Home Blog Page 273

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

0

மோசமான உணவுகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு புளித்த ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)கீழாநெல்லி பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கீழாநெல்லி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றையும் 50 கிராம் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.இந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி கீழாநெல்லி பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை உணவு உட்கொள்வதற்கு முன் குடித்தால் புளித்த ஏப்பம்,அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உணவு உட்கொள்வதற்கு முன் இந்த பானத்தை குடிப்பதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் நீங்கள் உணவு உட்கொண்ட பின்னர் இதனை குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
2)சீரகப் பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வேப்பம் பூவை வெயிலில் காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் சீரகத்தை லேசாக வறுத்து பவுடராக அரைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த வேப்பம் பூ பொடி மற்றும் சீரகப் பொடி போட்டு காய்ச்ச வேண்டும்.இந்த பானத்தை வடித்து குடித்தால் புளித்த ஏப்பம்,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் புளித்த ஏப்பம் சரியாகும்.செரிமானப் பிரச்சனையை சரி செய்யலாம்.

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

0

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதை பாலில் உறைமோர் ஊற்றி தயாரிக்கின்றனர்.தயிர் சற்று புளிப்பு நிறைந்த சுவையான உணவுப் பொருளாகும்.ஆனால் தயிரை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது.

வீட்டு தயிர் சீக்கிரம் புளித்துவிடும்.ஆனால் கடையில் விற்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போவதில்லை.கடை தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் இரசாயனம் கலக்கப்படுகிறதா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.கடையில் வாங்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதனாலே சந்தேகம் ஏற்படுகிறது.

கடை தயிர் கெட்டுப்போகாமல் இருக்க கெமிக்கல் காரணம் இல்லை என்று ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.பால் லாக்டோபாகிலஸ் என்ற நல்ல பாக்டீரியாக்களை கொண்டிருக்கிறது.

பாலில் இருக்கின்ற இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யும்.இந்த சமயத்தில் லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறும்.இதனால்தான் தயில் புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.நம்முடைய வீட்டில் தயாரிக்கும் தயிர் சீக்கிரம் கெட்டுப்போக காரணம் நாம் செய்யும் செய்யும் தவறுகள்தான்.

தயிர் பாத்திரத்தில் அதிக பாக்டீரியாக்கள் இருந்தாலோ அல்லது உறைமோரில் பலவகை பாக்டீரியாக்கள் இருந்தாலோ அவை சீக்கிரம் புளித்துவிடும்.இதனால் தயிர் எளிதில் புளித்துவிடுகிறது.ஆனால் கடை தயிர் தயாரிப்பில் எந்த பாக்டீரியா வேண்டுமோ அதை மட்டும் சேர்ப்பார்கள்.மற்ற பாக்டீரியாக்களை நீக்கிவிடுவார்கள்.கடை தயிர் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்க இதுவே காரணம்.

பாலுக்கு எவ்வளவு லாக்டோபாகிலஸ் தேவைப்படுகிறது என்பதை சரியான முறையில் கணக்கீடு செய்து சேர்ப்பதால் அவை சீக்கிரம் கெடுவதில்லை என்று மருத்துவர் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

0

வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள குளிர்ந்த தண்ணீர்,கூல்ரிங்ஸ் போன்றவை குடிக்க பலரும் விரும்புகின்றனர்.குளிர்ந்த பொருட்கள் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குளிர்ந்த நீர் அதாவது பிரிட்ஜ் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை உண்டாக்கிவிடும்.

ஐஸ் வாட்டர் குடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பிரிட்ஜ் வாட்டர்:

1)நாம் பிரிட்ஜ் வாட்டர் குடித்தால் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.குளிர்ந்த நீர் உடலில் வெப்பநிலையை குறைத்து உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும்.

2)பிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.குளிர்ந்த நீர் மலச்சிக்கல் பாதிப்பை உண்டாக்கும்.

3)ஐஸ் வாட்டர் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

4)பற்சிதைவு,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படுகிறது.ஐஸ் வாட்டர் குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குளிர்ந்த நீர் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

5)சிலருக்கு ஐஸ் வாட்டர் அலர்ஜியை உண்டாக்கிவிடும்.ஐஸ் வாட்டர் குடித்தால் வயிறு பிரச்சனைகள,வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே கோடை காலமாக இருந்தாலும் ஐஸ்வட்டர் குடிப்பதை தவிர்த்துவிட்டு மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதுதான் சிறந்தது.மண் பானை நீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.மண் பானை நீர் குடிப்பதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

0

உங்கள் சரும மருக்களை உதிரச் செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை வைத்து மருக்களை நீக்கிவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)அம்மான் பச்சரிசி பொடி
2)குப்பைமேனி பொடி
3)மஞ்சள் பொடி
4)வசம்பு பொடி
5)சின்ன வெங்காயச் சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் அம்மான் பச்சரிசி இலை பொடி,குப்பைமேனி பொடி,வசம்பு பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.இல்லையேல் நீங்களாவே தயார் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

அதன் பின்னர் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை கிண்ணம் ஒன்றில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அரை தேக்கரண்டி அம்மான் பச்சரிசி இலை பொடி,அரை தேக்கரண்டி குப்பைமேனி பொடி,அரை தேக்கரண்டி வசம்பு பொடி மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் கொட்டி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை மருக்கள் மீது பூசினால் அவை சில மணி நேரத்தில் காய்ந்து உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)அம்மான் பச்சரிசி இலை பொடி
2)உருளைக்கிழங்கு சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் அம்மான் பச்சரிசி இலையை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி அம்மான் பச்சரிசி இலை பொடிக்கு இரண்டு உருளைக்கிழங்கு சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பேஸ்டை மருக்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி சாறு
2)ஆமணக்கு எண்ணெய்

செய்முறை விளக்கம்:

முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு கலந்து மருக்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

0

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிவது வழக்கமான விஷயம்தான்.முகத்தில் அதிகளவு எண்ணெய் இருந்தால் பருக்கள் உருவாகிவிடும்.இது தவிர அழுக்குகள் படிந்து முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.எனவே முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றலாம்.

முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி நாள் முழுவதும் முகம் பொலிவாக இருக்கும்.

1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – ஒன்றரை தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு 10 நிமிடங்கள் வரை முகத்தை உலரவிட்டு குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்கும்.முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை உறிஞ்சி பருக்கள்,அழுக்குகள் படியாமல் பார்த்துக் கொள்கிறது.

1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி

கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும்.

இப்படி செய்தால் முகத்தில் எண்ணெய் உருவாவது கட்டுப்படும்.முகப்பரு,சுருக்கம்,போன்றவை ஏற்படாமல் இருக்கும்.முல்தானி மெட்டி பொடியுடன் சந்தனப் பொடி கலந்து தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் முகத்திற்கு க்ளோ கிடைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

0

நம் உடல் ஆரோக்கியத்தில் வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது.வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தயத்தை ஊறவைத்த சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

வெந்தயத்தின் பயன்கள்:

செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடலாம்.வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வெந்தயம் உட்கொள்ளலாம்.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.ஆனால் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

அதிக வெந்தயம் தரும் ஆபத்துக்கள்:

1)வெந்தயம் அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்துவிடும்.சிறுநீரில் துர்நாற்றம் வீசுத் தொடங்கும்.

2)ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டாம்.அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்வெந்தயம் உட்கொள்ள வேண்டாம்.

3)அதிகமாக வெந்தயம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்.இருமல்,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் அதிகளவு வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும்.

4)அதிகளவு வெந்தயம் சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் வீசக் கூடும்.அதிக வெந்தயம் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

5)அளவிற்கு அதிகமாக வெந்தயம் உட்கொண்டால் உடல் சோர்வு,வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

6)வெந்தயத்தை சரியான அளவில் உட்கொள்ளவில்லை என்றால் நிச்சயம் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.

இனி அரிசி மாவு தோசை வேண்டாம்!! உடலுக்கு வலிமை கிடைக்க இந்த பருப்பில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்!!

0

பருப்பு வகைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.இதில் பாசிப்பருப்பு ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பாசி பருப்பை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு போதிய வலிமை கிடைக்கும்.செரிமானப் பிரச்சனை,பித்தம்,சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் பாசி பருப்பை உணவாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

பாசிப்பருப்பு ஊட்டச்சத்துக்கள்:

**நார்ச்சத்து **வைட்டமின்கள் **தாதுப் பொருட்கள் **வைட்டமின்கள்

பாசிப்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:-

1)பாசிப்பருப்பு – இரண்டு கப்
2)வெள்ளை அவல் – ஒரு கப்
3)சீரகம் – அரை தேக்கரண்டி
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கப் பாசி பருப்பை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.

அடுத்து வெள்ளை அவலை மற்றொரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வைக்க வேண்டும்.மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து பின்னர் வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி மிளகு,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பிறகு இந்த கலவையை கிண்ணத்தில் ஊற்றி தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கலந்துவிடலாம்.இதை அரை மணி நேரம் மூடி வைத்த பின்னர் தோசைக்கல்லில் தோசை வார்த்து எடுக்க வேண்டும்.

இந்த பாசிப்பருப்பு தோசைக்கு தக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பாசிப்பருப்பு தோசை செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும்.

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

0

இன்று அனைவருக்கும் பேவரைட் உணவாக இருப்பது பரோட்டா தான்.இந்த பரோட்டாவை குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.தற்பொழுது எங்கு பார்த்தாலும் பரோட்டா மையமாக இருக்கிறது.

வீச்சு பரோட்டா,முட்டை பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,நெய் பரோட்டா என்று பரோட்டாவில் பல வகைகள் இருக்கின்றது.பரோட்டா சுவையான உணவு என்றாலும் அவற்றை உட்கொள்வதால் உடலுக்கு எந்த ஆரோக்கியமும் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மைதாவில் செய்யப்படும் பரோட்டா வயிறு ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.மைதாவில் மிகவும் குறைவான அளவே நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.மைதா பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் கணைய புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

ருசியான உணவுகள் எப்பொழுதும் நமக்கு ஆபத்தானதாகவே இருக்கும்.பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.

பரோட்டா அதிகாமாக சாப்பிட்டால் என்னென்னெ பாதிப்புகள் ஏற்படும்?

1)வாயுத் தொல்லை
2)மலச்சிக்கல்
3)செரிமானப் பிரச்சனை
4)நெஞ்சு வலி
5)மாரடைப்பு
6)உடல் பருமன்
7)கெட்ட கொழுப்பு அதிகரிப்பு
8)வயிறு உப்பசம்
9)வயிறு எரிச்சல்
10)அசிடிட்டு
11)இரத்த அழுத்தம் அதிகரிப்பு

அதிகமாக மைதா பரோட்டா சாப்பிடுவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்கிறது.மைதா மாவில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரித்து உடலை பெருக்கச் செய்துவிடும்.

மைதா பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே அடிக்கடி மைதா உணவுகளை உட்கொள்ளாமல் ஆசைக்காக எப்பொழுதாவது உட்கொள்ளலாம்.

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

0

நாம் தினமும் உலர் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும்.பாதாம் பருப்பைவிட சிறந்த ஊட்டச்சத்து பருப்பு இல்லை.பாதாம் பருப்பை எந்த சீசனிலும் உட்கொள்ளலாம்.பாதாம் சாப்பிட்டால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.

தாதுக்கள்,வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு,புரதம் போன்றவை பாதாமில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் 30 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பாதாம் ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் ஈ,வைட்டமின் ஏ,நார்ச்சத்து,கால்சியம்,தாமிரம்,மெக்னீசியம்,புரதம் போன்ற சத்துக்கள் உள்ளது.

பாதாம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்?

தினமும் அதிகபட்சம் 8 பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாம் அப்படியே சாப்பிடாமல் நன்றாக ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம்.பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.இரவு நேரத்தில் ஊறவைத்த பாதாம் அல்லது ஊறவைக்காத பாதாமை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஊறவைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் தீர பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.ஊறவைத்த பாதாம் பருப்பு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஊறவைத்த பாதாம் பருப்பை உட்கொண்டால் சருமம் பளபளப்பாக மாறும்.பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

ஊறவைத்த பாதாம் பருப்பை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் ஆண்மை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.பாதாம் பருப்பை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரித்து எடை கூடிவிடும்.பாதாம் பருப்பில் லட்டு,ஹல்வா,ஸ்வீட் செய்து சாப்பிடுவதால் உடல் கொழுப்பு அதிகரித்துவிடும்.

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

0

வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது.

1. எலுமிச்சை பழம்:

இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் அதை நமது வீட்டின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து விட்டு, அந்த மூன்று எலுமிச்சம் பழத்தையும் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள சூலத்தில் குத்தி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மீது இருக்கும் கண் திருஷ்டி தூள் தூளாக சிதறி ஓடிவிடும்.

2. கல் உப்பு:

நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலுமே ஏதேனும் ஒரு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என்று நினைக்கும் பொழுது, ஒரு சிவப்பு நிற அல்லது மஞ்சள் நிற துணியில் கல் உப்பை சேர்த்து மூட்டையாக கட்டிக்கொண்டு அதனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

ஏழு நாட்கள் இதனை தொடர்ந்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டு தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இதனால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

3. சுத்தமான சந்தனம்:

சமூகத்தில் நல்ல அந்தஸ்துடனும், பெயர் புகழுடனும், அனைவரும் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கவும், கௌரவமாக வாழவும், கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கவும் சுத்தமான சந்தனத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இதனை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அந்த சந்தனத்தை பயன்படுத்தியும் கொள்ளலாம்.

4. நாணயம்:

வாஸ்து படி தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் ஏதாவது ஒரு நாணயத்தை வைத்து தூங்கினால் நிதி நிலை மேம்படும். முக்கியமாக எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

5. ஏலக்காய்:

வாஸ்து படி தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் ஏலக்காயை வைத்து தூங்கினால், மன அழுத்தம் நீங்கி நிம்மதியாக தூங்குவீர்கள்.

6. கத்தி:

நீங்கள் இரவு தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் அதிகமாக வருகிறது என்கின்ற பொழுது, உங்களது தலையணைக்கு அடியில் கத்தியை வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் எதுவும் வராது.

7. வாசனை பூக்கள்:

இரவு தூங்கும் பொழுது வாசனை நிறைந்த பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இனிமையான சூழலால் மன நிம்மதியும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சீக்கிரமாகவே தூங்கி விடுவீர்கள்.