Home Blog Page 225

தேமுதிகவில் அதிரடி மாற்றம்!.. விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி….

0

அப்பா விஜயகாந்தை பின் தொடார்ந்து மிகவும் இளமையான வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் விஜய பிரபாகரன். குறிப்பாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலிலில் இருந்து விலகியிருந்த போது அவரின் மகன் விஜய பிரபாகரனே கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி கட்சி வளர காரணமாக இருந்தார்.

பல மாவட்டங்களுக்கும் சென்று தேமுதிக நிர்வாகிகளிடம் பேசுவது, தேமுதிக மேடைகளில் அரசியல் பேசுவது என அரசியலில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். எனவே, கட்சிக்கு அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என தேமுதிகவினர் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில்தான், இன்று தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தர்மபுரியில் துவங்கியது..

ஆனால், கூட்டம் துவங்குவதற்கு முன்பே தேமுதிக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பிரேமலதாவின் சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான சதீஷ் தேமுதிக பொருளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைமையின் இந்த அறிவிப்பு தேமுதிகவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

விருது வாங்கிய நேரத்தில் அஜித்தை கிழித்தெடுத்த ஹீரா!!

0

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் நுழைந்த வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருக்கும் நடிகை ஹீரா என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெறவில்லை. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நேரத்தில் நடிகை ஹீராவின் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

 

ஹீரா X தள பதிவு :-

 

இந்த பதிவானது ஜனவரி மாதம் எழுதப்பட்ட இருப்பினும் நடிகர் அஜித் அவர்கள் பத்மபூஷன் விருது பெற்றிருக்கக் கூடிய சமயத்தில் பெரிதும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவில் நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கடைசியில் அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

 

தன்னை ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி அவர் நேரில் வராமல் மற்றொருவரை வைத்து இந்த விஷயத்தை தன்னிடம் கூறியதாகவும் தான் எவ்வளவு கெஞ்சி கதறி அழுத பொழுதிலும் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் ஒரு வேலைகாரி மாதிரி இருக்கக்கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் அப்பொழுதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் நான் விருப்பப்பட்ட மாதிரி என்னுடைய வாழ்வை வாழ முடியும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

 

இது மட்டுமல்லாது, நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாக பொய்யான தகவலை பரப்பியதோடு மக்கள் முன்னிலையில் என்னுடைய பெயரை கெடுத்து விட்டனர். அவர்களுக்கு சிம்பதி கிரியேட் ஆக வேண்டும் என்பதற்காக எனக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கிறது என்றெல்லாம் மக்களிடையில் பொய் சொல்லி இருப்பது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

அவர்களுடைய கஷ்ட காலத்தில் இரவு பகல் பார்க்காமல் அவர்களோடு இருந்த தருணத்தில் என்னை இவ்வாறு திடீரென தூக்கி போட்டு விட்டார்கள் என மனமடைந்து பேசி இருந்தால் ஹீரா.

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

0

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுக்கு புதிய மாற்றங்களை வருகிற மே 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

 

புதிய மாற்றங்கள் :-

 

✓ பயணிகளின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பொழுது படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பட்டியல் பயணம் செய்யக்கூடாது.

 

✓ ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு அவருடைய பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது என்றால் அது தானாகவே இரத்தாகி அந்த டிக்கெட்டுக்கான பணம் பயனரின் உடைய வங்கி கணக்கில் வந்துவிடும். இது போன்ற டிக்கெட்டை வைத்தும் ரயிலில் பயணம் செய்யக்கூடாது.

 

✓ ஒருவேளை ரயில் நிலையத்தில் நேரில் சென்று எடுக்கப்படக்கூடிய டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன்பதிவு பெட்டிகளில் குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சுகளில் ஏறக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் மேல் கூறியபடி பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர்கள் அந்த பயணியிடம் அபராதம் விதிக்கலாம் என்றும் மேலும் அவர்களை பொது பெட்டிக்கு மாற்றலாம் என்றும் இந்தியன் ரயில்வே புதிய வீதியில் தெரிவித்திருக்கிறது.

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

0

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள பலர் பயனடைந்து வரக்கூடிய நிலையில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சில முக்கிய கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கிறது. 

 

இலவச சமையல் எரிவாயு வர தகுதியானவர்கள் :-

 

✓ கணவனை பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியானவர்கள்.

 

✓ எல்பிஜி இணைப்பு இல்லாத கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு தகுதி உண்டு.

 

✓ பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதி உண்டு

 

✓ மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக வாழக்கூடிய மூத்தக்குடி மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பட பகுதி உண்டு.

 

✓ ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் இருக்கும் பட்சத்தில் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

 

மேல்கூறிய தகுதிகள் உள்ளவர்கள் தங்களுடைய கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப்பத்தார்களை பெற்று அதனுடன் ஆதார் அட்டை வருமானச் சான்றிதழ் இருப்பிட சான்று போன்ற முக்கிய சான்றிதழ் நகலெடுத்து வழங்குவதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்ல 100 மற்றும் 200 ரூபாய் எடுக்க முடியவில்லையா!!RBI வெளியிட்ட அறிவிப்பை கவனியுங்கள்!!

0

அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் மிஷின்களில் சமீப காலங்களாகவே 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் 100, 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கக்கூடிய சூழல் வரும் பட்சத்தில் மக்கள் பெரிதளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

 

பொதுவாக பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் சிறிதளவு பணங்களை மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலையில் ஏடிஎம் சென்று அந்த பணத்தை எடுக்க நினைக்கும் பொழுது ஏடிஎம்களில் கட்டாயமாக 500 ரூபாய் மற்றும் 500 தவிர வேறு எந்த நோட்டுகளும் வராததால் தங்களுக்கு தேவையான சிறிய தொகையை எடுப்பதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. சில காலங்களுக்கு முன்பு வரை ATM மெஷின்களில் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல ஏடிஎம் மிஷின்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

RBI வெளியிட்ட உத்தரவு :-

 

இனி அனைத்து வங்கிகளின் உடைய ஏடிஎம் மெஷின்களிலும் 100 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயமாக புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் இதை வழக்கமான முறையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் 30ம் தேதி க்குள் 75% ஏடிஎம் கார்டில் கட்டாயமாக 100 , 200 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. குறிப்பாக அனைத்து வங்கி ஏடிஎம்களுக்கும் மார்ச் மாதம் 2026 ஆம் ஆண்டு வரை தான் கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அதற்குள் 100% ஏடிஎம்களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!

0

2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்பது குறித்த விபரம் அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது. 

 

வங்கிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பதையும் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்ன என்பதையும் அறிந்து அதன்படி தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் கோடை வெயிலில் வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டிய தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியன் ரிசர்வ் வங்கி அட்டவணையின் படி மே மாதத்தில் விடுமுறை நாட்கள் :-

 

மே 1 – தொழிலாளர் தினம்

 

மே 4 – ஞாயிறு

 

மே 9 – வெள்ளிக்கிழமை ( ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி ) தெலுங்கு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு இந்த விடுமுறை கிடையாது

 

மே 10 – இரண்டாவது சனிக்கிழமை

 

மே 11 – ஞாயிறு

 

மே 12 – புத்த பூர்ணிமா

 

மே 16 – வெள்ளிக்கிழமை (சிக்கிம் மாநில தினம்)

 

மே 18 – ஞாயிறு

 

மே 24 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை

 

மே 25 – ஞாயிறு

 

மே 26 – காஜி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள் (சிக்கிம் பிராந்திய விடுமுறை)

 

மே 29 – மகாராணா பிரதாப் ஜெயந்தி ( சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை )

 

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தேசிய அளவில் இந்தியாவின் இருக்கக்கூடிய வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அட்டவணையாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் இந்த விடுமுறைகள் முழுவதுமாக பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உள்ளூர் விடுமுறைகளின் படி சில விடுமுறை நாட்கள் மாறுபடலாம்.

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

0

இன்று பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு உடல்நல பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.முக்கியமாக மலச்சிக்கல்,சர்க்கரை போன்ற பாதிப்பை அதிகமானோர் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)மாதுளை – ஒன்று
3)இஞ்சி – ஒரு துண்டு
4)கேரட் – ஒன்று
5)பீட்ரூட் – ஒன்று
6)கருவேப்பிலை – இரண்டு கொத்து
7)புதினா இலை – ஐந்து
8)கொத்தமல்லி – சிறிதளவு
8)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் விதையை அப்புறப்படுத்திக் கொள்ளவும்.

அதன் பிறகு மாதுளம் பழத்தின் விதை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஐந்து புதினா இலை மற்றும் கொத்தமல்லி தழையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.இரத்த சர்க்கரை பாதிப்பு கட்டுப்பட இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

0

நமது உடலில் அக்குள்,தொடை மற்றும் இறுக்கமான ஆடை அணியும் இடத்தில் கருமை உண்டாகும்.இந்த கருமை நிறம் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நலுங்கு மாவு – இரண்டு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – சிறிதளவு
4)பீர்க்கங்காய் நார் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

பச்சை பயறு,கடலை பருப்பு,வெட்டி வேர்,சந்தனம்,மஞ்சள் கிழங்கு,ரோஜா இதழ் போன்றவற்றை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இது
நலுங்கு மாவு என்றபெயரில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கி வாருங்கள்.பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து நலுங்கு மாவு பொடி இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.நலுங்கு மாவு கிடைக்காதவர்கள் பச்சை பயறை பவுடராக அரைத்து சலித்து பயன்படுத்தலாம்.

இப்பொழுது தயாராக வைத்திருக்கும் பேஸ்டை உடலில் கருமை நிறைந்த பகுதியில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு ஒரு பீர்க்கன் நார் கொண்டு கருமையான இடத்தில் வைத்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு தண்ணீர் கொண்டு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் தோல் கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு மாவு – இரண்டு தேக்கரண்டி
2)சந்தனத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
4)ரோஸ் வாட்டர் – மூன்று தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூள் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு மூன்று தேக்கரண்டி அளவு ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி பேஸ்ட் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை உடலில் உள்ள கருமை பகுதியில் பூசி ஸ்க்ரப் செய்தால் கருப்பு நிறம் நீங்கிவிடும்.

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

0

உங்கள் மூட்டு வலிமையை அதிகரிக்க அதிக செலவு இல்லாத ஒரு எளிமையான வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை இலை பொடி – 20 கிராம்
2)முருங்கை கீரை பொடி – 20 கிராம்
3)முடக்கத்தான் கீரை பொடி – 20 கிராம்
4)நெல்லிக்காய் பொடி – 20 கிராம்
5)கடுக்காய் பொடி – 20 கிராம்
6)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு ஈரமில்லாத டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 20 கிராம் பிரண்டை இலை பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் 20 கிராம் முருங்கை கீரை பொடி,20 கிராம் முடக்கத்தான் கீரை பொடி போட்டு கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு 20 கிராம் நெல்லிக்காய் பொடி மற்றும் 20 கிராம் கடுக்காய் பொடி கொட்டி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்ஸ் செய்து வைத்துள்ள பொடியை ஒரு தேக்கரண்டி அளவு மோரில் கலந்து கொள்ள வேண்டும்.இந்த மோரை குடித்தால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குணமாகும்.அதேபோல் இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் மிக்ஸ் செய்து பருகினால் மூட்டு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வாத நாராயணன் இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

வாத நாராயணன் இலையை உலர்த்தி பொடியாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த வாத நாராயணன் இலை பொடி போட்டு கலந்து குடித்தால் மூட்டு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

கிட்னி கற்களை கரைக்க சர்ஜரி வேண்டாம்!! இந்த பூவை பாலில் போட்டு குடிங்க!!

0

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் கல்லை கரைத்தெடுக்க சிறுகண்பீளை எனும் மூலிகையை பயன்படுத்தலாம்.சிறுகண்பீளை பூ,வேர் ஆகியவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சிறுகண்பீளை பூ – ஒரு தேக்கரண்டி
சிறுகண் பீளை வேர் – சிறிதளவு
பால் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

முதலில் சிறுகண்பீளை பூ மற்றும் சிறுகன்பீளை வேரை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி அரைத்த சிறுகண்பீளை சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் வாழைத்தண்டு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு வாழைத்தண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் கொட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வாழைத்தண்டு சூப் கொதித்து வந்த பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு உற்றி பருக வேண்டும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வாழைத்தண்டு சூப் பருகலாம்.