Home Blog Page 333

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

0

அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3, 2025 அன்று இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மார்க்கெட் தொடங்கிய 10 வினாடிகளில், முதலீட்டாளர்கள் சுமார் 1.93 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர்.

இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தக சமன்பாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான மின்னணு சாதனங்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்றவை அதிக பாதிப்பை சந்திக்கின்றன. இந்திய அரசு, அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் மூலம் சமநிலையான தீர்வை அடைய முயற்சிக்கிறது.

இந்திய பங்குச் சந்தையில், சென்செக்ஸ் 538.90 புள்ளிகள் (0.72%) குறைந்து 76,084.09 ஆகவும், நிப்டி 139.95 புள்ளிகள் (0.60%) குறைந்து 23,192.40 ஆகவும் இருந்தது. இருப்பினும், மருந்து துறையில் அமெரிக்கா விதித்த வரிகள் இருந்து விலக்கப்பட்டது. இதனால், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் கிளாண்ட் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 6% மற்றும் 12% உயர்ந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 85.70-85.75 ஆக குறைந்தது. இது, அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்புகளால் ஆசிய நாணயங்கள் சரிவடைந்ததன் விளைவாகும்.

இந்த சூழலில், இந்திய முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எப்படி முன்னேறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். சந்தை நிபுணர்கள், குறிப்பாக மருந்து துறையில், இந்தியாவின் போட்டி நிலைமை மேம்படும் என்று நம்புகின்றனர். இருப்பினும், மொத்த சந்தை நிலைமையைப் பொறுத்து முதலீடுகளை திட்டமிடுவது அவசியம்.

எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..

0

அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார்.

பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது இன்னும் கொஞ்சநாளில் தெரிந்துவிடும். சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைவோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..
annamalai

எனவே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன், எல். முருகன், கருப்பு முருகானந்தம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருந்தார்கள்.

ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக இன்னும் 3 வருடங்களுக்கு தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என அமித்ஷா முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், அண்ணாமலை பாஜக தலைவராக நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இணைவாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டாம் என அமித்ஷாவுக்கு பாஜகவினர் பலரும் மெயில் அனுப்பி வருகிறார்களாம். அதில், எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீர்கள்’ என்றும் பலரும் தெரிவித்திருக்கிறார்களாம்.

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

0

சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பலருக்கும் வரும் பெரிய பொதுவான நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் வந்தால் நம் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

இனிப்பு உணவை சர்க்கரை நோயாளிகள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.உடலில் சர்க்கரை அளவு உயர்ந்தவிட்டால் அதை குறைக்க மருந்து மாத்திரை ஒன்றுதான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்.கொத்தமல்லி விதை,சீரகம்,மிளகு,ஓமம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பானம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய பானம்:

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)ஓமம் – கால் தேக்கரண்டி
5)இந்துப்பு – சிறிதளவு

செய்முறை:-

1.அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை போட்டு வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்க வேண்டும்.

2.அடுத்து கால் தேக்கரண்டி மிளகு,கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

3.இதன் பிறகு மிக்சர் ஜாரை சுத்தம் செய்து வறுத்த கொத்தமல்லி விதை,மிளகு,சீரகம் மற்றும் ஓமத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கொத்தமல்லி கலவையை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து குடிக்கலாம்.

காலை நேரத்தில் இந்த பானம் செய்து குடிக்க வேண்டும்.டீ,காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிட்டு இந்த பானத்தை செய்து குடிங்க.சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பானம் நல்ல பலனை கொடுக்கும்.கொத்தமல்லி விதை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மிளகு,சீரகம்,ஒமம் போன்ற பொருட்கள் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும்.இந்த ஆரோக்கிய பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

0

உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சீரகம்,ஓமத்தை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.இவை இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும்.இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.இந்த சீரகம் மற்றும் ஓம விதையை சாப்பிடுவதால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த இரண்டு மசாலா பொருட்களும் நமது உடலுக்கு பலவித நன்மைகளை வாரி வழங்குகிறது.

சீரகம் மற்றும் ஓமத்தை ஒன்றாக சாப்பிட்டால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் வேகமாக கரைந்துவிடும்.இந்த இரண்டு பொருட்களும் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கிறது.

இவைகளில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பொருட்களை மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

ஓமம் மற்றும் சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க இவை இரண்டையும் மருந்தாக உட்கொண்டு வரலாம்.செரிமானப் பிரச்சனை சரியாக ஓமம் மற்றும் சீரகத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.

இரவு நேரத்தில் இந்த இரண்டு பொருட்களை சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.உடல் வலி மற்றும் அலர்ஜி பிரச்சனைகள் அனைத்தும் குணமாக இந்த சீரக ஓமம் பானத்தை குடிக்கலாம்.மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகல இந்த பானத்தை செய்து குடிக்கலாம்.

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

0

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகைகள் இருக்கின்றது.இந்த வெங்காயம் இயற்கையாக குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாகும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே பல நோய்கள் குணமாகும்.பச்சை வெங்காயத்தை சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம்.

வெங்காய ஜூஸ் முக்கிய நோய் பாதிப்புகளை குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.வெங்காயத்தில் தாதுக்கள்,வைட்டமின்கள்,புரதம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

வெங்காயம் சாப்பிட்டால் வாயில் ஒருவித வாடை வரும்தான்.இருப்பினும் அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்க நாம் சாப்பிட்டுதான் ஆக வேண்டும்.வெங்கயம் சாப்பிட்ட பிறகு புதினா,துளசி போன்ற இலைகளை வாயில் மென்று சாப்பிட்டால் வெங்காய வாடை வராது.சரி இப்பொழுது வெங்காயச் சாறு குடிப்பதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வோம்.

நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்சர் ஜாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டினால் வெங்காய ஜூஸ் ரெடி.இந்த வெங்காய ஜூஸின் முழு பலனும் கிடைக்க அதை காலை நேரத்தில் தான் குடிக்க வேண்டும்.

வெங்காய ஜூஸ் குடிப்பதால் சிறுநீரக பிரச்சனை,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் என்று எளிதில் குணமாகாத நோய்களும் சீக்கிரமாகவே குணமாகும்.வெங்காயத்தை அரைத்து திரவமாக எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.வெங்காய ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.வெங்காயத்தில் கால்சியம் அதிகமாக இருக்கின்றது.இந்த வெங்காயத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் நிறைந்திருக்கும் வெங்காயத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை வெங்காயச் சாறு செய்து குடிப்பதால் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் வெங்காய ஜூஸ் குடித்தால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.கண் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் வெங்காய ஜூஸ் குடிப்பதால் குணமாகும்.பல் ஆரோக்கியம் மேம்பட வெங்காய ஜூஸ் செய்து குடிக்கலாம்.

வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிய வெங்காய ஜூஸ் குடிக்கலாம்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட,புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க தினமும் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் செய்து குடிக்கலாம்.

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

0

பீன்ஸ் வகையை சேர்ந்த கொத்தவரை அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இந்த காயில் வேர்க்கடலை தூவி பொரியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.கொத்தவரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கொத்தவரையை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகள் சரியாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய கொத்தவரை சாப்பிடலாம்.

கொத்தவரை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தவரை மாமருந்தாக திகழ்கிறது.கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

மன அழுத்தம் கட்டுப்பட கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.உயர் இரத்த அழுத்தம் குணமாக கொத்தவரை ஜூஸ் செய்து பருகலாம்.உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகள் அகல கொத்தவரை ஜூஸ் குடிக்கலாம்.

கொத்தவரையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் குறைவயும்.மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சனைகள் சரியாக கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கொத்தவரை சாறு செய்து பருகலாம்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகல கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

கொத்தவரை ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)கொத்தவரை
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி கொத்தவரை காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த கொத்தவரை ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஜூஸாக குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

0

காய்கறிகளில் கத்தரிக்காய் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குண்டு கத்தரி,ஊதா கத்தரி,பச்சை கத்தரி,முள் கத்தரி,வரி கத்தரி என்று பல வகை கத்தரி ரகங்கள் இருக்கின்றது.இருக்கும் காய்களிலேயே கத்தரி அதிக ருசி கொண்ட காயாகும்.

இந்த காயில் குழம்பு,கிரேவி,சொல்லி,பிரட்டல்,வறுவல்,பொரியல்,தொக்கு என்று பல வெரைட்டிகள் செய்து சாப்பிடலாம்.கத்தரிக்காயின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும்.கத்தரிக்காய் சிறிய மற்றும் பெரிய வடிவில் வளர்கிறது.நம் ஊரில் பெரும்பாலும் ஊதா நிற கத்தரிக்காய் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இரும்பு,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கத்தரிக்காயில் அடங்கியிருக்கிறது.கத்தரிக்காயை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் கத்தரிக்காயும் அடங்கும்.கத்தரிக்காய் உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்கள் வளர்வது கட்டுப்படும்.உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்க கத்தரிக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக கத்தரிக்காய் உட்கொள்ளலாம்.கத்தரிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஈ சருமத்திற்கு ஒருவித பளபளப்பை கொடுக்கிறது.சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக கத்தரிக்காய் சாப்பிடலாம்.

கத்தரிக்காய் உணவுகளை கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிட வேண்டும்.உடலில் பித்தம்,சூடு அதிகரிக்காமல் இருக்க கத்தரி உணவுகளை சாப்பிடலாம்.அம்மை நோய் வராமல் இருக்க கத்தரிக்காய் சாப்பிடலாம்.

வாயுத் தொல்லை அகல கத்தரிக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை காப்பதில் கத்தரி உணவுகள் சிறந்து விளங்குகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க கத்தரி உணவுகளை சாப்பிடலாம்.கத்தரி சாப்பிடுவதால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.கத்தரிக்காய் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.தசைகள் வலிமை பெற கத்தரிக்காய் சாப்பிடலாம்.

கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.மூளை ஆரோக்கியம் மேம்பட கத்தரிக்காய் சாப்பிடலாம்.

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

0

கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

இளநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.ஆனால் அதே இளநீர்தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பொருளாக இருக்கின்றது.உடலில் உள்ள சில நோய்களுக்கு இளநீர் ஆரோக்கியமற்றவையாக மாறுகிறது.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இளநீர் ஆரோக்கிய பானம் என்றாலும் இதில் அதிக கலோரி நிறைந்து காணப்படுகிறது.எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இளநீரில் உள்ள கலோரி உடல் எடையை அதிகரித்துவிடும்.

இளநீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.இளநீரில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இளநீரை அவசியம் தவிர்க்க வேண்டும்.சிலருக்கு இளநீர் அலர்ஜி பிரச்சனையை உண்டாக்கும்.இளநீர் அலர்ஜி இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.சளி,மூக்கடைப்பு,மூக்கு ஒழுகுதல்,தும்மல் போன்ற அலர்ஜி ஏற்படும்.உடற்பயிற்ச்சி செய்த பிறகு இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் எடை அதிகரித்துவிடும்.எனவே இளநீர் நல்லது என்றாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

0

வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம்.

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம்.முகப்பர,கருவளையம்,சரும வறட்சி போன்ற பாதிப்புகள் குணமாக எலுமிச்சை சாறு பருகலாம்.உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்பு கரைய எலுமிச்சை சாறு பருகலாம்.

எலுமிச்சை சாறு குடித்தால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.எலுமிச்சை ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட எலுமிச்சை சாறு செய்து குடிக்கலாம்.எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி கட்டுப்படும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சிறந்த பானமாக எலுமிச்சை ஜூஸ் உள்ளது.எமன நிம்மதி கிடைக்க காலை நேரத்தில் எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ செய்து குடிக்கலாம்.

இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகமாக நிறைந்திருக்கிறது.வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு தண்ணீர் சேர்க்காமல் குடித்தால் வயிறு எரிச்சல் அதிகமாகும்.அதேபோல் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு பருகினால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எலுமிச்சையின் அமில அளவு குறைய ஒரு எலுமிச்சம் பழச்சாறுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

0

நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் உப்புச்சத்து தான்.

நல்லது என்றாலும் அளவாக இருப்பதுதான் நல்லது என்பது போல் உப்பு சுவையும் உணவில் அளவாக இருப்பதுதான் நல்லது.நம் உடலுக்கு தினசரி 2300 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது.ஆனால் நாம் நாளொன்றில் 12 கிராம் அளவிற்கு உப்பு சேர்த்து சாப்பிடுகின்றோம்.தின்பண்டங்கள்,உணவு என்று அனைத்திலும் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுகின்றோம்.

அளவிற்கு அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஏற்படும்.அதிக உப்பு சேர்த்து சாப்பிட்டால் இரத்தத்தில் இரத்தத்தில் சோடியம் அளவு அதிகரித்து வயிறு வீக்கம் ஏற்படும்.அதிக உப்பு சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

உணவில் அதிக உப்பு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் உணவில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் பாதிப்பு தீவிரமாகிவிடும்.அதிக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் சரும பாதிப்புகள் அதிகமாகிவிடும்.

அதிக உப்பு நிறைந்த உணவுகள் சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.உடலில் அதிக வியர்வை வெளியேறினால் பிரச்சனை இல்லை.வியர்வை மூலம் உப்பு வெளியேறிவிடும்.ஆனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறவில்லை உடலில் உப்பு குவிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பிபி இருப்பவர்கள் மிகவும் குறைவான அளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.