Home Blog Page 332

ஒரு வாரம் ஆகியும் செல்ப் எடுக்காத வீர தீர சூரன்!.. வசூல் இவ்வளவுதானா?!…

0

சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் 27ம் தேதி காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதன்பின் பேசி தீர்க்கப்பட்டு மாலை 5 மணிக்கே தியேட்டர்களில் வெளியானது. எனவே, முதல்நாள் வசூல் பாதிக்கப்பட்டது.

அதேநேரம் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இந்த படத்திற்கு விக்ரம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். விக்ரமும் எல்லா ஊர்களுக்கும் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். ஒருபக்கம் படம் நன்றாக இருப்பதாக விமர்சனமும் வந்தது. குறிப்பாக விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் சொன்னார்கள்.

ஆனால், படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தபின்னரும் படம் பெரிய வசூலை பெறவில்லை. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இந்தியாவில் 28.5 கோடியும், வெளிநாடுகளில் 7 கோடி என மொத்தம் 35 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. போன ஞாயிறு அன்று இந்தியாவில் 6.75 கோடி வசூல் செய்ததே அதிக வசூல். அதன்பின் வசூல் குறைந்து இப்போது தினமும் 2 கோடி என்றே வசூலாகி வருகிறது. மொத்தத்தில் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் மகத்தான வசூலை பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

0

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி.

டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமித்ஷாவுக்கு அதில் விருப்பமில்லை என்கிறார்கள். எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா.

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!...

ஏற்கனவே அதிமுகவில் தனியாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் இதற்கான வேலைகளை செய்ய துவங்கிவிட்டார்.. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. ‘இப்போது இது வேண்டாம். பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும்’ என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது.

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக. இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

poster

இந்நிலையில், மதுரை முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நன்றி.. நன்றி. இப்படிக்கு மிசா C.S. செந்தில் மத்திய தொகுதி செயலாளர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி இருக்கும்போது செங்கோட்டையனை பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கோட்டையனை தொடந்து அமித்ஷாவை சந்தித்த அந்த 2 பேர்!.. டெல்லியில் நடப்பது என்ன?!…

0

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது, அவருக்கு பின் செங்கோட்டையன் சென்று அமித்ஷாவை சந்தித்தது, மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி என்று அமித்ஷாவிடம் பேசியது என கடந்த சில நாட்களில் தமிழக அரசு சூடு பிடித்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தொடர்ந்து செல்லி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

eps
eps

ஆனால், திடீர் திருப்பமாக அமித்ஷாவை சந்திக்கப்போனார். மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போனேன் என அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. ‘அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ரெடி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமித்ஷாவுக்கு அதில் விருப்பமில்லை என்கிறார்கள்.

ஒருபக்கம், தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையை மாற்றும் எண்ணம் அமித்ஷாவுக்கு இல்லை எனவும் சொல்கிறார்கள். அதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்கும் வரை அதிமுக – பாஜக கூட்டணி அமையாது என்பதால், பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை வைத்து அதிமுகவுக்கு புதிய தலைமையை உருவாக்கும் எண்ணமும் அமித்ஷாவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் அந்த தலைமையாக இருக்கலாம் என்கிறார்கள்.

eps

அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை ஆகியோரும் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனித்தனியாக சந்தித்து பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவரை 2 முறை செல்லி சென்று பாஜக தலைகளை பார்த்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். எனவே, வரும் நாட்களில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் என்றும் சொல்கிறது டெல்லி வட்டாரம்.

தனித்து விடப்பட்ட தவெக! அரசியல் அனாதையான விஜய்? காரணம் இது தான்

0

Vijay: நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எனும் புதிய கட்சியை தொடங்கினார். தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என ஆரம்பத்தில், அவரது அரசியல் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது தமிழக அரசியலில் ஒரு வலுவான அணியாக திகழ்வதற்கான சவால்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம்

விஜய் தனது கட்சியை தொடங்கியதும், இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்றார். அவர் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்தினார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற ஒரு வலுவான கூட்டணி ஆதரவு அவசியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

முதல் மாநாடு – கூட்டணிக்கான எதிர்பார்ப்பு

தவெக கட்சியின் முதல் மாநாடு மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. இதில், விஜய் எந்தக் கட்சியுடனும் இணைகுறது பற்றி தெளிவாக வெளிப்படுத்தவில்லை. அவர் பாஜகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தாலும், அதிமுகவின் பெயரை சொல்லாமல் இருந்து கவனம் ஈர்த்தார். இதனால், அவருக்கு அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும்  பங்கு 

தவெக கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய அவர் தன்னுடன் கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிப்பதாக கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இவருடைய இந்த பேச்சு பலமாக இருக்கும் திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது.

அதிமுகவுடனான கூட்டணி பேச்சு

இந்நிலையில் திடீரென விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் எந்த சிக்னலும் இரு தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் விஜய், தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல்வர் பதவி உறுதியாக வழங்கப்பட்டால்தான் கூட்டணியில் சேருவேன் என்ற நிபந்தனை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு அதிமுக மறுப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் உருவாகும் அதிமுக-பாஜக கூட்டணி

இந்நிலையில் சிக்கலை புரிந்து கொண்டு சுதாரித்த பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தியது. அதற்காக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்கவும் தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் 2026 தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் நிலை தென்படுகிறது. இந்த கூட்டணி உறுதியாக அமைந்தால், விஜய்யின் கட்சி தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, பாஜக தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்த அதிமுகவுடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளது. அப்படி இணைந்தால் ஆளும் திமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் அந்த அணிக்கே செல்ல வாய்ப்புகள் அதிகம்.

தவெக தனித்து விடப்பட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானால், தவெக கட்சி தனிமைப்பட வாய்ப்பு உள்ளது. விஜய் எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டால், வெற்றியின் வாய்ப்பு குறைவாகலாம். அதே நேரத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் எண்ணிக்கை வாக்கு வங்கியாக மாறுமா? அல்லது சாதாரண ஆதரவாகவே இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

முதல்வர் பதவி கண்டிஷனோடு இருந்த விஜய்

விஜய் தனக்கு ஒரு வலுவான இடத்தை அரசியலில் பெற, கூட்டணி ஆதரவு முக்கியமானது. தற்போது அதிமுக-பாஜக இணைந்து செயல்பட்டால், விஜய்யின் அரசியல் எதிர்காலம் சிக்கலாகும். 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டால் அரசியல் அனாதையாக மாறுவாரா? அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவாரா? என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தவெக இப்படி தனித்து விடப்பட காரணம் விஜய் முதல்வர் பதவி வேண்டும் என்ற கண்டிஷனில் உறுதியாக இருந்தது தான் என்று கூறப்படுகிறது.

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது.

சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குற்றம் நடைபெறும் இடங்களில் சிசிவிடி கேமராக்கள் இருந்தால் போலீசார் அடையாளம் காண முடியும். இல்லையென்றால் அவர்களை கண்டுபிடிப்பதே போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுதான் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

சமீபத்தில் கூட சென்னையில் ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்தனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய போலீசார் இரண்டு பேரை விமானத்தில் வைத்தும், ஒருவரை ரயிலில் வைத்தும் கைது செய்தனர். அதில் ஒருவன் போலீசார் சுட முயற்சி செய்தபோது என்கவுண்டர் செய்யப்பட்டான்.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் ஒரு அபார்ட்மெண்டில் 10வது மாடியில் தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டில் காலிங் பெல்லி அழுத்தி அப்பெண்ணை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருண்ட்த செயினை வாலிபர் ஒருவர் பறித்து செல்லும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் அது சதீஷ்(26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரை கைது செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இறுதிகட்ட அஸ்திரத்தை எடுத்த பாஜக! வேறு வழியில்லாமல் சரண்டரான எடப்பாடி பழனிசாமி 

0

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் களத்தை புதுமையாக உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகமும் அமைந்துள்ளது. இவ்வாறு தமிழக அரசியலில் பல முனை போட்டி நிலவி வரும் சூழலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கலாமா என்ற வகையில் பேசப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை திடீரென சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக-பாஜக கூட்டணி: விரிசலின் தொடக்கம்

பல ஆண்டுகளாக தமிழக அரசியல் traditionally இருதலைப்போட்டியாகவே இருந்து வந்தது. பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்க்க முயற்சி செய்ததன் காரணமாக அவ்வபோது அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்கவும் முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக முதலில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி போட்டியிட்டிருந்தாலும், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக அமையவில்லை. பின்னர், பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து, பாஜக அதன் சொந்த அடிப்படை வாக்கு வங்கியை உருவாக்க முயன்றது. இதனால் அதிமுகவுடனான உறவில் ஒரு பிளவு ஏற்பட்டது. இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் மீது வாய்த்த விமர்சனம் முக்கிய காரணமாக கருதப்பட்டது.

மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

இந்நிலையில் இருகட்சிகளின் நலனை கருத்தில்கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன. பாஜக தனது வாக்கு வங்கியை மட்டுமே நம்பி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதையும், அதிமுகவின் ஆதரவு இல்லாமல் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறது. இதனால், பாஜக மாநில அளவில் அதிமுகவுடன் சமரசத்துக்கு தயாராகி இருப்பதாகவும், இது தொடர்பாக உச்ச மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக உட்கட்சி விவகாரம்

அதிமுகவில் உள்ள மத்தியில் உள்ள பல்வேறு குழப்பங்களும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளும், கட்சியின் எதிர்கால கூட்டணித் திட்டங்களை பாதிக்கக்கூடும். இதை சமாளிக்க, எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் கருதுகின்றனர். இதுமட்டுமல்லாமல் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக ஈடுபடுவது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் தான் இவ்வளவு நாட்களாக எடப்பாடி பழனிசாமி பாஜக தரப்புக்கு வளைந்து கொடுக்காமல் சிவப்பு கொடி காட்டி வந்தார்.

எடப்பாடிக்கு பாஜக மீது திடீரென ஏற்பட்ட ஆதரவு மனநிலை

அந்த வகையில் ஒரு கட்டத்தில் பாஜகவின் ஆக்கிரமிப்பு அரசியல் பாணியால் அதிமுக அசௌகரியத்தில் இருந்தது. ஆனால், தற்போதைய நிலைமையில், எதிர்கட்சியான திமுகவுடன் நேரடியாக போராட, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அவசியம் என எடப்பாடி கருதும் நிலையில் இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் அவருக்கு எதிராக பாஜக தரப்பு இறுதிகட்ட அஸ்திரத்தை எடுத்துள்ளதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுவரை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து காய் நகர்த்தி வந்த பாஜக தற்போது எடப்பாடியின் அடி மடியில் கை வைக்க துணிந்து விட்டதால் வேறு வழியின்றி அவரும் சரணாகதி அடைந்து விட்டார் என்றே கூறப்படுகிறது.

இறுதி அஸ்திரம்: வருமான வரித்துறை ரெய்டு

இதுவரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வீடுகளில் மட்டுமே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி வரை வந்துள்ளது தான் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியில் அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இந்த அரசியல் பின்னணியில், தற்போது டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில், தேர்தல் கூட்டணி, பகுதி ஒதுக்கீடு, மற்றும் மாநில அரசியலில் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ அப்டேட்!.. இது வேற லெவல்ல இருக்குமாம்!…

0

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் குட் பேட் அக்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பல வருடங்களுக்கு பின் அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில் 3வது சிங்கிள் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளது.

good bad ugly

படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் பற்றிய தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், டீசரே ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்த நிலையில் வருகிற 3ம் தேதியான இன்று அல்லது 4ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகவுள்ளது.

இதற்கு முன் வந்த டீசரை பார்த்தவர்களுக்கு இது குடும்பத்துடன் போய் பார்க்கும்படியான படமாக இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே டீசர் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வரும் டிரெய்லரில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்கிற உணர்வை ஏற்படுத்தும் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்புரான் படத்தை தடை பண்ணுங்க!.. பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ்!…

0

நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது.

empuraan

அதேநேரம், இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்கபரிவார்த்தன அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர். எனவே, படத்தின் சில காட்சிகளை நீக்கியும், சில வசனங்களை மியூட் செய்தும் மீண்டும் சென்சார் செய்து இப்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, சர்ச்சைகளை ஏற்படுத்திய காட்சிகளுக்காக மோகன்லால் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், எம்புரான் படத்தின் சில காட்சிகளுக்கு பாமக கண்டனம் தெரிவித்திருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு, கூட்டாட்சிக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட எம்புரான் படத்தை தமிழ்நாட்டில் திரையரங்கில் திரையிட அனுமதித்தது தவறு. எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உள்ள காட்சிகளை நீக்கவும், மறுத்தால் அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக படத்தில் இடம் பெற்ற வசனத்திற்காக சீமானும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!.. பொதுமக்களுக்கு ஒரு தகவல்!…

0

பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டுதான் சிலர் வயதானவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து மோசடி செய்கிறார்கள்.

படித்தவர்கள், செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்கள், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் Paytm, Google Pay, Phone pe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. எனவே, பெரும்பாலானோர் அதிலேயே பணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால், இதை கையாள தெரியாதவர்கள் வங்கிகளுக்குதான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், இந்த மாதம் வங்கிகளுக்கு அதிக விடுமுறைகள் வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு நிறைவு என்பதால் விடுமுறை. அடுத்து ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி.. 14ம் தேதி தமிழ் வருட பிறப்பு, 18ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 12 மற்றும் 26ம் தேதிகளில் இரண்டாவது மற்றும் 4வது சனிக்கிழமை போன்ற நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும், 6,13, 20, 27 தேதிகளில் ஞாயிற்றுகிழமைகள் வருகிறது. எனவே, இந்த மாதம் மொத்தம் 10 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, காசோலை தொடர்பான பரிவர்த்தனைகள் செய்யும் இந்த விடுமுறை நாட்களை தெரிந்துகொண்டு போவது நல்லது.

இந்த வருடத்தில் எந்த மாதத்திலும் இவ்வளவு விடுமுறை வங்கிகளுக்கு வந்தது இல்லை. இந்த மாதம் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே வங்கி செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.. அதேபோல், இந்திய அளவில் பார்த்தால் ஏப்ரல் 15ம் தேதி பெங்காலி புத்தாண்டு, 16ம் தேதி போஹக் பிஹூ, 21ம் தேதி கரியா பூஜா, 30ம் தேதி பசவ ஜெயந்தி என மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது.

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

0

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார்.

அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. 2026ல் தேர்தலில் போட்டியிட்டு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் விஜயின் எண்ணமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் 2026ல் திமுக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என பேசியிருந்தார். மேலும், ‘முத்துவேல் கருணாநிதி அவர்களே.. வீராப்பாக பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும்’ என சொல்லியிருந்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக – திமுக இடையேதான் போட்டி எனவும் சொன்னார். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!...

இந்நிலையில், திமுக ஆதரவாளாரும், நடிகருமான போஸ் வெங்கட் திமுக விழா ஒன்றில் பேசிய போது ‘கலைஞர் கருணாநிதி 14 வயதில் கதை எழுதி கொண்டிருந்தார். திமுக கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து நாடகம் போட்டார். அப்போதே அவருக்கு அண்ணாவையும், பெரியாரையும் தெரிந்திருந்தது. அவரின் மகன் ஸ்டாலின் 14 வயதில் தனது அப்பா கலைஞர் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களிடம் அரசியல் பேசியதை பார்த்துகொண்டிருந்தார்.

ஆனால், ஜோசப் விஜயான நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. உங்கள் அப்பா சினிமாவுக்கு கதை எழுதி கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள்.. 25 வயதில் சினிமாவில் நடித்து கொண்டிருந்தீர்கள்?.. நீங்கள் திமுகவை எதிர்க்கிறீர்களா?.. வாரிசு அரசியல் என சொல்கிறீர்களே.. நீங்கள் வாரிசு இல்லையா?.. உங்கள் அம்மா, மாமா, சின்னம்மா, தாத்தா, அப்பா என எல்லாமே சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. நீங்கள் சினிமா வாரிசு’ என பேசியிருந்தார்.