Home Blog Page 300

சர்ச்சை பேச்சு!. பொன்முடி பதவி பறிப்பு!.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்!…

0

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது.

இந்நிலையில், சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து பொன்முடியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவின் டி.என்.ஏ-வே இப்படித்தான். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் எனவும் பலரும் பதிவிட்டார்கள்.

அதோடு, ஸ்டாலின் சகோதரியும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இதை கண்டித்திருந்தார். அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என பதிவிட்டிருந்தார்.

பொன்முடி இப்போது அமைச்சர் மட்டுமில்லை. திமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இந்நிலையில், அந்த பதவியிலிருந்து அவரை மு.க.ஸ்டாலின் தூக்கிவிட்டார். திமுகவை பொறுத்தவரை கட்சியில் யாரையாவது நீக்கினால் பொதுச்செயலாளர் துரை முருகன் கையெழுத்திடுவார். ஆனால், பொன்முடி நீக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலினே கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்முடியிடமிருந்த துணை பொதுச்செயலாளர் பதவி திருச்சி சிவாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமித்ஷாவுக்காக விடிய விடிய காத்திருந்த ஓபிஎஸ்!.. ஹோட்டல்ல ரூம் போட்டது வீணாப் போச்சே!…

0

கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.

ஓபிஎஸ்-ஐ பழனிச்சாமியுன் சேர்த்து பாஜகவுடன் கூட்டணி போட வைக்க வேண்டும் பாஜக மேலிடம் விரும்பியது. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.

எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாத புரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ops

ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். பழனிச்சாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் இருக்கிறார் அமித்ஷா.

எனவே, சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்திக்க முயற்சிகளை எடுத்து வருகிறார் ஓபிஎஸ். அமித்ஷா தங்கியுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அமித்ஷா வருவதற்கு முன்னதாகவே ரூம் புக் செய்து அமித்ஷா அழைப்பார் என காத்திருந்தாராம். ஆனால், நேற்று இரவு முழுவதும் ஓபிஎஸ்-ஐ அமித்ஷா அழைக்கவே இல்லை என்கிறார்கள். எனவே, பிஜேபி தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மூலம் குருமூர்த்தி வீட்டுக்கு அமித்ஷா வரும்போது அவரை சந்திக்க ஓபிஎஸ் முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள். அமித்ஷா மூலம் பழனிச்சாமியிடம் பேசி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பன்னீர் செல்வத்தின் நோக்கம் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து!! ரூ.8,913 கோடி லாபம் ஈட்டிய ரயில்வே!!

0

இந்தியன் ரயில்வே துறை தரப்பில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா துவங்கிய பெண் இந்த கட்டண சலுகை ஆனது ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வே துறை லாபம் ஏற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே துறை மற்றும் மத்திய அரசு தரப்பில் மூத்த குடிமக்கள் ( ஆண்கள் ) மற்றும் திருநங்கைகள் ரயில்களில் பயணிப்பதற்கு 40% கட்டண சலுகையும் மூத்த குடிமக்களான பெண்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு 50% கட்டணச் செலகையும் வழங்கப்பட்ட வந்து நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் வைத்து வந்த பொழுதிலும் மத்திய அரசு மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நடைமுறைப்படுத்த முடியாது என மறுத்துவிட்டது.

இது குறித்த நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு தெரிவித்த பதில் பின்வருமாறு :-

ஏற்கனவே இந்திய ரயில்வே துறையின் தரப்பில் அனைத்து பயணிகளுக்கும் 46% கட்டண சலுகை ஆனது வழங்கப்பட்டு வருவதாகவும் இதனால் தனியாக மூத்த குடிமக்களுக்கு என ரயில் பயண கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறைக்க முடியாது என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாத மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கௌர் என்பவர் இது குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பிய நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதில் 8,913 கொடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாகவும் இதனால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை நடைமுறைப்படுத்த முடியாத என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Canara Bank: அதிரடியாக குறைக்கப்பட்ட FD வட்டி விகிதம்!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

0

கனரா வங்கியானது வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்து இருப்பது கனரா வங்கியின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ரூ.3 கோடிக்கு குறைவான வைப்பு நிதிகளை வைத்திருக்கக் கூடியவர்கள் வட்டி விகிதங்கள் திடீரென 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புதிய விகிதங்கள் ஏப்ரல் 10 2025 முதல் கனரா வங்கி அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்த புதிய விகிதங்கள் படி ,

✓ பொதுமக்களுக்கு வங்கியில் 4% முதல் 7.25% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 4% முதல் 7.40% வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

✓ மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.90% வரை இருந்த வட்டி விகிதங்கள் தற்பொழுது 4% முதல் 7.75% ஆக குறைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இவை மட்டுமில்லாமல் கனரா வங்கி குறிப்பிட்ட நாட்களுக்கான வட்டி விகிதங்களையும் மாற்றி இருக்கிறது. அதன்படி 7 முதல் 45 நாட்களுக்கு முதிர்ச்சியடைந்த வைப்புத் தொகைக்கு 4 சதவிகித வட்டியையும், 46 முதல் 90 நாட்களுக்கு முதிர்வடைந்த வைப்பு தொகைக்கு 5.25 சதவிகித வட்டியும் வழங்குகிறது.

இதேபோன்றுதான் 91 நாட்கள் முதல் 129 நாட்கள், 180 முதல் 269 நாட்கள், 270 நாட்களுக்கு மேல் முதல் ஒரு வருடம் குறைவான கால அளவுள்ள வைப்பினதிகள் என ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு அவற்றினுடைய வட்டி விகிதங்கள் மாறுபட்டு அமைந்துள்ளன. இனி கனரா வங்கியில் வைப்புத் தொகை வைக்க நினைப்பவர்கள் அதற்கான கால அளவுகள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின் FD கணக்குகளை துவங்குவது நன்மை பயக்கும்.

30 மாதத்தில் 25 முறை பிரசவித்த பெண்!! உத்திர பிரதேசத்தில் நடந்த வினோதம்!!

0

உத்திரபிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பிரசிபிக்க கூடிய பெண்களுக்கு 1000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை நிதி உதவி ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெறுவதற்காக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி இதுவரை ரூ.45,000 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முறைகேடு செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள் பின்வருமாறு :-

1 பெண் 30 மாதங்களில் 25 முறைகள் பிரசவத்திருப்பதாகவும் 5 முறைகள் கருவுற்று இருப்பதாகவும் போலியான கணக்குகள் எழுதப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 35 வயது பெண்ணின் உடைய பெயரை தவறாக பயன்படுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 35 வயது பெண்ணினுடைய பெயரை தவறாக பயன்படுத்தி தேசிய சுகாதாரத் துறை திட்டத்தின் கீழ் இதுவரை 45 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடைபெற்ற இருப்பதாக சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறை கேட்டின் அடிப்படையில் இதுவரை சுகாதாரத்துறை அலுவலர்கள் 4 பேர் மற்றும் 1 ஏஜென்ட் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிரசவித்த பெண்களுக்காகவும் கருவுற்ற பெண்களுக்காகவும் அந்தந்த மாநில அரசுகள் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரும் நிலையில் இடையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது மாநில அரசுகளுக்கு கெட்ட பெயர் பெற்று தருவதாகவும் இதனால் ஏழை எளிய பயன்பட வேண்டிய பெண்கள் ஏமாற்றமடைந்த நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகை கடன் விதி: ரூ.2 லட்சம் இல்லை ரூ.4 லட்சம்!! நற்செய்தி சொல்ல போகும் RBI!!

0

தங்க நகை அடமான வைத்திருக்கக் கூடியவர்களுக்கான புதிய விதிகளை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அதற்கான எதிர்ப்புகள் மிகவும் வலுவானதாக மாறி வருகிறது. ஒருபுறம் முழுவதுமாக அசலையும் வட்டியையும் கட்டி தங்களுடைய நகையை மீட்க முடியாத பயனாளிகள் இதற்கான எதிர் குரலை கொடுத்து வருகின்றனர்.

மறுபிறமோ தங்களால் முடிந்த பணம் மற்றும் கந்துவட்டி பெற்றாவது தங்களுடைய நகைகளை நீட்டு சர்வதேச வங்கிகளில் இருந்து கூட்டுறவு வங்கிகளில் பலரும் நகைகளை மாற்றி வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது நகைய அடகு வைத்துள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகத்தான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறது. ஆனால் மக்களிடையே உண்மை அவ்வாறு இல்லை. நகையை மீட்பதற்காக வங்கிகளை விட்டு மீண்டும் கந்து வட்டிக்காரர்களிடம் மக்கள் சென்று கொண்டிருக்க கூடிய அவல நிலையானது தற்பொழுது உருவாகி உள்ளது.

இது குறித்து வங்கிகள் விளக்கம் தெரிவிக்கும் பொழுது, 2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் வைத்துள்ளவர்கள் எப்பொழுதும் போல வருடத்திற்கு ஒருமுறை வட்டி மட்டும் செலுத்தி மறு அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் நகைகளை அடமானம் வைத்தவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக வட்டியும் அசலும் சேர்த்து செலுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்பொழுது 2 லட்சம் ரூபாயாக இருக்கக்கூடிய வரம்பு நிலையை 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் 4 லட்சம் ரூபாயாக உயர்த்தும் பட்சத்தில் பல ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இது குறித்த கூடிய விரைவில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது பரிசீலனை செய்து அதற்கான முடிவுகளை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட இது சூப்பரா இருக்கே!!வேலை செய்யாமல் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம்!!

0

கணவன் மனைவி இணைந்து சேமிப்பின் மூலமாக ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதற்கான சிறந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என அழைக்கப்படக்கூடிய monthly income scheme இது இந்தியா அஞ்சல் துறையின் ஒரு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக விளங்குகிறது.

இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சங்கள் :-

✓ பாதுகாப்பான முதலீடு – மத்திய அரசால் வழிநடத்தப்படக் கூடிய அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடாக இது பார்க்கப்படுகிறது.

✓ இதனுடைய வட்டி விகிதம் 2025 ஆம் ஆண்டில் 7.4% என வருடத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது

✓ எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கில் செலுத்தப்படும்

✓ 5 ஆண்டுகள் கால அளவை கொண்ட இந்த திட்டத்தில் நாம் செலுத்திய முழு தொகையையும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெற முடியும்

✓ இந்த MIS திட்டத்தின் கீழ் தனிநபர் 9 லட்சம் வரையிலும் கூட்டு கணக்கு திறக்கும் பட்சத்தில் 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.

இத்திட்டத்தினுடைய நன்மைகள் :-

✓ நிலையான வருமானம் தேவை என நினைக்கக்கூடிய குடும்பஸ்தர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நபர்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்தது.

✓ முதலீடாக செலுத்தக்கூடிய பணம் முழுவதும் பாதுகாப்பானதாகவும் அதற்கான வட்டியாக நீங்கள் செலுத்தக்கூடிய தொகையின் உடைய பங்கில் இருந்து 7.4% வட்டியும் ஒவ்வொரு மாதமும் சேர்க்கப்படுகிறது

✓ நீங்கள் சேமிக்கக்கூடிய அல்லது முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கோ, அதனால் கிடைக்கக்கூடிய வட்டிக்கோ TDS கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பூசணியில் போடப்பட்ட ஊசி.. யாரோ ஒரு சிலரால் நஷ்டத்தை நோக்கி செல்லும் விவசாயிகள்!!

0

கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது பறிக்கப்படாமல் கொடியிலேயே விட்டு அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோடைகால விற்பனைக்காக ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.

எப்பொழுதுமே தர்பூசணி பழத்திற்கு விதைகள் வாங்கும் பொழுதே கேரள வியாபாரிகள் தங்களுக்கு பழத்தை விற்பனை செய்ய வேண்டும் என சொல்லி அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும் இது கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதலில் 50 ஏக்கர் பயிரிடப்பட்ட தர்பூசணி சாகுபடியானது தற்பொழுது 600 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதாகவும் சொட்டுநீர் பாசனம் மூலமாக தர்பூசணி சாகுபடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்களில் பலன் தரக்கூடிய தர்பூசணி விளைச்சல் தேக்கருக்கு 20 வரை லாபம் அளிக்கக் கூடியதாகவும் சுழற்சி முறையில் இதற்கான அறுவடை நடைபெறும் என்றும் அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இந்த ஆண்டு தர்பூசணியில் ஊசி மூலம் இரசாயனம் மருந்து செலுத்துவதாக பரவிய செய்தியால் தங்களுடைய பழங்களை வாங்க கேரளாவிலிருந்து எந்த வியாபாரியும் வரவில்லை என்றும் அதனால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக கோடை காலம் என்றாலே தமிழகத்தில் விளைவிக்கக் கூடிய தர்பூசணி பழங்கள் தான் கேரள சுற்றுலா தளங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் கேரள வியாபாரிகள் வரவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

இனி பாமகவுக்கு நானே தலைவர்!! ராமதாஸ் அறிவிப்பால் தலையில் முட்டிக் கொள்ளும் தொண்டர்கள்!!

0

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப் பெரிய கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதிமுகவில் தொடங்கி பாஜக என தொடர்ந்து வரக்கூடிய இந்த உட்கட்சி பூசலில் தற்பொழுது பாமகவும் சிக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு உட்கட்சி பூசல்களை சந்தித்திருக்கக்கூடிய பாமகவில் தற்பொழுது பாமகவுக்கு இனி நான் மட்டுமே தலைவர் என ராமதாஸ் அறிவித்திருப்பது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது :-

சாதிவாரி கணக்கெடுப்பு அரசு பள்ளிகளின் மேம்பாடு ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய தகவல்களை பகிர்ந்த ராமதாஸ் இதை தொடர்ந்து 1980ல் வன்னிய சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாற்றி கொண்டே கிராமங்களுக்கு சமூக பணியாற்றி மக்கள் மனதில் தான் இடம் பிடித்ததாகவும் அதனை தொடர்ந்து மக்களுக்காக என்னென்ன வருடங்களில் என்னென்ன விஷயங்களுக்காக தான் முற்பட்டேன் என்பதையும் விளக்கி கூறியிருக்கிறார்.

உரிமை போராட்டங்களில் தான் கைதியாகி பாளையம்கோட்டை சிறைக்கு சென்றது தவிர மற்ற மத்திய சிறைகளிலும் அடைக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு உடல் நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாமக தொண்டர்களால் தான் உயிர் பெற்றேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, தான் என்றுமே சட்டப்பேரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ செல்ல ஆசைப்படவில்லை என்றும் இனியும் இதுபோன்ற ஆசைகள் தனக்கு கிடையாது என்றும் தெரிவித்த அவர் லட்சக்கணக்கான பாட்டாளி மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான் தனக்கு மிகப்பெரிய பதவியாகவும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை பாமக நிறுவனரான தானே எதிர்கொள்ள இருப்பதாகவும் இனி தலைவராக நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அன்புமணியின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் கௌரவ தலைவராக ஜி கே மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாமகவின் உடைய மாமல்லபுரம் மாநாடு மே 11 ஆம் தேதி வெற்றிகரமாக நடக்க பாமகவினர் அனைவரும் இணைந்து நல்லபடியாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

திடீரென சீல் செய்யப்பட்ட கவர் ஒன்றை எடுத்து பிரித்த அருகில் இருக்கக்கூடிய வருடம் இன்றைய தேதி ஏப்ரல் 10 தானே எனக்கேட்டவாறு அந்த கடிதத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டு இனி நானே பாமகவின் தலைவராகவும் செயல்படுவேன் என குறிப்பிட்டது பாமக தொண்டர்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூட்டுறவு துறையில் 3,353 காலி பணியிடங்கள்!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருக்கிறார். இவருடைய அறிவிப்பின்படி கூட்டுறவு துறையில் 3353 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற சட்டசபை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும்மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் இதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டசபை விவாதத்தின் பொழுது அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு :-

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் மொத்தமாக தமிழகத்தில் இது போன்ற காலி பணியிடங்கள் 3,353 இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் 13,266 காலி பணியிடங்கள் கடந்த ஆண்டு கணக்கிடப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் 9,913 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவதாகவும் மீதமுள்ள காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நிறுவப்படுவதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.