சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 3

“அதிமுக வில் சைலண்ட் வார்” எடப்பாடி தந்த அவமதிப்பு!! திமுக பக்கம் பெரிய தலைகள்!!

0

ADMK DMK: அதிமுக வில் உட் கட்சிக்குள்ளேயே நிர்வாகிகளுடன் மனக்கசப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை தற்போது வரை கட்சிக்குள் பலரும் விரும்பவில்லை. இதனால் கட்சி தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல தலைமை பதவியிலிருக்கும் எடப்பாடியும் கட்சிக்குள் யாருக்கும் மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பொதுவெளியில் நிரூபிக்கும் விதமாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் தம்பிதுரை பேச முற்பட்டபோதும் அவரை தடுத்து நிறுத்தினார்.

அதேபோல செல்லூர் ராஜு எடப்பாடி காரில் ஏற முயன்ற போதும் மறுத்துவிட்டார். இவ்வாறு பொது வெளியில் சக நிர்வாகிகளுடன் எடபாடி பரஸ்பர உறவினை அவமதிப்பது போல் உள்ளது. முன்னதாகவே பாஜக அதிமுக கூட்டணி, தலைமையில் அதிகாரப் போக்கு என எண்ணற்ற காரணங்களால் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவிற்கு சென்றனர். அந்த வகையில் தொடர்ந்து இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்வது அடுத்தடுத்து முக்கிய புள்ளிகளையும் கட்சியை விட்டு வெளியேறச் செய்யும்.

அதிலும் தற்போது எடப்பாடியால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை திமுக குறிவைத்து தூக்கி வருகிறதாம். அந்தவரிசையில் அடுத்து தம்பிதுரை மற்றும் செல்லூர் ராஜூ இருக்கலாம். மேலும் எடப்பாடியின் இந்த போக்கால் அவருக்கு பக்க பலமாக இருந்தவர்கள் கட்டாயம் மாற்றுக் கட்சியை தேடி செல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தியும் கூறியுள்ளார்.

இந்தியாவை நோக்கி வரும் 10 ஏவுகணைகள்.. பாகிஸ்தான் கொடுக்கும் மிரட்டல்!! அடிக்கபோகும் போர் மணி!!

0

IND vs PAK: பாகிஸ்தானின் பகல்ஹாம் தாக்குதலால் இந்தியாவை சீர்குலைந்து விட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணி ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தினர். மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் திட்டத்தையும் தடுத்து வைத்துள்ளனர். இங்கிருந்து ஒரு சொட்டு நீர் கூட பங்கு செல்லக்கூடாது என்ற விதி போடப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் பொறுக்க முடியாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் தொடர் தாக்குதலை இந்தியாவிற்கு எதிராக நடத்தினார். அவை அனைத்தும் சற்று கூட பிரதிபலிக்கவில்லை. மேற்கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டினரும் இந்தியாவிற்கு துணை நின்றனர். இதனால் அரண்டு போன பாகிஸ்தான் போரை கைவிட்டது. தற்போது சிந்து நதிநீர் குறித்து வெட்டி வசனம் பேசி வருகின்றனர்.

அதாவது சிந்து நதி நீர் எங்களுக்கு கொடுக்காவிட்டாலும் மேற்கொண்டு அணை கட்டினாலும் கட்டாயம் தீவிர பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்டி வருகின்றனர். ஏனென்றால் பாகிஸ்தானில் 22 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த சிந்து நதி நீரை நம்பியுள்ளனர். மேற்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீறும் சிந்து நதிக்கு எதிராக அணை கட்டினால் கட்டாயம் 10 ஏவுகளை ஏவி அதனை தகற்றுவோம் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இது என்ன இந்தியாவின் சொத்தா என்றும் கேட்டுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் இந்தியா சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை கைவிட்டால் மட்டுமே சிந்து நதி நீர் கிடைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

அதிரப்போகும் அரசியல் மேடை.. விஜய் கூட்டணியில் ஐக்கியமாகும் தேமுதிக காங்கிரஸ்!! கலக்கத்தில் திமுக அதிமுக!!

0

TVK DMDK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாநகரில் நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது மாநாட்டில் பல்வேறு மாற்று கட்சி சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முதலாவதாக காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளார். இவர்களின் நட்புறவானது 15 வருடத்தை கடந்து தற்போது வரை நீட்டித்திருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

அதனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வாறு அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய்யின் ஆதரவு எப்பொழுதும் ராகுல் காந்திக்கு இருந்து வருகிறது. அதனால் அவருக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டாயம் அவர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தேமுதிக-விர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். எம் பி சீட் அதிமுக தராததால் கூட்டணி குறித்து வாய் திறக்காமல் இருக்கும் பிரேமலதா ஆட்சியில் பங்கு கொடுத்தால் சரி என்று நினைக்கிறாராம்.

அப்படி பார்க்கும்போது விஜய் தான் நமது கூட்டணிக்கு செட்டாகுவார் என  கட்சிக்குள் பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல விஜய் பிரபாகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா?? என்ற கேள்வி முனையிலேயே பேட்டி அளித்திருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு உறுதியான அரசியலை மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கிறார்கள்.

அதற்கு விஜய் தான் சரிப்பட்டு வருவார் என்றும் கட்டாயம் மதுரையில் நடக்கப் போகும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்சமயம் விஜய்க்கு மறைமுக ஆதரவாக காங்கிரஸ் தேமுதிக இருக்கும் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போதும் இப்படி தான் டெல்லியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வருகை புரிந்திருந்தார். அதேபோல இவர்களது வருகையும் இருக்கும் என பனையூர் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

EPS க்கு பாஜக கொடுக்கும் பெரும் அடி.. மாறப்போகும் அதிமுக தலைமை!! பிரட்டிப்போடும் ரகசிய திட்டம்!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி வைத்தது தற்போது எடப்பாடிக்கு மிகவும் சவாலாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கூட்டணி வைப்பதற்கான பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும் அதன் எல்லையை தாண்டி செல்கிறது. அதாவது தனது அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டோரை இணைக்க கூடாது என எடப்பாடி கூறி இருந்தார். அது ரீதியாக என்னிடம் வற்புறுத்தவும் கூடாது என தெரிவித்திருந்தார்.

ஆனால் பாஜக நிர்வாகிகள் சமீபத்தில் அளிக்கும் பேட்டியில், கூடிய விரைவில் டிடிவி தினகரன் இணைவார், இது ரீதியாக எடப்பாடியே கூறுவார் என தெரிவித்துள்ளனர். இப்படி அதிமுகவின் தலையீடு இல்லாமல் பாஜக முடிவு எடுப்பது உச்சகட்ட கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல கூட்டணி ஆட்சி முறைதான், அதிலும்  பாஜக தான் அதன் செயல் தலைவர் என்பது போல் கூறி வருகின்றனர். இதனையும் எடப்பாடி முழுமையாக எதிர்த்துள்ளார்.

இவ்வாறு தனது கூட்டணி கோட்பாடுகளை உடைக்கும் பாஜகவுடன் நீண்ட நாள் பயணம் தொடர முடியுமா என்று குழப்பத்திலும் உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் வேறு ஒரு தலைவரை நியமித்து நமது கைப்பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என பாஜக மறைமுகத் திட்டம் தீட்டி வருகிறார்களாம். அந்த மறைமுக ஆலோசனையில் அதிமுகவின் மாற்று தலைவராக செங்கோட்டையன் அல்லது வேலுமணி இருக்கலாம் என கூறுகின்றனர்.

குறுகிய காலத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் மோதல் போக்கு இருந்தது. நாளடைவில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பிறகு அப்படியே அமைதியாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு தலைவர் பதவி வரப்போகிறது என்பதுதான். எந்த ஒரு கண்டிஷனுக்கும் எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால் இவர்களில் ஒருவரை தலைவராக்கி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களாம்.

ஆனால் எடப்பாடி ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என கூறுகின்றனர். இதுவே கட்சியிலிருந்து வெளியேறிய அன்வர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, 2026 தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் முதல்வர் வாய்ப்பானது செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். இது அமித்ஷாவே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்ததும் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு வரும் அடுத்த தலைவலி.. திமுகவில் முக்கிய இடத்தை பெரும் சூர்யா!!

0

TVK DMK: தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்குள் பல மாற்றங்கள் அரங்கேற உள்ளது. அந்த வகையில் திமுக பல திட்டங்களை தீட்டி சையது இறங்கி உள்ளது. விஜய் அரசியலுக்குள் கால் பதித்துள்ளதால் கட்டாயம் வாக்கு வங்கி சிதறக்கூடும் என்பதை தெரிந்து அவருக்கு இணையான நட்சத்திர நடிகரை இணைக்க முயற்சி செய்து வருகிறார்.

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் சூர்யா. சமீபத்தில் இவரது அகரம் பவுண்டேஷன் வெற்றி குறித்தான விளம்பரம் பரவலாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர் திமுகவின் மறைமுக கைக்கூலி என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய்’யின் மவுசை குறைக்கவே அவர்கள் இதை கையாளுவதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அப்படி பார்க்கையில் விஜய்யை எதிர்க்க சரியான ஆளாக இவர் இருப்பார் என்று ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

மேற்கொண்டு விஜய் போட்டியிடும் தொகுதியில் இவரை நட்சத்திர பேச்சாளராக நிறுவப்படலாம் என்று கூறுகின்றனர். இது ரீதியாக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விஜய்க்கு எதிராக சூர்யா என வர நேர்ந்தால் அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது எந்த மாற்றமும் இல்லை. இதற்கு எதிராக விஜய் எந்தவித செயல்முறையை கையாள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுக வை ஆட்டிபடைக்கும் பாஜக.. கடும் கொந்தளிப்பில் எடப்பாடி!! முடிவுக்கு வரப்போகும் கூட்டணி!!

0

ADMK BJP: அதிமுக பாஜக இணைப்பிற்கு பின்பு பல்வேறு கட்சி சார்ந்த கோட்பாடுகள் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் அதிமுகவுடன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கூட்டு சேர்க்க வற்புறுத்தக் கூடாது என்பதுதான் முதல் விதியே. நாளடைவில் ஒன்றுபட்ட அதிமுக தான் அதிக அளவு வாக்கு வங்கியை சம்பாதிக்கும் என பாஜக கூறியதால் டிடிவி தினகரனை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் எடப்பாடி உள்ளார்.

ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் இணைக்க துளி கூட இடம் கொடுக்க ஒதுக்கவில்லை. இதன் வெளிப்பாடாக தமிழகம் வந்த பிரதமர், மத்திய மந்திரி என யாரும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அவர் கோபமடைந்து கட்சியே வேண்டாம் என்று வெளியேறி விட்டார். ஆனால் பாஜக நிர்வாகிகள் அவரை விடுவதாக தெரியவில்லை. சமீபத்தில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி சீண்டும் விதமாக பேசியுள்ளார்.

அதில், டிடிவி தினகரன் உடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் கூடிய விரைவில் கூட்டணிக்குள் இணைவார். இவ்வாறு அவர் கூறியதற்கு செய்தியாளர்கள், ஏன் எடப்பாடி இது குறித்து வாய் திறப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதிகாரப்பூர்வ சில ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் எடப்பாடி டிடிவி பெயரை பெயரை கூறுவார். அதேபோல அனைத்து கட்சி கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியது எடப்பாடிக்கு ஆர்டர் போட்டிருப்பது போல் உள்ளது. கூட்டணி அமைத்ததிலிருந்து தங்களுக்கு கீழ் தான் ஆட்சி என பாஜக கூறி வருகிறது. இதுவே அதிமுகவிற்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வரைமுறைகளையும் பாஜக மீறுவது தொடர் கூட்டணியில் நீட்டிக்குமா என்பதில் கேள்விக்குறி தான்.

கட்சி ரீதியாக எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக முடிவெடுப்பதை எடப்பாடி விரும்பவில்லை என  அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கூட்டணிப் பிளவு ஏற்பட்டு அதிமுக மாற்றுக் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாம்.

EPS க்கு நம்பிக்கை துரோகம்.. முக்கிய திமிங்கலத்தை கட்சியில் இணைக்க நினைக்கும் பாஜக!! செல்லாகாசாகும் கூட்டணி!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முன்பு ஓபிஎஸ்-ஐ  தான் மத்தியில் நாடி இருந்தனர். எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் இவரை வைத்து ஆட்டத்தை தொடங்கலாம் என்று திட்டம் தீட்டினர். ஆனால் இவையனைத்தும் தவிடு பொடியாக்கும் விதத்தில் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுவிட்டார். அதுமட்டுமின்றி சில கட்டுப்பாட்டு வரைமுறைகளுடன் தான் கூட்டணி ஒப்பந்தமும் உள்ளது.

அதன் பெயரில் ஓபிஎஸ் கட்சிக்கு அருகாமையில் கூட வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அதனை அப்படியே ஏற்றுக் கொண்ட பாஜக, முழுவதுமாக அவரை தவிர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி, மத்திய மந்திரி உள்ளிட்டோர் வருகை புரிந்த போது சிறிது நேரம் கூட பார்க்க ஒதுக்கவில்லை. இதனால் மன உளைச்சலான ஓபிஎஸ் பாஜகவின் ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற்றிக்கொண்டார்.

அதேபோல இவரின் முக்குலத்தோர் வாக்குகள் முக்கியம் என்று எண்ணிய திமுகவும் இவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பை தெரிவிப்பதற்கு முன் ஸ்டாலினையும் நேரில் சென்று ஓபிஎஸ் சந்தித்தது அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதயெல்லாம் முன்கூட்டியே அறிந்த அண்ணாமலை அவரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.

அதன் பேரில் தமிழகத்திற்கு வந்த பி எல் சந்தோஷிடமும் இது குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆனால் அவர் சிறிதும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. மேலிடத்தின் உத்தரவு, கட்டாயம் அவரை கட்சியில் இணைக்க மாட்டோம் எனக் கூறிவிட்டார். ஆனால் அண்ணாமலை விடாது, நமக்கு முக்குலத்தோர் வாக்கு முக்கியம் அதனால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

. இது ரீதியான தகவலை அறிந்து கொண்ட பன்னீர்செல்வம் பாஜக கூட்டணிக்காக காத்திருக்கலாமா அல்லது திமுகவை சென்றடையலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

13 நாட்களாக இரவு,பகலாக தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தூய்மை பணியாளர்க்கு கிடைத்த பரிசு ……… சற்றுமுன் கிடைத்த தகவல்

0

சென்னை:தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்காகவும்,தங்கள் பணியை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும்,ஊதியத்தை உயர்த்த வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு சுமார் 13 நாட்களாக இரவு பகல் பாராமல் கண்ணீருடனும்,வேதனையுடனும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தூய்மை பணியாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பட நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் இதுமட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் மற்றும் இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் சந்தித்தனர்.

13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தூய்மை பணியாளர்களை நடைபாதை மற்றும் சாலைமறித்து போராட்டம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறைனர்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று இரவு ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.இதனை பலரும் கண்டித்தனர் இவ்வாறு தூய்மை பணியாளர்களை கைது செய்ய பட்டதற்காக இன்று மார்க்சிஸ்ட் கட்சினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு இரவு, பகலாக நடந்த போராட்டத்திற்கு விடிவு காலம் கிடைத்தது போல் தூய்மை பணியாளர்களுக்காக 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியுள்ளன.

6 திட்டங்கள்:தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது தோல் பிரச்சினை ஏற்படும் இதற்காக செலவையும் சிகிச்சையும் அளிக்க தனித்திட்டம் அளிக்கப்படும்

பணியின் போது மரணம் அடையும் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகுக்கப்படும் இதுமட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கிடைக்க திட்டம் செயல் படுத்தப்படும்.இதுபோன்று இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியிருக்கின்றது.

இந்த திட்டங்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.

 

விஜய் போட்ட பதிவு.. மாநாட்டிற்கு என்ட்ரி கொடுக்கப்போகும் காங்கிரஸ்!! கூட்டணி அரசியலில் அதரடி மாற்றம்!! 

0

TVK Congress: விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதில் தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெள்ள தெளிவாக கூறினார். அப்போதையிலிருந்து பாஜக, திமுக என இருவரும் இவரை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் விஜய் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி அனைத்தையும் உடைக்க நினைத்தார்.

அதனால்தான் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு என்று அறிவிப்பை வெளியிட்டார். இதன் தாக்கமானது ஆளும் கட்சியில் நன்றாக பார்க்க முடிந்தது. தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் உரசல் போக்கில் தான் உள்ளன. மேலும் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவின் டெல்லி கூட்டணியான காங்கிரஸை தன்வசப்படுத்த நினைத்தார்.

இதனால் ராகுல் காந்திக்கு மறைமுக அழைப்பு சென்றதாகவும்  இவர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதுவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 20௦9 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டது. அச்சமயத்தில் அவருடன் விஜய் துணை நின்றார். இதை வைத்து அவர் காங்கிரஸ் கட்சி என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது இயக்கம் குறித்து தான் பேசினோம் என கூறினார். ஆனால் இவர்களுக்குள் நல்ல பரஸ்பர உறவு உள்ளது என்பது அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் தொடர்ச்சி தற்போது வரை உள்ளது. மேலும் அதனை நிரூபிக்கும் விதத்தில், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து ஊர்வலம் சென்ற ராகுல் காந்தியை கைது செய்தது குறித்து தற்போது விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்க்கட்சி என திமுக வை கூறும் விஜய், அதன் கூட்டணியிலிருக்கும் காங்கிரசுடன் மட்டும் பரஸ்பர நல்லுறவு வைத்திருப்பது குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது. அதன்படி, மதுரையில் நடைபெற போகும் 2 வது மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது ரீதியாக அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பனையூர் வட்டாரம் பேசி வருகின்றது. ஆனால் கட்சி ரீதியாக தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வின் கொங்கு கோட்டையை உடைக்க திமுக போடும் சூழ்ச்சி!! முக்கிய புள்ளியால் EPS க்கு வரும் அட்டாக்!!!

0

ADMK DMK: அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருக்கும் பட்சத்தில் அதில் பெரும் புள்ளியாக பார்க்கப்படுவது மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை இருக்கும் மூத்த நிர்வாகியும் இவர்தான். சமீபத்தில் இவருக்கும் எடப்பாடிக்கும் உரசல் போக்கு இருக்கவே மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். அச்சமயத்தில் இவருக்கு ஆதரவாக பலர் நின்றனர்.

மேலும் மாற்றுக் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது. அதன்படி அதிமுகவை விட்டு வெளியேறி எங்களது கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள் என்றும் கூறியது. ஆனால் செங்கோட்டையன் பாஜகவை வைத்து அதிமுகவில் காய் நகர்த்தலாம் என திட்டமிட்டருந்தார்.

அதற்கு முன்பாகவே இவர்களின் கூட்டணி உறுதியாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனால் இவரது எண்ணம் பழிக்காமல் போனது. இதனை தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் தற்சமயம் திமுகவில் இணைந்துள்ளனர். இது அதிமுகவிற்கு பெரும் இழப்பீடு தான்.

இதேபோல செங்கோட்டையன் திமுக பக்கம் இணைய போவதாகவும் மேற்கொண்டு அவரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோபிசெட்டிபாளையத்தில் இவரது அத்தியாயம் என்பது யாரும் நிரப்ப முடியாத ஒன்று. இப்படிப்பட்ட இவரை திமுக தன் வசப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை கவர எண்ணுகிறது.

ஏனென்றால் கிட்டத்தட்ட ஒன்பது முறைக்கும் மேல் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதனை உடைக்கவே தற்போது திமுக திட்டமிட்டுள்ளது. இவரும் உட்கட்சி மோதல் போக்கால் மாற்று கட்சிக்கு செல்லலாம் என்ற சிந்தனையில் உள்ளதாக கொங்கு மண்டலங்கள் தெரிவிக்கின்றனர்.