Home Blog Page 307

கணவருடன் ஹீரோயினியாக லதா ரஜினிகாந்த் நடித்த ஒரே மூவி!! ட்ரெண்டாகும் போஸ்டர்ஸ்!!

0

Cinema : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா சூப்பரான பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஃபேன் பாலோவர்ஸ் உலகெங்கும் உள்ளனர். தற்போதைய 74 வயதிலும் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் கூலி திரைப்படமானது இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்த ஷெடுலை நகர்த்தி வருகிறார். இவர் 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரஜினியை பேட்டி எடுப்பதற்காக வந்த லதா மீது காதல் வயப்பட்டு பின்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இப்படி இருக்கையில் ரஜினிக்கு ஜோடியாகவே இவரது மனைவி ஒரு படத்தில் நடித்துள்ளாராம். இதுதான் முதலும் மற்றும் கடைசி படம் என்று கூறுகின்றனர். அக்னி சாட்சி என்ற படமானது 1982 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானது. இதில் அன்றைய டாப் ஹீரோ ஹீரோயினிகளான சிவக்குமார் சரிதா இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக இதில் ரஜினி ஒரு கேமியோ ரோலில் வரவே அவருக்கு ஜோடியாக லதா ஒரு சீனில் மட்டும் நடித்திருப்பாராம். இது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் நடித்த போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சொத்துக்காக ஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு!! அனாதையாக நிற்கப்போகும் குழந்தைகள்!!

0

மும்பையில் இருந்து வந்தது தமிழ் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பார்ப்பதற்கு குஷ்புவின் மறு உருவம் போல் தோற்றமளிப்பதால் இவரை அனைவரும் சின்ன குஷ்பூ என அன்போடு அழைத்தனர். தமிழில் ஒரு சில படங்கள் வெற்றி கொடுத்தவர் என்றாலும் இப்பொழுது திருமணத்திற்கு பின்பு சினிமா துறையை விட்டு விலகி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் நுழைந்து வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிய நிலையில் இயக்குனர் பிரபுதேவா உடன் இணைத்து வைத்து பல விமர்சனங்களை பெற்றதோடு அதன் பின் நடைபெறும் சிம்புவுடன் காதல் என்பது போல பல சர்ச்சைகளும் வெளியாக்கின. இவற்றை அனைத்தையும் முறியடிப்பது போல சமீபத்தில் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த ஓவியராகவும் விளங்கி வருகிறார். அதிக அளவு ஓவியங்களை வரைந்து ஓவிய கண்காட்சிகளில் அவற்றை விற்பனை செய்து அதில் வரக்கூடிய பணத்தை ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி வந்தவர்.

திருமணத்திற்கு முன்னதாகவே கன்னித்தாய் என அழைக்கப்பட்டவர் காரணம் 34 குழந்தைகளை திருமணத்திற்கு முன்பாகவே தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி செலவு உட்பட அனைத்தையும் பார்த்துக் கொண்டவர். சினிமாவில் நடித்த பணத்தை வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தார். இப்பொழுது திருமணம் செய்து கொண்டார் அது மட்டுமல்லாது சினிமாவிலும் இவருக்கான மார்க்கெட் குறைந்துவிட்டது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் தான் தன் தம்பியின் உடைய திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடனாக வழங்கியிருக்கிறார்.

அந்தக் கடனை திரும்பி கேட்கும் பொழுது தான் பிரச்சனை துவங்கியுள்ளது. ஹன்சிகாவின் நாத்தனார் முஸ்கான் நான்சி என்பவர் பணத்தை திருப்பி கேட்டவுடன் ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மற்றும் ஹன்சிகாவின் கணவர் என அனைவரும் இணைந்து தனக்கு வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஹன்சிகா இதனை மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். இது குறித்து சினிமா மூத்த பத்திரிகையாளர் தெரிவிக்கும் பொழுது ஹன்சிகாவும் அவரது தாயாரு மிகவும் சாதுவானவர்கள் என்றும் மென்மையான ஒருவர்களால் இது போன்ற கொடுமைகளை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அனைத்து சொத்துக்களும் ஏழை எளிய குழந்தைகளுக்காக செலவு செய்யப்பட்டு விடுமோ என்ற பயத்தில் ஹன்சிகாவின் நாத்தனார் இது போன்ற ஒரு நாடகமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அமைச்சர்களை விடாது துரத்தும் ED.. வசமாக சிக்கப்போகும் ஸ்டாலினின் நெருங்கிய உறவு!!

0

DMK BJP: பாஜகவானது திமுகவிற்கு எதிராக செயல்பட அமலாக்கத்துறை கொண்டு தாக்கி வருகிறது. அதன்படி ED வலையில் சிக்கிய செந்தில் பாலாஜியையே ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக பாஜக-வானது ஸ்டாலினுடன் பக்கபலமாக இருக்கும் அமைச்சர்களைத்தான் குறிவைத்து தாக்குகிறது. அதன்படி ஸ்டாலினுக்கு அனைத்து வகை செயலாளராக இருக்கும் கேஎன் நேருக்கு அடுத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி வழக்கை போலவே, முதலில் கேஎன் நேருவின் உறவினர்கள் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்குமா என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பின்பு இவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை போலவே இவரையும் கைது செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரம் கூறுகின்றது.

குறிப்பாக பாஜகவின் முக்கிய நோக்கமே திமுகவின் செயல்பாட்டை குறைப்பது தான். அதற்காக எந்த எல்லையை தாண்டவும் தயாராக உள்ளனராம். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியில் இணைப்பதற்காக அண்ணாமலையையே பதவியிலிருந்து நீக்கம் செய்ய துணிந்து விட்டனர். வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை தங்கள் வசம் படுத்தவே இப்படி பல திட்டங்களை போட்டு வருவதாக கூறுகின்றனர். அந்தவகையில் ஈடி கையில் கே என் நேரு சிக்கப்போவது உறுதி என கூறுகின்றனர். இதன் மூலம் அவர்களின் வாக்கு வங்கி சதவீதமானது குறையாக கூடும்.

பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??

0

ADMK BJP:அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை பதவி நீக்கம் செய்யவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை ஓர் பேட்டியில் கட்டாயம் மாநில தலைவர் தேர்தல் உண்டு. அந்த போட்டியில் நான் இல்லை என்று தெள்ளந் தெளிவாகவே கூறிவிட்டார். இருப்பினும் இவரது தொண்டர்கள் விடாது சமூக வலைத்தளம் என தொடங்கி பல இடங்களில் அண்ணாமலை தான் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை டெல்லி மேலிடம் சிறிதும் கண்டு கொள்வதில்லை. மாறாக இவருக்கு பதில் வேறு யாரை அமர்த்தலாம் என்பது குறித்து தான் ஆலோசனை நடந்து வருகிறதாம். அதேபோல எடப்பாடியும் அண்ணாமலையும் ஒரு சேர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கட்டாயம் எடப்பாடி யின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறாராம். இதனாலையே அண்ணாமலை பாஜக தலைமை பொறுப்பில் இருக்கவே கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வானதி சீனிவாசன், நயினார் ராகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தமிழிசை தலைவராக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதிமுக ரீதியாக அவதூறு கருத்தை அண்ணாமலை தெரிவித்த போதே அவ்வாறு பேசியது தவறு என்று எதிர்த்தவர். இதனால் இருவருக்கும் கட்சுக்குள்ளேயே போரானது முற்றியது. அச்சமயத்தில் அதிமுகவினர் தமிழிசை மீது மதிப்பு வைத்திருந்தனர். இதனால்  அவரை எடப்பாடி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாஜகவுடன் ரகசிய உறவில் விஜய்.. பக்கவாய் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மோடி!! உடைந்த அரசியல் குட்டு!!

0

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், பாஜகவின் ஆலோசனைப்படி தான் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட திட்டத்தை கையில் எடுத்து உள்ளார்களாம். இவர்களுக்கு எதிரான எதிரியை உருவாக்குவது போல் கொண்டு வந்து திமுக கூட்டணியை உடைக்கவே விஜய்யை கட்சி ஆரம்பிக்க கூறி டெல்லி தலைமை ஆலோசனை செய்ததாம்.

இதனால் தான் விஜய் பேரிடர் சமயங்களில் பெரும்பாலான ஈடுபாடின்றி இருந்துள்ளார். இதனாலேயே அவருக்கு ஒர்க் பிரமோ செய்யும் அரசியல்வாதி என்ற அடைமொழியும் இணைந்துள்ளது. அதேபோல எடப்பாடியை கூட்டணிக்கு அழைப்பது போல் அழைத்து பின்பு பாஜகவில் இணைக்க வைத்ததும் இவர் வேலைதான் எனக் கூறுகின்றனர். முதலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுகவிற்கும் பேச்சுவார்த்தை நடந்த போது சரி பாதி தொகுதி பிரிக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் நாங்கள்தான் ஆட்சியில் முதலாளாக ஆளுவோம் என்று பல வரைமுறைகளை விதித்துள்ளார்.

இவையனைத்தும் எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை. இந்த காரணத்தினாலேயே மீண்டும் பாஜகவை நாடவேண்டி சூழல் வந்தது. இதே போல கூடிய விரைவில் ஆளும் கட்சியின் கூட்டணியை உடைக்க விஜய்க்கு ட்ரெயினிங் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் சைலண்ட் அரசியல்வாதியாக விஜய் இருப்பதாகவும் கூறுகின்றனர். நாளடைவில் சரத்குமாரை போல இவரும் தனது அரசியல் ஷட்டரை மூடிவிட்டு பாஜகவுடன் இணைந்துவிடுவார் என்று கூறுகின்றனர்.

திமுக கூட்டணியை கை கழுவ பார்க்கும் காங்கிரஸ்.. விஜய் பக்கம் திரும்பும் ராகுல் காந்தி!!

0

TVK: விஜய் கட்சி தொடங்கி மாநாட்டின் மூலம் தனக்கு எவ்வளவு பெரிய பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என்பதை மாற்றுக் கட்சியினருக்கு காட்டினார். ஆரம்ப கட்டத்தில் இவரை வரவேற்க பல கட்சிகள் முன் வந்தாலும் தற்போதைய சூழலில் கூட்டணியின்றி தனித்து தான் நிர்கிறார். முதலில் திமுகவின் கூட்டணி கலைக்க முயற்சித்த விஜய், முதலில் இவருக்கு சாதகமாக அமைந்தாலும் ஆளும் கட்சியின் சாமர்த்தியத்தால் பலம் பெற்று விட்டது.

இதையடுத்து அதிமுகவின் பக்கம் திரும்பிய விஜய் தொகுதி பிரிவு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கண்டிஷன்கள் போட்டதால் எடப்பாடி பின் வாங்கினார். தற்சமயம் என்ன செய்வதென்று குழம்பும் விஜய், காங்கிரஸ் பக்கம் திசை திரும்பியுள்ளார். ஆரம்ப கட்டத்திலிருந்தே காங்கிரஸானது திமுக மீது சற்று அதிருப்தியில் தான் இருந்தது. இதன் வெளிப்பாட்டை அதன் நிர்வாகிகளான செல்வப்பெருந்தகை  உள்ளிட்டோர் பேசுவதன் மூலம் நன்றாகவே அறிய முடிந்தது.

இதனை வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் எண்ணுகிறார். அந்த வகையில் திமுகவை விட்டுவிட்டு எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்கொண்டு இது ரீதியாக ராகுல் காந்தியை சந்திக்க உள்ளாராம். அதிமுக தனது கூட்டணிக்காக பாஜக மேலிடத்தை சந்தித்தது போல் தற்பொழுது விஜய் காங்கிரஸ்மேலிடத்தை சந்திக்க செல்வதாக கூறுகின்றனர். இவர்கள் கூட்டணி மட்டும் உறுதியாகும் பட்சத்தில் திமுக தோழமைக் கட்சிகள் என கூறும் கூட்டணிகள் சுக்குநூறாக உடைய கூடும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. இதோ செல்போன் மூலம் உடனே பெறலாம்!! வெளியான குட் நியூஸ்!!

0

TN Gov : தமிழக அரசானது நியாய விலை கடை மூலம் பல்வேறு தரப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி அரிசி பருப்பு சர்க்கரை உள்ளிட்டவையையும் வழங்குகிறது. மேற்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நாளடைவில் கொண்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். இது ரீதியாக குழு அமைத்து நேரடியாக அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து தரவுகளை திரட்டவும் உத்தரவிட்டுள்ளனர்.

இப்படி இருக்கையில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது மட்டுமின்றி கூடுதலாக இரண்டு புதிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அதில் விண்ணப்பம் செய்த 19.6 லட்சம் பேருக்கு தற்போது வரை ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டு விட்டது. மேற்கொண்டு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் நாளடைவில் வழங்கப்படும் என கூறியுள்ளனர். அதேபோல தொலைந்து போன ரேஷன் கார்டுகளை இனி சுலபமாக அதன் நகல் வைத்து புதிய ரேஷன் அட்டையை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

இது ரீதியாக இனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை. அதாவது தொலைந்து போன ரேஷன் அட்டையின் நகல் இருந்தால் அதை வைத்து இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்யலாம். புதிய குடும்ப அட்டையானது உங்களது முகவரிக்கு தபால் மூலம் வந்துவிடும். மேற்கொண்டு அதை வைத்து நியாய விலை கடையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்.. கட்டாயம் ரூ1000 கிடைக்காது!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, இத்திட்டத்தினால் அதிருப்த்தி அடைந்த பெண்கள், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று  வலியுறுத்தி வந்தனர். அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இரண்டு லட்சம் பேரை மீண்டும் இத்திட்டத்தின் மூலம் இணைத்தனர்.

இப்படி இருக்கையில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இத்திட்டம் செல்லுபடி ஆகாது எனக் கூறினர். அரசு ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர்த்து இதர தரப்பினர் எங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் நாட்களில், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மனைவிகள் என அனைவருக்கும் உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும் எனக் கூறினர். இப்படி வழங்கப்படும் உதவி தொகையானது ஒரு சில தவறுகளால் கிடைக்காமல் போகும். அதாவது நமது வங்கி கணக்கு எண் மற்றும் அதில் இணைத்திருக்கும் மொபைல் நம்பர் உள்ளிட்டவற்றை சரியாக கொடுத்தல் அவசியம்.

மாற்றி கொடுக்கும் பட்சத்தில் இத்திட்டம் செல்லுபடியாகாமல் போகும். அதேபோல இனி வரும் நாட்களில் மாதம்தோறும் இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு சரிபார்த்து வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மேல் தீரா பகை.. திமுக வெற்றி பெற ரஜினி கொடுத்த சப்போர்ட்- மனம் திறந்த சூப்பர் ஸ்டார்!!

0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருக்கும் கருத்து வேறுபாடானது இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். ஆனால் தற்சமயம் எதனால் இந்த கருத்துவேறுபாடு இருந்தது என்பது குறித்து ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் டாக்குமென்ட்ரி படங்கள் பெரிதளவில் பேசப்படுகிறது.

அந்த வரிசையில் தற்பொழுது அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர் எம் வீரப்பன் குறித்து, ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமென்ட்ரி என்ற ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தான் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் ஏன் கருத்து வேறுபாடு இருந்தது என்பது குறித்து விவரித்து பேசியுள்ளார்.

சினிமா திரையுலகில் தயாரிப்பாளராக இருந்த ஆர் எம் வீரப்பன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர். ரஜினியின் பாட்ஷா படம் நூறாவது நாள் வெற்றி அடைந்ததையடுத்து அது ரீதியான நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சமயத்தில் ஆர் எம் வீரப்பன் அமைச்சராக இருந்தார். மேடையிலேயே ரஜினிகாந்த் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசியுள்ளார். எப்படி பொது மேடையில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசலாம் என கோபமடைந்த ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து ஆர் எம் வீரப்பனை அதிரடியாக நீக்கம் செய்து விட்டார்.

இதனால் ரஜினிக்கு மிகவும் மன வருத்தமாக இருந்துள்ளது. நான் இப்படி பேசியதால் தான் அவரின் பதவி பறிபோனது எனக் கூறி புலம்பி தள்ளி உள்ளார். அதுமட்டுமின்றி ஆர் எம் வீரப்பனை நேரில் சந்தித்து, உங்கள் சார்பாக நான் ஜெயலலிதாவிடம் பேசவா என்று கேட்டுள்ளார். ஆனால் ஆர் எம் வீரப்பன் இதனை துளிகூட பொருட்படுத்தாமல் பேச வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். நீங்க என்ன பேசினாலும் அந்த அம்மா ஏத்துக்க மாட்டாங்க, அதையும் மீறி உங்க மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள்.

அதே போல நீங்கள் பேசி தான் எனக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனக் கூறிவிட்டாராம். இதைத் தான் தற்பொழுது அவரின் டாக்குமென்டரி படத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ஆர் எம் வீரப்பன் பெரிய மனுஷன், அவர்தான் உண்மையான கிங் மேக்கர் என கூறியுள்ளார்.

அதேபோல இந்த சம்பவத்தை அடுத்து ரஜினிகாந்த் ஜெயலலிதாவை பழிவாங்கும் நோக்கில் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனக் கூறிய வாய்ஸ் நோட் ஆனது திமுகவிற்கு சாதகமாக அமைந்து அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

நான் ஏன் ஜெயலலிதாவை திட்டினேன் தெரியுமா?!.. லீக் செய்த ரஜினிகாந்த்!….

0

பம்பாய் படம் வெளியான நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டில் சிலர் வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் கோபமடைந்த ரஜினி பாட்ஷா பட வெற்றி விழாவில் பேசிய போது ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது’ என பேசினார். இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதோடு மட்டும் நிற்காமல் திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது.

அதன்பின் தொடர்ந்து நடித்த பல படங்களிலும் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனம் பேசி வந்தார் ரஜினி. ஜெயலலிதாவை மனதில் வைத்தே படையப்பா படத்தில் நீலம்பரி வேடத்தை உருவாக்கினார்கள். இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஊடகம் ஒன்றில் ஒத்துகொண்டார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா என எல்லா படங்களிலும் அரசியல் வசனம் பேசினார் ரஜினி.

ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனது உடல்நிலைக்கு அரசியல் செட் ஆகது’ என சொல்லிவிட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளான இன்று ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பாட்ஷா பட விழாவில் அந்த படத்தின் தாயரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும்போதே நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினான். இதனால், கோபமடைந்த ஜெயலதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும் இது முக்கியமான காரணம்’ என சொல்லியிருக்கிறார்.