Home Blog Page 298

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

0

கோடை காலத்தில் நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.இதனால் வியர்க்குரு கொப்பளம் உருவாகி அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.உடலில் உருவாகி இருக்கும் வியர்க்குரு கொப்பளங்கள்,வேனல் கட்டிகள் மறைய சில மூலிகை பொருட்களை பவுடராக மாற்றி தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் கிழங்கு
3)திரிபலா பொடி
4)படிகாரத் தூள்
5)குப்பைமேனி இலை
6)துளசி இலை

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலை,அரை கைப்பிடி குப்பைமேனி இலை,அரை கைப்பிடி துளசி இலைகளை நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இவை அனைத்தையும் ஒரு சல்லடையில் கொட்டி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 50 கிராம் திரிபலா பொடி,20 கிராம் படிகாரத் தூளை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடி தேவையான அளவு கொட்டி தண்ணீர் விட்டு கட்டிபடாமல் கலக்க வேண்டும்.பிறகு இதை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளம் மறையும்.

சரும எரிச்சல் குணமாக,சரும வியாதிகள் அண்டாமல் இருக்க இந்த பொடியை கலந்து குளிக்கலாம்.உடலில் வியர்வை சேராமல் இருக்க வியர்வை துர்நாற்றம் நீங்க இந்த பொடியை பூசி குளிக்கலாம்.

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

0

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் பசி கட்டுப்படும்.அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் எளிதில் செரிமானமாகும்.

நீங்கள் உட்கொள்ளும் கடினமான உணவுகள் எளிதில் செரிமானமாக வெது வெதுப்பான தண்ணீர் பருகலாம்.நமது உடலில் எளிதில் செரிமானம் வேகமாக நடக்க அவசியம் சுடுநீர் குடிக்க வேண்டும்.உட்கொள்ளும் திட உணவு எளிதில் உடைந்து உறிஞ்சப்பட நீங்கள் அவசியம் வெது வெதுப்பான தண்ணீர் பருக வேண்டும்.

நாம் உட்கொள்ளும் திட உணவுகளை குடலால் உறிஞ்ச முடியவில்லை என்றால் அது நாளடைவில் கொழுப்பாக மாறிவிடும்.இது உடல் பருமன்,இரத்தக் குழாய் அடைப்பு,மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

திட உணவுகள் கொழுப்பாக மாறுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே உணவு உட்கொண்ட 10 நிமிடங்களுக்கு பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் அல்லது மூலிகை பானம்,சூடான சூப் செய்து குடிக்கலாம்.இதுபோன்ற ஆரோக்கிய பானங்கள் நமது உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளும்.

உணவிற்கு பின் குளிர்ந்த நீர் பருகினால் எண்ணெய் உணவு திடப் பொருளாக மாறிவிடும்.இதனால் செரிமான செயல்முறை மெதுவாகி பாதிப்பை உண்டாக்கிவிடும்.எனவே இனி உணவு உட்கொண்ட பின்னர் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.

பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

0

அனைவரும் விரும்பும் பலா பழம் கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.பலாப்பழத்தைவிட பலா பிஞ்சை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

பலா பிஞ்சின் அத்தியாவசிய சத்துக்கள்:

**புரதம் **மாவுச்சத்து **நார்ச்சத்து **பாஸ்பரஸ் **பொட்டாசியம் **மெக்னீசியம் **சோடியம் **கொழுப்பு **சுண்ணாம்புச்சத்து **வைட்டமின் சி

பலா பிஞ்சு சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1)பலா பிஞ்சு
2)மஞ்சள் தூள்
3)உப்பு
4)சீரகம்
5)மிளகுத் தூள்
6)பூண்டு பல்

செய்முறை விளக்கம்:-

ஒரு பலா பிஞ்சை தோல் நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பற்றை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பலா பிஞ்சுகளை போட்டு வதக்க வேண்டும்.அதன் பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் ஐந்து மிளகை லேசாக தட்டி கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் பலா பிஞ்சில் கொட்டி வதக்க வேண்டும்.பிறகு இரண்டு வெள்ளைப்பூண்டு பல்லை தோல் நீக்கிவிட்டு இடித்து அதில் போட்டு வதக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அவ்வளவு தான் அருமையான பலா பிஞ்சு சூப் ரெடி.

பலா பிஞ்சு ஆரோக்கிய நன்மைகள்:

அடிக்கடி பலா பிஞ்சு உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.பலா பிஞ்சுகளை சூப்பாக செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.வயிற்று வலி பிரச்சனையை சரி செய்ய பலா பிஞ்சு சூப் குடிக்கலாம்.

உடலில் வாதம்,பித்தம் ஆகியவை சமநிலையில் இருக்க பலா பிஞ்சுகளை சூப்பாக செய்து குடிக்கலாம்.பாலாவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து காணப்படுகிறது.பலா காயில் சூப் செய்து குடித்து வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க பல பிஞ்சை உணவாக சாப்பிடலாம்.தைராய்டு பாதிப்பில் இருந்து மீள பலாப்பிஞ்சுகளை உணவாக உட்கொள்ளலாம்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுடாதீங்க!!

0

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழம்,நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் பனை விதையில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

பனங்கிழங்கில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

பனங்கிழங்கை பொடித்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வேக வைத்த பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பனங்கிழங்கில் இருக்கின்ற வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அஜீரணக் கோளாறு சரியாக பனங்கிழங்கு பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.உடலில் ஓட்டம் சீராக பனங்கிழங்கை பொடித்து சாப்பிடலாம்.மலச்சிக்கல் பாதிப்பு குணமாக பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.மூல நோய் பாதிப்பு குணமாக பனங்கிழங்கை பொடித்து சாப்பிடலாம்.

உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க பனங்கிழங்கை அடிக்கடி சாப்பிட வேண்டும்.எலும்புகளின் வலிமை அதிகரிக்க பனங்கிழங்கை வேகவைத்து உட்கொள்ளலாம்.நீரிழிவு நோய் கட்டுப்பட பனங்கிழங்கை அவித்து சாப்பிடலாம்.

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக பனங்கிழங்கை பொடித்து உட்கொள்ளலாம்.மாரடைப்பு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.பனங்கிழங்கை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

முக்கி மலம் கழிக்கும் நிலைக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த பழத்தை சாப்பிட்டால் மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

0

நாம் உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மலக் கழிவுகளை வெளியேற்றுவதும் முக்கியம்.நம் குடலில் அதிக மலம் தேங்கி இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நாமே ஆப்பு வைப்பது போன்றது.எனவே தினமும் காலை நேரத்தில் மலத்தை வெளியேற்றுவது அவசியமான ஒன்றாக உள்ளது.சிலர் இரண்டு மூன்று தினங்கள் ஆனாலும் மலத்தை வெளியேற்ற மாட்டார்கள்.சிலருக்கு வாரக் கணக்கில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.

சிலர் மலத்தை கழிக்காமல் அடிக்கி வைத்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.நமது உடலில் தேங்கி இருக்கும் மலக் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் நாளடைவில் பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.இதனால் அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்.எனவே நாள்பட்ட மலக் கழிவுகளை அகற்ற இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து பாலோ பண்ணுங்கள்.

குடல் கழிவுகளை அகற்றுவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே நமக்கு எப்பொழுதும் வராது.அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் பழங்கள் என்னென்னெ என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

1)பப்பாளி

தினமும் இரவில் ஒரு கீற்று பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அதிகாலை நேரத்தில் மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்வதோடு மலத்தை வெளியேற்றவும் உதவுகிறது.

2)ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழத்தை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை சாறாக பருகினால் மலச்சிக்கல் வராமல் இருக்கும்.

3)ஆப்பிள்

நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.ஆப்பிள் சாப்பிடுவதால் குடல் இயக்கம் மேம்படும்.

4)பிளம்ஸ்

இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

5)ஸ்ட்ராபெர்ரி

நார்ச்சத்து நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் வறண்ட மலம் இளகி வெளியேறும்.

வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

0

இன்னும் இரண்டு மாதங்களுக்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகிறது.தற்பொழுது பங்குனி வெயில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த வெயில் காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான்.பட்ட பகலில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கோடை நோய்கள் குழந்தைகளை அண்டாமல் இருக்க பெற்றோர் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக வரக் கூடும்.தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சொறி சிரங்கு,வியர்க்குரு கொப்பளம்,அம்மை,வேனல் கட்டி போன்ற பல பிரச்சனைகளை வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்க நேரிடும்.

வெளியில் சென்று வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு காட்டன் துணியை உடுத்த வேண்டும்.வெளியில் செல்லும் பொழுது காலணிகளை அணிவித்து கூட்டி செல்ல வேண்டும்.

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு ஒரு பாட்டிலில் ஊற்றி குடிக்க வைக்க வேண்டும்.குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.வேப்பிலை மஞ்சள் போன்ற பொருட்களை தண்ணீரில் கலந்து குளிக்க வைக்க வேண்டும்.

பகல் வெயிலில் குழந்தைகளை விளையாட வைப்பதை தவிர்க்க வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெட்டி வைத்து நீண்ட நேரம் ஆன பழங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.கோடை காலத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவிக்க கூடாது.வெப்பத்தை ஈர்க்கும் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.இளநீர்,தர்பூசணி,வெள்ளரி,மோர்,நுங்கு போன்ற இயற்கை குளிர்ச்சி கொண்ட பொருட்களை சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!

0

இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளியல் அவசியமான விஷயமாக இருக்கிறது.கற்றாழை,வெந்தயம்,நெல்லிக்காய் போன்ற பொருட்களை அரைத்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெயிலில் உடல் சூடு அதிகரித்தால் மயக்கம்,ஒருவித மந்த உணர்வு போன்றவை ஏற்படும்.எனவே இதில் இருந்து மீள நீங்கள் இந்த குளியலை மேற்கொள்ளலாம்.

தீர்வு 01:

கற்றாழை குளியல்

ஒரு பிரஸ் கற்றாழையை எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை பேஸ்ட் போல் அரைத்து உச்சி முதல் பாதம் வரை பூசி குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் உடல் சூடு தணியும்.கற்றாழை ஜெல்லை தலைக்கு அப்ளை செய்து வந்தால் பிசு பிசுப்பு நீங்கும்.

தீர்வு 02:

வெந்தயக் குளியல்

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலை முதல் பாதம் வரை பூசி தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 03:

நெல்லிக்காய் குளியல்

10 பெரிய நெல்லிக்காயை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து உச்சி முதல் பாதம் வரை பூசி தேய்த்து குளித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.

தீர்வு 04:

மூலிகை குளியல்

துளசி,புதினா,வேப்பிலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு தணியும்.அதேபோல் சந்தனத்தை அரைத்து பூசி குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.அதேபோல் வெட்டி வேர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

0

நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள்:

1)தினமும் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

2)பழுப்பு அரிசி,கோதுமை உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

3)கேரட்,கொத்து அவரை,கோவைக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

4)உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆளிவிதை,சியா விதை,பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

5)பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

6)பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தவிர்க்க வேண்டும்.இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

7)பாதாம் பருப்பு,வால்நட்,பிஸ்தா போன்ற உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

8)உடல் உழைப்பு இருக்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

0

நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது.

இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய்,உடல் பருமன்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் வெள்ளை சர்க்கரை மாற்று வெல்லம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

இன்று பலரும் கருப்பட்டி நல்லது என்று நினைத்து அதை பயன்படுத்துகின்றனர்.கருப்பட்டி என்பது பனைமரத்தில் கிடைக்கும் பதநீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.அதேபோல் தென்னை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

இந்த கருப்பட்டியை சர்க்கரை பதில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.சர்க்கரையை காட்டிலும் கருப்பட்டி அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

வயது வந்த பெண்களுக்கு கருப்பட்டி சேர்த்து உளுந்து களி கொடுத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.கருப்பட்டியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும்.கருப்பட்டியை வறுத்த சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை பிரச்சனை நீங்கும்.

இருமல்,ஜலதோஷ பிரச்சனை பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனியை வதக்கி கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.கால்சியம் சத்து அதிகம் நிறைந்த கருப்பட்டியை உளுந்து பருப்புடன் அரைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.எனவே சர்க்கரைக்கு மாற்று கருப்பட்டியை இனிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

0

உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)கிளாஸ்
3)சிறுநீர்
4)நல்லெண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் உங்கள் சிறுநீரை ஒரு கிளாஸில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும.

அடுத்து சிறுநீரை அதில் ஊற்ற வேண்டும்.நல்லெண்ணெய் பாம்பு போன்று வளைந்து சுருண்டால் அது வாதம் இருப்பதை உணர்த்துகிறது.

தண்ணீரில் உள்ள நல்லெண்ணெய் மோதிர வடிவில் அதாவது வட்ட வடிவில் இணைந்தால் அது பித்தம் இருப்பதை உணர்த்துகிறது.இதே நல்லெண்ணெ முத்து போன்று உருண்டு வந்தால் அதில் கபம் இருக்கிறது என்று அர்த்தம்.

வாதம் பித்தம் கபம் குறைய எளிய வீட்டு வைத்தியம் இதோ:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.சீரகம் நன்றாக வறுபட்டு வந்த பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

சீரகத் தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் வெல்லம் சேர்த்து கரைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த சீரகத் தண்ணீரை வடிகட்டி குடித்தால் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)வெல்லம் – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த இஞ்சி பானத்தை வடிகட்டி வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாதம் பித்தம் கபம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படும்.