பூண்டு தோல்களை இனி குப்பையில் போடாதீங்க! இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன!
முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!
உதடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ சர்க்கரையுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க!
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க!
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!
காங்கிரசின் கோட்டை! ஒதுங்கி கொண்ட சோனியா! எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவரா?!
கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் 3 முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
ரே பரேலி தொகுதியில் வழக்கமாக போட்டியிடும் சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.
பெரும்பாலும் பிரியங்கா காந்தி இந்த முறை ரே பரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்த நிலையில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்புக்கு பாஜகவின் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பாஜகவினர் எதிர்பார்த்தது போலவே தினேஷ் சிங் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!
உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் உச்சபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதம் முதலே தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு விட மிக மோசமான ஒரு வெப்ப அலை ஏப்ரல் மாதமே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வீசி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலையை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த நிலை மேலும் ஐந்து நாட்களுக்கு மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
melum, மழைக்காக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம், தற்போது வெப்ப அலைக்காகவும் மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு மே மாதத்தில் தமிழகத்தில் வெப்ப அளவு எந்த நிலையில் இருக்கும்? மேலும் அதிகரிக்குமா? என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
அவரின் அந்த அறிவிப்பில், எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இன்று நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாவதற்கான சாத்தியம் மிக குறைவு தான். முன்கூட்டியே சென்னையில் பலத்த கடல் காற்று வீச வாய்ப்புள்ளது. காற்றில் வெப்பநிலை அதிகமாக உணர முடியும்.
தமிழகத்தின் உள்புற பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு மாவட்ட பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது அதிகாரப்போர்வை வானிலை அறிவிப்பு கிடையாது. வானிலை குறித்த அதிகாரப்பூர் செய்திகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திகளை காணவும்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் – தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் விவரங்களை, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
வடகொரிய நாடு இந்த உலகத்தில் இருந்து தனித்து செயல்படும் ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்நாட்டின் சட்ட விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக மக்களை அதிர்ச்சில் தான் ஆழ்த்தியுள்ளன.
அப்படியாக கிம் ஜாங் உன்னின் ‘களிப் படை’ (பிளஷர் ஸ்குவாட்) என்று சொல்லப்படும் அந்தரங்க மாளிகையிலிருந்து தப்பி வந்த பெண் யோன்மி பார்க், மிர்ரர் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் அந்த பேட்டியில், அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி வகுப்பாறைகளையும் பார்வையிடுவார்கள். அப்படி அவர்கள் கண்ணில் படும் அழகான பெண்களின் குடும்பப் பின்னணியையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டு தேர்வு செய்வார்கள்.
குறிப்பாக வடகொரியா நாட்டிலிருந்து தப்பிப்போடிய குடும்பத்தின் உறுப்பினர்களாகவோ, தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உறவினர்கள் உள்ள குடும்பங்களின் பெண்களை அவர்கள் தேர்வு செய்வதில்லை.
இப்படியாக அந்த அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் பெண்களின் பணி என்பது, வட கொரிய அதிபரை அனைத்து வகை அனைத்து வகையிலும் மகிழ்விப்பது தான் என்ற அதிர்ச்சி செய்தியை யோன்மி பார்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்டுதோறும் சுமார் 25 அழகான பெண்களை இதற்காகவே தேர்வு செய்கிறார்கள். பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களை மசாஜ் அளிப்பதற்கு, ஆடிப்பாடி மகிழ்விப்பதற்கு, பாலியல் செயல்களுக்கு என்று தனியாக குழுவாக பிரிக்கின்றனர்.
மேலும் அதிபருக்கு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் இந்த பெண்கள் மகிழ்விக்க வேண்டும் என்று யோன்மி பார்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!
சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த
இரு தரப்பினரையும் அழைத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டத்தை தணிக்கவும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேக்கரி கடை கொளுத்தப்பட்டது சம்பந்தமாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இதற்கிடையே வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த திருவிழாவின் ஒரு நிகழ்வாக காந்தாரி வேடம் அணிந்தவர் துடைப்பம், முறத்தால் பக்தர்களை துரத்தி துரத்தி அடித்த சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது.
#BigBreaking | அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!
இணையவழி சூதாட்டங்கள் (ஆன்லைன் ரம்மி) குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!
இதுகுறித்த தமிழக அரசின் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.
அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000/- வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.
அல்லது இணையவழி சூதாட்டங்கள் வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது. அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு/நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்/சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள்/ பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் / விளம்பர தயாரிப்பாளர்கள் / சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம்/ இணையதளசெயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இணையவழி சூதாட்டம் / பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com” என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.