Home Blog Page 262

சத்தமே இல்லாமல் உருவான மூடர் கூடம் 2 – இந்த படத்துலயும் அவர் இருக்காராம்!…

0

நவீன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் மூடர் கூடம். நெல்சனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் டார்க் ஹியூமர் என்கிற வகை திரைப்படமாக மூடர் கூடம் வெளியானது. 4 பேர் ஒரு பாரில் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறி ஒரு பணக்காரரிடம் இருந்து பணத்தை திருட திட்டமிடுவார்கள்.

இந்த படத்தில் செண்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2013ம் வருடம் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் என்கிற படத்தை இயக்கினார். கொளஞ்சி என்கிற படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருந்தார். சங்கவி என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தர்.

ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. மூடம் கூடம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் நவீனின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் மூடர் கூடம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறாராம் நவீன்.

இந்த படத்தில் நவீன், செண்ட்ராயன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், விஜய் ஆண்டனியை வைத்து நவீன் இயக்கியுள்ள அக்னி சிறகுகள் படமும் விரைவில் கொண்டுவரும் வேலையையும் படக்குழு துவங்கியுள்ளது.

இன்னும் 10 ஆண்டுகளில் மருத்துவம்/ஆசிரியர் இரண்டு படிப்பும் இல்லாமல் போகும்!! பில்கேட்ஸ் கணிப்பு!!

0

இந்தியா முழுவதும் இரண்டு படிப்புகள் தற்பொழுது மிகவும் பிரபலமானதாக அதாவது அதிகமானோர் தேர்வு செய்யக்கூடியதாக இருந்து வருகிறது. ஒன்று நீட் நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்வாகும் பட்சத்தில் நேரடியாக மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவராக பணியாற்றுவது, மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக வரலாம் எனக் மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக பெற முடியும் என்ற சிந்தனை. இவை இரண்டுமே வரக்கூடிய காலங்களில் மாறும் என்றும் இலவசமாகவே மருத்துவம் இனி உலகம் முழுவதும் கிடைக்கப் போகிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-

✓ 2035க்குள் செயற்கை நுண்ணறிவு டாக்டர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல தொழில் முனைவர்களை மாற்றி விடும் என்றும் சிறந்த மருத்துவ ஆலோசனையும் சிறந்த தனிப்பட்ட கற்றல் சேவையையும் இலவசமாக கிடைக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பமானது முன்னேறும் என்றும் 100% அடித்துக் கூறியிருக்கிறார்.

இனி வரக்கூடிய காலங்களில் உலகம் ஒரு இலவச நுண்ணறிவு யுகத்திற்குள் நுழைய இருப்பதாகவும் நிபுணத்துவம் கொண்ட அறிவும் சேவைகளும் எல்லோருக்கும் இலவசமாக அல்லது குறைந்த செலவில் கிடைப்பதற்கான புதிய சூழல் உருவாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு டாக்டர் மற்றும் ஆசிரியர் போன்ற தொழில்கள் காணாமல் போய்விடும் என்றும் இந்த இரண்டு பணிகளிலும் AI தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்றும் பில் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆசைப்பட்டது குத்தமா.. பல கோடி சொத்து போச்சே!! புலம்பும் நடிகர் விமல்!!

0

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன்பின் பசங்க திரைப்படத்தின் மூலமாக நாயகனாக மக்களிடையே வரவேற்பை பெற தொடங்கியவர் நடிகர் விமல். நடிகர் விமல் என்றாலே அவருடைய திரைப்படம் கிராமத்து கதை அம்சங்கள் நிறைந்ததாகவே வெளியாகி வருகின்றன.

பெரும்பாலும் நடிகர் விமல் தேர்வு செய்த பசங்க களவாணி தூங்கா நகரம் வாகை சூடவா போன்ற பல வெற்றி படங்கள் கிராமத்து பின்னணி கதையை கொண்டு இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு தேசிய விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முகத்திற்கும் தன்னுடைய திறமைக்கும் கிராமத்து கதை மட்டுமே ஒத்துவரும் என அதை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விமல். வெற்றி படங்களை கொடுத்தாலும் சற்றே இடைவெளி இவருடைய சினிமா வாழ்க்கையில் காணப்பட்டது. அதுபோன்ற ஒரு சமயத்தில்தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து தாமாகவே ஒரு திரைப்படத்தை தயாரிக்க நினைத்து அதில் தானே நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி தயாரிக்கப்பட்ட வெளியான திரைப்படம் தான் மன்னர் வகையறா. இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் முகம் கொடுத்ததோடு நடிகர் முகமும் விமலவர்கள் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை இது தரும் என நினைத்திருந்த நிலையில் இந்த படம் சரியாக மக்களிடையே ஓடவில்லை என்பதை உண்மையாக மாறியது.

தன் மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் தேசிய விருது பெற்ற படங்களில் நடித்திருந்தாலும் தயாரிப்பாளர் என்று வரும் பொழுது கதையை தேர்வு செய்வது அந்த கதை எப்படி மக்களிடம் சென்று சேரும் என்பது குறித்த பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் நடிகர் விமலுக்கு என்ன சிக்கல் ஏற்பட்டதோ மன்னர் வகையறா திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் பல கோடி கணக்கில் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணமும் இழந்துவிட்டாராம் நடிகர் விமல். தயாரிப்பாளர் ஆகணும்னு நினைச்சது ஒரு ஆசையா இப்படி வந்து சிக்கிட்டேனே என தற்பொழுது புலம்பி கொண்டிருக்கிறார்.

Alert: உங்க whatsapp ல இப்படி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க!! சைபர் கிரைம் அறிவுறுத்தல்!!

0

சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய முறையை பயன்படுத்தி தங்களுடைய கொள்ளை முயற்சிகளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை உறுதி செய்த சைபா க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு whatsappபில் வங்கி சம்பந்தப்பட்டு வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பொதுவாக நம் அனைவரின் உடைய செல்போன்களிலும் whatsapp குழுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற whatsapp குழுக்களில் பொதுவான ஒரு குறுஞ்செய்தி அதுவும் வங்கி சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அதில் இருக்கக்கூடிய லிங்கை தவறுதலாக தொடும் பட்சத்தில் செல்போன் முழுவதும் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணம் முழுவதும் சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்படும் என்றும் சைவ போலீசார் எச்சரித்து இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்த குறுஞ்செய்திகள் SBI, ICICI, IOB போன்ற மிகப்பெரிய வங்கிகளில் இருந்து உங்களுடைய கணக்கு மூடப்படும் என்பது போலவோ அல்லது குறைந்த இருப்பு மட்டுமே இருப்பதால் வங்கி கணக்கு மூடப்படுகிறது என்பது போலவோ குறுஞ்செய்திகள் வரும் பட்சத்தில் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் உங்களுடைய வங்கி கணக்குகள் குறித்த சந்தேகங்களை நேரடியாக வங்கிக்கு சென்று தீர்த்துக் கொள்ளும் படியும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருக்கின்றனர்.

சட்டுனு வீட்டுக் கடனை கட்டி முடிக்க!! இந்த 1 வழியை பின்பற்றினால் போதும்!!

0

பொதுவாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களும் வீட்டுக் கடன் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கிறது. காரணம் EMI ஒவ்வொரு மாதமும் இதற்கான நாள் நெருங்கும் பொழுது அந்த பணத்தை தயார் செய்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும் உடனடியாக லாபத்துடன் வீட்டு கடனை கட்டி முடிப்பதற்கான வழி குறித்து இந்த பதிவில் காணலாம்.

சில நேரங்களில் நம்முடைய சிந்தனையிலிருந்து சற்று தள்ளி நின்று மாற்றி யோசிக்கும் பொழுது நமக்கு மிகவும் எளிமையான மற்றும் சுலபமான வழிகள் கிடைப்பதுண்டு. ஆனால் அதனை பெரும்பாலும் யாரும் செய்ய நினைப்பதில்லை. அப்படிப்பட்ட மாற்றி யோசிக்கப்பட்ட ஒரு சிந்தனையை தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

சமீபத்தில் ரெப்கோ வட்டி விகிதமானது 2 முறை முதலில் பிப்ரவரி மாதம் 6.50% இருந்து 6.25% ஆக குறைத்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 6.25% இருந்து 6% ஆக குறைத்தது. இவ்வாறாக இந்தியன் ரிசர்வ் வங்கி குழுவில் இருக்கக்கூடிய 6 உறுப்பினர்கள் இணைந்த ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்தது வீட்டு கடன் வாகன கடன் தனிநபர் கடன் என பெற்றவர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாக மாறியது.

ஆனால் இதனை எப்படி பயன்படுத்தினால் நமக்கு நற்செய்தி என்பது பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. வீட்டுக் கடன் பெற்று இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய EMI தொகைகளை சரியாக செலுத்தி வரக்கூடிய நிலையில், ஒரு 15 வருடங்களுக்குப் பின் தங்களுடைய கடந்த கையில் சென்று பார்க்கும் பொழுது அதில் வட்டி மட்டுமே குறைந்திருக்கும் நிலையில் அசலில் பெருந்தொகை அப்படியே இருப்பது அதிர்ச்சியை அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கும். பெரும்பாலும் கடன் தொகை காண வட்டியை மட்டுமே செலுத்தி வந்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு பிற்காலத்தில் தான் தெரிய வருகிறது.

இனி வீட்டு கடன் பெற்றிருக்கக் கூடியவர்கள் தங்களுடைய EMI பணத்தை எடுத்து வைக்கும் போது ஒவ்வொரு மாதமும் அதன் கூடவே 10,000 ரூபாயோ அல்லது தங்களால் முடிந்த தொகையை தனியாக சேர்த்து வைத்தல் அவசியம். இவ்வாறு சேர்த்து வைக்கக்கூடிய பணமானது அந்த வருடத்தின் இறுதியில் 1.20 லட்சமாக இருக்கும் நிலையில் அதனை அப்படியே வங்கியில் தங்களுடைய கடன் தொகையை குறைக்க கட்ட முடியும்.

இவ்வாறு வருடத்திற்கு ஒருமுறை அசலை குறைப்பதால் வட்டியும் ஒவ்வொரு வருடமும் குறைவதோடு 20 வருட காலங்கள் போடப்பட்டிருந்த வீட்டுக்கடன் ஆனது 10 வருடங்களில் முடிந்து விடுவதோடு நமக்கு பல லட்சம் வரை லாபம் கிடைப்பதும் உறுதியாகிவிடும். இதோ ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பணத்தை அசலில் இருந்து களிக்கிறீர்கள் என்பதை பொறுத்து மட்டுமே அமையும். எனவே நீங்கள் வீட்டு கடன் பெற்று இருக்கிறீர்கள் அல்லது கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலோ புதிதாக வீட்டு கடன் வாங்க போகிறீர்கள் என்றாலோ உங்களுடைய இஎம்ஐ தொகையோடு அசலை குறைப்பதற்கான தொகையையும் ஒவ்வொரு மாதமும் எடுத்து வைத்தால் விரைவில் உங்களை கடனாளியாக இருக்கக்கூடிய சூழலில் இருந்து மாற்றிவிடும்

வெள்ளை சக்கரை பயன்படுத்துவதில் சிக்கல்!! இந்திய அரசு அதிரடி!!

0

மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை இனி உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஆனது மாநிலங்களுக்கு மட்டுமல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உணவு பொருளாகவோ அல்லது உணவுப் பொருளில் கலந்து வழங்கப்பட்டு வருவது தடை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் பாலூட்டக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் என அனைவருக்கும் இனிப்பு உணவுகள் வழங்கும் பட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெள்ளத்தை பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் அந்த உணவுப் பொருளில் 5% மட்டுமே வெள்ளத்தின் உடைய அளவு இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகளை குழந்தைகளின் பள்ளிகளில் வழங்கப்படக் கூடிய உணவுகளுடன் சேர்க்க வேண்டாம் என்றும் அதற்கு மாறாக மேலே கூறியபடி வெள்ளம் சேர்த்த இனிப்பு பலகாரங்களை கொடுக்கலாம் என்றும் தெரிவித்ததோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பதால் அரசினுடைய திட்டங்களில் விளங்கப்படக்கூடிய சுத்தரிக்கப்பட்ட சர்க்கரை ஆனது வழங்குவதை தடை செய்ய வேண்டும் என இந்த அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது.

பிறப்புச் சான்றிதழ் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது!! உயர் நீதிமன்றம் சென்ற விஏஓ!!

0

பிறப்பு சான்றிதழில் ஒருவருடைய பிறந்தநாள் சரியாக இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிறப்பு சான்றிதழில் பிறந்த தேதி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாம் கல்வி பயிலும் பொழுது அங்கு அந்த தேதி சரியாக குறிப்பிடப்படுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் ஏற்பட்ட சிக்கலை நீதிமன்றம் வரை சென்று அரசு ஊழியர் சரி செய்து இருப்பது தற்போது பேச்சு பொருளாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வி.இ.ஓ மார்க்கண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 20.03.1983 அன்று கிராம தலையாரி பணிகள் தான் நியமிக்கப்பட்டதாகவும் தன்னுடைய வயது சான்றுக்காக பள்ளி மாற்று சான்றிதழை ஒப்புதல் ஆவணமாக சமர்ப்பித்ததாகவும் ஆனால் அதில் குறிப்பிட்டு இருந்த பிறந்த தேதிக்கு பதிலாக வேறொரு தேதியை தன்னுடைய பணி பதிவேட்டல் மாற்றி எழுதி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது தனக்கு 2015 ஆம் ஆண்டில் தான் தெரியும் என்றும் அது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறியதோடு 2016 ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அதிகாரியாக தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் அப்பொழுது பிறந்த தேதி காரணமாக தனக்கு பதவி உயர்வை உயரதிகாரிகள் நிராகரித்து இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கினை மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்து, மனுதாரர் 01.02.2018 முதல் 18.03.2019 வரை பணியாற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றாலும் அவர் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் கூறிய பளபலன்களை பெற தகுதியானவர் என அவருடைய வக்கீல் ஆர் கருணாநிதி ஆஜராகி வாதாடிய நிலையில், நீதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டு மனுதாரருக்கு உரிய பணபலன்களை நாலு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

யோனி புற்றுநோய் எதனால் வருகிறது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!!

0

பெண்களை அதிகம் பாதிக்கச் செய்யும் புற்றுநோய்களில் யோனி புற்றுநோயும் ஒன்று.மார்பு புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்க்கு அடுத்து பெண்கள் யோனி புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருவது அதிகரித்து வருகிறது.

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் கேன்சர் கட்டிகள் உருவாகி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.இந்த புற்றுநோய் அரிதான ஒன்றாகும்.

இந்த யோனி புற்றுநோய் வெஜினா என்ற பகுதியில் வெளிப்புறத்தில் பரவும் தன்மை கொண்டது.இது உடலில் மற்ற இடங்களுக்கு பரவக் கூடிய ஒரு புற்றுநோய் வகையாகும்.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் யோனி பகுதியில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

யோனி புற்றுநோய் அறிகுறிகள்:

1)பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு
2)பிறப்புறுப்பு கட்டி
3)பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு
4)அதிக வலி உணர்வு
5)சிறுநீர் வெளியேற்றும் பொழுது எரிச்சல் உணர்வு
6)உடலுறவில் சிரமம்
7)பிறப்புறுப்பு சருமம் தடித்து காணப்படுதல்
8)வுல்வர் பகுதியில் அரிப்பு
9)பிறப்புறுப்பு பகுதியில் மருக்கள்

யோனி புற்றுநோய்க்கான காரணங்கள்:

1)வயது முதுமை
2)புகைப்பழக்கம்
3)சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
4)நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

யோனி புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க வழிகள்:

பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும்.பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

சிஸ்டோஸ்கோபி என்ற சிகிச்சை மூலம் இந்த புற்றுநோய் எந்த அளவிற்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிந்துவிட முடியும்.கோல்போஸ்கோபி என்ற பரிசோதனை மூலம் வுல்வா புற்றுநோய் கட்டிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க முடியும்.நம் உணவுப் பழக்க வழக்கங்கள்,வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.

பெண்களே.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

0

கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய் பாதிப்பு.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிய முடியாது.புற்றுநோய் முற்றிவிட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உயிரிழக்க நேரிடும்.

சிலவகை புற்றுநோய் பாதிப்பு பெண்களுக்கு மட்டும் ஏற்படும்.அதில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.இதனால் பிறப்புறுப்பு பகுதியில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்,யோனி பகுதியில் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.யோனி பகுதியில் நீர் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவை கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.இந்த கருப்பை வாய் புற்றுநோக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற தவறினால் உயிர் சேதம் ஏற்படலாம்.

கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்:

1)கடுமையான இடுப்பு வலி
3)மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு
3)யோனியில் திரவம் வெளியேறுதல்
4)யோனியில் கடுமையான துர்நாற்றம்
5)சிறுநீர் வெளியேற்றும் பொழுது வலி
6)கடுமையான வயிற்றுவலி

கருப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள்:

1)பாதுகாப்பற்ற உடலுறவு
2)கருப்பை வாய் அலர்ஜி

கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வழிகள்:

HPV என்ற தடுப்பூசி செலுத்தி கொண்டால் கருப்பைவாய் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.HPV தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கருப்பையின் வாய்ப் பகுதியில் செல்கள் மாற்றமடைந்து புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்கும்.

கருப்பை புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்த உடன் அறுவை சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

கருப்பை வாய்புற்றுபோய் பாதிப்பை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

பாதாம் பருப்பு,அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.ஆளிவிதை,சியா விதை போன்றவற்றை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும்.முந்திரி பருப்பது தினமும் வறுத்து சாப்பிடலாம்.இஞ்சி,புதினா போன்ற பொருட்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.சின்ன வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிடலாம்.

குடிக்கும் பாலில் பின்ச் அளவு மஞ்சள் சேர்த்தால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

0

நாம் குடிக்கும் பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பால் குடித்தால் உடலுக்கு நன்மைகள் வந்து சேரும்.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் தினமும் ஒரு கிளாஸ் பால் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.இப்படி குடிக்கும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.மஞ்சள் கலந்த பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இரவில் மஞ்சள் கலந்த பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்க பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.மனச்சோர்வு நீங்க மஞ்சள் கலந்த பால் பருகலாம்.

மூட்டு வலி பாதிப்பு குணமாக மஞ்சள் பால் செய்து குடிக்கலாம்.உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க மஞ்சள் பால் செய்து குடிக்கலாம்.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமாக மஞ்சள் கலந்த பால் பருகலாம்.

மஞ்சள் பால் குடித்தால் சருமம் பளபளப்பாக மாறும்.சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கலந்த பால் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.கல்லீரலில் தேங்கிய அழுக்கு கழிவுகள் நீங்க மஞ்சள் பாலை குடிக்கலாம்.

தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள மஞ்சள் கலந்த பால் பருகலாம்.இரைப்பை அலர்ஜி,இரைப்பை புண் குணமாக மஞ்சள் கலந்த பால் குடிக்கலாம்.மஞ்சள் பால் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.எனவே தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் மஞ்சள் கலந்த பால் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.