Home Blog Page 317

எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தால் நீ பெரிய ஆளா!! இப்படியும் செய்தவர் தான் இளையராஜா.. உண்மையை சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர்!!

0

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் துயரத்தை போக்க அவரை நேரில் சந்தித்த கங்கை அமரன் அவர்கள் சிறு பொன்மணி அசையும் அதில் என்ற பாடலை பாடி பாரதிராஜா அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அவர்கள் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-

பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே கலையில் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களின் ஆறுதல் மொழி கூட கலையாகத்தான் இருக்கிறது. அதனை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்த அவர், இவர்களுடைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஆக இளையராஜா பாரதிராஜா இருவரும் திகழ்ந்து வருகின்றனர் என தெரிவித்திருக்கிறார்.

கலையில் வளர்ந்த இவர்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கூட உச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் இறங்கி வந்த தங்களுடைய பிள்ளைகளுடன் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஒருவர் இறந்த பின்பு அவருக்கு மோட்ச தீபம் ஏற்றி வைப்பது முறையானதா அல்லது அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவரோடு அவருக்கு தேவையான அனைத்தையும் என்று மகிழ்வோடு உயிர் பிரிவது நல்லதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் வழங்கி இருக்கிறார். இந்த பட்டத்தை மிகுந்த மகிழ்வோடு பெற்றுக் கொண்ட இளையராஜா அதனை ஒரு மேடையில் சுட்டிக்காட்டும் பொழுது, பாடல்களையும் இவருக்கே திருடி கொள்கிறார்கள். பிறகு இசைஞானி என்ற பட்டத்தையும் இவர்களை கொடுக்கிறார்கள் என மிகவும் நக்கலாக பேசியுள்ளார். ஒரு வருடம் பட்டத்தை பெற்றுக்கொண்டு அதன்பின் தன் தேவை முடிந்தவுடன் தூக்கி எறிந்து பேசுவது எந்த விதத்தில் முறை என கேட்டிருக்கிறார். பொதுவாகவே இளையராஜா அவர்கள் பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாத மனிதராகவும் இங்கீதம் தெரியாதவராகவுமே இருந்து வருகிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

0

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலருக்கு இன்றைய காலகட்டத்தில் கனவாக இருக்கிறது. அதை மீறி சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய 13 விதிகள் குறித்த இங்கு காண்போம்.

சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் :-

✓ சொந்த வீடு கட்டக்கூடிய நிலத்தின் உறுதி தன்மையை கண்டறிய முதலில் மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

✓ அரசினுடைய ஒப்புதலோடு வாழப்போகிற வீட்டின் வரைபடம் மிகவும் முக்கியமான ஒன்று.

✓ நம்முடைய வரைபடத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிலத்தின் அளவீட்டிற்கு சரியாக உள்ளதா என்பதை கவனித்தல் மற்றும் இந்த ஒப்புதல் பிளானுக்கான அப்ரூவல் அரசால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

✓ சில நேரங்களில் தனி கட்டணம் செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெறுதலும் முக்கியம்.

✓ வீட்டை கட்ட துவங்குவதற்கு முன்பு சிறந்த இன்ஜினியரை தேர்ந்தெடுப்பது மற்றும் அவருக்கான செலவுகளை முன்கூட்டியே பேசி முடிப்பது வீடு கட்டுவதில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

✓ கட்டிடத்தை கட்ட துவங்குவதற்கு முன்பு இன்ஜினியர் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பேசி முடிப்பது கட்டிடம் துவங்கிய பின்பு ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

✓ கட்டிடத்திற்கு பயன்படுத்தக் கூடிய மெட்டீரியல்கள் தரமுள்ளதா அவற்றிற்கான செலவு என்ன என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு வைத்தல் சிறந்தது.

✓ வீடு கட்டுவதற்கான பட்டியலில் இருந்து வீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளிக்கிணறு தோண்ட விரும்பினால் அதற்கான பணத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

✓ கட்டிடத்தை பூர்த்தி செய்யக் கூடிய மின்சாரம் டைல்ஸ் கீழ்தரை மற்றும் மேல் மாடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுக்கும் பணத்தை ஒதுக்கி வைத்தல் பணச்சிக்கல்லில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்க பயன்படும்.

✓ தண்ணீர் டேங்க், நிலத்தடி நீர் பைப்புகள், மெட்ரோ மற்றும் முனிசிபல் நீர், கழிவு நீர், திட கழிவு அகற்றல், மழை நீர் வடிகால் போன்றவற்றை உன் வீடு கட்டும் பொழுது சரியாக பார்த்து அமைத்து விடுவது மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

✓ வீட்டின் வெளிப்புறத் தோற்றத்திற்கான காம்பவுண்ட், கலர் விளக்குகள் மற்றும் பெயிண்ட் போன்றவற்றிற்கான பட்ஜெட்டையும் வீடு கட்ட துவங்கும் முன்பே போட்டு வைத்தால் நல்லது.

✓ லிஃப்ட் ,ஜெனரேட்டர் மற்றும் சிசிடிவி கேமரா போன்ற செலவுகள் தேவை என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

✓ குறிப்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் வீடு கட்டப்படுதல் வரும் காலங்களில் எந்தவித பிரச்சனையும் நமக்கு ஏற்படாது.

கே பாலச்சந்தர் அழைத்து நடிக்க மறுத்த கமல்!! நீ இல்லன்னா என்ன.. விஜயகாந்த் பக்கம் திரும்பிய காற்று!!

0

கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவே மாறி இருக்கும் நிலையில், கமலஹாசன் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஆக்க திகழ்ந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படிப்பட்ட குருநாதர் தன் படத்தில் நடிப்பதற்காக கமலஹாசனை கேட்ட பொழுது கமலஹாசன் நடிக்கும் மறுத்திருக்கிறார். அதன் பின் அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் சுஹாசினி, எஸ் பி பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், விவேக் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். திரைப்படத்தில் வரக்கூடிய வங்காளக் கடலே என்ற பாடலில் நடிக்க ரஜினிகாந்த், சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் மூவரும் இணைந்து நடித்திருப்பார்.

இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காகத் தான் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் நடிகர் கமலஹாசன் அவர்களை அழைத்திருக்கிறார். ஆனால் அவரோ சுகாசினி தன்னுடைய அண்ணன் மகள் என்றும் தன் அண்ணன் மகளோடு இணைந்து நான் நடனமாடுவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்திருக்கிறார்.

அதன்பின் பாலச்சந்தர் அவர்கள் விஜயகாந்த் இடம் கேட்ட பொழுது தன்னுடைய அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு இந்த பாடல் காட்சிகளை அவர் முடித்து கொடுத்துள்ளார். இதற்கான சம்பளத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் கொடுத்த பொழுது உங்கள் மீதுள்ள மரியாதைக்காக தான் நான் இதை செய்தேன் என்றும் எனக்கு இந்த பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டு விஜயகாந்த் அவர்கள் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா!! அப்போ இத கவனிங்க.. இல்லனா பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்!!

0

வீட்டை வாடகைக்கு விடக்கூடிய வீட்டு உரிமையாளர்களை குறி வைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் இவற்றிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

முன்பெல்லாம், வாடகை மோசடி என்பது வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றுவது மற்றும் வீட்டை காலி செய்த பின்பு அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் புதிதாக ஜிஎஸ்டி வரி மோசடிகள் செய்யப்படுகின்றன. அதாவது ஒருவர் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வீடு தேடி வருவதாகவும் சாதாரண நபர்களைப் போல அவர்கள் 2 மாதங்களுக்கான வீட்டின் வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுவதாகவும் அதன் பின் அந்த வீட்டின் முகவரியில் ஜிஎஸ்டி எண்களை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி வாடகைக்கு இருக்கக்கூடிய வீட்டின் முகவரியை பயன்படுத்தி ஜி எஸ் டி எண்களை பெற்றுக்கொண்டு அதில் பல்வேறு விதமான பண மோசடிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இதிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களை தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, வீட்டை வாடகைக்கு உடனிருப்பவர்கள் முதலில் வாடகைதாரிடம் எழுத்துப்பூர்வமாக பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக இந்த முகவரியை பயன்படுத்தி எந்த விதமான ஜி எஸ் டி என்னும் பெறக் கூடாது என்றும் அதில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடு குடும்பமாக வாழ மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றும் இதில் எந்த விதமான நிறுவனமும் செயல்பட அனுமதி இல்லை என்பதையும் எழுதிப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமுக்கு ஆளுர மாலை!. ஆனா படமோ நஷ்டம்!.. வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்…

0

அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். ஓடிடி உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் சொதப்பியதில் 27ம் தேதி காலை வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அன்று மாலை 5 மணிக்குதான் வெளியானது. ஒரு படம் சொன்னபடி வெளியாக வில்லை என்றாலே அதன்பின் டேக் ஆப் ஆவது கஷ்டம். பல படங்கள் இப்படி சொன்ன நேரத்தில் வெளியாகத ஒரே காரணத்தினால் தோல்வி அடைந்திருக்கிறது.

இப்போது வீர தீர சூரனும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது. படம் நன்றாக இருக்கிறது.. விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்.. என படம் பார்த்த ரசிகர்கள் சொன்னாலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக 27ம் தேதி எம்புரான் படம் வெளியானதால் பல நல்ல தியேட்டர்களை எம்புரான் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் பல ஊர்களில் வீர தீர சூரன் படம் மொக்கை தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான அடுத்த நாளே படம் வெற்றி என அறிவித்து விக்ரமுக்கு ஆளுர மாலை எல்லாம் போட்டார்கள்.

மேலும், விக்ரம் பேசி வெளியிட்ட வீடியோவில் ‘ ‘ஒரு ராவான, வித்தியாசமான ஆக்சன் படத்தை கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டே வீர தீரன் படத்தில் அவ்வளவு உழைப்பை போட்டோம். படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தோன்றியது. சரி சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து படம் வெளியானது.

ஒருபடம் சொன்னபடி வெளியாகவில்லை எனில் அவ்வளவுதான். அதுவும் ரிலீஸ் தேதி அன்று முதல் 2 காட்சிகள் வெளியாகவில்லை. எனவே, என்ன ஆகுமோ என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகிறார்கள். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்தோம் என்றெல்லாம் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. படம் பார்க்காதவர்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன்’ என பேசியிருந்தார். ஆனால், வீர தீர சூரன் படம் இதுவரை 35 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

சேட்டிலைட் மற்றும் டிவி உரிமை, தியேட்டர் மூலம் கிடைத்த வசூல் என தயாரிப்பாளர் நஷ்டப்படாமல் தப்பித்துவிட்டார். ஆனால், படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என வலைப்பேச்சி பிஸ்மி வீடியோ ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..

0

MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அப்போது திமுகவே ஆட்சி அமைத்தது. அதன்பின் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை பேசியது பிடிக்காமல் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது.

ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஒருவிழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நீட் தேர்வை ஒழிக்க பல முயற்சிகளையும் திமுக செய்து வருகிறது. கலைஞர் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. அம்மையார் ஜெயலலிதா இருந்தபோதும் தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளே வரவில்லை. அவரின் மறைவுக்கு பின்னர் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் பாஜகவுக்கு அடி பணிந்ததால் நீட் தேர்வு அமுலுக்கு வந்தது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி என செய்திகள் வருகிறது. எனவே, பழனிச்சாமியை நான் ஒன்று கேட்கிறேன். பாஜக கூட்டணிக்கு செல்லும் முன் ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால்தான் உங்களுடன் கூட்டணி என வெளிப்படையாக பழனிச்சாமி அறிவிப்பாரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்மலா சீதாராமனை சந்தித்தது உண்மையா?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!….

0

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். சினிமா கதாசியர் மற்றும் இயக்குனராக இருந்து ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவரின் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் சென்றபோது, அதை சீமானின் பாதுகாவலர் கிழிக்க அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலரை போலீசார் கைதி செய்தனர். அதன்பின் போலீஸ் நிலையம் சென்று வாக்குமூலம் கொடுத்தார் சீமான்.

A famous woman executive is away from Naam Tamilar Party.

ஒருபக்கம், பெரியாரை பற்றி இழிவாக பேசி பலரின் எதிர்ப்பையும் சந்தித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியை தடுக்க வேண்டும் என்பதே சீமானின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திடீர் திருப்பமாக சில நாட்களுக்கு ரஜினியை போய் சந்தித்தார். அதன்பின்னரே பெரியாரை திட்ட துவங்கினார்.

ஒருபக்கம், திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. எனவே பாஜக கூட்டணியில் சீமானும் இணைவரா என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இந்நிலையில், நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கவில்லை என சீமான் விளக்கமளித்துள்ளார். அவரை சந்தித்தேன் என்றால் சந்தித்தேன் என சொல்லப்போகிறேன். எனக்கென்ன பயம் இருக்கிறது?.. நான் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

ஃப்ரி புக்கிங்கில் வசூலை குவிக்கும் குட் பேட் அக்லி!.. இவ்வளவு கோடியா?!….

0

Good bad ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. ‘அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்’ என அஜித்துக்கு பில்டப் ஏத்துகிறார்கள். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பட ரிலீஸுக்கு 4 நாட்கள் முன்பே ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. ஆனால், 80 சதவீத டிக்கெட்டுக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் பலருக்கும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மீதமிருக்கும் டிக்கெட்டுகளையும் பிய்த்து பிய்த்து கார்ப்பரேட் கம்பெனிகளாலே வாங்கி கொண்டதால் முதல் 4 நாட்களுக்கு ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காது எனவும் சிலர் சொன்னார்கள். இந்நிலையில், ஃபிரி புக்கிங்கில் குட் பேட் அக்லி 9 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு வெளியான குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வீடியோவை இதுவரை 38 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நடப்பதையெல்லாம் பார்க்கும்போது குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது.

பக்கா பிளானோடு சென்னை வரும் அமித்ஷா!. அதிர்ச்சியில் திமுக!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!…

0

பாரதீய ஜனதா கட்சியின் மூளையாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்துபவர் இவர்தான். அதனால்தான் அனைவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா கருதுகிறார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை ஒருங்கிணைத்து அதிமுகவை வலுவாக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷா கருதுகிறார். ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசினார். அதன்பின் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்தியும் வெளியானது.

eps

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பேட்டி அண்ணாமலை கொடுத்தார். எனவே, அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை மாற்றிவிட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒருபக்கம், தமிழக பாஜக தலைவரை நியமிக்க டெல்லியிலிருந்து கிஷன் ரெட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையே நீடிப்பார் என செய்திகள் வெளிவந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள். இந்நிலையில்தான் வருகிற 10ம் தேதி சென்னை வரும் அமிஷ்தா 11ம் தேதி அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சில பாஜகவினரை நேரில் அழைத்து பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் பதவி பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அவர் ஆலோசனை செய்யவிருக்கிறார்.

eps
eps

நேற்று சென்னை வந்த நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் சீமான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அடுத்து அமித்ஷா வரவிருக்கிறார். திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு எதிரான கட்சிகளை அமித்ஷா ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை கண்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியலில் பரபரப்பு!.. பாஜக கூட்டணியில் இணைகிறாரா சீமான்?!. பரபர அப்டேட்!..

0

Seeman: தன்னை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தம்பி என அழைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான். அடிப்படையில் சினிமா கதாசிரியர், இயக்குனர் என்பதால் நன்றாகவே கதை சொல்வார். இவர் சொல்லும் பல கற்பனை கதைகளை நிஜமென நம்பிய இளைஞர்கள் இவரின் தம்பிகளாக மாறிவிட்டனர். அரசியல் மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி கவனம் ஈர்ப்பார். சீமான் பேசுவதை கேட்டால் தம்பிகளுக்கு நரம்புகள் புடைக்கும்.

‘ஒருநாள் இந்த நிலம் என்கிட்ட சிக்குச்சி’ என சீமான் கர்ஜித்தால் தம்பிகளுக்கு கூஸ் பம்ப்ஸ் ஃபீலிங் வரும். திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக – திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை நாம் வாங்கி விடுவோம் என்கிற நம்பிக்கையில்தான் கட்சி துவங்கினார் சீமான். 2 சதவீதம் வாங்கிய கட்சி இப்போது 8 சதவீதம் வரை வந்துவிட்டது. அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவது சீமானின் வழக்கம். சமீபத்தில் கூட பெரியாரை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

The next divorced couple is Nayan Vicky who saw Dhanush in a different situation!!

ஒருபக்கம் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகாரை கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னை கர்ப்பமாக்கி பின்னர் அதை கலைக்க சொன்னதாகவும் புகார் கொடுத்தார். இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சீமான் ஒரு கட்டத்தில் ‘அவள் விருப்பப்பட்டு வந்தாள். அவள் ஒரு பாலியல் தொழிலாளி.. நான் என்ன ரேப்பா செய்தேன்?’ எனக்கேட்டு அதிர வைத்தார்.

அதிமுக – திமுக எதிர்ப்புகள் நமக்கு வரும் என்ற நம்பிக்கையில் சீமான் இருக்கும்போதுதான் விஜய் தனியாக கட்சி துவங்கி அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சீமான் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில், சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமானை சந்தித்து பேசியிருக்கிறார் சீமான். கண்டிப்பாக சீமானை பாஜகவே சந்திக்க விரும்பியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

Has our tax money been given to the northern states? Nirmala Sitharaman openly stated this!!

ஏனெனில், அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக போன்ற திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இப்போது சீமானையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. எப்போதும் தனியாகவே தேர்தலை சந்திப்பேன் என சொல்லும் சீமான் இந்தமுறை பாஜக கூட்டணியில் இணைவரா என்பது தெரியவில்லை.

சீமான் தனியாக போட்டியிட வேண்டுமா? இல்லை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமா?.. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்!…