Home Blog Page 274

பெண்களை தாக்கும் எலும்பு புரை நோய்!! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

0

இன்று முதுமை கால நோய்களை இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றோம்.30,40 வயதிலேயே அனைத்து நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகிவிடுகின்றோம்.முன்பெல்லாம் நாம் பயந்த நோய்கள் தற்பொழுது சாதாரணமான பாதிப்பாக மாறிவிட்டது.

குறிப்பாக எலும்பு சார்ந்த நோய்களால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.நாம் இளம் பருவத்தில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால்தான் முதுமை காலத்தில் உடல் செயல்படுகள் நன்றாக இருக்கும்.தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட முதுகு வலி,கை கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பெண்களுக்கு தங்கள் 30 வயதிலேயே எலும்பு அடர்த்தி குறைந்து பாதிப்புகள் ஏற்படுகிறது.30 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானமாகி வலுவில்லாமல் போகிறது.இதில் எலும்பு புரை நோய் எலும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துவிடும்.

எலும்பு புரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் கழுத்து,முதுகு போன்ற எலும்புகளின் வலிமை குறைந்து வலி அதிகரித்துவிடும்.இந்த எலும்பு புரை நோய் மெனோபாஸ் காலக்கட்டத்தில் உள்ள பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

எலும்பு புரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.உணவில் சோடியம் சத்துக்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆரஞ்சு,பால்,முழு தானிய உணவுகளை சாப்பிடலாம்.

சிறு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.ராகி உணவை அடிக்கடி உட்கொண்டால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.கீரைகள்,காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.தினமும் சூரிய ஒளியில் நடக்க வேண்டும்.பிரண்டை,முடக்கத்தான்,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும்.

எலும்பு அடர்த்தி அதிகரிக்க பாலில் பாதாம் பொடி கலந்து குடிக்கலாம்.பிரண்டை துவையல் செய்து உட்கொண்டால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

0

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் முருங்கை இலை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வ மூலிகையாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முருங்கை இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது உலகம் முழுவதும் இந்த முருங்கை இலை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கை இலையில் வைட்டமின்கள்,இரும்பு போன்றவை அதிகரித்து காணப்படுகிறது.தினமும் முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முருங்கை கீரை சளி,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும்.முருங்கையின் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.முருங்கை கீரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.முருங்கை கீரை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முருங்கை கீரையை உட்கொள்ளலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை சாப்பிடலாம்.உடல் தசைகளை வலிமைப்படுத்த முருங்கை கீரை சாப்பிடலாம்.

முருங்கை கீரையில் அருமையன சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

கைப்பிடி அளவு முருங்கை கீரை
ஒரு தக்காளி
ஒரு வெங்காயம்
இரண்டு வெள்ளைப் பூண்டு பல்
தேவையான அளவு உப்பு
ஒரு துண்டு இஞ்சி
அரை தேக்கரண்டி சீரகம்
கால் தேக்கரண்டி மிளகுத் தூள்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
கால் தேக்கரண்டி தனியா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் முருங்கை கீரை,நறுக்கிய தக்காளி பழம்,வெங்காயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு வெள்ளைப்பூண்டு பல்லை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த முருங்கை கீரையை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சி துண்டு,கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி தனியா தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.இப்படி செய்து குடித்தால் உங்கள் உடலில் எந்த நோய் பாதிப்பும் அண்டாது.

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

0

வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம்.

திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி பெண்கள் பிரார்த்தனை வைப்பது வழக்கம்.

அந்த காலமாக இருந்தாலும் சரி இந்த காலமாக இருந்தாலும் சரி, கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக்கூடிய மனைவிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே எவ்வளவு தான் நவநாகரீகமாக இந்த உலகம் மாறினாலும் கணவன் மனைவி உறவு, மாங்கல்யம் இதற்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் குறையப்போவது கிடையாது.

உங்களுடைய கணவர் நல்ல ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். அந்த மாங்கல்ய தோஷத்தை சரி செய்ய ஆன்மீகத்தில் நிறைய பரிகாரங்கள் இருந்தாலும், இந்த ஒரு வழிபாடு உங்களுடைய தோஷத்தை நீக்க எளிய பரிகாரமாக அமையும்.

இந்த வழிபாட்டை செய்பவர்களாக இருந்தாலும் சரி, செய்யாதவர்களாக இருந்தாலும் சரி அனைவரது வீட்டிலுமே முருகருடைய திருவுருவப்படம் வள்ளி தெய்வானையுடன் இருக்க வேண்டும். இது குடும்ப ஒற்றுமைக்கும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால், முதலில் இதை வாங்கி வைத்து விடுங்கள்.

திங்கட்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கள் கிழமை முருகனின் பாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு, குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி , மனப்பூர்வமாக உங்களது கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குங்குமத்தை நெற்றியிலும், மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு திங்கள்கிழமை இந்த வழிபாடு முடிந்தவுடன் அந்த மஞ்சள் கயிறை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரிக்கவும். இதேபோன்று 27 திங்கள் கிழமையும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இடையே மாதவிடாய் நாட்கள் வரும் பொழுது பூஜை செய்ய வேண்டாம். அதைத் தவிர்த்து விட்டு அடுத்த பூஜையில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 27 திங்கள் கிழமை பூஜை செய்து முடித்தவுடன், 27 மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கும்.

இறுதியாக இந்த 27 திருமாங்கல்ய கயிறையும் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம் கூடவே இந்த திருமாங்கல்ய கயிறையும் வைத்து தானமாக கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கிவிடும்.

உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இல்லை என்றாலும் கூட, இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உங்களுடைய கணவரின் ஆயுள் நீடிக்கும். நீங்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வீர்கள். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வீசிங் ஏற்படுமா? இல்லை குணமாகுமா? மருத்துவர் சொல்வது என்ன?

0

நம் நுரையையீரல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று வீசிங்.இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த பாதிப்பு எந்த நேரத்திலும் வரலாம்.இந்த வீசிங் பாதிப்பு நள்ளிரவு நேரத்தில் கூட வரக் கூடும்.இந்த வீசிங் பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறி எப்படி இருக்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீசிங் பிரச்சனை காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:

1)மூச்சுத் திணறல்
2)அடிக்கடி இருமல்
3)மார்பு வலி
4)கால் வீக்கம்
5)நெஞ்சு பகுதியில் இறுக்கம்
6)குரல் பிரச்சனை
7)மூச்சு விடுவதில் சிரமம்

வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் சிலவகை உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குளிர்ந்த உணவுகள்,அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சிலர் எலுமிச்சை சாறு வீசிங் பிரச்சனையை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கின்றனர்.ஆனால் எலுமிச்சை சாறு பருகினால் வீசிங் பிரச்சனை சரியாகும்.

அதேபோல் சிட்ரஸ் பழமான சாத்துக்குடியை ஜூஸாக சாப்பிட்டாலும் சளி பாதிப்பு கட்டுப்படும்.தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.வீசிங் பிரச்சனைக்கு எலுமிச்சை,சாத்துக்குடி போன்றவை நல்ல மருந்தாக திகழ்கிறது.எலுமிச்சை சாறில் எந்த ஒரு இனிப்பும் சேர்க்காமல் பருகினால் வீசிங் பாதிப்பு சீக்கிரம் குணமாகிவிடும்.

வீசிங் பாதிப்பை குணப்படுத்தும் மருத்துவ முறைகள்:

பூண்டு பானம்,ஆளிவிதை பானம்,மஞ்சள் பானம்,வல்லாரை ஜூஸ் போன்றவற்றை செய்து குடித்தால் வீசிங் பிரச்சனை குணமாகும்.சுடுநீரில் தேன் கலந்து குடித்தால் வீசிங் பிரச்சனை குணமாகும்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??

0

நாம் ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் பொழுது, ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றுவோம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். அதேபோன்று நவகிரக சன்னிதானத்தில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தையும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். இப்படி பல விதிமுறைகளை பின்பற்றுவதை நாம் பழக்கமாக வைத்திருக்கிறோம்.

ஆனால் இதில் பல தவறான கருத்துக்கள் என்று காலப்போக்கில் சிதைந்து விட்டது. இதுபோன்று நாம் தவறாக கருதிக் கொண்டிருக்கும் பல விதிமுறைகளுக்கான விளக்கங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

1. சிவன் கோவிலில் தரக்கூடிய விபூதியை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது:

சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு இணங்க சிவன் கோவிலில் தரக்கூடிய விபூதி, குங்குமம், புஷ்பம் இது போன்றவைகளை கூட சிலர் வீட்டிற்கு எடுத்து வர மாட்டார்கள். ஆனால் இது தவறான ஒரு செயலாகும். சிவன் கோவிலில் தரக்கூடிய பிரசாதங்களை நம் வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தருவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

நமது முன்னோர்கள் சிவன் கோவிலுக்கு என்று ஒரு பகுதி சொத்தை எழுதி வைத்திருப்பார்கள். அந்த காலங்களில் மன்னர்கள் அனைவரும் தனது சொத்தில் ஒரு பங்கை கோவில்களுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அந்த சொத்தின் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து கோவில்களில் பராமரிப்பு வேலைகளை செய்தார்கள்.

ஆனால் ஒரு சிலர் கோவில் சொத்தை தனது சொத்து என்று குறுக்கு வழியில் அபகரித்து இருப்பார்கள். இப்படி கோவில் சொத்தை அபகரித்தவர்கள் ஒரு காலத்தில் நன்றாக இருந்தாலும், அவர்களது ஜாதக கட்டத்தில் கெட்ட காலம் ஆரம்பிக்கும் சமயத்தில் அவர்களது குலமே அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும் என்பதே உண்மை.

இது சிவன் கோவிலுக்கு மட்டுமல்ல எந்த ஒரு கோவிலின் சொத்தை அபகரித்தாலும் இந்த ஒரு நிலைமை தான். சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு இது தான் அர்த்தம். இது தவிர கோவிலில் தரக்கூடிய பிரசாதங்களை எடுத்து வரக்கூடாது என்பது முற்றிலும் தவறான கருத்து.

2. சிலர் நவகிரகங்களில் உள்ள சனி பகவானை வழிபட்டு விட்டு தொட்டு கும்பிடாமலும், திரும்பி பார்க்காமலும் வருவார்கள். அப்படி வந்தால் தான் அந்த கிரகங்களால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பி வந்தனர். ஆனால் இது தவறு.

கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் சிவனிடம் தஞ்சம் அடைந்ததால் தான், அந்த கிரகங்களுக்கு விமோசனம் கிடைத்தது.சிவனால் விமோசனம் அடைந்த நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

3. அதேபோன்று திருநள்ளாறு கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு வந்தால், அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்பார்கள். ஒரு சமயம் சனிபகவானுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவபெருமான் திருநள்ளாறில் தான் விமோசனம் அளித்துள்ளார்.

எனவே அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வந்தால் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் நமக்கு தேவையில்லை. கோவிலில் இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் நமக்கு நன்மை செய்வதற்கு தானே தவிர, எந்த ஒரு தெய்வமும் கோவிலில் தரக்கூடிய பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீமையை செய்து விடாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்!! பல்லில் படிந்த அழுக்கு கறைகளை டூத்பிக் கொண்டு எடுப்பது ஆபத்தானதா?

0

நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.உணவு உட்கொண்ட பிறகு பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.பல் இடுக்குகளில் அழுக்குகள்,உணவுத் துகள்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் பற்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் இடுக்குகளில் அழுக்கு படிதல்,பல் சொத்தையாதல்,ஈறுகளில் வீக்கம் உண்டதால்,வாயில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் பல் இடுக்குகளில் படிந்து கிடக்கும் அழுக்குகளை நீக்க டூத்பிக் பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் வேப்பங்குச்சி பயன்படுத்தி பல் துலக்கி வந்தோம்.இதனால் பற்களில் அழுக்கு சேராமல் இருந்தது.ஆனால் தற்பொழுது பிரஷ் பயன்படுத்துவதால் அழுக்குகள் தேங்கி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பல் இடுக்கு அழுக்குகளை சுத்தம் செய்ய டூத்பிக் பயன்படுத்தலாமா?

உண்மையில் டூத்பிக் பயன்படுத்தினால் பல் ஈறுகளின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.டூத்பிக் ஒரு குச்சி அமைப்பில் கூர்மையாக இருப்பதால் ஈறுகளை எளிதில் சேதப்படுத்திவிடும்.

அழுக்குகளை எடுக்க முயற்சிக்கும் பொழுது பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.டூத்பிக் ஈறுகளில் பட்டால் வீக்கம் ஏற்படும்.அடிக்கடி டூத்பிக் பயன்படுத்தினால் பற்களின் உணர்திறன் குறையும்.

டூத்பிக்கை அடிக்கடி பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இடைவெளி வந்துவிடும்.டூத் பற்களின் வேரை சேதமாக்கிவிடும்.தொடர்ந்து டூத்பிக் பயன்படுத்தினால் பற்களின் மேற்பரப்பு சேதமடைந்துவிடும்.டூத்பிக்கிற்கு பதில் Floss பயன்படுத்தி அழுக்குகளை வெளியேற்றலாம்.நீங்கள் டூத்பிக்கை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

சரியான குளியல் எது? உடல் சூடு குறைய குளிப்பதற்கு முன் இதை ஒருவாட்டி செய்யுங்கள்!!

0

நம் உடலில் படியும் அழுக்குகள்,வியர்வை நாற்றங்களை வெளியேற்ற குளியல் போடுகின்றோம்.குளிப்பதால் உடலுக்கு பபுத்துணர்வு கிடைக்கின்றது.காலை எழுந்த பின்னரும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னரும் குளிக்க வேண்டும்.ஆனால் இன்றைய அவசர காலத்தில் நாளொன்றில் ஒருமுறை மட்டும் குளிப்பதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது ஷாம்பு,சோப் என்று எல்லாமே ரசாயனங்களாகிவிட்டது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் எண்ணெய் குளியலை மட்டுமே மேற்கொண்டனர்.கெமிக்கல் பொருட்கள் நம் சருமத்திற்கு ஆபத்தானது.அதேபோல் உடல் சூட்டையும் அதிகரித்துவிடும்.

ஆனால் எண்ணெய் குளியல் போட்டால் உடல் சூடு தணிவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும்.குளிப்பதற்கு முன்னர் தலை,தொப்புள்,உள்ளங்கை,உள்ளங்கால் ஆகியவற்றிற்கு எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வெந்நீரில் குளியல் போட வேண்டும்.இப்படி குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்கும்.நல்லெண்ணெயை சருமத்திற்கு அப்ளை செய்தால் அழுக்குகள் நீங்குவதோடு ஒருவித பொலிவு கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்தால் கண் எரிச்சல்,கண் சூடு தணியும்.உடல் நரம்புகள் வலிமை பெறும்.நல்லெண்ணெய் குளியல் தசைகளை வலிமைப்படுத்தும்.

அதேபோல் குளிக்கும் பொழுது முதலில் கால் பாதங்களை தண்ணீரில் நினைக்க வேண்டும்.அதன் பிறகு கீழிருந்து மேலாக தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும்.இப்படி குளித்தால் உடல் சூடு மொத்தமாக குறைந்துவிடும்.

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

0

ஒருமுறை சிவபெருமானுக்கு பிருந்தாவனத்தில் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஈசனும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை பார்ப்பதற்காக ஒரு சிறுவன் உருவம் எடுத்து சென்றார்.

சிவபெருமான் சிறுவனின் உருவத்தில் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல்.

கிருஷ்ணர் தனது எட்டாம் வயதிலிருந்து புல்லாங்குழலை வாசிக்க தொடங்கினார். கிருஷ்ணர் புல்லாங்குழலை இசைக்கும் பொழுதெல்லாம் ஒட்டுமொத்த பிருந்தாவனமும் அந்த இசையில் மயங்கி போகும் என்றே சொல்லலாம்.

எப்பொழுதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் யமுனை நதி கூட, கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டதும் அதன் நீரோட்டப் பாதையை மாற்றி கண்ணன் இருக்கும் திசையை நோக்கி பாயுமாம்.

பல இதயங்கள் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கினாலும், அவர் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததற்கான ஒரே காரணம் அவரது பக்கத்து ஊரை சேர்ந்த தன்னைவிட 5 வயது பெரியவளான ராதைக்காக மட்டும் தான். கிருஷ்ணர் தனது வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயத்தை மட்டும் தான் நேசித்தார். அது ராதை மற்றும் அவரது புல்லாங்குழல்.

ஆனால் ராதைக்கு ஒரு முனிவரின் மூலம் ஒரு சாபம் கிடைக்கிறது. “கிருஷ்ணரை நீ இன்னொரு முறை சந்தித்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு கிருஷ்ணரை பிரிந்து தான் இருக்க வேண்டும்” என்ற சாபத்தை வழங்கினார். இதனால் மிகவும் மனமுடைந்த ராதை, என்னதான் முயற்சி செய்தாலும் கிருஷ்ணரை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று அவரைப் பார்க்கச் சென்று விடுகிறாள்.

ராதை கிருஷ்ணரை பார்த்த அடுத்த கனமே முனிவரின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது. அதாவது அப்பொழுதுதான் கிருஷ்ணர் ராதையை முதல் முறையாக பிரிந்து மதுராவிற்கு செல்கிறார். விதியின் சூழ்ச்சியால் கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறே நூறு வருடங்களும் கடந்து விடுகிறது.

அதன் பிறகு வயதான நிலையில் ராதை கிருஷ்ணரை காண செல்கின்றாள். அப்பொழுது ராதையை பார்த்த கிருஷ்ணர் “நீ என்னை ஒரு முறை பிரிந்ததே போதும்” என்று கூற, ராதை உடனே அழ தொடங்கி விடுகிறாள். அதன் பிறகு ராதை கிருஷ்ணரிடம் எனக்காக ஒருமுறை உங்களது புல்லாங்குழலை வாசியுங்கள் என்று கேட்கிறாள்.

கிருஷ்ணரும் ராதையை நினைத்து புல்லாங்குழலை வாசித்தார். புல்லாங்குழல் வாசிப்பதை முடித்துவிட்டு கண்ணன் அவரது கண்களை திறந்து பார்க்கும் பொழுது, ராதை இறந்து கிடப்பதை பார்த்து தானும் ஒரு கடவுள் என்பதை மறந்து கதறி அழத் தொடங்குகிறார்.

இறுதியாக ராதையே என்னை விட்டு சென்று விட்டாள், ராதைக்காக நான் வாசிக்க தொடங்கிய இந்த புல்லாங்குழல் எதற்கு என்று உடைத்து தூக்கி எறிந்து விடுவார்.

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

0

இன்று பலரும் புரதச்சத்து குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.நாம் உண்ணும் உணவின் மூலம் புரதம் கிடைக்கிறது.ஒருவேளை நாம் புரத உணவுகளை சாப்பிடவில்லை என்றால் நமது எலும்புகள் வலிமை இழந்து மூட்டு வலி,முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நம் உடலுக்கு தேவைப்படும் அடிப்படை சத்துக்களில் ஒன்று புரதம்.நாம் அன்றாட வேலைகளை செய்ய புரதம் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நாம் உட்கொள்ளும் உணவில் குறைந்தது 35 கிராம் புரதம் அவசியம் இருக்க வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த புரதச்சத்து தேவைப்படுகிறது.எலும்புகளுக்கு மட்டுமின்றி தலைமுடி,நகம்,தசைகள் என்று அனைத்திற்கும் புரதச்சத்து தேவைப்படுகிறது.ஆனால் நாம் இட்லி,தோசை,பூரி,பொங்கல்,சப்பாத்தி போன்ற உணவுகளை மட்டுமே அதிகம் சாப்பிடுகின்றோம்.இதில் நமது உடலுக்கு தேவைப்படும் புரதச்சத்து இருப்பதில்லை.

புரதம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் நமது உடலுக்கு தேவையான புரதத்தை எலும்புகள் கொடுக்க நேரிடுகிறது.இதன் காரணமாக நமது எலும்பு எலும்புகள் சீக்கிரம் பலவீனமடைந்துவிடுகிறது.இட்லி,சப்பாத்தி போன்றவை நல்ல உணவுகள் என்றாலும் நமக்கு புரதம் அவசியம் என்பதால் பிராய்லர் கோழி இறைச்சியை உட்கொள்ளலாம்.இந்த கோழியில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.

அதேபோல் முட்டை,பால் மற்றும் பால் பொருட்கள்,இறைச்சி,சால்மன் மீன்,பாதாம் பருப்பு,வேர்க்கடலை,முழு தானிய உணவுகள்,பருப்பு,பீன்ஸ்,கொண்டைக்கடலை போன்றவற்றில் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது.காராமணி ஆகியவற்றில் புரதம் நிறைந்து காணப்படுகிறது.இதுபோன்ற உணவுகளை நம் தினசரி வாழ்வில் அவசியம் உட்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

0

ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியமான விஷயமாக இருக்கிறது.நல்ல தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.தூங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது உடல் இயங்க வேண்டிய நேரத்தில் தூங்குவது என்று தங்கள் வாழ்க்கைமுறையை தவறாக மாற்றிவருகின்றனர்.

தூக்கம் நமது கழிவுகளை வெளியேற்றும் என்றால் நம்ப முடிகிறதா? காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை நடந்தால் அது நல்ல விஷயம்.இது நமது உடல் கழிவுகளை வெளியேற்ற ஒரு வழியாகும்.

நாம் நல்ல தூக்கத்தை அனுபவிக்கவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கிவிடும்.எனவே நல்ல தூக்கத்தை அனுபவிக்க இரவில் நீங்கள் சில விஷயங்களை அவசியம் செய்ய வேண்டும்.இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.இதனால் தூக்கத்தை இழக்க நேரிடும்.

சூடான பானங்கள்,காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.தூங்குவதற்கு முன்னர் உடலுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.அதிகம் யோசிப்பதை தவிர்க்க வேண்டும்.வெளிச்சம் குறைவான இடத்தில்தான் உறங்க வேண்டும்.

மொபைல் பார்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் அளவாக உட்கொள்ள வேண்டும்.முடிந்தவரை 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது.அதேபோல் காலையில் எழுந்ததும் உடலில் சூரிய வெளிச்சம் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் இரவு முழுவதும் உறக்க நிலையில் இருக்கும்.இதனால் காலையில் அதை தட்டி எழுப்ப உடலில் சூரிய ஒளி படும்படி நாம் சிறிது நேரம் நடக்க வேண்டும்.