களுக்கு ஒரு வேண்டுதல் மட்டும் இல்லாமல் பல விதமான வேண்டுதல்கள் இருக்கிறது என்றால், அந்த அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற “முத்தைத்தரு பத்தித்திரு” என்ற திருப்புகழை பாராயணம் செய்ய வேண்டும்.