Home Blog Page 316

பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…

0

2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், சசிக்கலாவின் காலில் விழுந்து முதல்வரானவர் எனவும் விமர்சித்து வந்தார்.

மு.க.ஸ்டாலின் சொன்ன விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் பழனிச்சாமி. பாஜகவை பகைத்துக்கொள்ளக் கூடாது என அவர் எடுத்த முடிவால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானர். இதனால் பல விஷயங்களில் அவரின் இமேஜ் டேமேஜ் ஆனது. குறிப்பாக நீட் தேர்வை அனுமதித்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து 13 அப்பாவி மக்கள் இறந்து போனதை ‘டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என சொன்னது, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் செக்யூரிட்டியை கொலை செய்து வீட்டில் இருந்த ஆவணங்களை சிலர் தூக்கி சென்ற விவகாரம் என பலவற்றிலும் பழனிச்சாமி பெயர் அடிபட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். ஆனால், ஸ்டாலினை போல ஒரு சிறப்பான எதிர்கட்சி தலைவாக பழனிச்சாமி செயல்படவிலை. ஏனெனில், அந்த வேலையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்து கொண்டிருந்தார். இப்போது அடுத்த வருடம் தமிழ்நாட்டுக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி காயை நகர்த்த துவங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழலை கையில் எடுத்து அதுபற்றி விவாதிக்க வேண்டும் என சட்டசபையில் கேட்ட அதிமுகவின் கையில் ‘யார் அந்த தியாகி’ என எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘தான் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க யாருடைய காலில் போய் விழுந்தாரோ. இதையெல்லாம் பார்த்து நொந்து போன நூடுல்ஸ் ஆகியுள்ள அதிமுக தொண்டர்கள்தான் தியாகிகளாக இருக்கிறார்கள்’ என பதிலடி கொடுத்தார்.

பெரும் பரபரப்பு!! ED- கையில் சிக்கிய திமுக முக்கிய அமைச்சர்.. பதற்றத்தில் கட்சி தலைமை!!

0

DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது.

இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்த ரெய்டானது அதிகாலையிலேயே ஆரம்பித்துள்ளதால் தற்போது வரை இது ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ரெய்டு முடியும் பச்சத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்க பட்டதா, இவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரிய வரும். தற்பொழுது இவரது திருச்சி வீட்டை சோதனை செய்து வருகின்றனர். இவரது ஆதரவாளர்கள் எனது வீட்டை சூழ்ந்துள்ளதால் அவ்விடம் பரபரப்பாக காணப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வருவதாலும் , மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாலும் இவர்களை பழி வாங்க மத்திய அரசு இப்படி ரெய்டை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறது என விர்சனங்களை முன் வைக்கின்றனர்.

எங்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ,  மேற்கொண்டு நிர்வாகிகளுக்கு இடையூரு கொடுக்கவும் இப்படியான அழுத்தத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்கிறதாம். இதன் மூலம் அவர்கள் மேல் நாம் வகைக்கும் எதிர்ப்புக்கள் மறைக்கப்பட்டு விடும் என எண்ணுகின்றனர், ஆனால் திமுக இதன் எந்த வலையிலும் சிக்காது என தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

ஓபிஎஸ் உடன் கூட்டணியை உறுதி செய்த செங்கோட்டையன்.. சட்டசபையில் நடந்த டிவிஸ்ட்!! ஷாக்கான எடப்பாடி!!

0

ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் ஸ்டெர்லைட் குறித்து பேசும் பொழுது வழக்கு நிலுவையில் உள்ளது பேசக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தீர்கள். அதேபோல தான் இப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். இவர் அவ்வாறு கூறியதும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கையில் பதாகைகளுடன் நின்றனர். அதில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அச்சடிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அந்தப் பதாகைகளைப் பிடித்து காண்பித்த அனைவருக்கும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் கொடுத்து சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சட்டசபையை விட்டு எடப்பாடி உட்பட அனைவரும் வெளியேறினர். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் அங்கேயே இருந்தனர். மேற்கொண்டு சபாநாயகர் கருப்பு பேட்சை வெளிய கழட்டிவிட்டு உள் நுழையுமாறு கூறினார். அச்சமயத்தில் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் வெளியேறாமல் பேட்சை கழட்டிவிட்டு சட்டப் பேரவைக்குள் வந்தார்.

தனது தொகுதி சாயக்கழிவு பிரச்சனை ரீதியான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசினார். மற்ற அதிமுக ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்த போது செங்கோட்டையன் மட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் நின்றது எடப்பாடிக்கும் இவருக்கும் உள்ள போரை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதேபோல செங்கோட்டையன் ஓபிஎஸ் உடன் இணையப் போகிறார் என்பதையும் இதன் மூலம் சூசகமாக கூறியுள்ளார்.

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

0

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை.

இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது.

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக. இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். மேலும், ‘மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நன்றி.. நன்றி’ என சமீபத்தில் மதுரையில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!...

அதோடு, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என இன்று காலை அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது அவர்களோடு செங்கொட்டையன் செல்லவில்லை. மேலும், பேட்ஜை அகற்றிவிட்டு பேசினார். அதேபோல், அதிமுக அனைவரும் பதாகை ஏந்தி நின்றனர். செங்கோட்டையன் அந்த பதாகையை வாங்கவும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செலவன் ‘செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சி பிரச்சனையும் இல்லை. செங்கோட்டையன் பற்றி விரைவில் பழனிச்சாமி பேசுவார்’ எனவும் அவர் தெரிவித்தார்.

அது வேற வாய்!. இது வேற வாய்!.. மோடியை ட்ரோல் பண்ணும் திமுகவினர்!….

0

Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை.

அதற்கு காரணம் தமிழகத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது இல்லை. அதோடு, பாஜக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை கொடுப்போம் என மத்திய அமைச்சர் சொன்னார்.

இந்நிலையில், புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ‘தமிழ்நாட்டுக்கு பல மடங்கு நிதி அதிகமாக வழங்கிவிட்டோம். ஆனால் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்’ என திமுகவை மறைமுகமாக சொன்னார். ஆனால், இதே மோடி 2012ம் வருடம் குஜராத்தின் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தது. அப்போது நிதி விஷயத்தில் கருத்து சொன்ன மோடி ‘குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் பிச்சைக்காரர்களா?.. டெல்லியின் கருணையால் நாங்கள் வாழ்கிறோமா?’ என கேள்வி கேட்டார். அதை இப்போது எடுத்துப்போட்டு ‘அது வேற வாய்.. இது வேற வாய்’ என திமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள்.

பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத மு க ஸ்டாலின்!! இதுதான் காரணம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!!

0

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்ததில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருப்பதாவது :-

உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டதால்தான் தன்னால் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று இதை ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி இடம் தான் தெரிவித்துவிட்டதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட பாம்பன் பாலதரப்பு விழாவில் அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் ராஜ கண்ணன் இருவரும் தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதோட மட்டுமல்லாமல் நீட் தேர்வு குறித்து பேசிய முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வானது தமிழகத்திற்குள் நுழைந்தது என்றும் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருந்தவரில் நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதிலும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்தவரையில் நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட வில்லை என்றும் அவர் இறந்த பின்பு அதிமுகவில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் நீட் நுழைந்து தேர்வினை தமிழகத்திற்குள் நுழைத்துவிட்டதாகவும் நீட் தேர்வினை தமிழகத்திலிருந்து விலக்கு அளித்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணிக்கு வருவோம் என அதிமுகவால் சொல்ல முடியுமா என்பது போன்ற கேள்விகளையும் உதகையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கேட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சியில் பயணிகள்!!12% உயர்ந்த முன்பதிவு.. போக்குவரத்து துறையில் சூப்பர் ஆஃபர்!!

0

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை அதிகரிக்க போக்குவரத்து கழகத்தின் சார்பில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதாவது தனியார் பேருந்துகளை விடுத்து தமிழக போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை செய்து பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகளுக்கு குழுக்கள் மூலமாக பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது 12% முன்பதிவானது கூடியுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேருந்துகளில் பயணிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருவதாகவும், முன்பதிவு மேற்கொள்வதற்கு ஏதுவாக IRCTC பேருந்துகளின் டிஜிட்டல் வர்த்தகத்திற்காக இணைய மற்றும் திறந்தவெளி சேவைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இ சேவை மையங்களில் மக்கள் பேருந்துகளுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!!309 காலிப்பணியிடங்கள்.. ரூ.1,40,000 வரை சம்பளம்!!

0

மத்திய அரசினுடைய பணிகளின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகி தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 137 விமான நிலையங்கள் இருக்கின்றன. இது மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ ஆணையம் என்பதால் தேர்வர்கள் இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் வகையில் தற்பொழுது இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இவற்றில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை கீழே காணலாம்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :-

கல்வித் தகுதி – பிஎஸ்சி ( இயற்பியல் , கணிதம் ) , ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங்

பணி விவரம் – ஜூனியர் எக்ஸிக்யூடிவ்

சம்பள விவரம் – 40,000 முதல் 1,40,000 வரை

மொழி விவரம் – ஆங்கிலம் நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் அவசியம்

வயதுவரம்பு – 27 வயது, எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 32 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை :-

கணினி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் பரிசோதனை, மனோவியல் சோதனை/ உளவியல் மதிப்பீடு/ உடல் மருத்துவ பரிசோதனை அடங்கும்.

கட்டண விவரம் :-

பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பெண்கள், எஸ்.டி/ எஸ்.சி/ மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கால அவகாசம் :-

ஏப்ரல் 24 2025

மேலும் தகவல் அறிய :-

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2002-2025-CHQ.pdf

என்னதா இவங்களுக்குள்ள பகையோ!! சிவகார்த்திகேயனுடன் மோதும் சிம்பு மற்றும் தனுஷ்!!

0

படத்தின் வெற்றியை கணக்கிட்டு நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதற்கு தலைகீழாக நடிகர்கள் ஒருவரை பார்த்த ஒருவர் போட்டி போட்டுக் கொண்ட தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.

உதாரணத்திற்கு நடிகர் விஜயின் சம்பளத்தை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் தானாகவே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். கமலஹாசனும் விக்ரம் திரைப்படத்திற்கு பின்பு தன்னுடைய 30 கோடி சம்பளத்தை 100 கோடியாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க சிம்பு சரியாக படபிடிப்பு தளத்தில் வேலை பார்க்காததால் அவருக்கு பின் வந்த தனுஷ் பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனராகவும் மாறிவிட்டார்.

இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்பொழுது சிவகார்த்திகேயன் வெற்றி படங்கள் கொடுப்பதிலும் சம்பளத்தை உயர்த்துவதிலும் முன்வந்து நிற்கிறார். தற்பொழுது சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால் சிம்பு 8 கோடி மற்றும் தனுஷ் 10 மட்டுமே வரக்கூடிய நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த உயர்வை பார்த்து நாங்கள் தான் சீனியர் எங்களுக்கும் அதைவிட அதிக சம்பளம் அதாவது 35 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேட்பதாக வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்காமல் சம்பளத்தில் மட்டும் நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்வது முறையானதாக இல்லை என்றும் இவர்கள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு தான் தலைவலியாக மாறுகிறது என்றோம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.. நிலம் அபகரிப்பு!! சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா!!

0

சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது குறித்தும் கட்சி மாற்றம் நிகழும் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் கைலாய குறித்து மட்டும் தன்னிடம் கேள்வி கேட்கும் படியும் அதனையும் இந்து மதத்தை குறித்து கேள்விகள் கேட்கும் பட்சத்தில் தன்னால் அதற்கு உறுதியான பதிலை தெரிவிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கைலாசாவில் ஆட்சி மாற்றம் கிடையாது என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு, அமேசான் காடுகளில் குறிப்பாக பொலிவியா பழங்குடியின மக்களின் நில அபகரிப்பு குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா, 1 லட்சம் பேர் இருக்கக்கூடிய இடத்திற்கு யோகா கற்றுத் தருவதற்காக 3 பேர் சென்ற நிலையில் எப்படி அந்த மூன்று பேர் மட்டும் அவர்களுடைய நிலத்தை அபகரிக்க முடியும் என கேள்வி எழுப்பியதோடு, சில நாட்களுக்கு முன்பு எப்படி நான் இறந்து விட்டேன் என ஊடகங்கள் செய்தியை பரப்பினவோ அதேபோன்றுதான் நிலம் அபகரிப்பானது நடைபெறுவதற்கு முன்பாகவே அதாவது நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றதாக ஊடகங்கள் மாற்றி கூறி விட்டன என விளக்கம் அளித்திருக்கிறார்.