Home Blog Page 264

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

0

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.

நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் கதி என்று கிடக்கிறேன், ஆனால் சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டே தான் இருக்கிறது எந்த ஒரு முடிவும் கிடைக்கு வில்லை” என்று புலம்புபவர்களும் உள்ளனர்.

முருகனுக்கே ஒரு காலத்தில் சோதனைகள் வந்ததால்தான் கோபித்துக் கொண்டு பழனிக்கு சென்றார். அப்படி இருக்கையில் முருகனுடைய பக்தர்களாகிய நமக்கும் பல சோதனைகளை கொடுத்து தான் உயர்வுக்கு கொண்டு வருவார். உங்களுடைய சோதனைகள் மற்றும் வேதனைகளை, சாதனைகளாக மாற்றும் பொறுப்பு அப்பன் முருகருக்கு உண்டு.

உங்களுடைய ராசி கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் முருகருக்கு பெயர் கொடுக்கும். அந்த முருகரை நீங்கள் வணங்கும் பொழுது உங்களுடைய வாழ்க்கை வளமாகும். எல்லோரும் எல்லா முருகரையும் கும்பிடலாம். ஆனால் உங்களுடைய கட்டத்தில் இந்த முருகருக்கு என ஒரு கட்டம் ஒதுக்கி இருக்கும். அந்த முருகரை வணங்கும் பொழுது சுபிட்சம் உண்டாகும்.

அதாவது உங்களுடைய கட்டத்தில் செவ்வாயும் சனியும் சேரும் பொழுது சுப்பிரமணி, செவ்வாய் குரு செந்தில் ஆண்டவர், செவ்வாய் சுக்கிரன் பாலசுப்பிரமணியன் இது போன்று கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இவ்வாறு ஒவ்வொருவருடைய கட்டத்திலும் இருக்கக்கூடிய கிரகங்களை அடிப்படையாக வைத்து, அவரவருக்கு உரிய முருகரை வணங்கும் பொழுது நல்ல பலன்கள் கிடைக்கும்.

எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்கலாம். ஆனால் அவரவர் ஜாதக கட்டத்தில் இருக்கும் முருகரை வழிபடும் பொழுது கிடைக்கக்கூடிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். இப்பொழுது ஒவ்வொரு ராசிக்கும் எந்த முருகக் கடவுளை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.

1. மேஷம்- பழனி ஆண்டவர்
2. ரிஷபம்-பழமுதிர்ச்சோலை
3. மிதுனம்-வயலூர் முருகன்
4. கடகம்-திருச்செந்தூர்
5. சிம்மம்-ராஜ அலங்கார முருகன்
6. கன்னி-திருத்தணி
7. துலாம்- மருதமலை
8. விருச்சிகம்-எட்டுக்குடி முருகன்
9. தனுசு-கோயம்புத்தூர் அனுபாவி முருகன்
10. மகரம்-அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருக்கும் சுப்பிரமணியன்
11. கும்பம்- சுவாமிமலை
12. மீனம்-திருச்செந்தூர்

எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வழிபடலாம். ஆனால் ஒவ்வொரு ராசிக்கும் உரிய முருகரை வழிபடும் பொழுது நிச்சயமாக முருகனின் அருளை பெற முடியும்.

இதேபோன்று குருதிசை நடக்கும்பொழுது சுவாமிமலைக்குச் சென்று முருகரை வழிபடலாம்.உங்கள் வீட்டில் யாருக்கேனும் முருகனின் அம்சம் கொண்ட பெயர் இருக்கிறது என்றால் நீங்களும் ஒரு பாக்கியசாலி தான். தினமும் மாலை 6:30 மணி அளவில் முருகனின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய விளக்கினை ஏற்றி வைத்து, மனதார அவரை வணங்கும் பொழுது சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொடுப்பார்.

அப்பன் முருகனை அனுதினமும் நினைத்து வழிபடும் பொழுது, கஷ்டங்கள் பல வந்தாலும் இறுதியில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்வார். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கல்கள், கடன் தொல்லைகள் இதுபோன்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முருகனுக்காக காவடி எடுத்து பாத யாத்திரை செல்லும் பொழுது அனைத்து பிரச்சனைகளும் தூள் தூளாக சிதறிவிடும்.

இறுதியாக அந்த காவடியை முருகனின் பாதத்தில் சமர்ப்பிக்கும் பொழுது, உங்களுடைய அனைத்து பாரத்தையும் அந்த முருகனின் பாதத்தில் சமர்ப்பித்ததற்கு சமமாக கருதப்படும். குபேரனின் வசிய நிறமான பச்சை நிற வஸ்திரத்துடன் முருகனை சென்று காணும் பொழுது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!

0

நம் விரல் நகத்தை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் கெரட்டின் ஒரு தடித்த புரதத்தால் ஆனது.நம் நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம்.

உங்கள் நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நகத்தின் நடுவே கோடுகள் இருந்தால் நிக்கோட்டின் படிந்திருக்கிறது என்று அர்த்தம்.விரல் நகங்கள் வெளிர்ந்து இருந்தால் அது உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

நகத்தில் குழிகள் தென்பட்டால் அது சொரியாசிஸ் பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.ஒருவேளை நகத்தில் கருமை நிறம் பழுப்பு கோடுகள் தென்பட்டால் அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.கை விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

விரல் நகங்கள் சொத்தையாக இருந்தால் பூஞ்சை தொற்று உள்ளது என்று அர்த்தம்.இப்படி நகங்கள் இருந்தால் நீங்கள் நகங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நகங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து தூய்மையாக்க வேண்டும்.

அதன் பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு நகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.நகங்களை அடிக்கடி வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.நகங்களுக்கு இராசயனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டி சுத்தப்படுத்த வேண்டும்.இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னர் வெது வெதுப்பான தண்ணீரில் கை கால் நகங்களை ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

0

உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது.

இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

மனச்சிதைவு நோய்:

3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போன்றே செயல்படுவார்கள்.இது பிறவி நோய் பாதிப்பு இல்லை.

மனச்சிதைவு நோய் பாதிப்பின் அறிகுறிகள்:

1)பிரமை
2)சீரற்ற சிந்தனை
3)நடத்தையில் மாற்றம்
4)உணர்வு நிலையில் மாற்றம்
5)மாயை தோற்றம்
6)தனிமை படுத்திக் கொள்ளல்
7)அதீத கவலை

இந்த பாதிப்பை ஆங்கிலத்தில் ஸ்கிசோஃப்ரினியா என்று அழைப்பார்கள்.இது பரம்பரைத் தன்மையாலும் ஏற்படும்.

மனச்சிதைவு நோய் பாதிப்பின் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்த நோய் பாதிப்பு தீவிரமானால் தற்கொலை எண்ணம் தோன்றும்.அடிக்கடி தற்கொலை முயற்சி செய்ய நேரிடும்.

அடிக்கடி ஆக்ரோஷமான நிலையில் இருக்க நேரிடும்.சிறு செயல்களுக்கு அதிகமாக கோபம் வரும்.கடுமையான மன அழுத்த பிரச்சனை உண்டாகும்.தனிமை உணர்வை அதிகமாக நேசிக்கும் நிலை ஏற்படும்.

அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போகும்.எதற்கும் சத்தமாக கத்தி பேச தோன்றும்.மற்றவர்களுடன் ஒற்றுப்போகாத நிலை.நிதானமற்ற பேச்சை வெளிப்படுத்துதல் போன்றவை மனச்சிதைவு நோய்க்கான தாக்கமாகும்.

மனச்சிதைவு நோய் பாதிப்பை தடுப்பது எப்படி?

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்த நோய் பாதித்தவர்கள் சிறந்த மன நல மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழத் தொடங்கினால் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

0

மூலிகைச் செடி என்பது மருத்துவம் ரீதியாகவும் ஆன்மீகம் ரீதியாகவும் பெரிதும் உதவி வருகிறது. என்னதான் காலங்கள் மாறினாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் இந்த மூலிகைக்கான மகத்துவம் என்பது எந்த காலத்திலும் மாறாத ஒன்று. இந்த மூலிகை செடியானது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படும்.

அதாவது மூலிகை என்பதை நாம் உட்கொள்ளும் பொழுது உடல் ரீதியான பிரச்சனைகள் குணமாகும். அதே சமயம் இந்த மூலிகை சம்பந்தமான பொருட்கள் நமது வீட்டில் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், தீய சக்திகள், கண் திருஷ்டிகள் ஆகியவற்றை விலக்கி ஆன்ம ரீதியான பிரச்சனைகளையும் தீர்த்து தரும்.

இந்தப் பதிவில் எந்தெந்த மூலிகை செடிகளை நமது வீட்டில் வைத்துக் கொண்டால், நமது குடும்பத்தில் இருக்கும் பண பிரச்சனைகள் தீர்ந்து பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது குறித்து காண்போம்.

1. பவள மல்லி:

இந்த மலர் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மலராகும். இந்த மலரானது இறைவனுக்காக பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூக்கும் மலராகும். எனவே இந்த மலரை நாம் நினைக்கும் சமயத்தில் செடியில் இருந்து பறிக்க முடியாது. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே இது பூத்து உதிர்ந்து விடும்.

எனவே அதிகாலை நேரத்தில் இந்த பவளமல்லி செடிக்கு கீழே வெள்ளை நிற துணியினை விரித்து வைத்து விட வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பூக்கள் அந்த துணியின் மேல் உதிர்ந்து இருக்கும். பூக்கள் உதிர்ந்த பின்னர் அதனை மண் படாமல் எடுத்து, மகாலட்சுமி தாயாருக்கு போட்டு விட வேண்டும்.

இந்த பவளமல்லி செடியின் அடி வேர், அதாவது வடக்கு திசையை நோக்கி செல்லக்கூடிய வேரினை கணித்து எடுத்து வெட்டாமல் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த வேரின் மேல் சிறிதளவு மஞ்சள் மற்றும் பாலை ஊற்றிவிட்டு அந்த வேரில் ஒரு பச்சை நிற கயிறு கட்டி விட வேண்டும்.

அதன் பிறகு இரண்டு கரங்களையும் கூப்பி, உங்களது வேரினை “வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் எடுத்து, எனது கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த வேரினை தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமை கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டு வர வேண்டும். இறுதியாக ஏழாவது வெள்ளிக்கிழமை இதேபோன்று கற்பூர ஆரத்தி காண்பித்து அவல் பொறி வைத்துவிட்டு தான் அந்த வேரினை வெட்ட வேண்டும்.

அதன் பிறகு அந்த வேரினை பூஜை அறையில் வைத்து அந்த வேரின் மேல் புனுகு, மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவற்றை தடவி அதனை ஒரு காப்பு மாதிரி செய்து, கடவுளை வணங்கி விட்டு கல்லாப் பெட்டி அல்லது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால் பணவரவு அதிகரிக்கும்.

2. மருதாணி:

மருதாணி என்பது ஒரு பண வசிய மூலிகை செடி ஆகும். இந்த மருதாணியை அரைத்து பெண்கள் மாதம் மாதம் வருகின்ற மூன்றாம் பிறை நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் வைத்துப் பார்த்தாலே உங்களுக்குள் நடக்கும் வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் இந்த மருதாணியை வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.

அதேபோன்று இந்த மருதாணி இலைகளை காய வைத்து, வாரத்திற்கு ஒரு முறை சாம்பிராணி தூபம் போடும் பொழுது இந்த மருதாணி இலையையும் போட்டு தூபம் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து பணவரவு ஏற்படும்.

3. துளசி:

துளசி செடி என்பது மகாலட்சுமிக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த துளசி செடியின் மேல் சிறிதளவு மஞ்சள் தூவி விட்டு, தீபம் ஏற்றி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வணங்கி வந்தாலே அந்த வீட்டில் பணப்புழக்கம் என்பது அதிகரிக்கும்.

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

0

காகத்திற்கு உணவு வைப்பது என்பது ஒரு சாதாரண காரியம் கிடையாது. அது பலவிதமான நன்மைகளை நமக்கு தேடித் தரும். ஒரு சிலர் காகத்திற்கு சாதம் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரியாமலேயே சாதம் வைப்பார்கள். ஒரு சிலர் தோஷங்கள் நீங்கவும், பரிகாரத்திற்காகவும் காகத்திற்கு சாதம் வைப்பார்கள்.

இவ்வாறு காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது, அந்த சாதத்தினை காகம் சாப்பிட்டு அதன் பசியை தீர்த்துக் கொள்வதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். ஒருவரின் உயிரை காப்பாற்றும் அளவிற்கு கூட இந்த ஒரு செயல் நமக்கு உதவும்.

காகத்திற்கு சாதாரணமாக நாம் எப்பொழுதும் வைக்கும் உணவுடன் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வைக்கும் பொழுது, கிடைக்கக்கூடிய பலன்கள் இரண்டு மடங்காக அதிகரித்து நமக்கு கிடைக்கும்.

ஒரு சிலர் காகத்திற்கு தினமும் உணவு வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சிலர் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் மட்டுமே வைப்பார்கள். பெரும்பாலானோர் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பார்கள். இதற்கு காரணம் காகம் என்பது சனிபகவானின் வாகனம் என்பதாலும், காகம் என்பது பித்ருக்களின் மறு உருவம் என்பதாலும் சனிக்கிழமை நாட்களில் பெரும்பாலானோர் உணவு வைக்கின்றனர்.

ஒரு வீட்டிற்கு காகம் வருகிறது என்றாலே அது அதிர்ஷ்டம் தான். அவ்வாறு காகம் வீட்டிற்கு வருகிறது என்றால், நமது முன்னோர்களின் ஆசி நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் ஒரு சில வீட்டிற்கு காகம் வருவதோ, வீட்டின் மேல் அமர்ந்து கரைவதோ செய்யாது. இது போன்ற வீடுகளில் பித்ருக்களின் சாபம் என்பது இருக்கும்.

ஒரு குடும்பத்திற்கு பித்ருக்களின் சாபம் இருந்தால் அந்த வீட்டில் எப்பொழுதும் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது போன்ற சாபங்கள் மற்றும் தோஷங்கள் இருப்பவர்கள், தினமும் காகத்திற்கு உணவினை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பித்ருக்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்து, காகம் ஆனது நமது வீட்டிற்கு வரத் தொடங்கும். மேலும் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை நாம் பெறுவதற்கு உகந்த மற்றும் சிறந்த வழியும் இதுதான்.

எனவே காகத்திற்கு தினமும் முடிந்த அளவிற்கு சாதம் வைக்க வேண்டும். அதேபோன்று நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரவும், கடன் பிரச்சனைகள் தீரவும், பித்ரு தோஷம் மற்றும் சனி தோஷம் இது போன்ற தோஷங்கள் நீங்கவும் காகத்திற்கு நாம் வைக்கக்கூடிய உணவுடன் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வைத்தால் நிச்சயம் தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

அந்த பொருள் என்னவென்றால் 1. பிஸ்கட் 2. தண்ணீர். பிஸ்கட் என்பது காகம் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருள்தான். எனவே காகம் இதனை சாப்பிடுமா? சாப்பிடாதா? என்ற பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த உணவு காகத்திற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தினமும் காகம் உங்களது வீட்டிற்கு வரும். எனவே காகத்திற்கு தினமும் உணவு வைக்கலாம். அதே சமயம் காகத்திற்கு தினமும் இந்த உணவுப் பொருட்களை வைப்பதன் மூலம் நமது தோஷங்களும் நீங்கிவிடும்.

இந்த ஒரு செயலை மட்டும் தினமும் செய்து வாருங்கள், இதனால் கிடைக்கக்கூடிய பலன்களை உங்களால் நிச்சயம் கண்கூடாக காண முடியும். இந்த ஒரு எளிய பரிகாரத்தின் மூலம் உங்களது கஷ்டங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குறைவதை கண்டிப்பாக உங்களால் உணர முடியும். இது ஒரு சாதாரண செயல்தான், ஆனால் இதன் பலன்கள் மிகவும் அதிகம்.

நடிகைகளிடம் பாலியல் சீண்டல்!. குட் பேட் அக்லி பட நடிகர் கைது!..

0

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.

கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்து மீறியதாக மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும், போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு தன்னிடம் அவர் தரக்குறைவாக நடந்துகொண்டதாக வேறொரு ஒரு நடிகையும் புகார் தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்., இதைத்தொடர்ந்து அவர் கேரளா எர்ணாகுளத்தில் அவர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் போதை பொருள் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. அதேநேரம் போலீஸ் வருவதற்கு முன்பே ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் சைன் டாம் சாக்கோ நேரில் வந்து வாக்குமூலம் அளித்தார். அதில், சிலர் தன்னை தாக்க வருவதாக கேள்விப்பட்டதால் அங்கிருந்து ஓடினேன் என கூறினார். இந்நிலையில், தற்போது அவரை கேரள போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய புகார்!.. காதல் சுகுமார் விரைவில் கைது!…

0

காதல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சுகுமார். அந்த படத்தில் சுகுமார் நடித்திருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக செய்யும் வேலையை மறைத்து தன்னுடன் தங்கியிருப்பவர்களை மட்டம் தட்டி அவர் பேசுவதும் பின்னர் அவர்களிடம் மாட்டிகொண்டு அடிவாங்கும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

அதன்பின் பல படங்களிலும் சுகுமார் நடித்திருக்கிறார். விருமாண்டி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பேட்டி ஒன்றில் ‘டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவை போல நடித்து காமெடி செய்து கொண்டிருந்தேன். ஒருமுறை வடிவேலு என்னை அழைத்து ‘என்னைப்போல் ஏன் நடிக்கிறாய்?’ எனக்கேடு அவரின் நண்பர்களோடு சேர்ந்து என்னை தாக்கினார்’ என பரபரப்பு பேட்டி கொடுத்தார். இப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னுடன் வாழ்ந்து நகை, பணம் ஆகியவற்றை பெற்றுகொண்டு ஏமாற்றிவிட்டார் என சென்னையை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் துணை நடிகை அவர். அவருக்கும் சுகுமாருக்கும் பழக்கம் ஆகி நாளடைவில் அவரோடு வாழ துவங்கியிருக்கிறார். ஆனால், சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்களை கழித்ததால் போலீசாரிடம் புகார் அளித்திதார். இந்த வழக்கில் இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, சுகுமார் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.

சச்சின் திரைப்படம் ரீரிலிஸ் செய்த காரணம் தெரியுமா!! இப்படி கூடவா நினைப்பாங்க.. தாணுவின் மட்டமான சிந்தனை!!

0

நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ஆனது தற்பொழுது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இந்த நேரத்தில் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இயக்குனர் தானோ மற்றும் விஜய் இணைந்து எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா விளக்கி இருக்கிறார்.

பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய படங்கள் மிகப்பெரிய வெற்றியையோ, வசூலையோ செய்யவில்லை என்பதற்காகவும் தற்பொழுது நடிகர் அஜித் அவர்களின் குட் பேட் அக்லி திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி எந்த வித போட்டியும் இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருவதாலும் எதிர்பார்க்காத அளவு வசூலை எட்டி வருவதாலும் சச்சின் திரைப்படத்தை ரீலீஸ் செய்த நடிகர் அஜித் அவர்களின் திரைப்படமானது விஜய் படத்தின் வசூலை தாண்டி விடுமோ என்ற எண்ணத்தில் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படம் வெளியிடக்கூடிய நடிகராக நடிகர் அஜித் விளங்கி வரக்கூடிய நிலையில் தற்போது அவரின் படம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போட்டிக்கு வேறு படங்களும் இல்லாமல் திரையாக்கி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருவதோடு வசூலையும் குவித்து வருகிறது இந்த வசூலை குறைக்கும் நோக்கில் இது போன்ற ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக சச்சின் திரைப்படம் ஆனது வெளியான காலத்திலேயே வெற்றி பெறாத திரைப்படம் ஆக தான் உள்ள நிலையில் அதனை மீண்டும் ஏன் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு இந்த திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளில் டிக்கெட் ஹவுஸ் ஃபுல் என தெரிவிப்பது கூட நடிகர் விஜய் அவர்களின் நிர்வாகிகள் செயலை என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் உண்மையில் சச்சின் திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளை நேரில் சென்று பார்த்தல் அங்கு 30 பேர் கூட இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்.. அடம் பிடிக்கும் திருமா!! எடப்பாடிக்கு கொடுத்த அட்வைஸ்!!

0

VSK ADMK: அதிமுக பாஜகவுடன் வைத்துள்ள கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று  திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ரீதியாக அவர் அளித்த பேட்டியில், பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற மதம் சார்ந்த கட்சிகள் அரசியலாக வளர முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இடது சாரி மற்றும் சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் குறியாக உள்ளது.

அதிலும் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி இவர்கள் முன் வர வேண்டுமென  நினைக்கின்றனர். இப்படி இருக்கையில் திமுக மட்டுமின்றி அதிமுகவையும் சாய்க்க முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்த அதிமுக, மீண்டும் அவர்களை தேர்வு செய்துள்ளது முட்டாள் தனமான ஒன்று. இப்படி சங்கர பரிவார் அரசியல் வாதிகள் வளர்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து அதிமுக கூட்டணி வைத்து வரலாற்று பிழை செய்துள்ளது.

இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்து துணை போவ கூடாது அதையும் ஏறி போவது வரலாற்றுப் பிழை தான். தமிழர்களின் நலனை பேணி காக்க சமூக நீதி அரசியலையும் நிலைநாட்ட பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்வது நல்லது என தெரிவித்துள்ளார். இவ்வாறு எடப்பாடிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எனக்கும் விஜய்க்கும் து முதல்வர் பதவி.. அதிமுக கொடுத்த ஆப்பர்!! உண்மையை போட்டுடைத்த சீமான்!!

0

NTK: நாம் தமிழர் கட்சி சீமான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக, விஜய்க்கும் எனக்கும் என்னெல்லாம் சலுகை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் 90 தொகுதிகளில் துணை முதல் பதவியும் தருவதாக தெரிவித்தது. அதேதான் எனக்கும் இதற்கு முன் சலுகை கொடுத்தது. இதனையெல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்னிடம் கூறினார்.

ஒரு சிலர் துணை முதல் பதவி தராததால் கூட்டணி அமைக்கவில்லை என கூறுகின்றனர். ஆனால் அது அப்படி கிடையாது. இரு கட்சிகளிடையே ஒத்து வராமல் இருந்திருக்கலாம். தேர்தல் கால கூட்டணி ஆட்சிக்கான கூட்டணியும் வேறு என்று நான் எப்போதும் சொல்லவில்லை. 2006ம் ஆண்டு போல எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத போது நாம் தமிழர் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும். நாங்கள் ஆட்சி மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம், ஆள் மாற்றத்தை ஏற்பவர்கள் அல்ல.

அப்படியே மாற்ற வேண்டும் என்று நினைத்தால் கட்டிடத்திற்கு வர்ணம் பூசாமல் அதை இடித்துவிட்டு புதிதாக கட்டுவேன். முதன் முதலாக இந்தியை திணித்தது காங்கிரஸ்தான். அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி தன்னாட்சி பற்றி பேச முடிகிறது?? இவர்கள் ஆட்சியில் இருந்தபோது மாநில உரிமையை பறித்ததுண்டு. முதல்வர் ஸ்டாலின் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு உள்ளது எனக் கூறினார்.

அது மிகவும் தவறு. அனைத்து வரியும் கொடுத்துவிட்டு தற்போது வரை மாநிலத்தில் கிடைக்க வேண்டிய கல்வி நிதி பேரிடர் நிதி எதுவும் கிடைக்கவில்லை. அதை எப்படி அவுட் ஆப் கண்ட்ரோல் என கூற முடியும். அண்டர் வே கண்ட்ரோல் எனக்கு கூறுவது தான் சரி இவ்வாறு ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.