Home Blog Page 319

தேங்காய் பாலில் இந்த பொருளை சேர்த்து குடித்தால்.. எப்படி ஒல்லியானீங்க என்று ஊரே கேட்கும்!!

0

உடலில் இருக்கின்ற ஊளைச்சதை குறைய தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்கள்.நிச்சயம் உங்கள் உடல் எடையில் பெரிய மாற்றம் ஏற்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)வெந்தயம் – அரை தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கற்கண்டு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த தேங்காய் பாலை வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடித்து அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு அரை தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடித்து தேங்காய் பாலில் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இனிப்பு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.தேங்காயை துருவி சாப்பிட்டு வந்தால் அதிக பசி கட்டுப்படும்.தேங்காய் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து இதனுடன் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள் சேர்த்து பருகினால் உடல் எடை வேகமாக குறையும்.

தேங்காய் பாலில் சிறிது ஓமத் தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)சுக்கு – ஒரு துண்டு
3)ஏலக்காய் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி நெருப்பில் போட்டு வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அதேபோல் ஒரு ஏலக்காயை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் இந்த தேங்காய் பாலில் போட்டு குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.

நோட் பண்ணுங்க.. உங்கள் சரும ஆரோக்கியம் பாதிக்க இந்த சின்ன தவறுகள்தான் காரணம்!!

0

நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.நமது சருமத்தை நல்ல முறையில் பராமரித்து வந்தால் வயதானாலும் இளமை தோற்றத்தை தக்க வைக்க முடியும்.நமது சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க வேண்டுமென்று கண்ட க்ரீமைகளை உபயோகப்படுத்தி சருமத்தை பாடாய் படுத்தி எடுக்கின்றனர்.

நமது சருமத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட என்ன காரணம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.நாம் சருமத்தை நல்ல தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாவிட்டால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.

கைகளை அடிக்கடி முகத்தில் வைத்தால் பாதிப்பாகும்.கைகளில் இருக்கின்ற அழுக்குகள் முகத்திற்கு நேரடியாக சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.நிம்மதியற்ற தூக்கத்தால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.கருவளையம்,சருமம் பொலிவற்று போதல் போன்ற பிரச்சனைகள் தூக்கமின்மையால் ஏற்படுகிறது.

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் சரும ஆரோக்கியம் மோசமாகும்.தங்கள் சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருள் பயன்படுத்த தவறினால் முகப்பரு,கரும் புள்ளிகள்,தழும்பு உருவாதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அடிக்கடி முகம் கழுவாமல் இருந்தால் சருமத்தில் டெட் செல்கள் அதிகமாகிவிடும்.இதனால் இளம் வயதில் வயதான தோற்றத்தை சந்திக்க நேரிடும்.முகத்தை சுத்தம் செய்யாமல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

சருமத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தால் அதை முறையாக சுத்தம் செய்யாதபோது சரும ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அடிக்கடி சருமத்தை கழுவினாலும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்தால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

அதிக மனக் கவலை மற்றும் மன அழுத்தப் பிரச்சனை இருந்தால் சரும ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்.எனவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்தவையா?

0

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்த கடையில் இருந்து சோப்,லிக்விட் போன்றவற்றை அதிகம் வாங்குகின்றோம்.இந்த கெமிக்கல் பொருட்களால் நமது தோலில் அரிப்பு,எரிச்சல்,வெடிப்பு போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள சோப் செய்முறையை பின்பற்றி சருமத்தை பாதிக்காத சோப் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பாமாயில் – 3 கப்
2)காஸ்டிக் சோடா – ஒரு கப்
3)தண்ணீர் – ஒன்றரை கப்
4)எசன்ஷியல் ஆயில் – ஒரு தேக்கரண்டி
5)புட் கலர் – சிறிதளவு
6)சபீனா – அரை கப்
7)சோப் மோல்ட் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு காஸ்டிக் சோடா எடுத்து எவர் சில்வர் பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு ஐந்து நிமிடங்களுக்கு கலந்துவிட வேண்டும்.

காஸ்டிக் சோடா நன்றாக கரைந்த பிறகு மூன்று கப் பாமாயில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பாமயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

பிறகு இதை 10 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும்.இப்படி செய்தால் கஞ்சி பதத்திற்கு வந்துவிடும்.

அடுத்து விருப்பம் இருந்தால் இதில் வாசனைக்காக எசன்ஷியல் ஆயில் ஒரு மூடி சேர்த்து கலக்கலாம்.அதேபோல் சோப் நிறம் வர புட் கலர் பயன்படுத்தலாம்.அதன் பிறகு அரை கப் அளவிற்கு சபீனா சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு சோப் மோல்ட் எடுத்து தயாரித்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி 10 மணி நேரம் வரை காயவிட வேண்டும்.இந்த சோப்பை 30 நாட்களுக்கு பிறகு பாத்திரம் துலக்க பயன்படுத்தலாம்.

இந்த பாத்திரம் துலக்க பயன்படும் சோப்பால் நமது கைகளுக்கு எந்தஒரு பிரச்சனையும் வராது.நாம் கடைகளில் வாங்கும் சோப்பைவிட வீட்டில் செய்து பயன்படுத்தும் சோப் கைகளின் ஆரோக்கியத்தை பாதிக்காது.

உடல் கொழுப்பை கரைக்கும் டாப் 6 வெஜிடேபுள்ஸ்!! தினமும் தவறாமல் ஒன்று சாப்பிடுங்கள்!!

0

உங்கள் உடல் எடை குறைய நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை உணவாக சாப்பிடலாம்.இந்த ஆறு வகை காய்கறிகள் உங்கள் உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது.

1)பூண்டு

நாம் தினசரி பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு.இதில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.பூண்டு சாறு உடலில் இருக்கின்ற எல்டிஎல் என்ற கொழுப்பை அதிகரித்துவிடும்.

2)வெண் பூசணி

இந்த காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணி காயை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கொழுப்புகள் குறையும்.வெண் பூசணி சாறு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்பட வெண் பூசணி சாறு குடிக்கலாம்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் குறைய வெண் பூசணி ஜூஸ் உதவும்.

3)பீட்ரூட்

இதில் புரதம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,மாங்கனீசு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பீட்ரூட்டை அரைத்து ஜூஸாக செய்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் படியாமல் இருக்கும்.

இரத்த உற்பத்தியை அதிகரிக்க பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பீட்ரூட் சாறு குடிக்கலாம்.

4)முட்டைகோஸ்

நார்ச்சத்து நிறைந்த முட்டைகோஸை அரைத்து குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.முட்டைகோஸில் இருக்கின்ற வைட்டமின் கே,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

5)சுரைக்காய்

தண்ணீர் சத்து நிறைந்த சுரைக்காயை ஜூஸாக அரைத்து குடித்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

6)கோவைக்காய்

இதில் பொட்டாசியம்,நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கோவைக்காயை உணவாக சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு வேகமாக குறையும்.

ராகி சேமியா இரத்த சர்க்கரை அளவை குறைக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0

சர்க்கரை நோய் நம் இந்தியர்களை பாடாய் படுத்தி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றது.இதனால் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது அரிசி உணவுகள்தான்.அரிசியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

இதனால் வாழ்நாள் முழுவதும் நாம் சர்க்கரை அளவு உயராமல் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.மருந்து மாத்திரையோடு சில ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

அந்தவகையில் சிறு தானிய உணவான ராகி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்றவை அதிகமாக இருக்கிறது.ராகியை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

ராகியை உணவாக சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.உடல் வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்றவை ஏற்படாமல் இருக்கும்.ராகியில் கஞ்சி,கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ராகியில் இட்லி,ராகி தோசை,ராகி இடியாப்பம்,ராகி ரொட்டி,ராகி சேமியா என்று எப்படி சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.அரிசியை காட்டிலும் ராகியில் கிளைசெமிக் என்ற குறியீடு குறைவாக இருக்கின்றது.இதனால் ராகி உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தவையாக உள்ளது.

ராகியில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சிலருக்கு ராகியில் கஞ்சி,கூழ் செய்து சாப்பிட்டு அலுத்து போயிருக்கும்.அவர்கள் ராகி மாவில் தோசை,ரொட்டி,பக்கோடா,அடை போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம்.

தற்பொழுது ராகி சேமியா பிரபலமான உணவாக உள்ளது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் ராகி சேமியா செய்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

WEIGHT LOSS செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய 6 விஷயங்கள்!! இதை செய்தால் உடல் எடை டக்குனு குறையும்!!

0

இந்த காலகட்டத்தில் உடல் எடை கூடுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.உடலில் தேவையற்ற கொழுப்புகள் ஒன்று சேர்வதால் உடல் பருமனாகிறது.உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்தலுக்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.

சர்க்கரை உணவுகள்,கார்போ ஹைட்ரேட் உணவுகள்,எண்ணெய் உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும்.உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் பக்கவாதம்,மாரடைப்பு,சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துவிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க நாம் சில வகை ஆரோக்கியம் தரும் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

நமது உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரைய பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்:

1)தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.வேகமாக நடப்பதால் உடலில் இருக்கின்ற அதிகப்படியான கலோரிகள் குறையும்.

2)தினமும் அரை மணி நேரம் உடலில் வியர்வை வெளியேறும் படியான வேலை செய்தால் சீக்கிரமாக உடல் எடை குறையும்.

3)ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.

4)போதுமான அளவு தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.தினமும் 8 மணி நேர உறக்கத்தை கட்டாயம் உறங்க வேண்டும்.

5)உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் வாரம் ஒருவேளை விரதம் இருக்கலாம்.சீரான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம்.

6)சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.க்ரீன் டீ,மூலிகை பானங்களை பருகலாம்.

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

0

நெல்லிக்காய் தீபம் என்பது பண ஈர்ப்பு சக்திக்காகவும், ஆயுள் நீடித்து இருப்பதற்காகவும் ஏற்றக்கூடிய ஒரு முக்கியமான தீபம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேற நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி வந்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும்.

எந்த விதமான வேண்டுதல்களாக இருந்தாலும் அதற்கு எலுமிச்சம் பழம் அளவில் இருக்கக்கூடிய நெல்லிக்காயை வாங்கிக் கொண்டு, அதனை கத்தியை கொண்டு வெட்டாமல் ஏதேனும் ஒரு பொருளை வைத்து இடித்து அதன் சதைகளையும், கொட்டைகளையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இடித்து எடுத்த சதைகளை அரைத்து நெல்லிக்காய் சாற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு, அதில் 20 மில்லி அளவு இந்த நெல்லிக்காய் சாற்றை கலக்க வேண்டும்.

இப்பொழுது இதனைக் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது நிச்சயமாக உங்களது வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும். இவ்வாறு நெல்லிக்காயை இடித்து சாறு எடுக்க முடியாதவர்கள், விளக்கில் தேங்காய் எண்ணெயை ஊற்றி இடித்த நெல்லிக்காய் சதையை அப்படியே சேர்த்து, பஞ்சுத் திரி அல்லது தாமரைப்பூ தண்டு திரி போட்டு தீபம் ஏற்றினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ஏதேனும் ஒரு வேண்டுதல்களை குறிக்கோளாக கொண்டு தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு இல்லாமல் உங்களது வீட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது அந்த அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால், எத்தனை பிரச்சனைகள் இருக்கிறதோ அத்தனை பிரச்சனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தீபங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

உதாரணமாக உங்கள் வீட்டில் இரண்டு பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், இதேபோன்று இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும். ஒரு சிலர் நெல்லிக்காய் தீபம் என்றால் நெல்லிக்காயை விளக்கு போன்று அறுத்து, அதில் சிறிதளவு மட்டும் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது.

பொதுவாக ஒரு தீபம் என்பது பத்து நிமிடமாவது எரிய வேண்டும். நெல்லிக்காயை அறுத்து அதில் ஏற்றக்கூடிய தீபம் சிறிது நேரம் மட்டுமே எரியும். எனவே ஒரு அகல் விளக்கில் மேலே கூறியது போன்று தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யில் நெல்லிக்காய் சாற்றை கலந்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

அதேபோன்று காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் குத்து விளக்கு இது போன்ற விளக்குகளிலும் இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்ற கூடாது. மண் அகல் விளக்கில் மட்டுமே இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்ற வேண்டும்.

உங்களுடைய வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில், துளசி செடிக்கு இந்த நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வைத்தால், வீட்டில் இருக்கும் கஷ்டம் 3 வாரங்களில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். அதாவது வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் மட்டும் துளசி செடிக்கு முன்னால் நெல்லி தீபம் போட்டு பாருங்கள்.

இந்த நெல்லிக்காய் தீபத்தை நமது வீடுகளில் ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.

2 நிமிடத்தில் வயிற்றுப்போக்கு நிற்க.. பேரிச்சம் பழத்தில் இந்த பொருளை வைத்து சாப்பிடுங்கள்!!

0

வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பொட்டுக்கடலை
2)பேரிச்சம் பழம்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தரமான பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பேரிச்சையின் விதையை நீக்கிவிட்டு அதில் சிறிதளவு பொட்டுக்கடலை வைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

**வயிற்றுப்போக்கு நிற்க ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)அத்திப்பழம்

செய்முறை விளக்கம்:-

இரண்டு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும்.இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலை குளிர்ச்சியாக்கும் இயற்கை பானங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.இந்த வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – ஒரு கப்
2)வெந்தயப் பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தில் பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயப் பொடி போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கிராம்பு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

இந்த கிராம்பு பானத்தை குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகும்.

தலைக்கு அவுரி ஹேர் டை யூஸ் பண்றவங்க சருமம் கருப்பாகிடுமா? உண்மையான விளக்கம் இதோ!!

0

இந்த காலத்தில் இளநரை பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறு வயதில் தலை நரைத்துவிடுவதால் பலரும் முதுமை தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.முதுமையில் நரைத்த முடியை கருமையாக்க டை அடிக்கும் நிலையில் இளநரை பிரச்சனை இருப்பவர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

இளமையில் வந்த தலை நரையை கருமையாக மாற்ற நீங்கள் நிச்சயம் ஹேர் டை பயன்படுத்துவீர்.முன்பெல்லாம் கெமிக்கல் ஹேர் டை பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் தவிர்க்கின்றனர்.கெமிக்கல் ஹேர் டையால் முடி உதிர்தல்,சருமப் பிரச்சனைகள் போன்றவை அதிகமாக இருந்ததன் காரணமாக இயற்கை பொருட்களை கொண்டு தலைமுடியை கருமையாக்குகின்றனர்.

மருதாணி,அவுரி,கறிவேப்பிலை,கருஞ்சீரகம் போன்ற பொருட்கள் தலைமுடியை கருமையாக்க உதவுகிறது.சிலர் தலைமுடி சீக்கிரம் கருமையாக வேண்டுமென்று அவுரி ஹேர் டையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.அவுரி ஹேர் டையை அதிகமாக பயன்படுத்தினால் சரும நிறம் கருமையாக மாறிவிடும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

அவுரி ஒரு இயற்கை மூலிகை பொருள்தான்.இருப்பினும் இந்த அவுரியை கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் டை சில சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே அவுரிப் பொடியை தலைக்கு அதிகமாக பயன்படுத்தாமல் குறைவான அளவு மட்டும் பயன்படுத்தி வாருங்கள்.

அவுரி பொடி பயன்படுத்தி சருமத்தின் நிறம் கருப்பானவர்கள் சருமத்தை வெள்ளையாக மாற்ற செய்ய வேண்டிய அழகு குறிப்புகள் இதோ.

1)பால்
2)சந்தனப் பொடி

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிது காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் வெள்ளையாக மாறும்.

1)முல்தானி பொடி
2)ரோஸ் வாட்டர்

கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி முல்தானி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை சருமத்தில் அப்ளை செய்து நன்கு உலர வைக்க வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் சருமம் பழைய நிலைக்கு வரும்.

கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லையா..?? ஏசி இல்லாதவர்களும் ஏசி காற்றை வாங்கலாம்..!!

0

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிது காற்றையே தரும்.

மேலும் தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பத்தின் தாக்கத்தால், சீலிங் ஃபேன் நன்றாக ஓடினாலும் கூட அந்த காற்று நமக்கு பத்தாது. எனவே ஏசி, ஏர் கூலர் போன்றவற்றை வாங்க இயலாதவர்கள் உங்களது வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் வைத்தே, ஏசியில் இருந்து வரக்கூடிய குளுகுளு காற்றை பெற முடியும்.

ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து தேங்காய் சிரட்டைகள் இருந்தாலே போதும். சீலிங் ஃபேன் மட்டுமே உள்ள வீடுகளில் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை எதிர்பார்ப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் இரவு நேரங்களில் தான் வீட்டின் உள்ளே வெட்கை அதிகமாக இருக்கும்.

மேலும் சிறு குழந்தைகள் இந்த வெயிலின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதாவது வியர்வையின் காரணமாக தோல் அலர்ஜிகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தூங்கும் நேரத்தில் படுக்கை அறையில் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து, ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை பெற்றுக் கொள்வதற்கான செயலை செய்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து ஃப்ரிட்ஜில் உள்ள பிரீசரில் வைத்து விட வேண்டும். அந்த தண்ணீர் நன்கு கட்டியான பின்னர் அதனை எடுத்து விட வேண்டும். இப்பொழுது அதனை சீலிங் ஃபேன் னிற்கு அடியில் ஒரு துணியினை போட்டு, அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஃபேன் சுச்சை ஆன் செய்தால், கீழே உள்ள ஐஸ் கட்டியின் குளிர்ச்சியை பேன் காற்று இழுத்து, குளிர்ச்சியான காற்றை நமக்கு கொடுக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்திற்கு அடியில் கண்டிப்பாக ஒரு துணியை வைத்து விட வேண்டும்.
ஏனென்றால் ஐஸ் கட்டி உருக உருக பாத்திரத்தில் இருந்து சிறிதளவு தண்ணீர் வெளியேறத் தொடங்கும். எனவே பாத்திரத்திற்கு அடியில் ஒரு துணியை வைத்து விட வேண்டும்.

வீட்டில் ஏசி இல்லாதவர்கள் மற்றும் குளிர்ச்சியான காற்றை எதிர்பார்ப்பவர்கள் இந்த எளிமையான முறையை பயன்படுத்தி நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.