வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 3

சுக்குநூறாகும் அதிமுக.. அட்வைஸ் கொடுத்த செங்கோட்டையன்!! பாஜக வலையில் சிக்கும் எடப்பாடி!!

0

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் நான்கு முனைகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை தலைமைக்காக ஓபிஎஸ் சசிகலா வெளியேறிய நிலையில் அச்சமயம் இரண்டு அணிகளானது. மேலும் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் வைத்துள்ளார். இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி மறுநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் சூடு குறைவதற்குள் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் மற்றும் மத்திய மத்திரியை சந்தித்துள்ளார்.

இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை பாஜக நேரில் பார்க்க அனுமதி வழங்காத போது இவரை மட்டும் பார்க்க காரணம் என்ன என்று குழப்ப நிலையிலேயே உள்ளனர். பாஜக தங்கள் கீழ் அதிமுக-வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் மாஸ்டர் பிளான். அதனால் தான் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். ஆனால் இதற்குள் ஏதேனும் உள் சதி ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இன்று செங்கோட்டையன் கெடு வைத்த கடைசி நாள். இவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் எழுத்துக்களை நினைவூட்டுகிறேன், எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காத்த இந்த கட்சியை 100 ஆண்டு காலத்துக்கு ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். என் கருத்தை நான் தெரிவித்ததன் பெயரில் பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிமுக பிளவுபட்டு இருப்பதால் அதன் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

பாஜக தந்த ஐடியா.. சைலன்டான செங்கோட்டையன்!! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!!

0

A.D.M.K: அரசியல் களத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யபட்டதே ஆகும். அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் தலைமை எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார்.

10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் என்னைப்போன்ற ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அவர் கெடு விதித்த அடுத்த நாளே தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கூறி, இ.பி.எஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று செங்கோட்டையன் அவரின் இறுதி முடிவை கூறுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் இது வரை மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சிலர் அவர் மௌனம் காப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜ.க மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான அறிகுறியாகும் என்றும் சொல்கின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் மூலம் அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய்யின் கூட்டம் கண்டு பதறிய ஸ்டாலின்.. தி.முக போடும் அரசியல் கணக்கு!!

0

T.V.K D.M.K: கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே அதிகளவு தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் கவர்ந்த விஜய், வெற்றி பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாநாடுகளையும் , தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத கூட்டம் விஜய்யின் பரப்புரைக்கு கூடியது.

தமிழக வெற்றிக் கழகம் முன்னேறி வருவது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் மிக பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க திமுக பல்வேறு உத்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது. முதலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் பிரச்சாரம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவருடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

அடுத்து கரூரில் முத்தமிழ் விழாவும் கொண்டாட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக முதலில் மக்களிடம் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் விதமாக “உங்களுடன் ஸ்டாலின்” பிரசாரத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளனர். இதன் மூலம் மக்களின் வீட்டு வாசலில் சென்று நேரடியாக அரசு திட்டங்களை அறிமுகம் செய்தல், குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் முகாம்கள் போன்ற முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

அடுத்தாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களை முன்னிலைப் படுத்துவது, மாதந்தோறும் உதவித்தொகை போன்றவற்றை தனது ஆயுதங்களாக பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், திராவிட மாடல் 2.0 என்ற பெயரில் அடுத்தடுத்த வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, விலைவாசி குறைப்பு, சுகாதார வசதி, விவசாய நலத்திட்டங்கள் போன்ற தளங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தவெக பிரச்சாரத்திற்க்கு அனுமதி தராமல் தொடர்ந்து மறுத்து வந்தது. இதற்கு பதிலடி கொடுத்த விஜய் தவெக-வின் வளர்ச்சியை தடுக்க ஆளுங்கட்சி இது போன்ற சூழ்ச்சியை செய்து வருகின்றது. யாராலும் எங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறி இருந்தார். எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத கட்டுப்பாடுகளும், அனுமதி மறுப்பும் புதிதாக உதயமாகி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக விதிக்கும் கட்டுபாடுகளும், தேர்தல் பிரச்சாரங்களும் விஜய்யை மையமாக வைத்தே இயங்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. தவெக-வின் எழுச்சியை கட்டுபடுத்தவும், வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

தொடரும் அ.தி.மு.க பிரிவினை.. தி.மு.க-வில் இணைந்த முக்கிய புள்ளி!

0

ADMK DMK: அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், அனைத்து முன்னணி கட்சிகளிலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது செயலிழந்து உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்களின் நீக்கமே என்று அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களின் பிரிவினையால் பலவீனமடைந்த அதிமுக, இப்போது மேலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிமுக-வில் இருந்து 5000 ஆதரவாளர்களுடன் ஒரு முக்கிய புள்ளி திமுக-வில் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு, பெரிய அதிர்ச்சியாக உள்ளதோடு, தமிழ்நாட்டு அரசியலிலும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. திமுக-வுக்கு இது ஒரு பெரிய பலமாகும். ஏற்கனவே கூட்டணியில் பலமாக இருக்கும் திமுக, மக்கள் மத்தியிலும் வலுவான கட்சியாக மாற வாய்ப்பு உள்ளது.

ஓ.பி.எஸ்-இன் ஆதரவாளர்கள் 100 பேர் தற்போது இ.பி.எஸ் தலைமையில் இணைந்தாலும், அதனை விட பலமடங்கு ஆதரவாளர்கள் அதிமுக-வில் இருந்து மாறி திமுக-வில் இணைவது இ.பி.எஸ்-க்கு மிக பெரிய சவாலாக அமையும். இதனால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் தலை தூக்கும் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் தலைமைக்கு நெருங்கும் ஆபத்து!!

0

ADMK: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. குறிப்பாக இ.பி.ஸ் பதவி ஏற்ற பிறகு சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனை ஒரு வாரத்திற்கு முன் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி மேலும் அதிர்ச்சியை கூட்டினார்.

ஆனால் பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது புதிய திருப்பமாக ஒ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ.பி.எஸ் தலைமையில் இணைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் , செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பிலிருந்தவரை தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

இதனால்தான் ஓ.பி.எஸ் தலைமைக்கு மாறினோம். தற்போது அதிமுக பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கப்பட்டபின் அதிமுக-வில் ஏற்பட்ட மாற்றம் ஓ.பி.எஸ் அணியினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது.

இது இ.பி.எஸ் தலைமையிலான வலிமையை மீண்டும் கூட்டியுள்ளதாக அதிமுக-வினர் கூறுகின்றனர். இந்த சேர்க்கை அதிமுக-வில் பல மாதங்களாக இருந்த வந்த உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய சூறாவளி.. திணறும் அ.தி.மு.க _ தி.மு.க! குஷியில் த.வெ.க

0

T.V.K: தமிழக அரசியலில் தற்போது புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
திமுக -அதிமுக என்ற மிகப்பெரும் திராவிட கட்சிகள் நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது வலுவான சக்தியாக நடிகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே அதிமுக 5 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அவர்கள் தவெக-வுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக டி.டி.வி தினகரன், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் , ஆகியோரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்பொழுது அந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.டி.வி தினகரனிடம் இது குறித்து கேட்டபோது கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை ஆனால் அதற்கான ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கூறி இருந்தார். இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை எனில், ஒத்த கருத்துள்ள அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அதனால் இவர்கள் மூவரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் அது, ஆளும் கட்சியான திமுக-விற்கும், எதிர்கட்சியான அதிமுக-விற்கும் சவாலாக இருக்கும் எனவும், அதேசமயம் தவெக-விற்கு சாதகமாகவும் அமையும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த கூட்டணி வரவிருக்கும் தேர்தலில், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர்.. த.வெ.க-வை குறிவைத்த ஸ்டாலின் !

0

TVK DMK: நடிகர் விஜய் அரசியலில் குதித்ததிலிருந்தே களத்திற்கு வராமல், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறி வந்தார். இதனால் அவர் work from home என்ற விமர்சனத்துக்கும் ஆளாக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களை சந்திக்க மாநாட்டையும், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

தவெக சார்பில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளையும், திருச்சியில் இன்று காலை நடைபெற்ற பிரச்சாரத்தையும் குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “கொள்கையில்லாத கூட்டம் என்றும், புதிய எதிரிகள்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் முதலமைச்சரை “அங்கிள்” என்றும், தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் நேரடியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் மறைமுகமாக பேசி இருப்பது அவருக்கு விஜய்யின் மேல் இருக்கும் பயத்தை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. கரூரில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் மற்றக் கூட்டத்தை போல் இல்லாமல், நம் கூட்டம் முடிந்து நாம் திரும்பும் போது கொள்கை பட்டாளமாக தான் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று திருச்சியில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் நிறைய அத்துமீறல் நடந்ததை சுட்டிக்காட்டும் விதமாக இது உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விஜய் ஸ்டாலின்-யை கடுமையான முறையில் விமர்சித்த போதும் கூட அவர் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாதது, தவெக-வின் மேல் இருக்கும் பயத்தை கட்டுவதாக பலரும் கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் மறைமுக பேச்சு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

H3N2 எச்சரிக்கை: சாதாரண காய்ச்சலைவிட ஆபத்தானது – அறிகுறிகள் & பாதுகாப்பு வழிகள்

0

டெல்லி: கடந்த வாரத்தில் டெல்லியில் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மருத்துவர்கள் கூறுவதுபடி, தற்போது பதிவாகும் நோய்களில் சுமார் 90% இன்ஃப்ளூயன்சா தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் பங்காஜ் சிங் கூறியதாவது:

“H3N2 (இன்ஃப்ளூயன்சா A இன் துணை வகை) சம்பவங்களை சமாளிக்க டெல்லி மருத்துவமனைகள் முழுமையாக தயாராக உள்ளன.”

H3N2 என்றால் என்ன?

  • இது இன்ஃப்ளூயன்சா A வைரஸின் துணை வகை. உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய பருவகால காய்ச்சல்களுக்கு இதையே காரணமாகக் குறிப்பிடுகிறது.

  • பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல், பேசுதல் ஆகியவற்றின் மூலம் வெளியேறும் சுவாச துளிகள் வழியாக மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

  • மேலும், கதவுக் கைத்தூண் போன்ற மேற்பரப்புகளில் வைரஸ் ஒட்டியிருந்தாலும் அது தொடுவோருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

H3N2 வைரஸ் தாக்கம் ஏற்பட்ட 1–4 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். சில சமயங்களில் நிமோனியா போன்ற சிக்கல்களாகவும் மாறக்கூடும்.

முக்கிய அறிகுறிகள்:

  • திடீர் அதிக காய்ச்சல்

  • தொடர்ச்சியான இருமல், தொண்டை வலி

  • மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு

  • உடல் வலி, தசை வலி

  • தலைவலி மற்றும் பல நாட்கள் நீடிக்கும் சோர்வு

5 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், குளிர், தொண்டை வலி நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சர் கங்காராம் மருத்துவமனை மருத்துவர் அம்புஜ் கார்க் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மருத்துவர் கார்க் பரிந்துரைகள்:

  • பொது இடங்களில் முகக்கவசம் அணியவும்

  • சத்தான உணவு, சூடான தண்ணீர், வெந்நீர் பால் பருகவும்

  • தும்மும், இருமும் போது வாய், மூக்கு மூடிக்கொள்ளவும்

  • அடிக்கடி கைகள் சோப்பு, நீர் கொண்டு கழுவவும்

டெல்லியில் நிலைமை

  • H3N2 காய்ச்சலுக்காக மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பங்காஜ் சிங் உறுதியளித்துள்ளார்.

  • மருத்துவமனைகள் முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

H3N2 வைரஸ், சாதாரண பருவகால காய்ச்சலைவிட நீண்ட நாட்கள் நீடிக்கும். உடனடியாக கண்டறிந்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் பெரும் ஆபத்து ஏற்படாது.

திணறும் திமுக!! அரசியல் களத்திலும் ஹீரோவாகும் விஜய்.. மவுசு குறையும் உதயநிதி!!

0

TVK DMK: தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரைப்போல களம், சரத்குமார் என மற்ற நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்த போது கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் விஜய்க்கு அலாவதியான வருகையை தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்குள் நுழைவது தான் இதற்கு முக்கிய காரணம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை கூறிவிட்டார்.

அந்தவகையில் பாஜக-வை காட்டிலும் திமுக இவரை முடக்குவதையே வேலையாக வைத்துள்ளது. இதனால் அவர் பொதுவெளியில் மக்களை சந்தித்தாலும் அதிக நேரம் ஒதுக்காதது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறது. இவையனைத்தும் தவெக கட்சி மீது திமுக வுக்கு உள்ள அச்சத்தை பார்க்க முடிகிறது. நாளடைவில் துணை முதல்வராக உள்ள உதயநிதிக்கான மவுசும் குறைந்து வருகிறது. விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு இவருக்கு இல்லை. இதுரீதியான பேச்சு அறிவாலையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் தனது பிரச்சார பரப்புரையை இன்று முதல் திருச்சி மரக்கடையில் தொடங்கியுள்ளார். விஜய்க்கு இணையாக தனது மகனை ஈடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே உதயநிதி தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என்பதை விட விஜய்க்கும் உதயநிதிக்கும் தீவீரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதியை காட்டிலும் விஜய் ஸ்கோர் செய்தால் திமுக-விற்கே அது பெரும் இழப்பீடை கொடுக்கும்.

கேள்விக்குறியாகும் எடப்பாடி பதவி.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா!!

0

ADMK: அதிமுக-வில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதற்கு காரணம் இ.பி.எஸ்-யின் தலைமையும், கட்சியின் மூத்த அதிகரிகளை அவர் ஒதுக்கி வைத்ததுமே என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளை மறுத்த இ.பி.எஸ் அவரை பதவியிலிருந்து நீக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதை எதிர் கட்சிகளும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவரான சி.வி. சண்முகம் அவர்களும் பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் ஒருமைப்பாடு அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது இ.பி.எஸ்-க்கு புதிய அழுத்தமாக உருவாகியுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுக-வில் சேர்வதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. “சசிகலா-விற்கு இடமில்லை” என்று இ.பி.எஸ் பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சசிகலா மீண்டும் இணைந்தால் அதனால் கட்சி பலப்படும் என்று சிலர் கூற, மற்றொரு புறம் அது இ.பி.எஸ்-யின் தலைமையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றுமையை நிலை நிறுத்துவாரா? இல்லை வெளியேறிய தலைவர்களை மீண்டும் இணைக்க கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.