Home Blog Page 308

டோக்கன் கொடுத்தால் வாடகை காதலி!.. சென்னை தி.நகர் பாரில் பகீர் சம்பவங்கள்!..

0

சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இரவு நேரங்களில் செயல்படும் பார்களில் பாடல்களை ஓடவிட்டு மது போதையில் இளம்பெண்களும், இளைஞர்களும் ஜோடியாக நடனமாடும் கலாச்சாரம் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. இதில், பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல் காவல்துறையினருக்கு கட்டிங் கொடுத்துவிட்டே நடப்பதாக சொல்கிறார்கள். சில சமயம் திடீரென பாரில் போலீசார் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இன்னமும் பல இடங்களில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற பார்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஆண்களுக்கு காதலி வேண்டும். ஏனெனில், அங்கு போய் நம்மோடு ஆடுவதற்கு ஒரு பெண் வேண்டும். ஆனால், எல்லோருக்கும் காதலிகள் இருப்பதில்லை. இந்த கவலையை போக்கவே இப்போது வாடகை காதலிகள் வந்துவிட்டர்கள். சென்னை தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பெணின்சுலா என்கிற பாரில் வாடகை காதலிகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

dance

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே போனபின் உங்களுக்கு வாடகை காதலி வேண்டுமெனில் பணம் செலுத்தி டோக்கன் வாங்க வேண்டும். அந்த டோக்கனை கொடுத்தால் ஒரு பெண் உங்களோடு நடனமாட ஒருவர். ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடமாடுவார். மேலும், நடனமாட வேண்டுமெனில் மீண்டும் நீங்கள் டோக்கன் வாங்க வேண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதோடு, அந்த பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் அங்கே உள்ள அறைகளில் பலான விஷயங்களும் நடக்கிறது என பகீர் கிளப்புகிறார்கள்.

வறுமையில் இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து இந்த தொழிலில் தள்ளுகிறார்களாம். இரவில் இருட்டில் தங்கள் வறுமையை இப்படி சில இளம் பெண்கள் போக்கி கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் லைசென்ஸ் வாங்கி இதுபோன்ற வேலைகளை அந்த பார் நிர்வாகம் செய்கிறது என்கிறார்கள். இதை போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. இதுபற்றி பார் நிர்வாகத்திடம் கேட்டால் ‘அப்படி இங்கு நடப்பது இல்லை. காதலிகள் மற்றும் பெண் தோழிகளுடன் வருபவர்கள் மட்டுமே நடனமாடுகிறார்கள்’ என சொல்கிறார்கள். போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி மூலம் இது பலருக்கும் தெரியவந்திருக்கிறது.

இந்த செய்தி தொடர்பான வீடியோவை காண கீழே கிளக் செய்யுங்கள்…

https://x.com/polimernews/status/1909796200192348437

அப்பா மறைவுக்கு மனமுடைந்து அழுத தமிழிசை!. கையை பிடித்து ஆறுதல் சொன்ன ஸ்டாலின்!..

0

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன்(93) வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். உடல்நிலை பாதிப்பால் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள யோகா மருத்துவமனையில் அவர் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களின் அவரின் உடல் மோசமடைந்தது. எனவே, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்தான், நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவரின் அப்பா சுதந்திர போட்ட தியாகி. காமராஜரின் சீடர்களில் இவர் முக்கியமானவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். மக்களின் நலனுக்காக 17 முறை தமிழகமெங்கும் நடைபயணம் மேற்கொண்டார். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் இருந்தார்.

1977ம் வருடம் நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நான்கு முறை சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய் மொழி தமிழுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் காமராஜர் விருது பெற்றிருக்கிறர்.

இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று குமரி ஆனந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கதறி அழுத தமிழிசையின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு மரியாதையுடன் குமரி ஆனந்தன் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் ஸ்டார்ட்!… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!…

0

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார்.

இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து வரிகள் விதிக்கும் வேலையில் இறங்கினார் டிரம்ப். சில நாட்களுக்கு முன்பு பேசிய டிரம்ப் இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிகிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியிருக்கிறது.

உடையும் திமுகவின் கூட்டணி கட்சிகள்!! எதிர்க்கட்சியாய் வருவதே கஷ்டம் தான்!!

0

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் துவங்கவும் திமுகவின் ஆட்சி காலம் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்குப் பின் எதிர்க்கட்சியாக அமைவதற்கு கூட திமுக அரசு வெற்றி பெறாத என எதிர்க்கட்சித் தலைவர் ஆன பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய பிரிவை சந்திக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சட்டசபை முடித்த வெளிவந்த பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கும் எதிர் கட்சியினருக்கும் தான் பேசுவதற்கான பிரதான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆனால் இங்கு ஆளும் கட்சிக்கு மட்டுமே பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் எதிர்கட்சியினரை மதிப்பதில்லை மற்றும் பேசுவதற்கான அனுமதி வழங்குவது இல்லை என்றும் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காகத்தான் கருப்பு நிற சட்டை அணிந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் சட்டசபை தலைவர் மு அப்பாவு உள்ளிட்டோரை எதிர்த்து அதிமுக தினார் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுகவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில் இருக்கக்கூடிய மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கிய பின்னர் தான் நேரமில்லாத நேரத்தில் கடைசியாக அதிமுகவினருக்கு பேச வாய்ப்பளிக்கப்படுவதாகவும் ஆனால் அப்பொழுது கூட அதிமுகவினர் சொல்லக்கூடிய கருத்துக்களை சட்டசபை தலைவரும் ஆளும்கட்சியும் ஏற்றுக் கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கிய தமிழக அரசு!! புதிய வீட்டு வசதி திட்டங்கள்!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கான எளிமையான மற்றும் சிறந்த திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த ஒற்றை சாளர அனுமதி முறை தளம் மற்றும் ஓர் அடுக்கிற்கான எளிமையான அனுமதிகளை பெற உதவியாக இருந்தது. தற்பொழுது இதனை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கிறது. அதன்படி, தூண்கள் மற்றும் இரண்டு அடுக்கு தலங்களுக்கான சுய விவரங்கள் சான்றிதழ் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், சுய சான்றிதழ் மற்றும் ஒற்றை சாளர அனுமதி இவை இரண்டும் புதிய வீடுகளை கட்டுவதற்கான அனுமதியை எளிமையாக வாங்க உதவுவதாக அமைந்துள்ளன. இவற்றில் தான் தற்பொழுது இரண்டு தளங்களை அமைப்பதற்கான சுயசான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வீடு கட்டியவர்கள் தங்களுடைய வீடுகளை விரிவாக்கம் செய்ய நினைத்தாலோ அல்லது புதிய வீடுகள் கட்ட நினை ப்பவர் தூண்கள் மற்றும் இரண்டு தளங்களை அமைக்க நினைப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள் கூட தரமான வீடுகளை கட்ட முடியும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது என்னப்பா புதுசா இருக்கு!! கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாததற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்!!

0

கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது.

புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :-

2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் உயிரை கொன்றது. இந்தியாவிலும் பல கோடி உயிர்களை வாங்கிய கொரோனா தொற்று கிராமப்புறங்களில் குறைவாகவே இருந்தது ஆய்வுகளில் வெளிவந்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும் கிராம புறங்களுக்கு என்ன வித்தியாசம் எதனால் கொரோனா தொற்றானது கிராமப்புறங்களில் குறைவாக காணப்பட்டது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

கிராமப்புறங்களில் கழிவறைகள் வீடுகளில் இல்லாமல் இருப்பதே கொரோனா தொற்று பரவலை பெருமளவு குறைந்திருப்பதாகவும் நகர்ப்புறங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே கழிவறைகளை பயன்படுத்தியதால் கொரோனா தொற்று அதிகரித்து உயிரிழக்கும் அதிகரித்து இருப்பது ஆய்வு முடிவில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக வெளியாகி இருக்கிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளில் கழிவு நீர் வெளியேற்றப்படக்கூடிய பைப் , கழிவுநீர் வடி கால் போன்றவற்றில் கொரோனா தொற்று அதிக அளவில் காணப்படுவதற்கான வாய்ப்புகளும் அவை பரவி மற்றவர்களுக்கும் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிராமப்புறங்களில் திறந்தவெளிகளை கழிவறைகளாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் மற்றும் கொரோனா தொற்று உயிரிழப்பு போன்றவை குறைவாக இருந்ததாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!

0

வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களின் குறிப்பிடப்பட்ட சம்பள தொகையாக ஒரு மணி நேரத்திற்கு 17.30 டாலராக இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இதனை உயர்த்தி 17.35 டாலராக ஒரு மணி நேரத்தில் வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது கனடாவில் பணிபுரியக்கூடிய இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக, கனடாவின் வாழ்க்கை சூழல் கடுமையாக மாறி வருவதால் அவற்றை வெளிநாட்டிலிருந்து தங்களுடைய நாட்டில் பணி புரிய வந்திருக்கக்கூடிய இந்தியர்கள் சமாளிக்கும் நோக்கத்தில் இது போன்ற ஒரு முடிவை கனடா அரசு எடுத்து இருப்பதாகவும் வாழ்க்கை செலவுகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இது போன்ற ஒரு சம்பள உயர்வு முடிவானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டோட சிறுநீரை விற்று பிழைக்கலாம்!.. டிரெய்லரில் தமன்னா பேசும் வசனம்!. வச்சி செய்யும் ரசிகர்கள்!…

0

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு அதிகம் நடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் பிரபாஸ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா போட்ட குத்தாட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதன்பின் பாலிவுட்டுக்கு போய் வெப் சீரியஸ்களில் நடிக்க துவங்கினார். அதிலும், படுக்கையறை காட்சிகள் கொண்ட வெப்சீரியஸ்களில் தமன்னா காட்டிய தாராள கவர்ச்சி ரசிகர்களை சூடாக்கியது.

மேலும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றி தமன்னா வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. சில வருடங்களில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம், ஆன்மிகத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக தமன்னா இருக்கிறார். சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவராத்திரி விழாவில் அடிக்கடி கலந்துகொள்வார். இந்நிலையில்தான் ஒடெல்லா 2 என்கிற படத்தில் பெண் சாமியாராக தமன்னா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது. அதில் ‘நாம் நிற்பதற்கு தேவை பூமி மாதா. நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா.. இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டாம். அதன் சிறுநீரை விற்று கூட நீங்கள் வாழலாம்’ என தமன்னா வசனம் பேசியிருக்கிறார்.

இதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமன்னா முழு சங்கியாக மாறிவிட்டார் என பலரும் அவரை ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். விஜய் வர்மா கூட சேர்ந்தா இப்படித்தான் ஆகும் என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

முழுமையாக விடுவிக்கப்படாத மீனவர்கள் மற்றும் படகுகள்!! இலங்கை அதிபர் சந்திப்புக்கு பின் நிகழ்ந்தது என்ன!!

0

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை காத்தல் மற்றும் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை பயணம் மேற்கொண்டார்.

இவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களால் கைப்பற்றப்பட்ட தமிழக விசைப்படகுகள் போன்றவை விடுவிக்கப்படுவதாகவும் கச்சத்தீவு பகுதிகளில் சிக்கிய படகுகள் மட்டும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்படுவதாவும் இலங்கை அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதற்கு முன்பே அறிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு சென்று அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் என அனைத்தும் முடிவடைந்து மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், இதுவரை இலங்கை சார்ந்த தெரிவிக்கப்பட்டது போல மீனவர்கள் மற்றும் படகுகள் முழுமையாக தமிழகத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜ் கூறியிருப்பதாவது :-

அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கடைசியாக எங்களை சந்தித்த பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு சென்ற பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது கட்டாயமாக மீனவர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்பு இலங்கை மீனவர்களால் மற்றும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்காது என நம்பிக்கை அளிப்பதாகவும் ஆனால் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் இலங்கையில் செல்வதற்கு முன் இவர்கள் கூறியது அனைத்தும் வெறும் கண்துடைப்பிற்கே என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எந்த நன்மையும் இவர்கள் யோசிக்கவில்லை என்றும் இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் குறித்து பேசியதாக வெளியான தகவல்கள் கூட வெறும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்டவையே என தெரிவித்துள்ளார்.

சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்!. விமான நிலையத்தில் பரபரப்பு!.. வாட் புரோ!…

0

Seeman: நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருபவர் சீமான். துவகக்த்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பின் திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் நான் தமிழர் கட்சியை துவங்கி யாருனும் கூட்டணி அமைக்காமல் தனியாக போட்டியிட்டு வருகிறார்.

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வெளியானது. மேலும், எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து கலந்துகொண்டு மோடியை பற்றி புகழந்துபேசினார். திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை இணைத்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அண்ணாமலை இருக்கிறார். எனவே, பாஜக – நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னைக்கு வருவதற்காக திருச்சி விமான நிலையம் வந்த சீமானிடம் இருந்து பழங்கள் நறுக்கும் கத்திகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Swiss Knife என சொல்லப்படும் சின்ன கத்திகளை பறிமுதல் செய்ததால் அவர்களுடன் சீமான் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய திருச்சி போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகியிடம் கத்தியை ஒப்படைத்தனர்.