Home Blog Page 227

இந்த எண்ணையில் சமைக்கிறீங்களா? அப்போ சீக்கிரம் ஆயுள் குறைவது உறுதி!!

0

நமது உணவுகளை எண்ணெய் இல்லாமல் சமைப்பது கடினம்.உணவின் சுவையை கூட்டுவதில் எண்ணெய்க்கு தனி பங்கு இருக்கின்றது.நமது உடலுக்கு எண்ணெய் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.ஆனால் தற்பொழுது பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

முன்பெல்லாம் கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சூரிய காந்தி விதை எண்ணெய்,பாமாயில் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

இதுபோன்ற எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

1)பாமாயில்,சூரியகாந்தி விதை எண்ணெய் மற்றும் மீண்டும் மீண்டும் சுட்ட எண்ணையை பயன்படுத்தினால் உடலில் கேன்சர் கட்டிகள் உருவாகிவிடும்.

2)இந்த எண்ணையை பயன்படுத்தினால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து மாரடைப்பு பாதிப்பை உண்டாக்கிவிடும்.

3)இந்த ஆரோக்கியம் இல்லாத எண்ணையை பயன்படுத்தினால் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.

4)ஆரோக்கியம் இல்லாத எண்ணையை பயன்படுத்தினால் கண் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.

5)சுட்ட எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் குடல் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

6)ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் மீண்டும் சமைத்து உட்கொண்டால் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

7)ஆரோக்கியம் இல்லாத எண்ணையில் சமையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

நெஞ்சு பகுதியில் இழுத்து பிடிக்குதா? இதற்கான காரணங்களும் நிரந்தர தீர்வும் இதோ!!

0

நமது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் அதை மாரடைப்பு என்று கருத வேண்டாம்.மார்பு பகுதியில் ஏற்படும் எல்லா வலிகளும் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பாக இருக்க முடியாது.கழுத்து மற்றும் தோள் பட்டை பகுதியில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் மார்பு பகுதியில் வலி ஏற்படும்.

மார்பு வலிக்கான அறிகுறிகள்:-

1)தோள் பட்டை வலி
2)கழுத்து வலி
3)கழுத்து பகுதியில் கட்டி
4)தூக்கமின்மை
5)மார்பு பகுதியில் அடிபடுதல்
6)மன அழுத்தம்
7)கீல்வாதம்

இது தவிர கெட்ட கொழுப்புக்கு தேக்கம்,நெஞ்சு சளி,நெஞ்சு இறுக்கம்,காய்ச்சல்,தலைவலி போன்ற காரணங்களாலும் மார்பு பகுதியில் வலி ஏற்படும்.அதேபோல் கழுத்துப் பகுதியில் எலும்பு தேய்மானம்,முதுகெலும்பு பகுதியில் தேய்மானம் போன்ற காரணங்களால் மார்பு பகுதியில் வலி ஏற்படுகிறது.கழுத்து அல்லது மார்பு பகுதியில் கட்டிகள் இருந்தால் நெஞ்சு வலி ஏற்படும்.

எனவே நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கான அறிகுறி என்று தவறாக நினைக்க வேண்டும்.மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

உங்களுக்கு அடிக்கடி மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் முக்கியமாகும்.மார்பு மற்றும் கழுத்துக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்பட்டால் சில பயிற்சிகள் செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.

உங்கள் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பிடித்துக் கொள்ளவும்.பிறகு இடது மற்றும் வலது என்று இரு பக்கங்களிலும் அசைக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் மார்பு வலி குணமாகும்.அதேபோல் நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பதட்டம்,பயத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

0

இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமா? அல்லது நரகமா? என்று முடிவு செய்வார்கள். இவ்வாறு முடிவு செய்ததன் அடிப்படையில் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கான இடம் எது என்பதை கருட புராணம் கூறுகிறது. அதாவது ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமும், தீமைகள் மற்றும் பாவங்களை அதிகம் செய்தவர்களுக்கு நரகத்தில் இடமும் ஒதுக்கப்படும்.

பாவங்களை அதிகம் செய்து நரகத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படும் என்பதையும் கருட புராணம் கூறியுள்ளது. அதாவது ஒவ்வொரு விதமான பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான தண்டனைகள் நரகத்தில் வழங்கப்படும். அது என்ன தண்டனைகள் என்பது குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.

பொதுவாக கருட புராணம் என்பது ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆன்மாவின் பயணம், நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் மற்றும் பாவங்களை பற்றி பேசும் முக்கியமான புராணங்களுள் ஒன்றாகும்.

1. ஒரு பிராமணரை, தாய், தந்தையை அல்லது குருவை கொள்வது மிகப்பெரிய பாவமாகும். இதற்குரிய தண்டனையாக அந்த ஆன்மா மகாராவுருவ நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் இருக்கும் கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புகள் அந்த ஆன்மாவை கடிக்கும்.

2. பசுக்கள், முனிவர்கள் மற்றும் அப்பாவி உயிரினங்களை கொன்றால் அந்த ஆன்மா கும்பி பாக நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் ஆன்மாவை கொதிக்க விடுவார்கள்.

3. தவறான தகவல்களை பரப்புதல், ஏமாற்றுதல், நீதிமன்றத்தில் பொய் கூறுதல் போன்ற தவறுகள் செய்த ஆன்மா ராவுருவ நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு விஷ பாம்புகள் மற்றும் தீண்டிகளால் கடிக்கப்படும்.

4. திருமணம் ஆனவர்கள் பிறருடன் உறவு கொண்டால் அந்த ஆன்மா வஜ்ர கண்டக நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு கூர்மையான முள் அவர்களை குத்திக் கொண்டே இருக்கும்.

5. படம் பொருள் மற்றும் பிறரது சொத்துக்களை திருடினால் அந்த ஆன்மா தமிஸ்ரா நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் அந்த ஆன்மாவை தீவிரமான இருட்டில் அடைத்து, குத்தியும் அடித்தும் தண்டிக்கப்படும்.

6. தாய், தந்தை, ஆசான் மற்றும் பெரியவர்களை மதிக்காமல் இருந்தால் அந்த ஆன்மா அசிபத்ரன் நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு உலோகத்தால் ஆன கூர்மையான கத்திகள் அந்த ஆன்மாவை வெட்டிக் கொண்டே இருக்கும்.

7. நிறைய பணம் மற்றும் வளங்களை வைத்திருந்தும் மற்றவர்களுக்கு உதவாமல் இருந்தால் அந்த ஆன்மா புயோத நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மா அழுக்கான மற்றும் பாலான நீரில் மூழ்கி விடும்.

8. அதிகமாக மது அருந்துவது, தடை செய்யப்பட்ட உணவுகளை உண்பது போன்ற குற்றங்களை செய்தால் அந்த ஆன்மா அலாபட்ச நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மாவிற்கு குடிக்க உருக்கிய இரும்பை தருவர்.

9. தன்னுடைய கடமைகளை தவிர்த்தல், தர்மத்திற்கு புறம்பாக நடப்பது போன்ற குற்றங்களை செய்தால் அந்த ஆன்மா கிருமி போஜன நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மாவை புழுக்கள் மற்றும் கிருமிகள் தின்றுவிடும்.

10. பிறரைப் பற்றி பொய் பரப்புதல், அவமானப்படுத்துதல் போன்ற தவறுகளை செய்தால் அந்த ஆன்மாவின் நாக்கு தொடர்ந்து அறுக்கப்படும்.

11. பெண்களை தவறாக நடத்துதல், அவர்களை வன்புணர்வு செய்தல் போன்ற குற்றங்களுக்கு அந்த ஆன்மா நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு இருக்கும் பெரிய இரும்பு கொம்புகளில் முட்டும் வரை தொங்கவிடப்படும்.

12. கோவில்களை சேதப்படுத்துதல், சிலைகளை உடைத்தல் போன்ற தவறுகளை செய்தால் அந்த ஆன்மா மகா பிரபு நரகத்திற்கு அனுப்பப்பட்ட தொடர்ந்து தீயில் சுடப்படும்.

இந்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பகவான் விஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு, தர்மத்தின் படி வாழ்ந்து வந்தால் சற்று தப்பிக்கலாம். இனிமேல் இந்த தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்தால் அந்த ஆன்மா நரகத்திலிருந்து மீண்டும் வைகுண்டம் அனுப்பப்படும் என்று கருட புராணம் கூறுகிறது.

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

0

ஒரு வீடு என்றால் அதில் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. தனியாக பூஜையறையை கட்டா விட்டாலும் கூட, பூஜை அலமாரிகளை வாங்கி வைத்து வழிபட வேண்டும் என்ற பழக்கம் முந்தைய காலங்களில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. பூஜை அறை இல்லாத வீடு ஒரு வீடாகவே கருதப்படாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பூஜை அறை.

அந்த பூஜை அறையில் கண்டிப்பாக 5 கடவுள்களின் புகைப்படம் இருக்க வேண்டும். விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் போன்ற ஐந்து கடவுள்களின் புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதை தவிர்த்து உங்களது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் போன்ற புகைப்படங்களையும் வைத்துக் கொள்ளலாம்.

அதேபோன்று பூஜை அறையில் அந்த வீட்டுப் பெண்கள் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பரவும். தினமும் விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்டி சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம், அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும். இது குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

ஒரு வீட்டிற்கு கடவுளின் அருள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல், நிம்மதியாக வாழ முடியும். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் காண முடியும். பண பற்றாக்குறை இல்லாமல், கடன் பிரச்சனைகள் இல்லாமல் ஒரு குடும்பம் இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு தடை இல்லாத பண வரவு என்பது இருக்க வேண்டும்.

அதற்கு முதலில் கடவுளின் அருள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான குடும்பங்களில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பணப்பற்றாக்குறை தான். இந்த பண பற்றாக்குறை குடும்பத்திற்கு ஏற்படக்கூடாது என்றால் இந்த முக்கியமான 5 மங்களப் பொருட்களும் உங்கள் வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஐந்து பொருட்களும் பண ஈர்ப்பு சக்தியை கொண்டவை.

எனவே இவை உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் பொழுது பண ஈர்ப்பு சக்தி அதிகரித்து பணவரவையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த 5 மங்களப் பொருட்களும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களாகும். எனவே இந்தப் பொருட்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயார் கண்டிப்பாக வாசம் செய்வார். வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய அந்த ஐந்து மங்களப் பொருட்கள் எவை? என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

1. வசம்பு 2. வெட்டிவேர் 3. கிராம்பு 4. ஏலக்காய் 5. பச்சைக் கற்பூரம். இந்த ஐந்து பொருட்களும் தான் உங்களது வீட்டு பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஐந்து பொருட்களும் பண வசிய சக்தியை பெற வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் ஒன்பது வசம்பினை மஞ்சள் நிற நூல் கொண்டு சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சிறிதளவு வெட்டிவேர், 9 ஏலக்காய், 9 கிராம்பு, சிறிதளவு பச்சை கற்பூரம் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி, அதன்மேல் உங்களது குலதெய்வத்தின் பெயரை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த மூட்டையை பூஜையறையில் ஒரு பலகை அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைத்து, அதாவது அந்த மூட்டை உயரமாக தெரியும்படி வைக்க வேண்டும்.

இவ்வாறு வைத்து பூஜை அறை வழிபாட்டின் பொழுது அந்த மூட்டைக்கும் தீப தூப ஆராதனை காட்டி, வழிபாடு செய்யும்பொழுது பணவரவு என்பது நிச்சயமாக ஏற்படும். அதேபோன்று ஒரு வசம்பினை எடுத்து தீபத்தில் சுட்டால் கருப்பு நிறமாக மாறும். அதனை ஒரு கட்டையின் மேல் தேய்த்தால் கருப்பு நிற சாம்பல் உருவாகும். அந்த சாம்பலில் சிறிதளவு நெய் கலந்தால் கருப்பு நிற மை போன்று உருவாகும். அதனை தினமும் உங்களது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்.

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

0

அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் யாருடைய கண்ணிலும் படக்கூடாது என்று வாஸ்து பகவான் கட்டளையிட்டதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. “அட்சய” என்றால் “அழியாமல் வளரக்கூடியது” என்று பொருள். எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற எந்த பொருளை வாங்கினாலும் அது நம்முடைய வாழ்வில் குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இன்றைய நாளில் புண்ணியம் செய்தால், பல மடங்கு புண்ணியம் நமக்கு வந்து சேரும் என்பதும் உண்மை. இந்த நாளில் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை காட்டிலும், அதனை மற்றவர்களுக்கு தானம் செய்வதால் மட்டுமே செல்வம் மென்மேலும் பெருகும். அவ்வாறு தங்கத்தை தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இது உங்களுடைய செல்வத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

இந்த அட்சய திருதியை நாளில் தான் பிரம்மன் இந்த உலகை படைத்தார் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் தான் மதுரை மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் எதையும் வாங்க முடியாதவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டாலே மனம் குளிர்ந்து விடுவார்.

இந்த அட்சய திருதியை நாளில் மண்பானை, துளசி செடி, உப்பு, வெள்ளை நிற பொருட்கள், வெண்கடுகு, பருப்பு வகைகள், காய்கறிகள், நெய், சோழி, சங்கு, ஸ்ரீ சக்கரம், புல்லாங்குழல், விநாயகர் சிலை, மயிலிறகு, வெள்ளியால் செய்யப்பட்ட காமதேனு போன்ற பொருட்களை வாங்கி வைத்தால் செல்வம் பெருகும். மேலும் லட்சுமி கடாட்சம் உருவாகும்.

இந்த அட்சய திருநாளில் பல்லியை மட்டும் உங்களால் பார்க்கவே முடியாது. “பல்லியை எங்களது கண்களுக்கு காட்டுங்கள்” என்று வாஸ்து பகவானிடம் மனதார வேண்டிக் கொண்டு “நாங்கள் செய்த பாவத்திற்கு உண்டான தண்டனையை சிறிது குறையுங்கள்” என்றும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நாளில் பல்லியை நீங்கள் பார்த்து விட்டால் உங்களுடைய பாவம் மற்றும் தரித்திரம் நீங்கி புண்ணியம் வந்து சேரும்.

எனவே இந்த நாளில் ஒருவேளை நீங்கள் பல்லியை பார்த்து விட்டால் தலைவணங்கி பல்லியை வணங்குங்கள். நீங்கள் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று பல்லியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

கனவு போல இருக்கு! ஷாலினிக்கே எல்லா கிரெடிட்டும்!.. ஃபீல் பண்ணி பேசிய அஜித்!.

0

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

ajith

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது நேற்று ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.

இந்நிலையில், விருது வாங்கிய பின் பேசீய அஜித் ‘என்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் மிகவும் அற்புதமான உணர்வை தருகிறது. கனவில் வாழ்வது போல இருக்கிறது. யாராவது கிள்ளி எழுப்பி விட்டுவிடுவார்களோ என பயப்படுகிறேன். எனக்காக பல தியாகங்கள் செய்து, எப்போதும் பக்கபலமாக இருப்பவர் ஷாலினி. நான் வாழ்வில் சாதித்த அத்தனைக்கும் அவருக்குதான் கிரெடிட் கொடுக்க வேண்டும். என் குடும்பதான் மிகப்பெரிய பலம். என் மனைவி நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். என் கஷ்டமான காலத்தில் எனக்கு ஒர் தூணாக இருந்துள்ளார். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.

Red Button Robotic Cop : பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை!!

0

சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்டு வரக்கூடிய பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தவறுக்கும் விதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு கருவியை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

ரெட் பட்டன் ரோபோடிக் காப் பயன்கள் :-

 

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இது போன்ற ரோபோடிக்காப் பயன்படுத்தப்படும் என்றும், அதிலும் குறிப்பாக வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த ரோபோடிக் காப் வைக்கப்படும் என்று சென்னை காவல்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இதில் 360 டிகிரி கேமரா இருப்பதாகவும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தெளிவாக படம் பிடிக்கும் திறன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக பிரெட் ரோபோடிக்காப் மூலமாக அறிவில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் உடனடியாக ரோந்து பணியில் இருக்கக்கூடிய காவலர்கள் அந்த இடத்திற்கு வந்து பாதுகாப்பு வழங்குவர் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்பில் வீடியோ கால் செய்து நேரடியாக நடப்பதை காவல் நிலையத்தில் தெரியப்படுத்தக் கூடிய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு!! அதிரடி காட்டிய தமிழக அரசு!!

0

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசினுடைய மதுவிலக்கு ஆயுத தீர்வை துறை மூலமாக தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படக்கூடிய டாஸ்மார்க் தமிழகம் முழுவதும் சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் வருகிறதே ஒன்றாம் தேதி அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து டாஸ்மார்க் கடைகளோடு இணைந்த மதுக்கூடங்கள் தனியார் பார்கள் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் மனம் மகிழ் பார்கள் போன்றவை செயல்படக்கூடாது என்றும் அவற்றிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு வருடமும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படுவதைப் போல இந்த ஆண்டு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை மீறி டாஸ்மார்க் கடைகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் அல்லது தனியார் ஹோட்டல்களில் மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். வருடத்திற்கு 10 நாட்கள் மதுபான கடைகளுக்கு பொது ஒரு முறையாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தொழிலாளர் தினம் ஒரு பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் தடையா?!.. அதிகாரிகள் ஆலோசனை!…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பாகிஸ்தானின் சரக்கு விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள் எனவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

2.0 வெர்ஷன் லோடிங்கா?!.. 2026-ல் ஒரே வெர்ஷன்தான்!. பழனிச்சாமி ராக்ஸ்!…

0

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார்.

ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பாஜகவுடன் கூட்டணியும் வைத்துவிட்டார். இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. இது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக முடியுமா என்பது தேர்தல் ரிசல்ட்டில்தான் தெரியவரும்.

ஒருபக்கம் சமீபகாலமாகவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசை திட்டி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதோடு, சட்டசபையில் பல விஷயங்களையும் பேசி கேள்விகளை எழுப்பி வருகிறார். இதில் ஸ்டாலினுக்கும், அதிமுகவினருக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கிறது. இது ஸ்டாலினிக்கே தலைவலியாக இருந்து வருகிறது. இன்று சட்டசபையில் பேசிய ஸ்டாலின் 2026 வருடமும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான். இதுவரை மக்கள் பார்த்தது ஒரு வெர்ஷன்தான். அடுத்து பார்க்கபோவது 2.0. வெர்ஷன் 2.0 லோடிங் என பேசியிருந்தார்.

இந்நிலையில், பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி!, போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!

ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று Version 2.0 Loading ஆம்! அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே version தான்.. அது அதிமுகversion தான்!

மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய ‘ஓ’ (0) வாக போட்டு பைபை ஸ்டாலின் என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி’ என பதிவிட்டிருக்கிறார்.