ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog Page 3

ஒருங்கிணைப்பெல்லாம் வேண்டாம் இபிஎஸ் மட்டும் போதும்.. ஓஹோ காரணம் தளபதி தானா.. செங்கோட்டையன் போட்ட பார்முலா!!

0

ADMK TVK: 1 மாதத்திற்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினருமான செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படாவிட்டால் என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

இதன் பிறகு அதிமுக விவகாரங்களில் தலை காட்டாமலிருந்த செங்கோட்டையன் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அதிமுக தலைவரும், முக்கிய அமைச்சர்களும், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தார். இந்த தகவல் முன்கூட்டியே அதிமுக அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனுக்கு மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

அவரிடம் அறிவிக்கபடா விட்டாலும் இந்த செய்தி அறிந்த உடனேயே அவரும் கருப்பு பட்டை அணிந்து வந்தார். இந்த நிகழ்வு அவர் இன்னும் அதிமுக உடன் இணக்கமாக தான் இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் 10 நாள் கெடு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள  1 மாதமோ அல்லது ஒன்றரை மாதமோ எடுக்கலாம் என்று தான் கூறினேன்.

ஆனால் ஊடகங்கள் அதனை தவறாக புரிந்து கொண்டன என்று கூறினார். இதனால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விட்டதாகவும் தகவல் பரவுகிறது. இதற்கு காரணம் என்னவென்று ஆராயும் போது தான், அதிமுக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் பட்சத்தில், அந்த கூட்டணி உறுதி செய்யபட்டுவிட்டால், அதன் பிறகு அதிமுகவில் செங்கோட்டையனின் செல்வாக்கு அடியோடு சரிந்து விடும் என்பதை அறிந்த அவர், இபிஎஸ்யுடன் சமரசமாக செல்ல முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த கூட்டணி அமைந்தால் அது சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று விடும். அதனை கருத்தில் கொண்ட செங்கோட்டையன் வெற்றி கூட்டணியில் சேர, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இபிஎஸ்க்கு தலையாட்டுகிறார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

பாஜக பாட்டுக்கு நடனமாடும் நடிகர் விஜய்.. கருணாஸ் தாக்கு!!

0

DMK: முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நடிகரான கருணாஸ் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் மருது சகோதரர் குருபூஜைக்கும், 30-ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கும் முதலமைச்சருக்கு அழைப்பு வழங்கினேன் என தெரிவித்தார்.

பாஜகவை எதிர்த்து ஸ்டாலின்  தைரியமாக செயல்படுகிறார் என்று கூறிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முழு இந்தியாவும் கவனித்து வருகிறது. அவரின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார். கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை விஜய் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அது குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்.

அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களின் துயரில் உடனிருக்க கூடியவரே உண்மையான தலைவர். அந்த வகையில் கரூரில் நடந்த துயரத்தின் போது மக்களுடன் இருந்தவர் ஸ்டாலின் தான் எனக் கூறினார். மேலும்,அதிகாரத்துக்காக மட்டுமே அரசியலில் இருப்பவர் மக்களின் துயர நேரங்களில் களத்தில் இல்லாதது கேள்வி எழுப்புகிறது. பாஜக எப்போதுமே பின்புலத்தில் இருந்து இயக்கும் கட்சி.

அவர்கள் உருவாக்கிய பாட்டுக்கு விஜய் நடனமாடும் நடிகராகிவிட்டார் என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அந்த கட்சி புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்ட மகத்தான இயக்கம். ஆனால் இப்போது அதன் நிர்வாகிகள் தவெக கொடியை ஏந்தி நிற்பது வேதனை அளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவர் பதவிக்காக தன் கட்சியையே அடமானம் வைக்க தயங்க மாட்டார் என்று கருணாஸ் குற்றம் சாட்டினார்.

நீங்க தலைவர் மட்டும் தான்.. நிறுவனர் இல்ல.. பளிச்சென்று பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள்!!

0

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கிடையே மோதல் முற்றிய நிலையில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மற்றும் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதே போல் அன்புமணியும் ராமதாஸின் ஆதரவாளர்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அண்மையில் ராமதாசுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கூட மருத்துவர் ஐயாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு மேய்க்கும் சின்ன பையன் கூட இப்படி பேச மாட்டான் என்றும், இந்த கட்சியை அரும்பாடுபட்டு உருவாக்கியது நான். இக்கட்சிக்கான முழு உரிமையும் எனக்கே உண்டு என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடியில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ அருள் தலைமையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதை பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக இப்போதும் அதன் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் பாமக அன்புமணிக்கு சொந்தம் என்று  சொல்லவில்லை.

தலைவர்  மட்டும் தானென்று கூறியுள்ளது. அந்த தலைவர் பதவியும் விரைவில் முடிய போகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார். பாமகவில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தந்தையும், மகனும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த சமயத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அவர்களின் பிரிவுக்கு மேலும் காரணமாக அமைகிறது என்று பாமக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தலில் நிலைமை வேறு மாதிரி இருக்கும்.. ஸ்டாலினை எச்சரித்த காங்கிரஸ் தலைவர் .. தொடரும் விரிசல்!!

0

DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திராவிட கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தவும், மக்கள் மனதில் இடம் பெறவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பல்வேறு முக்கிய தலைவர்களின் பிரிவும், பதவி நீக்க நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது. இதனால் மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை குறைய தொங்கியது. இதனை கண்ட திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிக தொகுதிகளை கேட்டும், ஆட்சியில் பங்கு என்றும் திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கெடுப்பது உறுதி என்று தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதன் சூடு கூட தணியாத நேரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் கூட்டணி கட்சிகளுக்காக காங்கிரஸ் செய்த உதவி போதுமென்று நினைக்கிறேன் என்று கூறினார்.

தற்போது புதிய திருப்பமாக, விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணிக்கம் தாகூர் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறிய அவர், அதிக தொகுதிகளை பெற வேண்டுமென்பது காங்கிரஸ் கட்சியிலுள்ள அனைவரது  விருப்பம் என்றும் கூறினார். மேலும் கூட்டணியில் விட்டு கொடுப்பது மட்டும் காங்கிரஸின் வேலை கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். எங்களை மதிக்காவிட்டால், முதலமைச்சராக வர முடியாது. நிலைமை வேறு மாதிரி இருக்கும் என்று எச்சரித்தார். 

நான் அப்படி சொல்லவே இல்லையே.. அந்தர் பல்டி அடித்து செங்கோட்டையன்!!

0

ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பு குறித்து ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று தெளிவாகக் கூறியுள்ளார். கோவையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு  சென்ற அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, விரைவில் நல்லது நடக்கும் என்று மட்டுமே பதிலளித்தார்.

மேலும், நீங்கள் இன்று பங்கேற்க உள்ள திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கலாம்? என்று கேள்வி கேட்ட போது,  இதுவரை எதுவும் உறுதியாக நடைபெறவில்லை என்று கூறிய அவர், விரைவில்  நல்ல முடிவு வரும் என உறுதி செய்தார்.சுமார் 1 மாதத்திற்கு முன்பு அதிமுக ஒன்றிணைப்பு தொடர்பாக இபிஎஸ்க்கு பத்து நாள் கெடு விதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, நான் எந்த கெடும் விதிக்கவில்லை.

பத்து நாளில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், முடிவெடுக்கும் நேரம் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதமாக இருக்கலாம் என்று தான் கூறினேன் . ஆனால்  ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்றார்.  செப்டம்பர் மாத தொடக்கத்தில் கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்கள் 10 நாட்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்றும், தெரிவித்தார். தற்போது அந்த பேச்சு மீண்டும் ஊடகங்களில் விவாதமாகவும், தவறான தகவல்களுடன் பரவியதால் செங்கோட்டையன் தமது கருத்தை நேரடியாக தெளிவுபடுத்தி, அதிமுக ஒருங்கிணைப்பில் சரியான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

கறார் காட்டும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.. தவிக்கும் திமுக தலைமை!!

0

DMK: தமிழ்நாட்டின் தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆவார். இவர் வருவாய் மாவட்ட வருவாய் பணியமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். திமுக கட்சியை சேர்ந்த இவர் 2006 முதல் 2011 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராகவும், சாத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இவர் இதற்கு முன் ஐந்து முறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளும், போர்கால அடிப்படையில் உதவிகளும் தமிழக அரசால் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், திமுக தலைமை தன்னுடைய பிரச்சார பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு முக்கிய அமைச்சர்களுடன் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் பேரிடர் துறை அமைச்சராக உள்ள ராமச்சந்திரன் இந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை என பேசப்படுகிறது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராயும் போது, நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திமுக தலைமை சீட் கொடுக்க விரும்பவில்லை என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலை அறிந்த அவர் சீட் கிடைக்காத பொழுது எதற்காக உழைக்க வேண்டும் என்று நினைத்து, மக்கள் பணிகளில் ஈடுபாடு காட்டாமல் உள்ளார் என்று நம்ப த்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் பேரிடர் என்பதால் திமுக அரசு இந்த மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பேரிடர் துறை அமைச்சரின் செயலால் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளார் என்று சிலர் கூறுகின்றனர். 

டெல்டா மாவட்ட விவசாயிகள் துயரம்.. நெல் கொள்முதல் தாமதம் குறித்து இபிஎஸ் கடும் விமர்சனம்!!

0

ADMK DMK: டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தஞ்சைக்கு விரைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அங்குள்ள நிலைமையைப் பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, தஞ்சையில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் புதிய கொள்முதல் நடைபெறாமல் தாமதமாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் நான் இதை எடுத்துக் கூறியபோது, உணவுத்துறை அமைச்சர் தவறான தகவல் அளித்து, ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுகின்றன என்றார். ஆனால் நிஜத்தில் அது வெறும் 800–900 மூட்டைகள் மட்டுமே, என கூறினார். மேலும், தான் போட்ட நகையை அடமானம் வைத்து நெற்பயிர் விளைவித்த பெண் விவசாயி ஒருவர், 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைத்துப் போனதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்.

அது என்னை கலங்க செய்தது, என உருக்கமாக குறிப்பிட்டார். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி வழங்கியதை கூட திமுக அமைச்சர் அறியாமல் தவறான தகவல் தெரிவித்ததாகவும், இது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும் என்றும் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 4.5% இருந்த விவசாய வளர்ச்சி, திமுக ஆட்சியில் 0.09% ஆக சரிந்துள்ளது. விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசுக்கு பதிலாக, அதிமுக எப்போதும் விவசாயிகளின் பக்கம் நிற்கும், என அவர் வலியுறுத்தினார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு.. அதிகாரிகளை கடிந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை!!

0

CONGRESS: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் நிலையில், நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் தகவலின்படி, இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து நேற்று மாலை முதல் அதிகரித்ததையடுத்து, முதலில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழையால் நீர்வரத்து மேலும் உயரும் நிலையில், இன்று காலை 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு நீர் திறக்கப்பட்டதைப் பற்றி தன்னிடம் முன்கூட்டியே தகவல் அளிக்காததை அதிகாரிகளிடம் கடுமையாக விமர்சித்தார். மக்கள் பிரதிநிதியாக நானும், சேர்மனும், அமைச்சரும், எம்.எல்.ஏக்களும் இருக்கிறோம். யாருக்கும் தெரியாம நீங்க திறக்கிறீர்கள். இது அரசுத் துறைக்கு ஏற்ற நடைமுறை அல்ல. ஒரு வார்த்தையாவது சொல்லலாமே. கடந்த வருடமும் இதே மாதிரி நடந்தது.

ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் தாமே செய்யப் போனால், மக்கள் பிரதிநிதிகள் தேவையா? இனிமேல் நான் தான் ஊர் ஊரா சென்று மக்களிடம் நீர் திறந்துவிட்டார்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வேன், என அவர் கடுமையாகக் கூறினார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் பின்பகுதி பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மழை தீவிரம் தொடர்வதால் மேலும் நீர் திறப்பு சாத்தியம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதன் மனிதனாக மாற மறந்துவிட்டான்.. வள்ளுவரை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிக்கு அன்பில் மகேஷ் பதிலடி!!

0

DMK: செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் உடல்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சியினரும், தவெகவினரும் இது நடிப்பு என கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், மதுரையில் நடைபெற்ற தமிழ் முழக்கம் ஆளுமை திறன் மேம்பாட்டு பன்னாட்டு பயிலரங்கத்தில் பேசியபோது, பேச்சு என்பது உணர்ச்சியும் அறிவும் இணைந்து அமைந்ததாக இருக்க வேண்டும்.

உணர்ச்சி மட்டுமே இருந்தால் அது விலங்குக்கு சமம். அறிவு மட்டுமே இருந்தால் அது மரத்துக்கு சமம் என்று வள்ளுவர் கூறியுள்ளார். கல்லை கடவுளாக மாற்றிய மனிதன், மனிதனாக மாற மறந்துவிட்டான் என்று விமர்சகர்களுக்கு மறைமுக பதிலளித்தார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அக்டோபர் 22 அன்று நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகி சிவம், இயக்குர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலரும், 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். 

கமலின் அதே திசையில் விஜய்யின் அரசியல் பயணம்.. தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள்!!

0

TVK MNM: தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ள கேள்வி நடிகர் விஜய், கமல்ஹாசன் போல் அரசியல் கூட்டணியை தேர்வு செய்வாரா என்பதுதான். கமல்ஹாசன் 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியைத் தொடங்கி, திமுகவுக்கு எதிராக ஆரம்பித்தார். ஆனால், சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெற்றி பெறாமல் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, அவர் திமுக கூட்டணியுடன் இணைந்து, இன்று ராஜ்யசபா உறுப்பினராக அரசியலில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த மாற்றம் கமலின் அரசியல் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இதேபோல், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தற்போது தனியாக இயங்கினாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அவரின் அரசியல் திசையை தீர்மானிக்கும் என கருதப்படுகிறது. அவர் எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியாத சூழலில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில், புதிய கூட்டாளிகளை தேடி வருகிறார்.

இந்நிலையில், விஜய்யுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் அது வலிமையான சக்தியாக மாறும் என மதிப்பிடப்படுகிறது. இவ்வாறாக, கமலின் அரசியல் பயணம் விஜய்யின் எதிர்காலத்தை முன்னறிவிக்க கூடிய மாதிரி மாறியுள்ளது. இருப்பினும், விஜய் தனது அரசியல் அடையாளத்தை காக்க விரும்புவதால், முழு சேர்க்கையை விட தேர்தல் கூட்டணி மட்டுமே சாத்தியம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 2026 தேர்தல் முடிவுகள் விஜய் தனியாக நிற்பாரா அல்லது கூட்டணிக்குள் நுழைவாரா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.