Home Blog Page 309

பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!

0

ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :-

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல தயங்கிய பயனாளியை பார்த்து என் அருகில் தான் நிதியமைச்சர் அமர்வார் அவரிடம் நான் சொல்லி விடுகிறேன். பயப்பட வேண்டாம் உங்களுடைய மாத வருமானத்தை தைரியமாக சொல்லுங்கள். நான் வருமானவரித்துறையிடம் சொல்ல மாட்டேன் என கிண்டலாக நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார்.

அதன் பின்பு, சிறிய தயக்கத்துடன் அந்த பயனாளி தன்னுடைய மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என தெரிவித்திருக்கிறார். இந்த முத்ரா யோஜனா திட்டமானது தொழிலில் பின்தங்கி இருக்கக்கூடிய சிறு மற்றும் குறு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் அவர்களின் தொழிலில் அவர்கள் முன்னேறுவதற்கும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிறு குறு தொழிலாளர்கள் மட்டுமே நலிவடைந்த தொழிலாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்படலாம் என்றும் இந்த திட்டத்தின் மூலமாக 10 லட்சும் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார் நரேந்திர மோடி. இந்தியாவில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் தங்களுடைய தொழில்களை மேம்படுத்த நினைப்பின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்த பயன் பெற்றுக் கொள்ளலாம்

டோல் கேட்டுகளில் கூடுதல் கட்டண முறையை தடுக்க.. புதிய வழிமுறை!! மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி!!

0

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது 450 ரூபாய் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடியில் 650 ரூபாய் பெறப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், இதற்கான தீர்வு கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான சில மாறுபாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர், சுங்கச்சாவடி கட்டணங்களால் தான் புதிய சாலைகள் போடுவது மற்றும் சாலைகளை மேம்படுத்துவது பராமரிப்பது போன்று வேலைபாடுகள் நடைபெற்று வருவதாகவும் சுங்கச்சாவடிகளை நீக்கவும் குறைக்கவும் அல்லது அகற்றவோ முடியாது என பதில் வழங்கியிருக்கிறார் அதற்கு மாறாக சுங்கச்சாவடிகளில் ஏமாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் அந்த மாற்றம் தற்பொழுது உள்ள சுங்கச்சாவடி வழிமுறைகளை முற்றிலும் ஆக மாற்றக்கூடிய ஒன்றாக அமையும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடிகள் குறித்து வெளியிடப்பட்ட 3 முக்கிய அறிவிப்புகள் :-

✓ 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் அட்டையை நீக்க வேண்டும்

✓ 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் அட்டையில் KYC சீக்கிரமாக முடிக்கப்பட வேண்டும்

✓ வாகனத்தின் உடைய பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லை என்றால் இரட்டை அபராதம் விதிக்கப்படும்.

அதிலும் இவற்றை தொடர்ந்து கூடிய விரைவில் ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ் இல் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ரீசார்ஜ் முடிந்தவுடன் தானாகவே வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்து இ ரிச்சார்ஜ் செய்து கொள்ளும்படியாக பாஸ்ட் டேக் கார்டுகளில் அப்டேட் செய்யப்படும் என்றும் வாகன ஓட்டிகள் இனி எந்தவித கவலையும் இன்றி சுங்கச்சாவடிகளை கூடுதல் கட்டணம் இல்லாமல் அடக்க முடியும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்டேரி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் உள்ள நிரை குறைகளை என்னிடம் வெளிப்படுத்துங்கள்!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

0

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கலைவாணன், சி.வி.எம்.பி.எழிலரசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியானது இன்றியமையாதது என்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் இதுவரை 1,30,000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது இவர்களால் தான் என பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பாராட்டியுள்ளார் அமைச்சர்.

மேலும், 7500 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மேம்படுத்துவது மற்றும் உயர் கல்விகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவை அனைத்தையும் தன்னால் நேரில் சென்று பார்க்க முடியாது என்றும் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது போன்ற பணிகளை நேரில் கண்டு எந்தவித சமரசமும் இல்லாமல் அங்கு நடக்கக்கூடிய நிறை மற்றும் குறைகளை நேரடியாக தன் கவனத்திற்கு கொண்டு வரும் படியும் ஒரு வேளை தன் கவனத்திற்கு கொண்டுவர முடியவில்லை என்றால் அமைச்சர்களுக்கு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கோ கொண்டு செல்லலாம் என தெரிவித்திருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறையில் வளர்ச்சி தன்னால் மட்டுமே கிடையாது என்றும் அவற்றில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் உழைப்பும் உள்ளது என்றும் அந்த ஒத்துழை ஆனது கிடைத்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் ரூ.1,10,000 கோடிக் கடன்!! கேட்டவுடன் கிடைக்க ஏற்பாடு.. அமைச்சர் பெரிய கருப்பன்!!

0

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேளாண்மை மற்றும் இன்னும் பல செலவுகளுக்காக 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவை கடன் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவைகள் விவாத நேரத்தில் பொழுது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி பதில் நேரத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கக்கூடிய கடன் தொகை மற்றும் அந்த கடன் யாருக்கெல்லாம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களையும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் குறிப்பிட்ட விவரம் பின்வருமாறு :-

✓ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் விண்ணப்பித்த உடனே கிடைக்க ஏற்பாடு

✓ நிலம் இல்லாத ஏழை பெண் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வாங்குவதற்கான கூட்டுறவு சங்கங்களின் கடன் 5 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு

✓ பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய ஏழைப் பெண்கள் 1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க 3 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு

✓ கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளை இணைய வழியிலே தொடங்க ஏற்பாடு

✓ இணைய வழி மூலமே கடன் பெற ஏற்பாடு

✓ கூட்டுறவு வங்கிகள் மூலம் கிரடிட் கார்டு வழங்க ஏற்பாடு

✓ விரைவு வணிக முறை மூலமாக கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்பனையாக்கும் பொருட்களை நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்க ஏற்பாடு

✓ 8 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவு திடலில் கூட்டுறவு சங்கங்களுக்கான வளாகம் கட்ட ஏற்காடு போன்ற பல முக்கிய செயல்கள் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்!! கண்ணீரில் தமிழிசை சௌந்தர்ராஜன்!!

0

இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக அரசியல் இருந்து வெளிவந்த உடல் மீது அக்கறை கொண்டிருந்த நிலையில் அதே வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து…

இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்…

என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…

உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….

என தன் தந்தை தனக்கு கற்றுக் கொடுத்து வளத்ததையும் தன் தந்தையின் இறுதி ஆசையையும் தன்னுடைய வாழ்க்கை பயணமாக எடுத்துக் கொண்டு செல்வேன் என கண்ணீர் மல்க தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

0

இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது.

பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் பழம் இல்லாமல் எந்த ஒரு கடவுளையும் வணங்க மாட்டோம். குறிப்பாக மாலையாக கோர்த்து சாமிக்கு கொடுப்போம். ஆனால் கடவுளுக்கு எலுமிச்சம் பழத்தை காணிக்கையாக கொடுக்கும் பொழுது, மாலையாக கோர்த்து கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

எந்த ஒரு கடவுளுக்கும் எலுமிச்சம்பழத்தை மாலையாக கோர்த்து நாம் கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக உதிரி பழங்களாகவே கொடுக்க வேண்டும். நம்மால் எவ்வளவு எலுமிச்சம் கனிகளை வாங்க முடியுமோ, அவ்வளவு கனிகளை வாங்கி அந்த கோவில் பூசாரியிடம், இந்த கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காணிக்கையாக கொடுத்து விடும்படி கூறி கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு தெய்வத்தின் பாதத்தில் வைத்து கொடுக்கக்கூடிய காணிக்கையாக இருந்தாலும், அது அந்த தெய்வத்தின் ஆசிர்வாதமாக நமக்கு திகழும். எனவே எலுமிச்சம் பழத்தை ஊசியினால் துளைக்காமல் முழு கனிகளாக கொடுக்க வேண்டும். ராஜ கனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சம்பழம் ஊசியினால் துளைக்கும் பொழுது செத்தக் கனியாக மாறிவிடும்.

ஏதேனும் ஒரு கடவுளுக்கு எலுமிச்சம் பழம் மாலையை சாட்டுவதாக வேண்டுதல் வைத்திருந்தால், ஒன்று ஊசியினால் துளைக்காமல் வேறு முறையில் மாலையை கோர்க்க வேண்டும் அல்லது உதிரிப் பழங்களாக கொடுப்பதும் சிறந்தது.

எலுமிச்சம் பழத்தை மாலையாக கோர்த்து கடவுளுக்கு சூட்டினாலும் அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்காது, அது கஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். ஊசியினால் துளைத்த கனிகளை நமக்கு காணிக்கையாக கொடுத்தாலும், அதனை வீட்டிற்கு கொண்டு வந்து ஜூஸ் போட்டும் குடிக்க முடியாது.

ஏனென்றால் ஊசியினால் துளைத்ததால் கனியின் உள்ளே பாக்டீரியாக்கள் இருக்கும்.எலுமிச்சம் கனியை மாலையாக கொடுக்காமல் உதிரி கனிகளாக நமது கைகளால் தொட்டு, மனதார வேண்டிக் கொண்டு கொடுத்தால் நாம் வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும். உங்களால் முடிந்த எண்ணிக்கையில் வாங்கி கொடுத்தால் போதுமானது. உதாரணமாக 108,97,95,25,14,9,16, 32, 23,37,33 இதுபோன்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தை கொடுக்கலாம்.

ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒவ்வொரு சூட்சமம் இருக்கிறது. எத்தனை எண்ணிக்கையில் பழங்களை கொடுத்தாலும், அதில் இருந்து ஒரு ஐந்து பழங்களை மட்டும் நாம் வாங்கிக் கொண்டால் போதும். மற்ற கனிகளை கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காணிக்கையாக கொடுத்து விட வேண்டும்.

இந்த ராஜ கனியை அனைத்து கடவுளுக்கும் நாம் காணிக்கையாக கொடுக்கலாம். அனைத்து கடவுளுக்கும் மஞ்சள், குங்குமத்தை கொடுப்பது போல இந்த எலுமிச்சம் கனியையும் கொடுக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சம் பழம் என்பது நாம் தொழில் செய்யக்கூடிய இடம் மற்றும் நமது வீடுகளில் கட்டாயம் தினமும் இருக்க வேண்டும்.

இந்த எலுமிச்சம் பழம் திருஷ்டியை போக்க பயன்படுவது மட்டுமின்றி, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை அந்த இடத்திற்கு கொடுக்கிறது. இந்த எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் தான் போட்டு வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. சாதாரணமாக நாம் இருக்கக்கூடிய இடத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டாலே போதும். நேர்மறையான ஆற்றல்கள் அந்த இடத்தில் பரவச் செய்யும்.

உங்க படத்துக்கு இலவசமா டிக்கெட் கொடுப்பீங்களா?!. விஜயை பொளந்த பிரபலம்!….

0

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி துவங்கி வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று அவரின் நிர்வாகிகள் முன்பு திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள். விஜய் வீட்டிலிருந்தே அரசியல் செய்து வருகிறார். பனையூர் அரசியல்வாதி.. திமுகவை வாரிசு அரசியல் என விமர்சிக்கும் விஜய் சினிமா வாரிசு இல்லையா?.. அவரின் அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவுக்கு வந்தவர்தானே விஜய் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலையை பாஜக அரசு 50 ரூபாய் உயர்த்திவிட்டது. இதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதை தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்துள்ளார்.

உங்க படத்துக்கு இலவசமா டிக்கெட் கொடுப்பீங்களா?!. விஜயை பொளந்த பிரபலம்!....
#image_title

விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ அல்லது இலவசமாக டிக்கெட் கொடுக்கிறேன் என சொல்லுவாரா?.. யார் தடுத்தார்கள்?. உங்களுக்கு லாபம் என்றால் பேசமாட்டீர்களா?.. ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.. விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அவருக்கோ அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது’ என பேசியிருக்கிறார்.

6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

0

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு ஆய்வின் போது, மாணவர்களின் பைகளில் காண்டம், கத்திகள், சிகரெட்டுகள் மற்றும் மோசமான விளையாட்டு கார்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவமானது, பள்ளி நிர்வாகத்தினரையும், மாணவர்களின் பெற்றோர்களையும், மேலும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளைய வயதிலேயே இத்தகைய பொருட்கள் மாணவர்களிடம் இருப்பது, அவர்களின் மனநிலையும் நடத்தைப் பாதிப்பும் பற்றி பெரும் கேள்விகளை எழுப்புகிறது.

சமூக வலைதளங்கள், OTT உள்ளடக்கங்கள் மற்றும் இல்லத்தில் நடைபெறும் விவாதங்கள் போன்றவை இளம் குழந்தைகளின் மனதைக் கவர்ந்துள்ளன. அந்த வகையில் தவறான தகவல்களின் தாக்கம், சரியான பாலியல் கல்வியின்மையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் திறந்த உரையாடல் இல்லாமையும், இவ்வகை பிரச்சனைகளை உருவாக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விவரங்களை பகிர்ந்ததோடு, ஆலோசனை அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுடன் உரையாடி, அவர்கள் எங்கு, எப்படி இத்தகைய பொருட்களை பெற்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சி நடைபெற்று வருகிறது.

வீடியோ லிங்க் :

https://x.com/fpjindia/status/1909521997106733533

இந்தச் சம்பவம், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாக உள்ளது. பள்ளிகளில் முறையான மனநலம் சார்ந்த கல்வி, பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள், மற்றும் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் மனநல ஆலோசகர்களின் பங்கு இப்போது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் நெருங்கிய உறவினைப் பேண வேண்டும். அவர்கள் சந்திக்கும் சந்தேகங்களை தீர்த்து, நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் அவசியமாகிறது. இவ்வாறு மட்டுமே இளம் மாணவர்கள் தவறான பாதைகளுக்கு செல்லாமல் தடுக்க முடியும்.

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

0

மத்திய அரசால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கடன் வகையானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ,

✓ ஷிஷு – 50,000
✓ கிஷோர் – 50,000 முதல் 5 லட்சம் வரை
✓ தருண் – 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை

தேவையான ஆவணங்கள் :-

✓ ஆதார் அட்டை
✓ பான் கார்டு
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ முகவரி சான்று
✓ தொழில் திட்டம்
✓ வங்கி கணக்கு விவரங்கள்
✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
✓ ஜிஎஸ்டி பதிவு
✓ தொழில் பதிவுகள்

விண்ணப்பிக்கும் முறை :-

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ICICI, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் போன்ற வங்கிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க நினைப்பவர்கள் மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பொழுது மேலே கூறப்பட்ட ஆவணங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுடைய கடன் தொகையானது உங்களுடைய திட்டத்தை பொருத்தும் அதில் வரக்கூடிய வருமானம் பொருத்தும் அமையும்.

“நான் சந்தோஷமாக இல்லை” பேட்டியில் வேதனையை கொட்டித் தீர்த்த ரிஷப்பண்ட்!!

0

IPL 2025: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் உடைய தொடரில் இன்று லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாகவே ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளை கண்ட லக்னோ அணியானது கடைசியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் உடன் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொண்டது.

இருப்பினும் லக்னோ கேப்டனுக்கும் அதனின் உரிமையாளருக்கும் ஒருபோதும் செட் ஆவதில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி சந்தித்தபோது மைதானத்தில் கடும் விமர்சையாக திட்டி தீர்த்தார். இதனால் நொந்து போன ரிஷப் பண்ட் பெரும் வேதனையடைந்தார். தற்சமயம் பேட்டியளித்த ரிஷப்பண்ட், நான் சந்தோஷமாக இல்லை. எங்கள் அணியில் பல நல்ல விஷயங்கள் உள்ளது அதை வைத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறேன் என பேசி முடித்துக் கொண்டார்.

இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் உரிமையாளர் என கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஆட்டத்தை இழக்கும் பட்சத்தில் கருத்து வேறுபாடானது மைதானத்திலேயே ஏற்படுகிறது. கடந்த முறை கூட இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. இதுதான் அவர் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதிலும் லக்னோ மண்ணை கவ்வினால் அதே போல மோதல் போக்கு நிலவும் என கூறுகின்றனர்.