Home Blog Page 329

என்னது.. அண்ணனுக்காக நான் கடனை கட்டணுமா!! என்னால இது எல்லாம் முடியாது.. நடிகர் பிரபு!!

0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் பெற்றுள்ள கடனை இளைய மகனான பிரபு அவர்களை அடைக்கும் படி நீதிமன்றத்தில் கேட்ட பொழுது அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் பிரபு அவர்கள். அவர் நீதிபதிகளிடம் தெரிவித்த காரணங்கள் நீதிபதிகளை மட்டுமின்றி ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனமானது ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக சிவாஜி அவர்களின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடமிருந்து 3, 74,75,000 பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.

இந்த கடனானது கட்டப்படாமல் விடப்பட்டதாலும், கடன் பெற்ற பொழுது ஒவ்வொரு மாதமும் 30 சதவிகித வட்டியுடன் சேர்த்து அசலையும் அடைத்து விடும்படி கூறிய நிலையில் அதனை சரிவர செய்யாததால் இது வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு வழக்காக மாற்றப்பட்ட நிலையில் அந்த கடன் தொகை 9 கோடியை தாண்டியது. இந்த வழக்கினை விசாரித்த ஹை கோர்ட் நீதிபதிகள் சிவாஜி அவர்களின் வீட்டை ஜப்தி செய்த அதை விற்று அதில் வரக்கூடிய பணத்தை தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இருக்கு வழங்கச் சொன்னது.

இதனை எதிர்த்து நடிகர் பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்து, தான் இதுவரை 1 ரூபாய் கூட வெளியில் கடன் பெற்றதில்லை என்றும் தன்னுடைய அண்ணன் ராம்குமார் அவர்கள் வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுவரை கடனை பெற்று விடாத என்னுடைய சொத்துக்களும் இதில் முடக்கப்பட்டுள்ளது என்றும் தன்னுடைய தந்தையின் வீட்டில் தனக்கும் உரிமை இருப்பதால் அதனை ஜப்தி செய்ய கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உங்களுடைய அண்ணன் தானே நீங்கள் உங்கள் அண்ணனுக்கு அந்த தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா என நீதிபதி கேட்டதற்கு, என்னால் யாருடைய கடனுக்கும் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கி வைத்திருப்பதால் என்னால் அவருடைய கடன்களை கட்ட முடியாது என்றும் திட்டவட்டமாக நடிகர் பிரபு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மகிழ்ச்சியில் வங்கியில் கடன் பெற்றவர்கள்!! குறைய போகும் வட்டி விகிதம்!!

0

இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக அறிவிக்கப்பட்டது. இது EMI போட்டுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறியது. அதாவது வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இது மிகப்பெரிய நற்செய்தியாக மாறியது.

காரணம், இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்த உடன் பல வங்கிகள் தங்களுடைய வங்கி கடன்களின் வட்டி விகிதங்களை குறைத்தது. இந்த மிகப்பெரிய மாற்றம் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியான செய்தியாக மாறியது. அதனை தொடர்ந்து மீண்டும் ரிசர்வ் வங்கி ஆனது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்பொழுது வெளியாக இருக்கிற தகவலின்படி, 6.25% ஆக இருக்கக்கூடிய ரெப்கோ வட்டி விகிதமானது மீண்டும் 0.25% குறைக்கப்பட்டு 6% மாற்றப்பட அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைப்பதன் மூலம் மேல்கூறியவாறு வங்கி கடன் பெற்றவர்கள் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு இது மிகப்பெரிய நற்செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!…

0

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார்.

குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, பேரன் என இவர்களே நாட்டை ஆளவேண்டுமே?.. இது என்ன மன்னராட்சியா?.. என்கிற கேள்வி அவரின் மனதில் இருக்கிறது. அதனால்தான் திமுகவை குடும்ப அரசியல் என தொடந்து விமர்சித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடும்போதும் ‘மன்னராட்சி முதல்வரே’ என்றுதான் பேசுகிறார்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்திலும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திமுகவினரும், திமுக ஆதரவு நடிகர்களும் விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள், நடிகர் போஸ் வெங்கட் கூட ஒரு மேடையில் விஜயை திட்டினார்.

எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!...

கலைஞர் கருணாநிதி 14 வயதில் கதை எழுதி கொண்டிருந்தார். திமுக கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் மகன் ஸ்டாலின் 14 வயதில் தனது அப்பா கலைஞர் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களிடம் அரசியல் பேசியதை பார்த்துகொண்டிருந்தார். ஆனால், ஜோசப் விஜயான நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. உங்கள் அப்பா சினிமாவுக்கு கதை எழுதி கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள்.. வாரிசு அரசியல் என சொல்கிறீர்களே.. நீங்கள் வாரிசு இல்லையா?.. உங்கள் அம்மா, மாமா, சின்னம்மா, தாத்தா, அப்பா என எல்லாமே சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. நீங்கள் சினிமா வாரிசு’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான கே.பாக்கியராஜ் விஜயை விமர்சித்திருக்கிறார். ’நீ எதையா குடும்ப அரசியல்னு சொல்ற?. சின்ன வயசுல இருந்து கழகத்துக்காக பாடுபட்டு சைக்கிளில் போய் ஊர் ஊரா சுத்தி கட்சிக்காக வேலை செய்து, எவ்வளவோ போராட்டங்களை செய்து 67 வயதில் முதல்வராக வருவதை குடும்ப அரசியல்னு வாய் கூசாமல் சொல்ற’ என விமர்சித்திருக்கிறார்.

பாக்கியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதிமுகவின் ஆதரவாளர். ஆனால், இப்போது திமுகவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகையை பலாத்காரம் செய்ய ரூ.1.5 கோடி!! பல பேர இப்படி.. மாட்டிய நடிகர் திலீப்!!

0

கடந்த 2017 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிரபல மலையாள நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் அவருடைய கார் டிரைவர் உட்பட 7 கைது செய்யப்பட்டனர். பலாத்காரம் செய்வதற்கு திட்டமிட்டது மற்றும் அதற்காக கொடுக்கப்பட்ட பணம், இதுபோல இன்னும் எத்தனை நடிகைகள் என்பது போன்ற விவரங்களை வழக்கில் சிக்கிய கார் டிரைவர் கூறியிருப்பது மலையாளத் திரை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில் இடம் விசாரித்த பொழுது, இந்த பலாத்காரத்திற்கு முக்கிய காரணம் மலையாள நடிகர் திலீப் என தெரிய வந்திருக்கிறது. உடனடியாக போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது பல திடிக்கிடும் உண்மைகளை வெளியிட்டு இருக்கிறார்.

பல்சர் சுனில் தெரிவித்திருப்பதாவது :-

நடிகையை பலாத்காரம் செய்வதற்கு திட்டமிட்டது நடிகர் திலீப் அவர்கள் தான் என்றும், இதற்காக எங்களுக்கு ரூ.1.5 கோடி ரூபாய் தருவதாக கூறிய நிலையில் 80 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். தனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்த நடிகை மட்டுமில்லாது மலையாள திரை உலகில் பல நடிகைகளை இதுபோன்று பலாத்காரம் செய்திருப்பதாகவும் கார் டிரைவர் பல்சர் சுனில் தெரிவிப்பது திரையுலகை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

விவசாயிகளுக்கு வந்த அதிர்ஷ்டம்!!22 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு!!

0

தமிழக அரசு வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதோடு, விவசாயம் தொடர்பான 22 முக்கிய மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இது அனைத்திலும் விவசாயிகள் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும் வேளாண் துறையில் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் முக்கிய மற்றும் புதிய 22 அறிவிப்புகள் பின்வருமாறு :-

✓ 7 ஒருங்கிணைந்த வேளாண்மை தமிழ்நாடு விரிவாக்க மையங்கள் 25.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ திருநெல்வேலி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் என 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

✓ மானாமதுரையில் குளிர் பதன கிடங்கு வசதிகள் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட இருக்கிறது.

✓ குறுவட்ட அளவில் செயல்படும் 5 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு ரூ.3.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ வேளாண் இயந்திர கூடாரங்கள் 15 இடங்களில் 3.30 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

✓ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்னணு வரகை பதிவேடு பொருத்தப்பட 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

✓ தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்ய தஞ்சையில் எங்கே வரும் உயிரியல் பூச்சிக்கொல்லி ஆலையில் புதிய கட்டிடத்தை வடிவமைக்க 85 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

✓ தோட்டக்கலைத் துறைக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக அளவு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

✓ மாம்பழ விவசாயிகளுக்கு கடன் உதவியுடன் மாம்பழக் கூழ் தயாரிப்புக் கூடம் அமைக்க 8 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 12.22 லட்சும் ரூபாய் விகிதம் 98 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ புதிய நடமாடு மண் பரிசோதனை நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைக்க 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ அரசு இயந்திர கலப்பை பணிமனைகளில் விவசாயிகளுக்கு தேவையான சிறிய இயந்திரங்களை உருவாக்கி வழங்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ சேலத்தில் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் புதிய வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மையம் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி தொடர்பான பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஒருங்கிணைந்து தரகட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ தென்னை விவசாயிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முறையான பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மாம்பழ விவசாயிகளுக்கு மாமரங்களில் கவாத்து செய்வது குறித்து செயல் விளக்க விழிப்புணர் பயிற்சி வழங்கப்படும் என்றும் முதல் கட்டமாக 500 நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்திரை போடாமலே சுகர் கட்டுப்பட.. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை போட்டு குடிக்கலாம்!!

0

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இலவங்கப்பட்டையில் இருக்கின்றது.பிரியாணி,கறிக்குழம்பு போன்ற உணவுகளின் ருசியை கூட்டும் இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்திருக்கிறது.

இலவங்கப்பட்டையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.டீ,காபி போன்ற உடலுக்கு கேடு தரும் பானங்களுக்கு பதில் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இலவங்கப்பட்டை தேநீர் நன்மைகள்:

**சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையில் தேநீர் செய்து குடித்தால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

**உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம்.உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இலவங்கப்பட்டை தேநீர் பருகுவது நல்லது.

**இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய இதய ஆரோக்கியம் மேம்பட இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.

**பெண்களுக்கு சரியான நேரத்தில் மாதவிடாய் வர இலவங்கப்பட்டை தேநீர் உதவும்.பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகா இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடிக்கலாம்.

இலவங்கப்பட்டை தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1.இலவங்கப்பட்டை – ஒன்று
2.தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு இலவங்கபட்டை துண்டு எடுத்து உரலில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அதன் பிறகு அரைத்த இலவங்கப்பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த இலவங்கபட்டை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு குடிக்கலாம்.

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

0

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பார்லி அரிசி – 50 கிராம்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)மிளகு – கால் தேக்கரண்டி
4)இந்துப்பு – சிறிதளவு
5)பூண்டு பற்கள் – ஐந்து
6)கேரட் – ஒன்று
7)வெங்காயம் – ஒன்று
8)இஞ்சி – ஒரு துண்டு
9)பின்ஸ் – இரண்டு
10)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 50 கிராம் பார்லி அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு தண்ணீரை வடித்துவிட்டு பார்லி அரிசியை ஒரு காட்டன் துணியில் போட்டு பரப்பிவிட வேண்டும்.

2.ஒரு மணி நேரம் காய்ந்த பிறகு அரிசியை வாணலியில் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பார்லி அரிசியை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து ஒரு முழு கேரட் மற்றும் இரண்டு பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பெரிய வெங்காயம்,ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஐந்து வெள்ளைப் பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பார்லி அரிசியை அதில் கொட்டி கிண்டிவிட வேண்டும்.அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி,கேரட் மற்றும் பீன்ஸ் துண்டுகளை அதில் போட வேண்டும்.

5.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி கருப்பு மிளகை போட வேண்டும்.இதற்கு அடுத்து குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்க வேண்டும்.இந்த பார்லி கஞ்சியை குடித்து வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் எல்டிஎல் கொழுப்பு கரைந்துவிடும்.

பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பார்லி கஞ்சி போல் பார்லி ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வெறும் 3 வேளை இதை சாப்பிட்டால்.. அல்சர் புண்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்!!

0

உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

வாழைப்பழம்

தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.

தேங்காய் பால்

ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

பாதாம் பிசின்

குளிர்ச்சி தன்மை நிறைந்த பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருளாகும்.இந்த பாதாம் பிசின் பல நன்மைகளை கொண்டுள்ள மருத்துவ பொருளாகும்.இந்த பாதாம் பிசினை தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பின்னர் இந்த பிசினை ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் கலந்து குடித்தால் அல்சர் புண்கள் குணமாகும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக எடுக்க வேண்டும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஐந்துமுறை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இந்த ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த கற்றாழை ஜூஸை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரமாக குணமாகும்.

மணத்தக்காளி ஜூஸ்

வயிற்றுப்புண்களுக்கு நல்ல தீர்வாக மணத்தக்காளி கீரை உள்ளது.இந்த கீரையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மணத்தக்காளி கீரை ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.

ஆயுசுக்கும் மலச்சிக்கல் வராமல் இருக்க.. இதை ஒருமுறை பண்ணுங்க!! 100% பலன் உண்டு!!

0

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பானம் உள்ளது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
6)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு,ஒரு தேக்கரண்டி ஓமம்,ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து அடுப்பு தீயில் குறைவாக வைத்து வறுக்க வேண்டும்.

நன்றாக வறுப்பட்டு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதனை ஒரு தட்டில் கொட்ட வேண்டும்.அடுத்து வாணலி சூட்டில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை போட்டு வறுக்க வேண்டும்.இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு காற்றுப்புகாத டப்பாவில் இந்த பொடியை கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் சீரகக் கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடாகி கொண்டிருக்கும் பானத்தில் சேர்க்க வேண்டும்.

இந்த பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இந்த ஆரோக்கிய பானம் மலம் தேங்குவதை தடுக்கிறது.வாழ்நாளில் மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்காமல் இருக்க நீங்கள் இந்த பானத்தை அவசியம் செய்து குடிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)பெருங்காயத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து வெந்தயம் ஒரு தேக்கரண்டி போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அரைத்த வெந்தயத் தூள் சேர்த்து சிறிது கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி பெருங்காயத் தூள் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

0

உங்கள் தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்க அடர்த்தியான முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் செய்முறையை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெட்டி வேர் – 20 கிராம்
2)மகிழம் பூ – 20 கிராம்
3)வலம்புரி காய் – 20 கிராம்
4)பசும் பால் – ஒரு கிளாஸ்
5)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி

பயன்படுத்தும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் வெட்டிவேர்,மகிழம் பூ,வலம்புரி காய் ஆகியவற்றை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கிளாஸ் காய்ச்சாத பசும் பால் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.10 மணி நேரம் வரை ஊறினால் போதுமானது.

ஸ்டெப் 03:

அதன் பிறகு இந்த கலவையை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை வாணலி ஒன்றில் போட்டு 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து பாட்டிலுக்கு வடிகட்டி வைத்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இந்த மகிழம் பூ எண்ணெய் தலையில் முடி உதிர்வு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் புதிய முடி வளர வைக்க உதவுகிறது.இந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.தலையில் உள்ள பேன்,ஈறு போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வேப்பிலை – ஒரு கைப்பிடி

பயன்படுத்தும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த வேப்பிலை பேஸ்டை ஒரு இரும்பு கடாயில் போட்டு 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த எண்ணையை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.