Home Blog Page 293

கன்னத்தில் படர்ந்த மங்கு மங்கி போக.. தயிரில் இதை கலந்து தடவி பாருங்கள்!!

0

முகத்தில் உள்ள மங்கு மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.

தீர்வு 01:

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து வெந்தய நீரை வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் வெந்தயத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அரைத்த வெந்தயப் பேஸ்டை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் மங்கு உள்ள பகுதியில் பூசி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி ஐந்து நிமிடங்கள் வரை நன்கு ஸ்க்ரப் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதுபோன்று தினமும் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு மாயமாகிவிடும்.

தீர்வு 02:

1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பசுந்தயிர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து பாதி எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து தயிரில் மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் மங்கு தானாக மறைந்துவிடும்.

தீர்வு 03:

1)நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

நல்ல தரமான பெரிய நெல்லிக்காய் இரண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் மங்கு தானாக மறையும்.

தீர்வு 04:

1)குப்பைமேனி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்னடி
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை முகத்தில் தடவினால் மங்கு தானாக மறைந்துவிடும்.

தீர்வு 05:

1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)முல்தானி மெட்டி – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி சுத்தம் செய்தால் சில தினங்களில் மங்கு மறைந்துவிடும்.

பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

0

மருத்துவ செலவை குறைக்க பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பின்பற்றி பலன் பெறுங்கள்.

1)உடல் சூடு

வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை தலைக்கு வைத்து குளித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முதல் பாதம் வரையிலான சூடு குறைய நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம்.

2)பல் வலி

சுக்கு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக அரைத்து பல் மீது அப்ளை செய்து வந்தால் பல் வலி குறையும்.

3)தூக்கமின்மை

ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.மன அழுத்தம் நீங்க ஜாதிக்காய் பால் பருகலாம்.

4)ஆஸ்துமா

தூதுவளை இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.கரும்பு சாறில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

5)மூக்கடைப்பு

சின்ன வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து நாசி துளையில் விட்டால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.

6)முதுகு வலி

நல்லெண்ணெயில் சூடாக்கி இடுப்பு பகுதியில் ஊற்றி அப்ளை செய்தால் முதுகு வலி பாதிப்பு குணமாகும்.

7)தொண்டைப்புண்

சுக்கு,கருப்பு மிளகு,அதிமதுரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு 150 மில்லி தண்ணீர் ஊற்றி காய்ச்சி குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

8)மலட்டுத் தன்மை

கரு மிளகு,திப்பிலி,அதிமதுரம்,சுக்கு மற்றும் மூக்கிணாங்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு கப் காய்ச்சி குடித்து வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.

9)மாரடைப்பு

ஒரு கிளாஸ் பாலில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி போட்டு கலந்து குடித்தால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

10)மூட்டு வலி

தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சூடாக்கி சூடத்தை போட்டு கலந்து மூட்டு பகுதியில் தடவினால் வலி மாயமாகும்.

இந்த உண்மை தெரிந்தால்.. இனி தலைக்கு இந்த எண்ணையை தான் பயன்படுத்துவீங்க!!

0

நம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணெய் வைப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்.விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவை தலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது எண்ணெய் குளியல் வழக்கம் குறைந்து வருகிறது.அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிக்கும் பழக்கமும் நம்மிடம் குறைந்து வருகிறது.

நம் தாத்தா பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் தான் முடி உதிர்வு,வெள்ளை முடி பிரச்சனையை காலம் கடந்த பின்னரே சந்திக்கின்றனர்.ஆனால் தற்பொழுது இளம் வயதிலேயே பெரும்பாலானோருக்கு இளநரை,முடி உதிர்வு,வழுக்கை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே தலைக்கு எண்ணெய் வைப்பதை அசௌகரியமாக கருதாமல் தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தலைக்கு எண்ணெய் வைப்பதால் உடல் சூடு முழுமையாக தணியும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் கண் எரிச்சல்,கண் சூடு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.நம் தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதால் உடல் சீக்கிரம் குளிர்ச்சியாகும்.

தினமும் சிறிது நல்லெண்ணெய்யை தலைக்கு வைத்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பித்துவிடலாம்.நல்லெண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் உடலில் பித்தம் குறையும்.கோடை காலத்தில் நல்லெண்ணெய் குளியல் அவசியமான ஒன்றாக இருக்கிறது.நல்லெண்ணெய்யை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நல்லெண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்தால் சூடு குறையும்.தோல் நோய்கள் வராமல் இருக்க நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயை தலைக்கு அப்ளை செய்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.

தேங்காய் எண்ணெய் தடவினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.இளநரை,முடி வெடிப்பு,முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டும் நல்லது என்றாலும் உங்களுக்கு ஏற்ற எண்ணெய் என்ன என்பது அறிந்து பயன்படுத்துவதுதான் நல்லது.

மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

0

பருவமழை காலங்களில் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.மழைக்காலங்கள் மட்டுமின்றி வெயில் காலத்திலும் இந்த நோய் பாதிப்பு வரலாம்.கண் நோய்களில்மெட்ராஸ் ஐ அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக இருக்கிறது.

இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பை அடினோ வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு பெரியவர்கள்,குழந்தைகள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மெட்ராஸ் ஐ அறிகுறிகள்:

1)கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுதல்
2)கண்களில் இருந்து தானாக நீர்வடிதல்
3)கண் எரிச்சல் மற்றும் கண்களில் நமைச்சல் உண்டாதல்
4)கண் பார்வை குறைபாடு
5)எந்நேரமும் கண்கள் உறுத்திக் கொண்டே இருத்தல்
6)கண்களில் அதிக பூளை வருதல்
7)கண் கூச்சம்
8)கண்களில் நமைச்சல் உண்டாதல்

மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களை பார்த்தால் தங்களுக்கும் கண்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று அனைவரும் பயன்படுகின்றனர்.ஆனால் உண்மையில் மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் இந்நோய் பாதிப்பு பரவாது.

மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்கள் தங்கள் கண்களை தொட்டுவிட்டு பிற இடங்களை தொடும் பொழுது அவ்விடத்தை நாம் தொட்டால் இந்நோய் பாதிப்பு பரவும்.மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்கள் கண்களை தொட்டுவிட்டு பிறரை தொடும் பொழுது இந்த நோய் தொற்று பரவும்.

இதன் காரணமாகதான் மெட்ராஸ் ஐ பாதித்தவர்களை கண்ணாடி அணிய வேண்டுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.மெட்ராஸ் ஐ பாதித்தவர்களுக்கு முழுமையாக குணமாக ஒரு மாத காலம் ஆகும் என்பதால் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுதான் நல்லது.

அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.கண்ணாடி அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும்.மற்றவரிடம் பேசும் பொழுது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும.மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் மற்றவர்களின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்.. தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படுமா?

0

நாம் தினமும் பயன்படுத்தும் கறிவேப்பிலை பல நன்மைகளை கொண்டிருக்கிறது.கறிவேப்பிலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.கறிவேப்பிலையை பொடித்து தேநீர் செய்து குடித்து வர வெள்ளை முடி கருமையாக மாறும்.

கறிவேப்பிலை ஊறவைத்த தண்ணீரை குடித்துவிட்டு கறிவேப்பிலையை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

கல்லீரலில் தேங்கிய அழுக்கு கழிவுகளை வெளியேற்ற கறிவேப்பிலை பானம் பருகலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.குடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற கறிவேப்பிலை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலை சாப்பிட்டால் வாந்தி,குமட்டல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

அதேபோல் தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கறிவேப்பிலை தேநீர் செய்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் முதல் தலைமுடி பிரச்சனைவரை அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை பொடி கொட்டி கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

0

கோடை காலம் தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் தற்பொழுது சூரிய வெயில் சுட்டெரித்து வருகிறது.கோடை காலத்தில் உடலில் பல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த கோடை காலத்தில் சரும நோய்கள் வாட்டி எடுத்து வருகிறது.உடல் முழுவதும் கொப்பளம்,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாகி குழந்தைகளை அதிக இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.கோடையில் உடலில் அதிக வியர்வை வெளியேறுவதால் நீரிழப்பு பிரச்சனை அதிகரிக்கிறது.

இதனால் தொண்டை வறட்சி,தோல் சுருக்கம்,உடல் சோர்வு,மயக்க உணர்வு உண்டாகிறது.அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

கோடை காலத்தில் உணவுமுறையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சூடான உணவுகள் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

கொழுப்பு உணவுகள் உடலை மந்தமாக்கிவிடும்.கோடையில் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இரத்தத்தில் இருக்கின்ற குளுக்கோஸ் அதிகரிப்பதோடு சோர்வு,மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சர்க்கரை நிறைத்த குளிர் பானங்கள்,சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிக உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.உப்பு உணவுகள் இரத்தம் தொடர்பான பாதிப்புகளை அதிகமாக்கிவிடும்.எனவே காரம்,உப்பு,கொழுப்பு,சர்க்கரை மற்றும் எண்ணெய் உணவுகளை இந்த கோடை காலத்தில் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.இதற்கு பதில் பழையசோறு,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,மூலிகை பானங்களை பருகலாம்.

செக் பண்ணிக்கோங்க.. உஷார் கிட்னி பெயிலியராக காரணம் இந்த 6 தவறுகளே!!

0

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பு சிறுநீரகம்தான்.நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கழிவுகளை பிரித்து திரவ வடிவில் சிறுநீராக வெளியேற்றுகிறது.இந்த சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் நம் உடல்நிலை மோசமாகிவிடும்.

தற்பொழுது பெரும்பாலானோர் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று,வலி எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவதால்தான் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.இது தவிர மேலும் சில காரணங்களால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாழாகிறது.அது என்னவென்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

1)உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

3)அதிக உடல் பருமன் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

4)மது மற்றும் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

5)சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்திருப்பவர்களுக்கு சீக்கிரம் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்:

**அதிகளவு தண்ணீர் பருகுதல்

**உரிய நேரத்தில் சிறுநீரை வெளியேற்றுதல்

**சிறுநீர் கழித்த பிறகு யோனிப் பகுதியை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தல்

**வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்

நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு TEAக்கு மேல் குடிப்பவரா? இதனால் என்னாகும் தெரியுமா?

0

நம்மை புத்துணர்வுடன் வைக்க உதவும் சூடான பானங்களில் ஒன்றுதான் தேநீர்.தேயிலை தூள்,பால்,சர்க்கரையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.தினமும் காலை வேளையில் ஒரு கிளாஸ் சூடான தேநீர் அருந்திவிட்டு அந்நாளை தொடங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

சிலருக்கு ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் தேநீராவது குடித்துவிட வேண்டுமென்ற மனநிலை இருக்கிறது.உலகிலேயே நம் இந்தியவர்கள்தான் தேயிலை தேநீரை விரும்புகின்றனர்.சிலர் தேநீரின் சுவைக்கு அடிமையாக உள்ளனர்.

ஒன்று அல்லது இரண்டு தேநீர் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இரண்டு தேநீருக்கு மேல் குடிக்கும் பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிகளவு தேநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)உடலில் பித்தம் அதிகரிக்க வழிவகுத்துவிடும்.அதிகளவு தேநீர் குடித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.

2)அடிக்கடி தேநீர் குடித்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

3)அளவிற்கு அதிகமாக டீ குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.அடிக்கடி டீ குடித்தால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

4)சர்க்கரை சேர்த்த தேநீர் நம் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

5)வெறும் வயிற்றில் தேநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

6)வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.தேயிலை தேநீர் குடித்தால் இளநரை பிரச்சனை ஏற்படும்.

7)அளவிற்கு அதிகமாக டீ குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.அதிக டீ குடித்தால் வயிற்று வலி பாதிப்பு ஏற்படும்.

ஐயையோ.. ஒரு கிளாஸ் டீ குழந்தைகளின் உடலில் இத்தனை பிரச்சனைகளை உண்டாக்குமா?

0

குழந்தை பருவத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் மட்டுமே வளரும் பொழுது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற முடியும்.உணவின் மூலமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.அப்படி இருக்கையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஆரோக்கிய உணவுமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

ஆனால் இன்று நேரமின்மை காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியத்தை காட்டுகின்றனர்.தாங்கள் உட்கொள்ளும் உணவையே குழந்தைக்கும் கொடுக்கின்றனர்.குறிப்பாக காலை நேர பானமான தேநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குகின்றனர்.

சிலர் குழந்தைகளுக்கு டீ,காபி குடிப்பதால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் பாதிப்புகளுக்கு தேநீர் கொடுப்பது நல்லது என்று நினைப்பது தவறு.

நாம் எடுத்துக் கொள்ளும் தேநீரில் காஃபின் என்ற இரசாயனம் நிறைந்து காணப்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஒரு கெமிக்கலாகும்.இந்த கெமிக்கல் குழந்தைகள் உடலில் சென்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

காஃபின் பானங்களை பருகும் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்கும்.அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.

தலைவலி,எரிச்சல்,பசியின்மை போன்ற பல பாதிப்புகள் இதனால் ஏற்படும்.டீ குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை ஏற்படும்.இதனால் உடலில் நீர்பற்றாக்குறை உண்டாகி கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு,கால்சியம் சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நம்புங்க.. கருப்பை சதைக்கட்டியை 7 நாளில் இந்த மூலிகை கஷாயம் குடிப்பதனால் கரைக்கலாம்!!

0

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி மற்றும் கருப்பை சார்ந்த பாதிப்புகள் குணமாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூலிகை வைத்தியத்தை பின்பற்றலாம்.

1)தண்ணீர் விட்டான் கிழங்கு

இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும்.இந்த தண்ணீர் விட்டான் கிழங்கை சதாவரி என்றும் அழைப்பார்கள்.இந்த கிழங்கை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கட்டிகள் குணமாகும்.

சரியாக மாதவிடாய் வராத பெண்கள் இந்த சதாவரி மூலிகையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த மூலிகை ஆண்களின் மலட்டு தன்மையை போக்க உதவுகிறது.

2)மலைவேம்பு

பெண்களின் கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும் அருமருந்தாக மலைவேம்பு திகழ்கிறது.இந்த மலைவேம்பை அரைத்து உருண்டையாக பிடித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை கட்டிகள் கரைந்துவிடும்.மலைவேம்பு கசாயத்தை குடித்து வந்தால் கருப்பையில் இருக்கின்ற அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

3)அதிமதுரம்

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் கிடைக்கும்.இதை பொடியாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் அதில் சிறிது அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் கருப்பை கட்டி குணமாகும்.

4)கிராம்பு பட்டை மற்றும் மிளகு

பாத்திரம் ஒன்றில் இரண்டு கிராம்பு,ஒரு துண்டு பட்டை மற்றும் நான்கு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து குடித்து வந்தால் கருப்பை கழிவுகள் வெளியேறும்.மாதவிடாய் கோளாறு முற்றிலும் குணமாகும்.

5)சுக்கு மிளகு மற்றும் திப்பிலி

பாத்திரம் ஒன்றில் ஒரு துண்டு சுக்கு,பத்து மிளகு மற்றும் ஒரு திப்பிலி போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பானம் நன்கு கொதித்து சுண்டி வந்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.