Home Blog Page 330

மறந்த நினைவுகள் மீண்டும் திரும்ப வர.. விஷ்ணுகிரந்தி பூவில் டீ போட்டு குடிங்க!!

0

நாம் அறிந்திராத மூலிகைகளில் ஒன்றுதான் விஷ்ணுகிரந்தி.இந்த மூலிகையில் டீ,கஷாயம் போன்ற பானங்கள் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையை அனுபபிப்பவர்கள்,மறந்த பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வர விரும்புபவர்கள் விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம்.

விஷ்ணுகிரந்தி பூவில் டீ தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)விஷ்ணுகிரந்தி பூ செடி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் விஷ்ணுகிரந்தி பூ செடியை வேருடன் பிடுங்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த செடியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள விஷ்ணுகிரந்தி செடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் டீ போட்டு குடித்து வந்தால் மூளையின் செயல்திறன் மேம்படும்.

உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை இருந்தால் இந்த விஷ்ணுகிரந்தி டீ போட்டு குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி டீ நரம்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.பல் வலியை குணமாக்கும் விஷ்ணுகிரந்தி மூலிகையை பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.

விஷ்ணுகிரந்தி மூலிகையில் கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.இரைப்பை நோய் குணமாக விஷ்ணுகிரந்தி பூவை உலர்த்தி பொடித்து டீ போட்டு குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி பூவை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.

சளி குணமாக விஷ்ணுகிரந்தி பூவில் டீ செய்து குடிக்கலாம்.விஷ்ணுகிரந்தி பொடி மற்றும் ஆடாதோடை பொடி சம அளவு எடுத்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உங்கள் குழந்தை கொழு கொழுன்னு வளர.. இந்த கிழங்கில் அல்வா செய்து கொடுங்க!!

0

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க புரதம்,கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.நெயில் வறுத்த பொருட்களை சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.

கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.உலர் விதைகள் மற்றும் பழங்களை பாலில் கலந்து கொடுக்கலாம்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள:-

1)சர்க்கரை வள்ளிக்கிழங்கு
2)பேரிச்சம் பழம்
3)நெய்
4)வெள்ளை ரவை
5)பாதாம் பருப்பு
6)முந்திரி
7)நாட்டு சர்க்கரை

செய்முறை விளக்கம்:-

ஒரு முழு பேரிச்சம் பழம்,நான்கு பாதாம் பருப்பு மற்றும் நான்கு முந்திரி பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் ஒரு சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு மற்றும் பேரிச்சம் பழம் போட்டு பேஸ்ட் பக்குவம் வரும் வரை அரைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் கால் கப் வெள்ளை ரவையை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.ரவை பொன்னிறமாக வறுபட்டு வந்த பிறகு அரைத்த சர்க்கரவள்ளிக்கிழங்கு பேஸ்டை அதில் போட்டு கிளற வேண்டும்.

அதன் பின்னர் 20 கிராம் நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை பனங்கற்கண்டு போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.கலவை சுண்டி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.இந்த அல்வா ஆறிய பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

குழநதைகளின் உடல் எடையை அதிகரிக்கும் அற்புத உணவாக இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகமாகும்.

மூட்டு கிட்ட அதிக வலியா இருக்கா? அப்போ 5 நிமிஷம் ஒதுக்கி இதை பண்ணுங்க வலியே வராது!!

0

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மூட்டு வலி இருக்கிறது.மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்படுதல்,வயது காரணமாக மூட்டு வலி உண்டாகிறது.அதிக நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் முழங்கால் மூட்டு வலி வரும்.

இன்றைய தலைமுறையினர் பலர் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் எலும்புகள் வலிமை இழந்து வலி உண்டாகும்.நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும்.

மூட்டு வலி பாதிப்பிற்கு பல சிகிச்சை இருந்தாலும் சில வகை வீட்டு வைத்தியங்களும் நிவாரணமாக உள்ளது.மூட்டு பகுதியில் வலி இருந்தால் அதை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறும் பொழுது பெரிய பாதிப்பாக மாறிவிடும்.

இளம் வயதில் மூட்டு வலி வந்தால் முதுமை காலத்தில் நடப்பதில் சிரமமாகிவிடும்.மூட்டுகளை வலிமைப்படுத்த வேண்டியது நமது கடமை.நம் ஆரோக்கியத்தின் மீது நாம் அக்கறை செலுத்தினால் மட்டுமே வயதான காலத்தில் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி நமக்கு கிடைக்கும்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூலிகை பானங்கள் செய்து குடிப்பதன் மூலம் மூட்டு வலிமை அதிகரிக்கும்.யூரிக் அமிலத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

வெது வெதுப்பான தண்ணீரை கொண்டு மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.க்ரீன் டீ செய்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.ஆட்டுக்கால் சூப் செய்து குடித்து வந்தால் எலும்பு மஜ்ஜை வலிமை அதிகரிக்கும்.இதனால் மூட்டுகளுக்கு இடையே வலி ஏற்படாமல் இருக்கும்.

தினமும் ஒரு எண்ணெய் கொண்டு மூட்டு பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றை வைத்து மூட்டு பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.கல் உப்பை சூடாக்கி மூட்டு பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் தினமும் உடற்பயிற்சி செய்தால் மூட்டு பகுதியில் வலி குறையும்.அதேபோல் தினமும் ஐந்து நிமிடங்கள் நீங்கள் பின்னோக்கி நடந்தால் மூட்டு பகுதியில் வலி ஏற்படுவது கட்டுப்படும்.முன்னோக்கி நடப்பதைவிட பின்னோக்கி நடந்தால் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

மூக்கு ஒழுகுதா? இந்த கஷாயம் வச்சி குடிச்ச.. உடல் சளி முந்திகிட்டு வெளியேறும்!!

0

உங்களுக்கு தீராத சளி தொந்தரவு இருந்தால் நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய வழிமுறைகளை பின்பற்றலாம்.உங்களுக்கு இருக்கின்ற சளி பாதிப்பை சுக்கு,மிளகு ஆகிய பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு துண்டு
2)மிளகு
3)வெல்லம்
4)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு தோசைக்கல்லில் வைத்து சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.சுக்கு வாசனை வரும் வரை சூடாக்க வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது ஒரு மிக்சர் ஜாரை எடுத்து வறுத்த சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த சுக்கு மிளகு பானம் சுண்டி கால் கப் அளவிற்கு வந்த பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இப்படி செய்தால் உடலில் இருக்கின்ற சளிக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)கற்பூரவல்லி தழை
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 10 துளசி இலை மற்றும் இரண்டு கற்பூரவல்லி தழை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சளி பாதிப்பு குணமாகும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பருகினால் கெட்டியான சளி இளகி வரும்.

குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

0

இந்த காலகட்டத்தில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.யாருக்கு எப்பொழுது என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது.சர்வ சாதாரணமாக கொடிய நோய்களை இந்த தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.இளம் வயதில் சர்க்கரை நோய்,மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

இதில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை குடலிறக்க நோய்.இது மோசமான உணவுமுறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த குடலிறக்க நோயை ஹெர்மினியா என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கின்றனர்.

நமது வயிற்றுப்பகுதியில் குடல் என்ற உறுப்பு இருக்கின்றது.இந்த குடல் பகுதி இடத்தை விட்டு கீழ் இறங்கினால் அதை குடலிறக்கம் என்று சொல்கின்றனர்.தற்பொழுது குடல் இறக்க பிரச்சனைக்கு நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இந்த குடலிறக்கம் வயிற்றில் எந்த பகுதியிலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த குடலிறக்க பிரச்சனையை பெரும்பாலும் ஆண்களே சந்திக்கின்றனர்.ஆண்களின் அடிவயிறு மற்றும் தொடை இரண்டு பகுதிகளும் சேரும் இடத்தில் குடலிறக்க நோய் ஏற்படுகிறது.வயதாகும் பொழுது இந்த பாதிப்பு அதிகமாகும்.

நமது வயிற்றை சுற்றிலும் இருக்கின்ற தசை பலவீனமடையும் பொழுது குடல் இறக்க பாதிப்பு ஏற்படும்.சில பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு குடலிறக்க பிரச்சனையை சந்திக்கின்றனர்.அதிக எடை தூக்குதல்,உடல் பருமன்,சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனை ஆகிய காரணங்களாலும் குடலிறக்க பிரச்சனை ஏற்படுகிறது.

குடலிறக்க அறிகுறிகள்:

1)வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
2)தொப்புளில் நீர் வடிதல்
3)வயிறு இழுத்து பிடித்தல்
4)வயிற்று வலி
5)மலம் வெளியேற்றுவதில் சிரமம்
6)நெஞ்செரிச்சல்
7)குமட்டல்
8)வாந்தி உணர்வு

குடல் இறக்க பாதிப்பை கவனிக்காவிட்டால் என்னாகும்?

நீங்கள் இந்த பாதிப்பை சரியான நேரத்தில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் உடலில் இரத்த ஓட்டம் நின்றுவிடும்,குடல் அழுகி உயிர் போய்விடும்.

குடல் இறக்க சிகிச்சை:

இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும்.குடல் பகுதியில் புடைத்திருக்கும் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் உள்ள தள்ளுதல் அல்லது அவற்றை நீக்குதல் போன்றவை சிகிச்சை மூலம் செய்யப்படும்.

உங்கள் வீட்டு பூஜை அறை 24 மணி நேரமும் தெய்வ கடாட்சத்துடனும், வாசனையுடனும் இருக்க வேண்டுமா..?? இதை செய்யுங்கள் போதும்..!!

0

சில பொருட்களில் இருந்து வெளிவரும் வாசனை எப்போதும் நேர்மறை ஆற்றலை நமது வீட்டில் கொடுத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய நேர்மறை ஆற்றல் தான் இறை சக்தி. நல்ல நறுமணம் நிறைந்த இடத்தில் இறை சக்தி குடியிருக்கும். நம்முடைய வீட்டில் இறை சக்தி நிரந்தரமாக குடியேற வேண்டும் என்றால், எந்த மாதிரியான பொருட்களை பூஜை அறையில் வைத்தால் நல்லது என்பது குறித்த ஆன்மீக தகவல்களை தற்போது காண்போம்.

இப்பொழுது சொல்லக்கூடிய பொருட்கள் அனைத்திலும் இறைசக்தி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பொருட்களை ஒரே நாளில் வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்தெந்த நாட்களில் எந்தெந்த பொருட்கள் கிடைக்கின்றதோ, அதைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தாலே இறையருள் உங்களது வீட்டில் நிறைவாக இருக்கும்.

இறை சக்தி நிறைந்த பொருட்கள்:
1. அரகஜா:
புதியதாக சிலை வாங்கினாலும் சரி, கும்பாபிஷேகத்திற்கு பிறகு சிலைக்கு சக்தி ஊட்டுவதற்கும் சரி அந்த சிலையின் கண்களில் அரகஜா பூசப்படும். சுவாமிக்கு கண் திறக்கும் பொழுது, இந்த அரகஜாவை வைத்து தான் இறை சக்தியை அந்த சிலைக்கு கொடுப்பார்கள்.

இந்த அரகஜாவிற்கு அவ்வளவு சக்தி உண்டு. பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் திறந்த நிலையில் அரகஜா வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இதனுடைய வாசம் உங்களது வீடு முழுவதும் நிரம்பி ஒரு பாசிடிவ் எனர்ஜியை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

2. தாழம்பூ குங்குமம்:
இந்த வாசனைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது. வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டுமாவது மகாலட்சுமி தாய்க்கு இந்த தாழம்பூ குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பூஜை அறையில் இருக்கும் திருவுருவ படங்களுக்கு சந்தனம் வைத்து அதன் மேல் இந்த தாழம்பூ குங்குமத்தை வைத்து பாருங்கள், உங்கள் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும்.

3. மல்லிகை பூ, செண்பகப் பூ:
மல்லிகை பூவின் வாசம் கேட்கவே வேண்டாம், நாம் எல்லோருக்கும் தெரியும் அத்தனை மனம் கொண்டது இந்த பூ என்று. மேலும் எல்லா சுவாமிகளுக்கும் விருப்பமானது. செண்பகப்பூ இதனை தேவலோகப் பூ என்றும் கூறுவார்கள்.

பூ கடைகளில் சொல்லி வைத்து இரண்டு பூவோ அல்லது மூன்று பூவோ உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கி, சுவாமி திருவுருவப்படங்களுக்கு வைப்பது அவ்வளவு நல்லது.

4. மரிக்கொழுந்து:
இது பச்சை நிறத்தில் இலை போலத்தான் இருக்கும். ஆனால் இதனுடைய வாசம் தெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாசனை இருக்கக்கூடிய இடத்தில் தெய்வங்கள் நிச்சயம் தங்கும். இந்த மரிக்கொழுந்து கிடைத்தாலும் சுவாமி படங்களுக்கு வையுங்கள்.

உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களுக்கு இந்த மரிக்கொழுந்தை வாங்கி கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.

5. பச்சைக் கற்பூரம்:
பச்சைக் கற்பூரத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். பச்சைக் கற்பூரத்திற்கும் இறை சக்தியை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை திறந்த நிலையில் வைத்து, உங்கள் வீட்டில் வரவேற்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை, பூஜை அறை என அனைத்து அறையிலும் வைத்துக் கொண்டாலே போதும் வீடு முழுவதும் தெய்வீக மணமுடன் இருக்கும்.

மேலும் இதன் வாசனை பாசிட்டிவ் எனர்ஜியையும், இறை சக்தியையும் அதிகரிக்க செய்யும். குடும்பமும் சந்தோஷமாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் இருக்கும்.

பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சூட்டக்கூடிய பூக்கள் வாடிவிட்டால் அதனுடைய வாசனை போய்விடும். காலை, மாலை என இரு வேளையும் புதியதாக பூக்களை போட்டு பூஜை செய்தாலும், அதனுடைய வாசனை சிறிது நேரம் மட்டுமே இருக்கும்.

24 மணி நேரமும் பூஜை அறை வாசனையாக இருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தன பொடி 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், ஜவ்வாது 1/4 ஸ்பூன் போட்டு இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி கலந்து பூஜை படங்களுக்கு பொட்டு வைத்தால், இந்த வாசனை அப்படியே நிறைவாக இருக்கும். இதில் இருக்கும் ஜவ்வாது மற்றும் பன்னீரின் வாசனை எப்பொழுதும் நிலைத்து இருக்கும்.

அதே போன்று சுவாமிக்கு வைக்கக்கூடிய சாமந்தி பூவானது வாசனை அற்று தான் இருக்கும். இந்த பூவினை சுவாமி படங்களுக்கு வைப்பதற்கு முன்பாக, பன்னீரில் நினைத்து வைப்பதன் மூலம் பன்னீரின் வாசனை நிறைந்து காணப்படும்.

உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

0

நமது உடல் வலிமைக்கு எண்ணெய் மசாஜ் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சூடு குறைவதோடு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.உடலில் என்ன இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மசாஜ் செய்ய வேண்டிய இடங்கள்:

1)தலை

நல்லெண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முடி உதிர்வு,தலை சூடு,கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும்.

2)தொப்புள்

தினமும் தூங்குவதற்கு முன்னர் தொப்புள் பகுதியில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்தால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் நரம்புகள் வலிமை அதிகரிக்கும்.

3)முழங்கால்

தினமும் விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய் கொண்டு மூட்டு பகுதியில் மசாஜ் செய்தால் வலி குறையும்.முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்கள் எண்ணையை சூடாக்கி மூட்டு பகுதியில் ஊற்றி மசாஜ் செய்தால் வலி,வீக்கம் குறையும்.

4)முகம்

நம் முகத்தில் பாதாம்,ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.சரும சுருக்கம் நீங்குவதோடு இயற்கையான ஒரு பொலிவை முகத்திற்கு கொடுக்கிறது.

5)கால் பாதம்

இரவில் தூங்கும் போது கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

6)கை

கைகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் கை வலி ஏற்படாமல் இருக்கும்.

7)கண்

விளக்கெண்ணையை கண்களை சுற்றி அப்ளை செய்து சிறிது நேரம் லேசாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் வலி,கண் எரிச்சல்,கண் வீக்கம்,கண் சூடு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

“வேல்மாறல்” இந்த 4 வரிகள் மட்டும் தினமும் சொன்னால் போதும்..!! அனைத்து கஷ்டத்தையும் போக்கும்..!!

0

முருகனுக்கு உகந்த பாடல்கள் என்றாலே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இது போன்றவைகள் தான் முதலில் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் பார்வதி தேவி தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து ஒரு வேலினை உருவாக்கி, அதனை முருகப்பெருமானின் கைகளில் கொடுத்துள்ளார். அத்தகைய சிறப்பிற்குரிய வேலை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடல் தான் இந்த “வேல்மாறல்”.

எவர் ஒருவர் இந்த வேல் மாறலை தினமும் பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு இந்த வேலினுடைய சக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த வேல் மாறலை முழுவதுமாக படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை மற்றும் அந்த வரிகளை உச்சரிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறு படிக்க முடியாதவர்கள் வேல் மாறலுக்கு உரிய இந்த நான்கு வரிகளை மட்டும் தினமும் படித்தால் போதும், வேல்மாறலை முழுவதுமாக படித்ததற்கு உண்டான பலன் நிச்சயமாக கிடைக்கும். வேலினை வைத்து வழிபடுபவர்கள், முருகனுக்கு அருகில் இந்த வேலினை வைத்து தினமும் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

வேலினை வைத்து இந்த வேல் மாறலை தினமும் கூற விரும்புபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வேலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து, தீபம் ஏற்றி வேல்மாறலை பாராயணம் செய்யலாம். இவ்வாறு வேலினை வைத்து வழிபாடு செய்பவர்கள் வாரந்தோறும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் சிறியதாக ஒரு அபிஷேகத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

வேல் இல்லாதவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றியும், இந்த பாடலை பாராயணம் செய்து மனதார வேண்டிக் கொள்ளலாம். இந்த வேல்மாறல் பாடலை உங்களால் எந்த நேரத்தில் முடியுமோ, அந்த நேரத்தில் பாராயணம் செய்து கொள்ளலாம்.

தீராத துன்பங்கள் உங்களை வாட்டி வதைக்கின்ற பொழுது, வேறு எவரும் உங்களுக்கு உறுதுணையாக இல்லை என்று நினைக்கும் பொழுது, முருகனை மனதார நினைத்து அவரை அழைத்து, இந்தப் பாடலை பாராயணம் செய்தால் போதும். அவர் ஓடோடி வந்து உங்களுக்கு தேவையான அனைத்து பலன்களையும் அள்ளித் தருவார்.

உங்களுக்கு ஏதேனும் ஒரு வேண்டுதல்கள், தேவைகள், ஆசைகள் இதுபோன்று எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்று, முருகனை நினைத்து தினமும் இந்த வேல் மாறலை பாராயணம் செய்வதன் மூலம், நிச்சயம் உங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.

வேல்மாறல் வரிகள்:

“திருத்தணியில் உதித்(து)தருளும்
ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன்
மயில் நடத்துகுகன்வேலே”

வேல்மாறல் பாடலை முழுவதுமாக பாராயணம் செய்ய முடியும் என நினைப்பவர்கள், முருகப்பெருமான் படத்திற்கு அல்லது வேலுக்கு முன்பாக அமர்ந்து பாராயணம் செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் இந்த 4 வரிகளை மட்டும் 16 முறை கூறினால் போதும் முழு பாடலை படித்ததற்கான பலன் கிடைக்கும்.

இவ்வாறு பாடலை பாராயணம் செய்து பூஜை செய்து முடித்த பிறகு, ஏதேனும் ஒரு முக்கியமான செயலுக்காக வெளியில் செல்கிறீர்கள் என்றால், அதில் எந்த தடைகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த வேலினையும் உங்களுக்கு துணையாக எடுத்துக் கொண்டு செல்லலாம்.

இவ்வாறு எடுத்து செல்லும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் காரிய வெற்றி ஏற்படும். இந்த வேல் மாறலின் சிறப்புகளை மற்றவர்கள் கூறுவதை கேட்பதை காட்டிலும், நீங்களாகவே 48 நாட்கள் தொடர்ந்து வேல்மாறலை பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வரும்பொழுது ஏற்படக்கூடிய மாற்றங்களை கண்டு நீங்களே வியந்து போவீர்கள்.

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

0

இந்த நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.அளவாக சாப்பிட்டாலும் சோம்பல் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.

அதிக கலோரி நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்,சசரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமல் இருத்தல்,ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உரிய உடற்பயிற்சி இல்லாமை,உடல் நோய்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது.

தூக்கமின்மை,உடல் சோர்வு போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கரித்துவிடும்.அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.வெளியில் அதிக துரித உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.

உடல் எடை எந்த வயதினருக்கும் வரக் கூடிய பிரச்சனைதான்.இந்த காலத்தில் உடல் எடை அதிகரிப்பு வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையாக இருப்பதால் அதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்தால் பல நோய்கள் உருவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை இருக்கிறது என்றாலும் அதை எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.

நமது உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நாம் தினமும் 10 நிமிடம் மாடிப்படி ஏறி இறங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.நாம் மாடிபடி ஏறுவதால் கால் தொடைகளில் உள்ள கொழுப்புகள் தானாக குறையும்.

இதுவும் ஒருவித உடற்பயிற்சிதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் கொழுப்பு குறைந்துவிடும்.

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

0

இக்காலத்தில் கேன்சர் பாதிப்பு பொதுவான கொடிய நோயாக மாறி வருகிறது.பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தான் பலரும் சந்திக்கின்றனர்.நமது மலக் குடல் பகுதியில் உருவாகும் இந்த புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.உலகளவில் பெரும்பாலான மக்கள் உயிரிழக்க காரணம் புற்றுநோய் பாதிப்பு.இது மனிதர்களை மெல்ல மெல்லக் கொள்ளும் ஒரு நோயாக உள்ளது.

புற்றுநோய் பாதிப்பு வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.உடலில் அதிக கொழுப்பு குவிதல்,புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள்:-

1)நீங்கள் வெளியேற்றும் மலத்தில் இரத்தம் தென்பட்டால் அலட்சியம் செய்யக் கூடாது.இது மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

2)அதீத உடல் எடை இழப்பு,வயிறு பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்றவை மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

3)மலம் கழிப்பதில் அதிக சிரமம் இருந்தால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவும் மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணங்கள்:

1)ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுதல்

2)அதிகளவு புகைபிடித்தல்

3)மோசமான வாழ்க்கைமுறை பழக்கம்

4)உடல் உழைப்பு இல்லாமை

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்:

**அறுவை சிகிச்சை
**கீமோ தெரபி
**கதிரியக்க சிகிச்சை

உங்களுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.