Home Blog Page 275

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

0

நமது உடல் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாக புரோட்டின் திகழ்கிறது.இது அதிகமாக தேவைப்படும் சத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அளவிற்ற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.சிலர் உடல் சோர்வாக இருந்தால் புரோட்டின் உணவுகள்,புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் புரோட்டின் மட்டுமே உட்கொண்டால் உடல் பருமனாகிவிடும்.அதிக புரோட்டின் நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.அளவிற்கு அதிகமாக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரும்.

நமது உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகமாக புரதம் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.அதிக புரதம் நிறைந்த உணவுகள் வயிற்று வலி,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே வெறும் புரோட்டின் உணவுகளை மட்டும் உட்கொள்ளாமல் இதனுடன் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.புரதம் போன்று உடலுக்கு நீர்ச்சத்து,நார்ச்சத்து அவசியமான ஒன்றாக உள்ளது.புரதத்துடன் அதிகளவு காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதேபோல் உடல் சோர்வு இருந்தால் தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.தண்ணீர் குடிப்பதன் மூலம் நமது சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றலாம்.உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே புத்துணர்வுடன் செய்லபட முடியும்.

பெரும்பாலும் வியர்வை மூலமே பாதி கழிவுகள் வெளியேறிவிடுகிறது.இதனால் நாம் சிறுநீர் கழிப்பது குறைவாகிவிடுகிறது.இதனால் நமது சிறுநீரக செயல்பாடு குறைந்துவிடுகிறது.எனவே 20 கிலோ எடை கொண்ட நபர் நாளொன்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி தங்கள் உடல் எடையை பொருத்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!

0

ஒருமுறை சென்றால் நம் தலையெழுத்தையே மாற்றும் அதிசய கோவில். ஆனால் நீங்கள் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால், போய்விட முடியாது. உங்களது தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று சிவபெருமான் முடிவு செய்தால் மட்டுமே இந்த கோவிலுக்குள் உங்களால் காலடி எடுத்து வைக்க முடியும்.

இப்படிப்பட்ட அதிசய கோவில்தான் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். வாழ்க்கையில் படாத பாடுபட்டு, வாழ்க்கையே வெறுத்துப் போய் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று சிவபெருமானிடம் மனதார ஒரு முறை வேண்டினால், நிச்சயமாக உடனடியாக உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

திருச்சி மாவட்டத்தில் திருப்பட்டூர் என்னும் ஊரில் உள்ள தலையெழுத்தையே மாற்றும் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பிரம்மா தங்களது வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி தர வேண்டும் என்பதற்காக மஞ்சள் காப்பு மஞ்சள் நிற வஸ்திரம் என அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் சாட்டி வழிபடுவார்கள். தாமரை மலர், புளியோதரை நெய்வேத்தியம் போன்றவற்றை வியாழக்கிழமை அன்று படைத்து பக்தர்கள் வழிபடுவார்கள்.

இந்தக் கோவிலுக்கு வந்து ஒரு முறை வழிபட்டு சென்றாலே அவர்களது வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பதை பலரும் அனுபவம் ரீதியாக கண்ட உண்மை. காக்கும் கடவுளான திருமாலுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக்கும் மட்டுமே உலகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஆனால் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஒரு சில கோவில்களில் மட்டுமே தனி சன்னதி உள்ளது.

பெரும்பாலும் சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலில், பெருமாளின் ஆதிக்க மலர்களில் தோன்றிய தாமரை மலரின் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் பிரம்மாவை மட்டுமே தரிசிக்க முடியும். பிரம்மாவிற்கு என தனி சன்னதி உள்ள கோவில்களுள் மிகவும் தனிச்சிறப்பானது தான் இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

என்னடா வாழ்க்கை இது?! நம்முடைய வாழ்க்கை மாறாதா? பிரம்மன் ஏன் நமது தலையெழுத்தை இப்படி எழுதி விட்டார்? நம்முடைய தலையெழுத்து மாறவே மாறாதா? என்று புலம்புவர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இந்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தான்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்றால், சிவனுக்கு இணையாக பிரம்மாவிற்கும் தனி சன்னதி அமைத்து இருப்பது தான் சிறப்பு. இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்து கடவுளை வணங்கி விட்டு சென்றால் தலையெழுத்து மாறும் என்பது ஐதீகம்.

இந்த உலக உயிர்களைப் படைக்கும் வேலையை சிவபெருமான் பிரம்மாவிடம் கொடுத்தார். ஆனால் தனது படைப்பு தொழிழால் ஆணவம் கொண்ட பிரம்ம தேவரின் ஐந்து தலைகளுள் ஒரு தலையை சிவபெருமான் எடுத்துவிட்டார். அத்துடன் பிரம்ம தேவரை பூமியில் பிறக்கும்படி சாபம் விட்டார் சிவபெருமான். தனது தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்ட பிரம்மனிடம், பூலோகத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார் சிவபெருமான்.

இந்த தளத்திற்கு வந்து ஒரே இடத்தில் பல லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பிரம்மா தனது சாபத்திலிருந்து விடுபட்டார். பிரம்மனின் பக்திக்கு மனமிறங்கிய சிவபெருமான் காட்சி கொடுத்ததுடன், இந்த ஸ்தலத்திலேயே வீற்றிருந்து நாடிவரும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அவர்களின் துன்பங்களை போக்குமாறு தெரிவித்தார்.

எனவேதான் பிரம்ம தேவர் இந்த கோவிலை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களது தலையெழுத்தை மாற்றி தருகிறார்.

அலர்ட்! வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் கவனியுங்கள்!!

0

இன்று பெரும்பாலானோர் வலி நிவாரணி மாத்திரை மற்றும் வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.வலி நிவாரணிகளை பயன்படுத்தினால் உடல் வலி,தலைவலி,பல் வலி போன்ற பாதிப்புகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.

இதனால் ஆஸ்பிரின்,நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் அவை நமக்கு பாதகமாக மாறிவிடும்.வலி நிவாரணி மருந்து மாத்திரைகள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

நம் இந்தியவர்கள் வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்டால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படுகிறது.

வலி நிவாரணி மாத்திரை அலர்ஜியை உண்டாக்கிவிடும்.ஆண்களைவிட பெண்களே அடிக்கடி வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது.பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பிணி பெண்கள் வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சில வகை வலி நிவாரணி மருந்துகள் நெஞ்செரிச்சல்,வயிற்று வலி,ஒவ்வாமை,காது சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.வலி நிவாரணி மாத்திரைக்கு பதில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இஞ்சி,மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் பானம் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.மூலிகை
பானங்களை பருகலாம்.உடல் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.இதனால் வலி நிவாரணி மாத்திரை மற்றும் மருந்துகளின் தேவையை குறைக்க முடியும்.

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

0

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவிலாகும். இந்நிலையில் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதால் அங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கோவில் சீல வைத்து மூடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு பட்டியலின மக்களின் கோவிலுக்குள் நுழையும் உரிமையை பற்றியும், மற்றொரு தரப்பினர் இது எங்கள் குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவில் என்றும் இதில் எப்படி அரசு தலையிட முடியும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் மார்ச் 2024 ல், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. தினசரி பூஜைகள் நடைபெற வேண்டும், ஆனால் தற்போதைக்கு பொதுமக்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என தெரிவித்தது. பூசாரி ஒருவருக்கே கோவில் நுழைவு அனுமதி வழங்கப்பட்டு, பூஜைகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பட்டியலின மக்கள் வழிபட நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதே சமயம் தங்களுக்கு சொந்தமான குல தெய்வக் கோவிலில் தங்கள் பாரம்பரியத்தை மீறி கோவிலுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத மாற்று சமுதாய மக்களை அனுமதித்ததை எதிர்த்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக – அதிமுக கூட்டணையில் விஜய்?!. நயினார் நாகேந்திரன் என்ன சொல்றார் பாருங்க!…

0

TVK Vijay: இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 4 மாதங்களுக்கு முன்பு சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்போது நாங்கள் யாருடன் வேண்டுமானலும் கூட்டணி வைப்போம். எது எங்கள் விருப்பம் என சொல்லி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

இந்நிலையில்தான் ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என அதிரடியாக பேட்டி கொடுத்தார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருந்தார். அதிமுக எம்.பி. தம்பிதுரையும் இதை உறுதி செய்திருக்கிறார்.

பாஜக - அதிமுக கூட்டணையில் விஜய்?!. நயினார் நாகேந்திரன் என்ன சொல்றார் பாருங்க!...

ஒருபக்கம், அதிமுக – பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இணைவார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சீமான் எப்படியும் தனித்தே போட்டியிடுவார். பாமக அதிமுக பக்கமா, திமுக பக்கமா என்பது பின்னர்தான் தெரியவரும். திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என தெரியவில்லை. அதிக தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி கேட்டதால்தான் விஜயை விட்டுவிட்டு பாஜக பக்கம் பழனிச்சாமி போனதாக சொல்கிறார்கள்.

அதேநேரம், திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் மட்டுமே முடியும் என சிலர் சொல்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை. இந்நிலையில், ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தே.ஜ. கூட்டணிக்குள் விஜயை கொண்டு வரும் திட்டம் இப்போது இல்லை’ என சொல்லியிருக்கிறார். அதேநேரம், தேர்தல் நெருங்கும் போது எல்லாம் மாறும் என்பதால் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Just in: அதிமுக இரட்டை இலை வழக்கு.. எடப்பாடிக்கு சிக்கல்!! கோர்ட் பரபர உத்தரவு!!

0

ADMK: அதிமுக இரட்டை இலை ஒதுக்குவது சம்பந்தமாக எடப்பாடிக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை ஒதுக்குவது ,  உட்கட்சி ரீதியாக தேர்தல் ஆணையம் தலையிடலாம் என தெரிவித்தது. எடப்பாடி பழனிச்சாமி இதனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள், கட்சியின் சின்னம் குறித்து இரு தரப்பிடமும் முறையாக விசாரணை செய்த பிறகு அடுத்த கட்ட நகர்வு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேற்கொண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டின் பெயரில் மட்டுமே விசாரணை நடக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தனர். இதற்கு முன்னதாக சூரியமூர்த்தி என்பவர் உட்கட்சி விவகாரம் நடக்கும் வரை இரட்டை இலையை ஒதுக்க கூடாது என்று வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் இந்த உத்தரவை சேர்க்கும்படி அதிமுக சார்பாக மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த வழக்கானது அமர்வுக்கு வந்தது. அதில் நீதிபதிகள் முன்னிலையில் அதிமுக, தற்போது வரை தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருவதாக கூறியுள்ளனர். இப்படி விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் சூரியமூர்த்தி தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை சேர்க்க முடியாது எனக்கு ஒரு இந்த மனுவானது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

கூட்டணியை காலி பண்ண பாக்குறீங்களா!.. நயினார் நாகேந்திரன் பொங்கிட்டாரே!..

0

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருந்தார்.

eps

அதேபோல், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாலரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரையும் இந்த கருத்தை உறுதி செய்திருக்கிறார். செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ‘கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சரியாக சொல்லி இருக்கிறார். சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது அமைந்ததே இல்லை. பாஜக கூட்டணி மட்டும்தான். ஆட்சியில் அவர்களுக்கு பங்கு கொடுக்க முடியாது’ என சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘ உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கூட்டணி கட்சியின் தலைவர் பழனிச்சாமியும் இணைந்து என்ன முடிவெடுக்கிறார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி இந்த கூட்டணிக்குள் பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள். எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே குறிக்கோள்’ என பேசியிருக்கிறார்.

 

Ball-லில் எச்சு தடுவுவதால் ஒன்னும் ஆகாது.. ஷமி சொல்றது பெரும் கட்டு கதை!! நம்பவே நபாத்தீங்க- ஸ்ட்ரிங்!!

0

IPL 2025: 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிடையே நடைபெற்ற போட்டியில், 103 ரன்களை கொல்கத்தா அடித்தது. அதன் இலக்கை கூட பஞ்சாப்பால் எட்ட முடியவில்லை.இந்த வருடம் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனி திறமையை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் தான் கொடி கட்டி பறக்கின்றனர். பிசிசிஐ சில விதிமுறைகளுக்கு தளர்வு விட்டுள்ளது.

குறிப்பாக பந்தில் எச்சில் தடவும் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் சமி உள்ளிட்டோர் பலரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். பந்தில் எச்சில் தடவுவதால் ஸ்ப்ரிங் செய்வது எளிதாக இருக்கும், அதன் வீச்சு வேறு மாறியாக இருப்பதாக சமி தனது கருத்தை முன் வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறியதற்கு முழுவதும் மறுப்பு தெரிவித்து ஸ்டார்க் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பந்தில் எச்சை தடவுவதால் எந்த வித்தியாசமும் இருக்காது. எச்சிலுக்கும் வியர்வைக்கும் என்ன இருக்கிறது. சிகப்பு பந்தில் தடவினால் கூட ஏதாவது மாற்றம் இருக்கலாம், ஆனால் வெள்ளை பந்தில் தடவுவதால் எந்த மாற்றமும் இருக்காது. சமி, மோகித் சர்மா போன்றோர் பந்தில் எச்சில் தடவுவது குறித்து கூறுவது ஒரு கட்டுக் கதை என தெரிவித்துள்ளார். இப்படி பிலேயேர்ஸ் குள் பேச்சு மோதல் உண்டாகியுள்ளது. இதனை கவனித்து வரும் ரசிகர்கள் எது உண்மை என்பதை ஆராய்ந்து கூறும் படி கேட்டு வருகின்றனர்.

GBU படத்திற்கு 5 கோடி நஷ்ட்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும்.. இளையராஜாவுக்கு பல்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!!

0

GBU Ajith: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை காட்டிலும் அதில் வரும் பாடல்கள் தான் இன்ஸ்டா சோசியல் மீடியாக்கள் எங்கும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். இதில் அஜித், தான் நடித்த படத்தின் அனைத்து வேடங்களிலும் வருவதுண்டு. இப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மக்களை மூட் அவுட் ஆக்கும் வகையில் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. படத்தை இறுதி வரை சூமூத்தாகவே கொண்டு சென்றுள்ளார். தற்போது வரை இப்படத்தில் வசூல் வேட்டை எகிறி வருகிறது என்று சொல்லலாம்.

படம் பார்த்து வெளியே வருபவர்கள் அனைவரும் நல்ல கருத்தையே கூறுகின்றனர். அப்படி இருக்கையில் இளையராஜாவின் மூன்று பழைய பாடல்களை அவரின் அனுமதி வாங்காமலேயே உபயோகித்து விட்டதாக நோட்டீஸ் விடுத்துள்ளனர். இது ரீதியாக ஐந்து கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர். ஆனால் இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இப்படத்தில் பயன்படுத்திய மூன்று பாடல்களும் அப்பாடல்களுடைய நிறுவனத்தின் அனுமதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல அப்பாடலை கேலி செய்தோ மாற்றியோ வடிவமைக்கப்படவில்லை. மேற்கொண்டு நாங்கள் உபயோகித்ததற்கு அந்நிறுவனத்திடம் பணமும் கொடுத்துள்ளோம். அது மட்டுமின்றி நாங்கள் தடையில்லா சான்றும் வாங்கியுள்ளோம். இதனால் இளையராஜாவிடமிருந்து எந்த ஒரு நோட்டீஸ் வந்தாலும் அதை சட்டரீதியாக எதிர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல முன்னதாக ஓர் படத்தில்  இளையராஜா தனது பாடலை உபயோகித்து விட்டதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஜே சூர்யாவுக்கு டும் டும் எப்போ தெரியுமா.. அவரே சொன்ன ஷாக் பதில்!!

0

Cinema: இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவின் தற்போதைய நடிப்பானது அனைவரையும் கவர வைக்கிறது. அவருக்கு கொடுக்கும் ஒவ்வொரு ரோலையும் தனித்துவம் காட்டும் வகையில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று காதல்கள் இருந்த நிலையில் மூன்றும் தோல்வி அடைந்து விட்டது என்று ஒரு நிகழ்ச்சியில் இவரே கூறியிருப்பார். அப்படி இருக்கையில் அவார்ட் ஷோ ஒன்று இவரிடம் கோபிநாத் ஒரு சில கேள்விகளை கேட்டிருப்பார்.

அதில், நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக உள்ளீர்கள் என்று கேட்டார்?? தற்போது வரை நான் காத்து வந்த சுதந்திரம் ஒருபோதும் பறிபோகவில்லை, நான் சென்றடைய வேண்டும் என்ற இலக்கானது இன்னும் அடையவில்லை என தெரிவித்தார். அந்த இலக்கு தான் என்ன என்று கோபிநாத் கேட்கையில், ஒரு சில நொடி மௌனம் கொண்ட எஸ் ஜே சூர்யா, நான் நினைப்பது நடக்கலாம், நடக்காமலும் போகலாம் ஆனால் நடந்தாலும் மகிழ்ச்சி, நடக்க விட்டாலும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

அப்படி என்னதான் நீங்கள் உங்கள் கோலாக நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, நான் இந்தியாவுக்கே எம்ஜிஆர் ஆக வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு அவர் கூறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அரங்கமே மிக கரகோஷத்துடன் அவர் கூறிய பதிலை வரவேர்த்தது. அதாவது ஒரு தமிழனாக என்னை இந்தியா முழுவதும் பேச வேண்டும். நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். எம்ஜிஆர் புகைப்படத்தை பார்த்தால் கூட புகழ்வார்கள், திரையில் வந்தால் விசில் சத்தம் பறக்கும் என தெரிவித்தார்.

நீங்கள் ஏன் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை மீண்டும் படம் எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்?? நான் இசையமைக்க கற்றுக் கொண்டது, படம் இயக்க கற்றுக் கொண்டது அனைத்தும் ஹீரோவாக என்னை மாற்றியது. நடிகனாக உருவாக வேண்டும் என்பது பெரிய ஆசை, நான் தயாரித்த படங்களை வைத்து மீண்டும் இயக்குனர் ஆவேனா என பல பேர் கேட்கின்றனர்,அந்த நபரை எனக்கு வேலைக்காரனாக வைத்துள்ளேன்.

எம்ஜிஆர் போல் ஏன் ஆக வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளித்தார். பாலிவுட்டில் ஷாருக்கான் தான் டாப் ஹீரோ, அவரின் படம் தமிழ் தெலுங்கு திரையுலகில் வெளியானாலும் மக்கள் எதிர்பார்ப்பானது குறைவுதான். இதுவே உலகம் அறியும் ஒரு ஸ்டார் இருந்தால் அவரின் பிசினஸ் இந்திய அளவில் விரிவடையும். இவ்வாறு அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.