Home Blog Page 268

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!

0

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பொடியில் டீ போட்டு குடித்துவரலாம்.நிச்சயம் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்த டீ அருமருந்தாக திகழ்கிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெந்தயம் – 25 கிராம்
2)ஓமம் – 25 கிராம்
3)கருஞ்சீரகம் – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 25 கிராம் வெந்தயத்தை கொட்டி வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுபட்டு வந்த பின்னர் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

அடுத்து அதில் 25 கிராம் ஓமத்தை போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு 25 கிராம் கருஞ்சீரகத்தை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

இப்பொழுது இந்த மூன்று பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பொடியை பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரைத்த பொடியை பொடி தேவையான அளவு போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்புகளை கரைக்க இந்த பானத்தை குடிக்கலாம்.கருஞ்சீரகம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)இலவங்கப்பட்டை – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு பட்டையை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் இஞ்சை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இடித்த பட்டையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் இதயப் பிரச்சனைகள் குணமாகும்.

மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு குணமாக இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

வெடிப்பு வந்த பாதத்தை சாஃப்டாக மாற்ற.. இரவில் இந்த எண்ணையை பாதங்கள் மீது அப்ளை செய்யுங்கள்!!

0

நம் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள தவறுவதால் இளம் வயதிலேயே வெடிப்புகள் உருவாகி அழகை கெடுத்துவிடும்.வறண்ட கால் பாதங்களில் அதிக வெடிப்பு வெடிப்பு உண்டாகி வலி ஏற்படுகிறது.கால் பாதங்களில் வெடிப்பு வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

இது தவிர உடல் எடை அதிகரிப்பு,நீர்சத்து குறைபாடு,தொற்று,உடலுக்கு போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணத்தினால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்பு பாதிப்பில் இருந்து மீண்டு அழகான மிருதுவானதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறையை பின்பற்றலாம்.

கால் பாத வெடிப்பை குணப்படுத்திக் கொள்ள டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை தினமும் முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் உங்கள் பாத வெடிப்பு நீங்கிவிடும்.

தீர்வு 01:

நல்லெண்ணெய்
மஞ்சள் தூள்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்து பாதங்கள் மீது தடவினால் வெடிப்பு நீங்கும்.இந்த எண்ணெய் கலவையை இரவில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 02:

தேங்காய் எண்ணெய்
வேப்பிலை
வேப்பம் பூ

ஒரு தேக்கரண்டி அளவு வேப்பிலை பொடி மற்றும் வேப்பம் பூ பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் வேப்பிலை பொடி மற்றும் வேப்பம் பூ பொடியை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணெய் கலவையை ஆறவைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வெடிப்புகள் மறைந்துவிடும்.

தீர்வு 03:

மருதாணி இலை பொடி
மஞ்சள் தூள்

மருதாணி இலையை உலர்த்தி பொடித்து மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதில் சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வெடிப்பு குறையும்.

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

0

ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பொதுவானதாக இருக்கிறது.சிலருக்கு தலையை தொட்டாலே முடி உதிர்வு ஏற்படுகிறது.முன்பைவிட தற்பொழுது தலைமுடி உதிர்வு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவாக தலை முடி உதிர்வு அதிகமாகிறது.முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் வழுக்கை விழத் தொடங்கிவிடும்.

தலைமுடி உதிரக் காரணங்கள்:

தைராய்டு பாதிப்பு
மன அழுத்தம்
தலைமுடி பராமரிப்பின்மை
பொடுகுத் தொல்லை
தலை அரிப்பு
ஹார்மோன் பிரச்சனை

தலைமுடி உதிர்வை சரி செய்ய என்ன பண்ணலாம்?

தினமும் ஒரு கிளாஸ் மிளகு பால் குடித்தால் தலைமுடி உதிர்வு நிற்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மிளகு எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)மிளகு – நான்கு

செய்முறை விளக்கம்:-

கரு மிளகு நான்கு எடுத்து உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பால் கொதி வந்த பின்னர் இடித்த மிளகை அதில் போட்டு சிறிது நேரம் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த மிளகு பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனையே ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் முடி உதிராமல் இருக்கும்.

ஒல்லி ஒல்லி இடுப்புக்கு இந்த பொடி போதும்!! அசால்ட்டாக இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்!!

0

உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை வேரோடு கரைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு மூலிகை பானங்களை செய்து குடிக்கலாம்.திரிபலா சூரண பானம்,சீரக பானம் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

தான்றிக்காய்
கடுக்காய்
நெல்லிக்காய்
தண்ணீர்

பயன்படுத்தும் முறை:-

முதலில் தான்றிக்காய்,கடுக்காய் மற்றும் பெரிய நெல்லிக்காய் தலா 50 கிராம் அளவிற்கு வற்றல் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இத்தனை மிக்சர் ஜார் பயன்படுத்தி பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஈரம் இல்லாத டப்பாவில் இதை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த 150 மில்லி தண்ணீரை சூடாக்கி அதில் இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலந்து குடிக்க வேண்டும.

காலையில் ஒரு கிளாஸ் மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு இந்த பானம் குடித்தால் தொப்பை,இடுப்பு கொழுப்பு கரையும்.

தேவையான பொருட்கள்:-

சீரகம்
எலுமிச்சை சாறு
தேன்
தண்ணீர்

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.சீரக பானம் நன்றாக கொதித்து வந்ததும் கிளாஸிற்கு இதை வடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எலுமிச்சம் பழம் ஒன்றை நறுக்கி அதன் சாறை சீரக பானத்தில் பிழிந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரைந்துவிடும்.

நீண்ட நாள் இரைப்பை புண் நொடியில் க்யூர் குணப்படுத்தும் பாட்டியின் மூலிகை கஷாயம்!!

0

இரைப்பையில் புண் இருந்தால் வயிறு எரிச்சல்,மலம் கழிப்பதில் சிரமம்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரைப்பை புண் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கீழாநெல்லி வேர் பொடி – ஒரு தேக்கரண்டி
2)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி
3)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி
4)கோரைக்கிழங்கு சூரணம் – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

கீழாநெல்லி வேர் பொடி,அதிமதுரப் பொடி,கடுக்காய் பொடி,கோரைக்கிழங்கு பொடி ஆகியவற்றை தலா 100 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.அடுத்து இதனை ஒன்றாக மிக்ஸ் செய்து பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு கீழாநெல்லி வேர் பொடி கலவையில் இருந்து நான்கு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குட்டித்தால் இரைப்பை புண்கள் விரைவில் குணமடையும்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

முதலில் ஒரு முள்ளங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் மிக்சர் ஜாரில் முள்ளங்கி துண்டுகளை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முள்ளங்கி ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரைப்பை புண்கள் சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – ஒரு கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் கெட்டி பசுந்தயிரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை பொடித்து அதில் மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த தயிரை உட்கொண்டு வந்தால் இரைப்பை புண்கள் குணமாகும்.வெறும் வயிற்றில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.வெறும் வயிற்றில் குளிர்ச்சி நிறைந்த இயற்கை பொருட்களை சாப்பிடலாம்.

இனி இந்த விஷயம் இது தெரியாமல் நைட் நேரத்தில் பூண்டு பற்களை சாப்பிடாதீங்க!!

0

நம் உணவின் சுவை கூட்டியாக பூண்டு பயன்படுத்தப்படுகிறது.நாம் உட்கொள்ளும் பூண்டு பல நன்மைகளை கொண்டிருக்கிறது.தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிட்டால் சற்று கூடுதல் பலன்கள் கிடைக்கும்.பூண்டு டீ,பூண்டு ஜூஸ் என்றும் சாப்பிடலாம்.

பூண்டு பற்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.காலை நேரத்தைவிட இரவில் பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு பாதிப்பு குறையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பூண்டு சாப்பிடலாம்.

இரத்தத்தில்கொழுப்பு சேராமல் இருக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.இரத்தக் கொதிப்பு,உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க பூண்டு பானம் பருகலாம்.இரவு நேரத்தில் பூண்டு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டு பற்களை தினசரி சாப்பிடலாம்.உணவு சாப்பிட்ட பிறகு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தை அடைபவர்கள் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு பலனடையலாம்.இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு கரைய பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.

உடலில் நோய் தாக்கத்தை குறைக்க தினமும் இரவு நேரத்தில் பூண்டு பல் சாப்பிடலாம்.இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பூண்டு பல் உட்கொள்ளலாம்.

பூண்டு பற்களை பயன்படுத்துவது எப்படி?

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டு சாப்பிட வேண்டும்.தரமான பூண்டு பற்களை தேர்வு செய்து நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும்.

சிலருக்கு பச்சை பூண்டு பல் வாசனை பிடிக்காமல் இருக்கும்.அப்படி இருப்பவர்கள் இதுபோன்று பூண்டு பல்லை சுட்டு உட்கொள்ளலாம்.தினமும் ஒரு கிளாஸ் பூண்டு பானம் செய்து பருகலாம்.

பூண்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.இருப்பினும் அதன் பலன் கிடைக்க நீங்கள் பூண்டு பற்களை சாப்பிட வேண்டும்.நாள் ஒன்றில் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்றாலும் இரவு நேரத்தில் அதை சாப்பிடும் பொழுது முழு பலனையும் அனுபவிக்கலாம்.

வெறும் 10 ரூபாயில் பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா?

0

இன்று பெரும்பாலானவர்கள் உலர் விதைகள் சாப்பிடும் நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.குறிப்பாக பாதாம் பருப்பு அனைவரும் விரும்பி உட்கொள்ளும் உலர் விதையாக இருக்கிறது.தினமும் ஊறவைத்த பாதாம்,வெறும் பாதாம் என்று ஏதேனும் ஒரு விதத்தில் பாதாமை சாப்பிடுகின்றோம்.பாதாமில் இரும்பு,புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற முக்கியமான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் நன்மைகள்:

1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பு உதவுகிறது.ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் மூளை புத்துணர்வு பெறும்.

2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாம் பருப்பு சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

3)உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்க பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.எலும்பு வலிமையை அதிகப்படுத்த பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.

பாதாம் பருப்பு இத்தனை நன்மைகளை கொண்டிருந்தாலும் இவை விலை அதிகமாக இருப்பதால் பலர் வாங்கி சாப்பிட தயங்குகின்றனர்.விலையும் குறைவாக இருக்க வேண்டும் அதே சமயம் பாதாமில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்களை பெற வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் வேர்க்கடலையை உட்கொள்ளலாம்.

இதிலும் பாதாமில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.முட்டை,பாதாம்,இறைச்சியைவிட நிலக்கடையில் அதிக புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.நிலைக்கடலை உட்கொண்டால் மூளையின் செயல்திறன் மேம்படும்.வேர்க்கடலை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.எனவே பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெற வேர்க்கடலை உட்கொள்ளலாம்.

நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

0

கோடை காலத்தில் அதிக சூட்டால் அம்மை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சின்னம்மை,கொத்தமல்லி அம்மை என்று அம்மையில் பல வகைகள் இருக்கிறது.எந்த அம்மை பிரச்சனையாக இருந்தாலும் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

முதலில் அம்மை போட்டவர்களை தனிமை படுத்த வேண்டும்.அவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.அம்மை வந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அம்மை பாதித்தவர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது.

அம்மை நோய் அறிகுறிகள்:

1.கண் எரிச்சல்
2.நமைச்சல்
3.திடீர் காய்ச்சல்
4.கன்னத்தில் வீக்கம்
5.சருமத்தில் கொப்பளம்

அம்மை நோய் பாதிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

1)தாழம்பூ
2)தண்ணீர்
3)கற்கண்டு

பாத்திரத்தில் சில தாழம் பூக்களை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு கற்கண்டை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் அம்மை நோய் குணமாகும்.

1)கறிவேப்பிலை
2)வேப்பிலை
3)தேன்

முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து வேப்பிலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு சுத்தப்படுத்திருந்த கறிவேப்பில்லை மற்றும் வேப்பிலை அதில் போடு கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு கிளாசில் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.இப்படி குடித்தால் அம்மை நோய் குணமாகிவிடும்.

PROTEIN RICH SALAT: உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் இந்த பொருள் இருந்தால் போதும்!!

0

உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இதை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும்.தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினசரி பயறு வகைகள்,காய்கறிகளை கொண்டு சால்ட் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.

உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு
2)கருப்பு சுண்டல்
3)தயிர்
4)கொத்தமல்லி தழை
5)வெள்ளை சுண்டல்
6)கேரட்
7)வெள்ளரி
8)உப்பு
9)மிளகுத் தூள்
10)தக்காளி
11)வெங்காயம்
12)சீரகத் தூள்
13)வேர்க்கடலை

செய்முறை விளக்கம்:-

முதலில் பச்சை பயறு,கருப்பு சுண்டல்,வெள்ளை சுண்டல்,வேர்க்கடலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஐந்து மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த பொருட்களை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.பின்னர் தக்காளி,வெங்காயம்,வெள்ளரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு கிண்ணம் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெள்ளரிக்காய்,கேரட் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பின்னர் ஊறவைத்த பயறு வகைகளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் இரண்டு தேக்கரண்டி தயிர்,கால் தேக்கரண்டி சீரகத் தூள்,கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

0

நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவை.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையை கொண்டு சாலட் செய்து சாப்பிடுங்கள்.

தற்பொழுது உடல் பருமன் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை அதிகப்படுத்திவிடுகின்றனர்.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முட்டை உள்ளிட்ட சில வகை பொருட்களை கொண்டு ஆரோக்கியமான சாலட் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரி – ஒன்று
2)முட்டை – ஒன்று
3)தக்காளி – ஒன்று
4)பெரிய வெங்காயம் – ஒன்று
5)கேரட் – ஒன்று
6)மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
7)உப்பு – தேவையான அளவு
8)தயிர் – ஒரு தேக்கரண்டி
9)கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு முட்டையை வேகவைத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தக்காளி பழம் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து கொத்தமல்லி தழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நறுக்கிய தக்காளி,வெங்காயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய்,கேரட் ஆகியவற்றை அதில் சேர்க்க வேண்டும்.

அடுத்து தயிர்,உப்பு,மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதற்கு அடுத்து முட்டை துண்டுகளை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.