Home Blog Page 263

சன்ஸ்க்ரீன் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த விஷயங்கள் தெரிஞ்சிக்காம விடாதீங்க!!

0

சூரிய வெளிச்சத்தில் இருந்து சரும ஆரோக்கியத்தை காக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.இது ஒரு தோல் பராமரிப்பு பொருளாகும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்கும்.சூரிய ஒளி சருமத்தில் படாமல் இருக்க சருமம் சேதமாகாமல் இருக்க சன்ஸ்க்ரீன் உதவுகிறது.

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் சேதமாவது குறையும்.மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதைவிட சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கோடை காலத்தில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இந்த வெயில் காலத்தில் வெளியில் சென்றால் நம் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.அதிக வெயிலால் தோல் அலர்ஜி பிரச்சனை வரலாம்.இதன் காரணாமாகத் தான் சன்ஸ்கீரின் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றோம்.

எல்லா சன்ஸ்க்ரீனும் நமது சருமத்திற்கு ஒத்துக் கொள்ளாது.கோடை காலத்தில் SPF 30 என்ற சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் சருமத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் அண்டாமல் இருக்கும்.இது தவிர SPF 15 மற்றும் SPF 50 போன்ற சன்ஸ்க்ரீன் இருக்கிறது.

சன்ஸ்க்ரீன் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1)நீங்கள் எந்த சன்ஸ்க்ரீன் வாங்கினாலும் அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.

2)உங்கள் சன்ஸ்க்ரீனில் SPF PA அருகில் மூன்று + சிம்புள் இருக்கின்றதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

3)உங்கள் சருமத்திற்கு தகுந்த சன்ஸ்க்ரீனை வாங்கி பயன்படுத்த வேண்டும்.சரும வகைக்கு ஏற்றவாறு ஜெல்,லோஷன்,க்ரீம் வடிவில் சன்ஸ்க்ரீன் கிடைக்கிறது.

நீங்கள் வெளியில் செல்வதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த சன்ஸ்க்ரீனை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.அதேபோல் தினமும் அளவாக சன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும்.உடலில் வியர்வை இருந்தால் துடைத்துவிட்டு சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.

உடனடி எனர்ஜி தரும் வாழைப்பழத்தை இவர்களெல்லாம் சாப்பிடவேக் கூடாதாம்!!

0

பண்டைய காலத்தில் இருந்தே வாழைப்பழம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும்.இந்த வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடல் பலவீனப் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம்.வாழைப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.என்னதான் வாழைப்பழத்தில் நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் இதில் சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது.

வாழைப்பழம் சாப்பிட்டால் பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.பல் கூச்சம்,பல் ஈறு வீக்கம்,பல் சொத்தை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தீவிர பல் சொத்தை பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.பல் சொத்தை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் புழுக்கள் அதிகமாகிவிடும்.

நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

அளவிற்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிட்டால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.பகல் நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் தூக்கம் வரும்.வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படும் வாழைப்பழத்தை உட்கொண்டால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.குறிப்பாக ஒற்றைத் தலைவலி பாதிப்பை சந்திக்க நேரிடும்.வாழைப்பழத்தில் அதிக கலோரி நிறைந்திருக்கிறது.இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.

வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என்றாலும் இதை அதிகமாக உட்கொண்டால் நிச்சயம் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டுவிடும்.வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

உங்கள் கிட்னி ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

0

நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட பொட்டாசியம்,சோடியம் குறைவாக இருக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

இது தவிர வேறு என்னென்னெ உணவுகளை உட்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

1)சின்ன வெங்காயம்

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் நீங்கும்.சின்ன வெங்காயச் சாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

2)முள்ளங்கி

ஒரு முள்ளங்கியை பொடியாக நறுக்கி சாறு எடுத்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.சிறுநீரகத்தில் அழுக்கு,கழிவுகள் தேங்காமல் இருக்க முள்ளங்கி சாறு செய்து குடிக்கலாம்.

3)மஞ்சள் தூள்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் மிகஸ் செய்து பருகினால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

4)பூண்டு பல்

இரவில் ஒரு வெள்ளைப்பூண்டு பல்லை சுட்டு இடித்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.

5)சிவப்பு திராட்சை

சிறுநீரக கழிவுகள் வெளியேற சிவப்பு திராட்சை பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம்.சிவப்பு திராட்சை விதையை பொடித்து சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

6)காலிஃப்ளவர்

இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

7)மஞ்சள் பூசணி விதை

ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் மஞ்சள் பூசணி விதையை வறுத்து பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

8)முட்டைகோஸ்

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை முட்டைகோஸை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

9)எலுமிச்சை

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிளாஸிற்கு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள அழுக்கு,கற்கள் அனைத்தும் நீங்கும்.

10)பீட்ரூட்

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பீட்ரூட்டை ஜூஸாக அரைத்து குடித்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

அடடே சூப்பர்.. Sweet Corn சாப்பிட்டால் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?

0

ஸ்வீட் கார்ன் என்று அழைக்கப்படும் இனிப்பு சோளத்தை விரும்பாதவர்கள் யாருமில்லை.இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஸ்வீட் கார்னில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

இது தவிர வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தற்பொழுது ஜங்க் புட்களில் ஸ்வீட் கார்ன் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்வீட் கார்ன் ஊட்டச்சத்துக்கள்:

**நார்ச்சத்து **நிறைவுற்ற கொழுப்பு **வைட்டமின் சி **சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது.

1)இதில் இருக்கின்ற நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

2)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.

3)சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சுவீட் கார்னில் புரதம்,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

4)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.இதில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

5)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம்.சால்ட்,சுண்டல் என்று ஸ்வீட் கார்னை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

6)ஸ்வீட் கார்னில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

7)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்த கொழுப்பு அளவு குறையும்.ஸ்வீட் கார்னில் இருக்கின்ற நிறைவுற்ற கொழுப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் ஸ்வீட் கார்னை வேகவைத்து வெண்ணெய்,உப்பு,மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் தடவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் “நஞ்சு முறிவு சூரணம்”!! இப்படி யூஸ் பண்ணுங்க!!

0

உங்கள் இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் மற்றும் கொழுப்புகளை வெளியில் தள்ள இங்கு தரப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடிக்கலாம்.

**நஞ்சு முறிவு சூரணம் – மூன்று கிராம்
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு நஞ்சு முறிவு சூரணம் சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.

**பூண்டு பல் – இரண்டு
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் உரலில் இதை போட்டு லேசாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் வெள்ளைப்பூண்டு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

**எலுமிச்சம் பழம் – ஒன்று
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணம் ஒன்றிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் வெது வெதுப்பான தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் படிந்துள்ள கழிவுகள் வெளியேறும்.

**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை மிக்ஸ் செய்து காலை நேரத்தில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சு கழிவுகள் வெளியேறும்.

அரிசி ஊறிய தண்ணீரை தலைக்கு தேய்த்தால்.. முட்டி வரை முடி வளருமா?

0

பெண்களுக்கு நீளமான கூந்தல் மீது எப்பொழுதும் ஒரு ஆசை இருக்கின்றது.நம் பாட்டி காலத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.நம்மைவிட நம் அம்மா பாட்டிகளுக்கு தலைமுடி அடர்தியாகவும்,நீளமாகவும் இருக்க காரணம் ஆரோக்கிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான்.

அவர்களை போன்று அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற விரும்பும் பெண்கள் இந்த ஆலோசனையை தொடர்ந்து பின்பற்றுங்கள்.தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தலாம்.

அரிசி தண்ணீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின் பி
2)வைட்டமின் ஈ
3)தாதுக்கள்
4)கனிமங்கள்
5)ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

அரிசி ஊறவைத்த தண்ணீரை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

**தலை முடி உதிர்வு பிரச்சனை சரியாகி அடர்த்தியாக முடி வளரும்.

**தலைக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மை கிடைக்கும்.அரிசி ஊறிய நீரை தலைக்கு பயன்படுத்தினால் அதன் வலிமை அதிகரிக்கும்.

**தலைமுடி நீளமாக வளர அரிசி ஊறவைத்த தண்ணீரை தலைக்கு பயன்படுத்தலாம்.தலையில் அழுக்கு படியாமல் இருக்க அரிசி ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்தலாம்.

அரிசி நீர் தயார் செய்வது எப்படி?

நீங்கள் பச்சரிசி,சிவப்பரிசி,பாசுமதி என்று எந்த வகை அரிசியையும் பயன்படுத்தலாம்.இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.கிண்ணம் ஒன்றில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.பின்னர் அரிசி நீரை மட்டும் வேறொரு கிண்ணத்திற்கு வடித்து ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து தலைக்கு தடவிய ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!

0

நாம் அடிக்கடி சந்திக்கும் நோய் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.தலையில் வாலித்தால் அதை தலைவலி என்று சொல்கிறோம்.ஆனால் தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.டென்ஷன் ஆவதால் ஏற்படும் தலைவலி,ஒற்றைத் தலைவலி,கிளஸ்டர் தலைவலி,சைன்ஸ் தலைவலி,ஹிப்னிக் போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.

உடல் சோர்வு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.இதை டென்ஷன் தலைவலி என்று அழைக்கின்றோம்.தலையின் ஒருபுறத்தில் துடித்தல்,வாந்தி,குமட்டல் உணர்வு இருந்தால் அது ஒற்றைத் தலைவலி என்று அர்த்தம்.

நெற்றி பகுதியில் வலி,கண்கள் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல் இருந்தால் அதி கிளஸ்டர் தலைவலி என்று அர்த்தம்.மூக்கு பகுதி மற்றும் நெற்றியை சுற்றி வலி தலைவலித்தால் அது சைன்ஸ் தலைவலி என்று அர்த்தம்.தூங்கி எழுந்த உடன் தலைவலி வந்தால் அது ஹிப்னிக் தலைவலி பாதிப்பு என்று அர்த்தம்.உடலில் நீரிழிப்பு ஏற்பட்டாலும் தலைவலி பாதிப்பு ஏற்படும்.

நெற்றிப்பகுதியில் வலி இருந்து தலைவலித்தால் தேங்காய் எண்ணெயை சூடாக்கி சூடம் சேர்த்து கலந்து பூசினால் வலி குறையும்.தண்ணீரில் கல் உப்பு போட்டு ஆவிபிடித்தால் தலையில் நீர்கோர்த்தல் பிரச்சனை சரியாகும்.

கொத்தமல்லி விதையை கொண்டு டீ போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.புதினா இலையை சூடான தண்ணீரில் போட்டு ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.சுக்கு கொண்டு பிளாக் டீ செய்து குடித்தால் தலைபாரம் குணமாகும்.

தலைவலி குணமாக மூலிகை டீ செய்முறை:

1)சுக்கு
2)கொத்தமல்லி
3)தேயிலை தூள்
4)பட்டை
5)கிராம்பு
6)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி இடித்த கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேயிலை தூள்,ஒரு துண்டு இடித்த சுக்கு,ஒரு துண்டு பட்டை,இரண்டு கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தலைவலி பிரச்சனை குணமாகும்.

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

0

இந்த உலகத்திலேயே இறைவனால் தரப்பட கூடிய பல்வேறு வகையான வரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தை வரம். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அருமை பலருக்கு தெரிவதில்லை. ஆனால் திருமணம் ஆகி 10 வருடம், 20 வருடம் என குழந்தை பாக்கியம் பெறாமல் இருப்பவர்கள் குழந்தைக்காக ஏங்கி பல்வேறு வகையான பரிகாரங்கள், சிகிச்சைகள் போன்றவற்றை செய்து குழந்தைக்காக காத்திருப்பார்கள்.

அவர்களது ஆசையை நிறைவேற்றி தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்தான் இந்த முருகனுடைய பரிகாரம்.முருகனை வேண்டி தான் பலரும் குழந்தைக்காக விரதம் இருப்பர். சொல்லப்போனால் முருகனை நம்பி தான் நிறைய பெண்மணிகள் குழந்தை வரத்திற்காக காத்திருக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்து கொண்டே முருகனை நம்பி இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக குழந்தை வரம் கிடைத்துவிடும்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு புதன்கிழமை நாட்களில் செல்வது நல்லது. புதன்கிழமை இரவு 7:30 மணி அளவில் “ஏகாந்தம் தரிசனம்” என்பது நடைபெறும். உலக நன்மைக்காக அந்த தரிசனம் நடத்தப்படுகிறது. அந்த தரிசனத்தின் பொழுது முருகப்பெருமான் சந்தன காப்பில் காட்சி அளிப்பார்.

அந்த சந்தன காப்பில் முருகப்பெருமான் மிகவும் பூரிப்புடன் காட்சியளிப்பார். எனவே அந்த தரிசனத்தின் பொழுது பக்தர்கள் என்ன கேட்டாலும் அதனை வாரி வழங்கி விடுவார் என்பது ஐதீகம். எனவே இந்த ஏகாந்த தரிசனத்தின் பொழுது மனதார உங்களுக்கு வேண்டியதை வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த ஏகாந்த தரிசனத்தின் பொழுது கொடுக்கக்கூடிய விபூதியை மிகவும் பயபக்தியுடன் பெண்கள் வாங்கி வந்து தொடர்ந்து 48 நாட்கள் அடி வயிற்று பகுதியில் தேய்த்துக் கொள்வதன் மூலம் குழந்தை பாக்கியத்தை பெற முடியும். அதனுடன் முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும் வேண்டும்.

அதாவது குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த சிகிச்சை முறையை தொடர்ந்து கொண்டே, முருகனின் மீது முழு நம்பிக்கை வைத்து அந்த விபூதியை தொடர்ந்து 48 நாட்கள் தேய்த்துக் கொள்ள வேண்டும். இடையில் மாதவிடாய் நாட்கள் வந்தால் அதனை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது. சுத்தபத்தமாக இருக்கக்கூடிய நாட்களை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புதன்கிழமை இரவு ஏகாந்த தரிசனம் முடித்த பின்னர், “பள்ளியறை பூஜை” நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கண்டிப்பாக இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுத்த நாள் அதாவது வியாழன் கிழமை அதிகாலை 4:30 மணி அளவில் “விஸ்வரூபம்” என்னும் தரிசனம் நடைபெறும். அந்த தரிசன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம் என்பது அதிகாலை முருகனின் கண்களை திறக்கும் பொழுது அவர் யாரை முதலில் பார்க்கிறாரோ, அவர்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும் என்றும் அவர்கள் கேட்கும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த விஸ்வரூப தரிசனத்தின் பொழுது இலை பிரசாதம் என்பதை கொடுப்பார்கள், அதனையும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

இவ்வாறு திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கி, முருகனின் அனைத்து தரிசன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு கொடுக்கக் கூடிய விபூதியை, குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் அடிவயிற்றில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்டிப்பாக குழந்தை பாக்கியத்தை பெறுவார்கள்.

குளிக்கும் போது நாம் ஒருபோதும் செய்யவேக் கூடாத தவறுகள்!! இந்த விஷயங்களை கட்டாயம் பாலோ பண்ணுங்க!!

0

உடலை சுத்தம் செய்ய நாம் தினமும் குளிக்கின்றோம்.குளிப்பதால் உடலில் படிந்துள்ள அழுக்குகள்,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.சிலருக்கு தினமும் காலை,இரவு என்று இருமுறை குளிக்கும் பழக்கம் இருக்கும்.உடலை சுத்தப்படுத்திக் கொள்ள நாம் குளிக்கின்றோம் என்றாலும் அதை சரியாக செய்யவில்லை என்றால் பலன்கள் கிடைக்காது.

அதிக நேரம் குளித்தால் உடலில் இருக்கின்ற அழுக்குகள் நீங்கிவிடும் என்று நினைப்பது தவறு.நாம் நீண்ட நேரம் குளித்தால் நமது சருமத்தின் இயற்கை எண்ணெய் குறைந்துவிடும்.சருமம் வறண்டு தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆன்டிபாக்டீரியால் சோப் பயன்படுத்தி குளித்தால் நமது சருமத்தில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.இதனால் சருமம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அதிக நேரம் தலைக்கு குளித்தால் தலையின் இயற்கை எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்துவிடும்.தலை வறட்சி,பொடுகுத் தொல்லை,முடி சேதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதேபோல் அதிக சூடான நீரில் குளித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.சூடான நீர் தலை அரிப்பை உண்டாக்கிவிடும்.

தலைக்கு குளிக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)நம் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் முடி உதிராமல் இருக்கும்.முடிக்கு ஒருவித பளபளப்பு கிடைக்கும்.

2)அதேபோல் சரியான pH லெவல் கொண்ட சோப் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.உங்கள் சருமத்திற்கு தகுந்த சோப்பை பயன்படுத்துங்கள்.

3)முதலில் கால் பாதங்களை தண்ணீர் ஊற்றி நினைக்க வேண்டும்.அதன் பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.அதிக நேரம் சோப் மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

4)அலர்ஜி,சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்.குளிக்கும் பொழுது சருமத்திற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது.ஜென்டில் மசாஜ் செய்து குளித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

0

பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 வது லக்னத்திற்கு உரிய தெய்வம் தான் அந்த லக்னத்திற்கு பலம் கொடுக்கக்கூடிய தெய்வம் ஆகும். மேலும் ஐந்தாவது இடம் என்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய இடம்.

எனவே ஐந்தாவது இடத்திற்கு உரிய தெய்வத்தை வழிபடும் பொழுது கர்மாக்கள், தடைகள், பாவங்கள் ஆகிய அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய தெய்வங்கள் எவை எவை என்பது குறித்து காண்போம்.

1. மேஷம்:

மேஷம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் என்றால் சிம்மம். எனவே இவர்கள் சிவபெருமான், அண்ணாமலையார் போன்ற தெய்வங்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பது சிறப்பை தரும். இதனால் இவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பிரதோஷ வழிபாடு செய்தால் மேலும் பல சிறப்புகளை தேடி தரும்.

2. ரிஷபம்:

ரிஷபம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கன்னி. கன்னி லக்னம் என்பது கேரளாவை குறிக்கக்கூடிய ஒன்று. எனவே கேரளாவில் இருக்கக்கூடிய குருவாயூரப்பர், பெருமாள் போன்ற தெய்வங்களின் புகைப்படம் உங்கள் பூஜை அறையில் இருப்பது நல்லது.

3. மிதுனம்:

மிதுனம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் துலாம். மகாலட்சுமி மற்றும் ஆதிதிருவரங்கத்தின் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும். எனவே இந்த கடவுளின் புகைப்படம் உங்கள் பூஜை அறையில் இருப்பது சிறப்பு.

4. கடகம்:

கடகம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் விருச்சிகம். திருச்செந்தூர் முருகரின் வழிபாடு வெற்றிகளை தேடி தரும். எனது முருகனின் திருவுருவ படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

5. சிம்மம்:

சிம்மம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் தனுசு. சித்தர்கள், சிவன், பெருமாள், ஸ்ரீ ராமர் போன்ற தெய்வங்களை வழிபடுவது பல சிறப்புகளை தேடி தரும். மேலும் அம்பாள் மற்றும் ஸ்ரீராமரின் பட்டாபிஷேக புகைப்படம் பூஜை அறையில் இருப்பது நல்லது. அதேபோன்று ராமாயணம் புத்தகமும் வீட்டில் இருக்க வேண்டும்.

6. கன்னி:

கன்னி லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மகரம். சுப்பிரமணியர் (முருகன்) புகைப்படம் பூஜை அறையில் இருப்பது சிறப்பை தேடி தரும்.

7. துலாம்:

துலாம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கும்பம். உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்ற கோவில்களின் வழிபாடு சிறப்பு தரும். இந்த கோவில்களின் வழிபாடு மன அழுத்தத்தை குறைக்கும். ஸ்ரீரங்கம், திருக்கோவிலூர், ஸ்ரீவில்லிபுத்தூர் இதுபோன்ற கோவில்களின் கோபுர புகைப்படங்களை பூஜை அறையில் வைக்கலாம்.

8. விருச்சிகம்:

விருச்சிகம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மீனம். மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன் போன்ற தெய்வங்களின் வழிபாடு சிறப்பை தரும்.

9. தனுசு:

தனுசு லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மேஷம். மலை மேல் இருக்கின்ற முருகர் குறிப்பாக பழனி மலை முருகர் ராஜ அலங்கார படம் வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும்.

10. மகரம்:

மகரம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் ரிஷபம். கோ பூஜை பார்ப்பது, மகாலட்சுமி வழிபாடு, பிரதோஷ வழிபாடு போன்றவை சிறப்பை தரும்.

11. கும்பம்:

கும்பம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மிதுனம். சக்கரத்தாழ்வார், பெருமாள், ஸ்ரீ ராமர் போன்ற தெய்வங்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

12. மீனம்:

மீனம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கடகம். அம்பாள் புகைப்படம் சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக அபிஷேகம் செய்வது போன்ற அம்பாளின் புகைப்படம் யோகத்தை தரும்.