Home Blog Page 318

3 லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கிய பிரசாந்த்!. அதுவும் இயக்குனவர் அவரா?!…

0

Actor prashanth: 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். காதல் படங்களில் தொடந்து நடித்ததால் இவருக்கு காதல் இளவரசன் என்கிற பட்டமும் கிடைத்தது.

மணிரத்னம், பாலச்சந்தர், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். இரட்டை வேடத்தில் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரசாந்துக்கு திருமண வாழ்வு சரியாக அமையவில்லை. இதனால் அவரின் இமேஜ் ஸ்பாயில் ஆனது.

அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டார். அபபா தியாகராஜன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தாலும் அவை ஹிட் அடிக்கவில்லை. ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டார். வெங்கட் பிரபுவிஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

hari

இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே 2002ம் வருடம் உருவான தமிழ் எனும் படத்தில் ஹரியின் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். இப்போது 23 வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. பிரசாந்துக்கு ஏப்ரல் 6ம் தேதியான இன்று பிறந்தநாள் என்பதால் இன்று இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் சாய் பல்லவி, கயாடு லோஹர், பூஜா ஹெக்டே ஆகிய மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவருமே இப்போது டாப் மோஸ்ட் நடிகைகளாக இருப்பவர்கள். டிராகன் படம் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியிருப்பவர் கயாடு லோஹர். அமரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றவர் சாய் பல்லவி. தெலுங்கில் முன்னனி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. மொத்தத்தில் மூன்று லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கியிருக்கிறார் பிரசாந்த்.

சீரியல் நடிகர் ஸ்ரீதரன் திடீர் மரணம்!… ரசிகர்கள் அதிர்ச்சி…

கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் ஸ்ரீதரன். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் அப்பா வேடத்தில் அதிகமாக நடித்திருக்கிறார். சின்னத்திரை சீர்யல்களை விரும்பி பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். சென்னை தி.நகரில் குடும்பதுடன் வசித்து வந்தார். இவரின் இறப்பு பற்றி பேசியுள்ள சீரியல் நடிகர் கம்பன் மீனா ‘இப்போதுதான் ஷூட்டிங் முடித்து வந்தேன். ஸ்ரீதரன் இறந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். என்னால் இதை நம்பவே முடியவில்லை’ என பேசியிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாமரை சீரியலிலும் இவர் நடித்தார். இந்த சீரியல் 500 எபிசோட்களை தண்டி ஒளிபரப்பானது. இந்த தொடரில் ஸ்ரீதரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவரின் மரணம் இவருடன் நடித்த சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

sriodhar

ஸ்ரீதருக்கு வயது 62. நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலும் ஸ்ரீதரின் மரணத்திற்கு இறங்கல் தெரிவித்திருக்கிறது.

மிஸ்டர் ஸ்டாலின். நீங்க உங்க அப்பா மாதிரி இல்ல!.. நிர்மலா சீதாராமன் பேச்சு!…

0

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில் நடப்பது இல்லை. மத்தியில் பாஜக அரசு வந்த பின் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. ஆனால், மாநில அரசுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திமுக கடுமையாக எதிர்க்கிறது. நேற்று சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இதற்கான நடைமுறையை குடியரசு தலைவர் தொடங்குவார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு 12 ஆயிரம் கோடி அளவு நிதி மிச்சமாகும். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 1.5 சதவீதம் உயரும். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களுக்கான அடிப்படை விஷயங்களை செய்ய முடியவில்லை’ எனப்பேசினார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆனால், இன்றைய முதல்வர் ஸ்டாலின் தந்தையார் வழியில் செல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்’ என பேசியிருக்கிறார்.

பொதுமக்களே கிரைய பத்திரங்களை தயார் செய்யலாம்!! பதிவுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய அப்டேட்!!

0

Star 2.0 என்ற மென்பொருளை அப்டேட் செய்த பத்திர பதிவுத்துறை இனி சொத்துக்களை வாங்க நினைப்பவர்களே அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில் மென்பொருட்களை வெளியிட்டு இருக்கிறது. இனி கிரைய பத்திரங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிதாக சொத்துக்களை வாங்கக் கூடியவர்கள் தங்களுடைய தரவுகளை கொடுத்து லாகின் செய்து கிரைய பத்திரத்தின் வரைவை மாதிரிகளின் வரைபடங்களை வைத்து தங்களுடைய கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கியமாக என்ன அடிப்படையில் பத்திரத்தை பெற நினைக்கிறோமோ அதன் வகையை தேர்வு செய்து அதன் பின் சொத்துக்களை விற்கக்கூடியவரின் விவரங்கள் மற்றும் வாங்க கூடியவரின் விபரங்களை வெளியீடு செய்து கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என்றும் இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று உங்களுடைய சந்தேகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கிரைய பத்திரங்களை பெறுவதற்கான டோக்கன் மற்றும் பணம் செலுத்தும் வழிமுறைகள் அனைத்தையும் பொதுமக்களே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இனி புதிதாக சொத்துக்களை வாங்கும் பொழுது கிரைய பத்திரங்களை தயார் செய்வதற்காக நிறைய காலங்கள் எடுத்துக் கொள்வது மற்றும் அடிக்கடி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவது போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும் என்றும் தங்களுக்கு தேவையான பத்திரங்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் அதற்கான அனைத்து மென்பொருள்களும் கிரைய பத்திரங்களின் மாதிரிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பதிவு துறை தரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தங்கம் எடுத்து வர வழிமுறைகள்!! இது தெரிஞ்சா போதும்!!

0

உலகில் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவை விடவும் தங்கத்தின் விலை மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை ஆனது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை வாங்கி வர நினைப்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒரு நபர் எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வருவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் :-

✓ 6 மாதங்களுக்கும் மேலாக துபாயில் தங்கி இருக்கக்கூடிய NRI, OCI மற்றும் இந்திய குடிமகன்கள் தங்கத்தை எடுத்து வர தகுதியுடையவர்கள்.

✓ NRI யில் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை 10,000 கிராம்கள் வரை தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும்.

✓ இவ்வாறு எடுத்து வரக் கூடிய தங்கத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் வரி விலக்கு உண்டு. மீதமுள்ள தங்கத்திற்கு சுங்கவரி செலுத்துதல் கட்டாயம்

NRI அல்லாதவர்களுக்கான தங்கத்தின் அளவு விவரங்கள் :-

✓ ஆண் பயணிகள் – 20 கிராம் தங்கம் ( 50,000 )

✓ பெண் பயணிகள் – 40 கிராம் தங்கம் ( 1,00,000 )

✓ குழந்தைகள் – 20 முதல் 40 கிராம் வரையிலான தங்கம். இவை பாலினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

பொதுவாக 40 கிராம் தங்கம் வரை சுங்கவரி கிடையாது. 100 கிராம் வரையிலான தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்த வருவதற்கு மூன்று சதவீத சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கையில் சண்டையை ஒழிக்க ஜாப்பனியர்கள் பின்பற்றும் 5 வழிமுறைகள்!!

0

பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம்.

சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :-

கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகவே, சிறிதாக ஏதேனும் புரிதல் தவறும் பட்சத்தில் உடனடியாக அவற்றைப் பேசி சரி செய்து கொள்ள முற்படுகின்றனர். இதற்கு ஜாப்பனியர்கள் Aimai என்ற வழக்கை பயன்படுத்துகின்றனர். ஒருவேளை நேரடியாக கேட்க முடியாத விஷயமாக இருப்பின் அவற்றை எப்படி மறைமுகமாக தன் துணையின் மனம் புண்படாமல் கேட்க வேண்டும் என்பதை அறிந்து அதன் பின் கேட்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சின்ன சின்ன சண்டைகள் தவிர்க்கப்பட்டு இல்லற வாழ்க்கையில் இனிமை கூடுகிறது.

பொறுமை மற்றும் நிதானம் :-

இவற்றை ஜாப்பனியர்கள் காமன் என்ற வழக்கை கொண்டு பயன்படுத்துகின்றனர். இவற்றிற்கான தமிழ் அர்த்தம் தான் பொறுமை அல்லது நிதானம். உறவுகளுக்கிடையே வெவ்வேறு விதமான கருத்துக்கள் எழுவது சாதாரண விஷயம் தான். ஆனால் அவற்றை உடனடியாக பேசி கருத்துக்களுக்கான விடையை தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம்.

நன்றி அறிதல் :-

இதனை ஜப்பானியர்கள் Itadakimasu என்ற வழக்கை கொண்டு பின்பற்றுகின்றனர். இது சாதாரணமாக ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய நன்றி உணர்வாகும். ஒருவர் நமக்காக உணவு உடை இடம் போன்றவற்றை வழங்கும் பட்சத்தில் அவர் மீது எவ்வளவு நன்றியோடு இருப்போமோ அதே அளவிற்கு நமக்காக நம் மீது காதல் வைத்து நம்மை திருமணம் செய்து கொண்டவருக்கு எந்த அளவிற்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க இந்த வழக்கினை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நேரம் மற்றும் இடம் கொடுத்தல் :-

திருமண வாழ்வு ஒரு நிலைக்கு பல சிரமங்களை திணிக்க தொடங்கும். அது போன்ற சூழ்நிலைகளில் கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபாடு காட்டி தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய இல்லற வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் இருந்து சிந்திக்க இது மிகப்பெரிய ஒரு துணையாக அமைவதாக தெரிவிக்கின்றனர்.

நல்லிணக்கம் :-

இதனை ஜாப்பனியர்கள் wa என குறிப்பிடுகின்றனர். இது கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய உறவை பற்றிய புரிதலையும் மகிழ்ச்சியையும் குறிப்பதாக அமைகிறது. இதை தாண்டி உறவுகளுக்கிடையே அமைதி காக்க வேண்டிய தருணங்களை குறித்தும் இருவருக்கும் இடையில் நல்ல இணக்கமான உறவு ஏற்பட முக்கியமான விஷயங்கள் குறித்தும் தெளிவுபடுத்துவதாக அமைகிறது. இந்த வழக்கத்தின் மூலம் ஈகோவை புறந்தள்ளிவிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்வாழ்வு தொடர முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

பாலுக்கு நிகரான கால்சியம் சத்து கொண்டுள்ள 06 உணவுகள்!! குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்!!

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால்சியம் சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.எலும்புகளின் வலிமை அதிகரிக்க,வயதான காலத்தில் மூட்டு வலி,கை கால் வலி வராமல் இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிலர் பாலில் தான் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் நாம் அன்றாடம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பல வகை உணவுகள் கால்சியம் சத்து கொண்டவையாக இருக்கிறது.

அந்தவகையில் பாலுக்கு இணையான கால்சியம் சத்து நிறைந்த சில வகை உணவுகள் என்னென்ன என்பது தெரிந்து கொள்வோம்.

1)கீரைகள்

நாம் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டிய முக்கிய உணவு கீரைகள்.இதில் போலிக் ஆசிட் அதிகமாக நிறைந்திருக்கிறது.இது தவிர இரும்பு,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

2)தயிர்

பாலில் இருந்து கிடைக்கும் ஒரு பொருள் தயிர்.இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியிலும் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

3)சோயா

பாலுக்கு நிகரான சத்துக்களை கொண்ட சோயாவில் சீஸ்,பன்னீர்,பால் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது.இந்த சோயா உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகமாகும்.

4)பீன்ஸ்

இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் பீன்ஸ் விதைகளை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமை பெறும்.

5)பாதாம்

புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாதாம் பருப்பில் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

6)கறிவேப்பிலை

இதில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.அதேபோல் பழங்கள்,தானியங்கள் சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து கிடைக்கும்.

கடல் மீன் உணவுகளை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,கால்சியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.

கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

0

நம் உடலில் அளவில் பெரியதாக உள்ள உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.இந்த உறுப்பில் அதிகப்படியான அழுக்கு மற்றும் கொழுப்பு குவிந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே நமது கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த இரண்டு பானங்களில் ஒன்றை மட்டும் பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

கருஞ்சீரகம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டும் பொன்னிறமாக வறுபட்ட பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த இரண்டு பொருளையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகம் மற்றும் ஓமப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் பருக வேண்டும்.இப்படி தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கல்லீரலில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் முழுமையாக நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

இந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அகல இந்த கற்றாழை ஜூஸை பருகலாம்.

40 தினங்கள் இதை சாப்பிட்டால்.. ஆண்மை பெருகும்!! நம்புங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும்!!

0

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இந்த செவ்வாழைப்பழம்நம் உடலில் இருக்கின்ற பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

செவ்வாழைப்பழத்தை பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.குழந்தையின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)செவ்வாழைப்பழம் – ஒன்று
2)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த செவ்வாழைப்பழத்தில் தேன் ஊற்றி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் சீக்கிரம் உண்டாக சாப்பிட வேண்டிய ரெமிடி இது.

செவ்வாழைப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.செவ்வாழைப்பழ மில்க் ஷேக்,செய்து சாப்பிட்டு வந்தால் வந்து உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)செவ்வாழைப்பழம் – ஒன்று
2)பேரிச்சம் பழம் – இரண்டு
3)முந்திரி பருப்பு – இரண்டு
4)பாதாம் பருப்பு – இரண்டு
5)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

மந்திரி பருப்பு,பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு செவ்வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி அதில் போட வேண்டும்.இதில் ஒரு கப் பசும் பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

இந்த பாலை தினமும் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கண்ணாடியை தூக்கி வீசும் நேரம் வந்தாச்சு!! ஒரு ஸ்பூன் வேப்பம் பூவை இப்படி பயன்படுத்தினால் கண் பிரைட்டா தெரியும்!!

0

உங்கள் கண் பார்வை திறம் அதிகரிக்க வேப்பம் பூவை பொடித்து சாதம் செய்து சாப்பிடலாம்.வேப்பம் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

கண் பார்வை திறனை அதிகரிக்கும் வேப்பம் பூ சாதம்:

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை பொடி – கால் டீஸ்பூன்
2)வேப்பம் பூ பொடி – இரண்டு டீஸ்பூன்
3)எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
4)சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)
5)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
6)கறிவேப்பிலை – ஒரு கொத்து
7)கடுகு – அரை டீஸ்பூன்
8)உப்பு – தேவையான அளவு
9)சீரகம் – கால் டீஸ்பூன்
10)மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்
11)வர மிளகாய் – இரண்டு
12)உளுந்து பருப்பு – அரை டீஸ்பூன்
13)சூடான சாதம் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் கடுகு,சீரகம்,உளுந்து பருப்பு போட்டு பொரியவிட வேண்டும்.

அதன் பிறகு கறிவேப்பிலை,நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு வர மிளகாயை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள்,கருப்பு மிளகுத் தூள் சேர்த்து கிளற வேண்டும்.அடுத்து இரண்டு வர மிளகாயை கிள்ளி அதில் போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து கால் தேக்கரண்டி வேப்பிலை பொடியை அதில் கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு அரைத்த வேப்பம் பூ பொடி இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு கிளற வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

இறுதியாக சூடான சாதத்தை போட்டு நன்றாக கிளற வேண்டும்.இந்த வேப்பம் பூ சாதத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.வேப்பம் பூ சாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.வேப்பம் பூ சாதம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.