வெள்ளிக்கிழமை, மே 3, 2024
Home Blog Page 2

பூண்டு தோல்களை இனி குப்பையில் போடாதீங்க! இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன! 

0
இதிலிருக்கும் நன்மை தெரிந்தால் பூண்டு தோலை இனி குப்பையில் போட மாட்டீர்கள்!!
பூண்டு தோல்களை நாம் எல்லாரும் தற்பொழுது வரை குப்பையில் தான் போட்டு வருகிறோம். இந்த பதிவை படித்த பின்னால் யாரும் பூண்டு தோல்களை குப்பையில் போட மாட்டீர்கள். ஆம் பூண்டு தோல் நமக்கு பலவித நன்மைகளை தருகின்றது.
பூண்டு எப்படி நமக்கு வாயுத்த தொல்லை முதல் சருமப் பிரச்சனை, உடலை குறைப்பது வரை பயன்படுகின்றதோ அதே போல பூண்டை உரித்துவிட்டு தூக்கி எரியப்படும் பூண்டு தோல்களிலும் பல சத்துக்களும் பல நன்மைகளும் அடங்கியுள்ளது.
பூண்டு தோல்களில் ஃபீனைல்ப்ரோபனாய்டு ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இவை அனைத்தும் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. அந்த நன்மைகள் என்னவென்று தற்பொழுது பார்க்கலாம்.
பூண்டு தோல்களில் உள்ள நன்மைகள்:
* பூண்டு தோல்களில் சருமத்திற்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. பூண்டு தோல்களை வைத்து டானிக் செய்து சருமத்தில் தேய்த்தால் சருமப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கும். முகம் அரிப்பு, முகம் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு தோலை பயன்படுத்தலாம்.
* பூண்டு தோலை உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. அதனால் பூண்டு தோலை ரசம், சூப் போன்று வைத்து குடிக்கலாம்.
* பூண்டு தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர். இந்த தண்ணீரை வடிகட்டி இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்தால் நன்றாக  தூக்கம் வரும்.
* பூண்டு தோலை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவி செய்யும்.
* தசை பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு தோலில் டீ வைத்து குடிக்கலாம். அவ்வாறு பூண்டு தோலில் டீ வைத்து குடிக்கும் பொழுது தசைப்பிடிப்பு நீங்கும்.
* பூண்டு தோல் இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துகின்றது.
* பூண்டு தோல்களை இருதய நோயாளிகள் டீ வைத்தோ அல்லது சூப் வைத்தோ அல்லது சுடுதண்ணீரில் வைத்து குடித்தால் இருதயம் வலிமை பெறும்.
* பூண்டு தோலில் டீ அல்லது சூப் செய்து குடிக்கலாம். அவ்வாறு குடித்து வரும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க! 

0
முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!
நம்முடைய முகத்தை இயற்கையாக எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அழகாக பெலிவாக மாற்றுவதற்கு திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திராட்சை பழங்களை நாம் சாப்பிட்டாலே சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். திராட்சையில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் தான் சருமத்திற்கு பல நன்மைகளை தாராளமாக தருகின்றது. திராட்சை நம்முடைய சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியச் சத்துக்கள் திராட்சையில் இருக்கின்றது. இந்த திராட்சையை நம்முடைய முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* திராட்சை
* தயிர்
* எலுமிச்சை
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் திராட்சையை கூழ் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள திராட்சை கூழில் ஒரு தேக்கரண்டி அளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக கலந்து கொண்டு இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை நம்முடைய முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து இதை கழுவ வேண்டும். இவ்வாறு இதை வாரம் 2 முதல் 3 முறை செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும்.

உதடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ சர்க்கரையுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க!

0
உதடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ சர்க்கரையுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க!
நம்முடைய உதடுகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க சர்க்கரையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்கள் அனைவரும் சருமத்திற்கும் சரி உதடுகளுக்கும் சரி. கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்கள், லிப்ஸ்டிக் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இதன் பின்விளைவு பயன்படுத்தும் பொழுது யாருக்கும் தெரிவது இல்லை. நாட்கள் செல்ல செல்ல இதனுடைய பாதிப்புகள் இருக்கும்.
கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அதே போல உதடுகளுக்கு லிப்ஸ்டிக் அதிகமாக பயன்படுத்தும் பொழுது உதடுகளின் மேல் உள்ள தோல் உறியத் தொடங்கும். இதை தடுக்க தற்பொழுது சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை
* தேன்
* எலுமிச்சை
செய்முறை:
ஒரு சிறிய பௌல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன் சிறிதளவும் எலுமிச்சை சாறு சிறிதளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை மணல் போல ஆகும் வரை கலந்தால் போதும். சர்க்கரை வந்து மணல் போல ஆன பின்பு சர்க்கரையை எடுத்து உதடுகளில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலது பக்கமாகவும் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த மசாஜ்ஜை இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் முடிந்த பின்னர் உதடுகளை தண்ணீரால் கழுவிக் கொள்ளலாம். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் உதடுகள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க! 

0
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க!
பொதுவாக அனைவருக்கும் உடலில் இரத்தம் அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.1ல் இருந்து 15.1 ஆகவும் ஆண்களுக்கு 13.8ல் இருந்து 17.2 ஆகவும் இரத்தத்தின் அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு கீழ் சென்றால் இரத்த சோகை நோய் போல பலவிதமான நாய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் நம்முடைய உடலில் இரத்தத்தின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க தேவையான பழங்கள் மற்றும் அதற்கு தகுந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதில் ஒன்று பேரீச்சம்பழம். பேரீச்சம்பழத்தில் உடலுக்குத் தேவையான பலவிதமான நன்மைகள் இருக்கின்றது. இந்த பேரீச்சம்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டாலே உடலில் பாதி பிரச்சனைகள் குணமாகும். ஆனால் ஒரு சிலருக்கு பேரீச்சம்பழம் பிடிக்காது. அவர்கள் அனைவரும் பேரீச்சம்பழத்தில் மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கலாம். இதன் மூலமும் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். தற்பொழுது பேரீச்சம்பழ மில்க் ஷேக் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பேரீச்சம் பழம் – 5
* பால்(காய்ச்சியது) – 1 பெரிய டம்ளர் அளவு
* சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேவையான அளவு பாலை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 5 பேரீச்சம் பழத்தை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள பாலில் கால் டம்ளர் அளவு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு மை போல அரைத்து மீதம் இருக்கும் பாலையும் மிக்சி ஜாரில் சேர்த்து 30 நொடிகள் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம். இதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! 

0
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!
வெயில் காலம் வந்தாலே அனைவரும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தான் தேடிச் செல்கின்றோம். அதில் நன்மை இருக்கின்றதா இல்லையா என்பது கூட. தெரியாமல் வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து அதிக குளிர்ச்சி உடைய பொருட்களை நாம் சாப்பிடுகிறோம். குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கின்றோம்.
இந்த குளிர்ச்சியான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும் பொழுதும் நம் உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றது. இது நமக்கு நாளடைவில் தான் தெரியும். அவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதிக குளிர்ச்சி தரும் பானங்கள் மற்றும் தண்ணீரை குடிக்காமல் நம்முடைய உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கக் கூடிய பழங்களை வாங்கி சாப்பிடலாம்.
அந்த வகையில் நமக்கு தர்பூசணி ஏற்றது. தர்பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து இருக்கின்றது. இந்த தர்பூசணி பழங்களை நாம் சாப்பிடும் பொழுதும் ஜூசாக குடிக்கும் பொழுதும் நம்முடைய உடலுக்குள் நீர்ச்சத்து அதிகம் ஆகின்றது. இதனால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதுடன் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறுகின்றது. இந்த தர்பூசணி பழத்தை வைத்து சத்துக்கள் மிகுந்த ஜூஸ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தர்பூசணி பழம்
* புதினா இலைகள்
* மிளகுத்தூள்
* எலுமிச்சை
* சர்க்கரை
* ஐஸ் கியூப்கள்
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் தர்பூசணி பழத்தை விதை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஐந்து புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கால் ஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக இதில் இரண்டு ஐஸ் கியூப்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதோ தர்பூசணி ஜூஸ் ரெடி. இதை வடிகட்டி விட்டு தேவைப்பட்டால் இதனுடன் இன்னும் இரண்டு ஐஸ் கியூப்கள் சேர்த்து குடிக்கலாம். இதை குடிப்பதால் வெயிலுக்கு இதமாக இருக்கும். மேலும் உடல் புத்துணர்ச்சி பெறும்.

காங்கிரசின் கோட்டை! ஒதுங்கி கொண்ட சோனியா! எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவரா?!

கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் 3 முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.

ரே பரேலி தொகுதியில் வழக்கமாக போட்டியிடும் சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.

பெரும்பாலும் பிரியங்கா காந்தி இந்த முறை ரே பரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்புக்கு பாஜகவின் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பாஜகவினர் எதிர்பார்த்தது போலவே தினேஷ் சிங் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!

உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் உச்சபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதம் முதலே தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு விட மிக மோசமான ஒரு வெப்ப அலை ஏப்ரல் மாதமே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வீசி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலையை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலை மேலும் ஐந்து நாட்களுக்கு மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

melum, மழைக்காக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம், தற்போது வெப்ப அலைக்காகவும் மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

weatherman report may
weatherman report may 2024

இந்நிலையில், நடப்பு மே மாதத்தில் தமிழகத்தில் வெப்ப அளவு எந்த நிலையில் இருக்கும்? மேலும் அதிகரிக்குமா? என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில், எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இன்று நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாவதற்கான சாத்தியம் மிக குறைவு தான். முன்கூட்டியே சென்னையில் பலத்த கடல் காற்று வீச வாய்ப்புள்ளது. காற்றில் வெப்பநிலை அதிகமாக உணர முடியும்.

தமிழகத்தின் உள்புற பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு மாவட்ட பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது அதிகாரப்போர்வை வானிலை அறிவிப்பு கிடையாது. வானிலை குறித்த அதிகாரப்பூர் செய்திகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திகளை காணவும்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் – தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

0

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் விவரங்களை, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

வடகொரிய நாடு இந்த உலகத்தில் இருந்து தனித்து செயல்படும் ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்நாட்டின் சட்ட விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக மக்களை அதிர்ச்சில் தான் ஆழ்த்தியுள்ளன.

அப்படியாக கிம் ஜாங் உன்னின் ‘களிப் படை’ (பிளஷர் ஸ்குவாட்) என்று சொல்லப்படும் அந்தரங்க மாளிகையிலிருந்து தப்பி வந்த பெண் யோன்மி பார்க், மிர்ரர் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் அந்த பேட்டியில், அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி வகுப்பாறைகளையும் பார்வையிடுவார்கள். அப்படி அவர்கள் கண்ணில் படும் அழகான பெண்களின் குடும்பப் பின்னணியையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டு தேர்வு செய்வார்கள்.

yoning parag
yoning parag

குறிப்பாக வடகொரியா நாட்டிலிருந்து தப்பிப்போடிய குடும்பத்தின் உறுப்பினர்களாகவோ, தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உறவினர்கள் உள்ள குடும்பங்களின் பெண்களை அவர்கள் தேர்வு செய்வதில்லை.

இப்படியாக அந்த அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் பெண்களின் பணி என்பது, வட கொரிய அதிபரை அனைத்து வகை அனைத்து வகையிலும் மகிழ்விப்பது தான் என்ற அதிர்ச்சி செய்தியை யோன்மி பார்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் சுமார் 25 அழகான பெண்களை இதற்காகவே தேர்வு செய்கிறார்கள். பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களை மசாஜ் அளிப்பதற்கு, ஆடிப்பாடி மகிழ்விப்பதற்கு, பாலியல் செயல்களுக்கு என்று தனியாக குழுவாக பிரிக்கின்றனர்.

மேலும் அதிபருக்கு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் இந்த பெண்கள் மகிழ்விக்க வேண்டும் என்று யோன்மி பார்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த

இரு தரப்பினரையும் அழைத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டத்தை தணிக்கவும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேக்கரி கடை கொளுத்தப்பட்டது சம்பந்தமாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருவிழாவின் ஒரு நிகழ்வாக காந்தாரி வேடம் அணிந்தவர் துடைப்பம், முறத்தால் பக்தர்களை துரத்தி துரத்தி அடித்த சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது.

#BigBreaking | அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

0

இணையவழி சூதாட்டங்கள் (ஆன்லைன் ரம்மி) குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

இதுகுறித்த தமிழக அரசின் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000/- வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!
Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

அல்லது இணையவழி சூதாட்டங்கள் வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது. அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு/நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்/சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள்/ பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் / விளம்பர தயாரிப்பாளர்கள் / சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம்/ இணையதளசெயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இணையவழி சூதாட்டம் / பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com” என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.