Home Blog Page 334

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

0

இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான பிரியாணி செய்து சாப்பிடப்படுகிறது.

இதில் அனைவரின் பேவரைட்டாக சிக்கன் பிரியாணி இருக்கின்றது.அசைவ உணவுகளின் ராஜா என்றால் அது சிக்கன் பிரியாணிதான்.சிக்கன் சுவை மிகுந்த ஒரு அசைவமாகும்.சிலர் தினமும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர் நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி மட்டும் இல்லை எந்த உணவுகளை சாப்பிட்டாலும் அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

அதேபோல் மட்டன் பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.மட்டனில் புரதம்,கால்சியம்,கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.மட்டனில் சத்துக்கள் இருக்கிறது என்றாலும் அதை அளவாக சாப்பிடுவதுதான் நல்லது.மட்டனில் ஏற்கனவே கொழுப்புச் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.

மட்டன் பிரியாணியை அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம்,இரத்தக் கொதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே மட்டன் பிரியாணியையும் குறைவான அளவே எடுத்துக் கொள்ள வேண்டும்.சிலருக்கு மீன்,முட்டை,காளான் போன்றவற்றில் பிரியாணி செய்து சாப்பிடுவது பிடித்தமான விஷயமாக இருக்கும்.ஆனால் இவையும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை கொண்டு பிரியாணி செய்து சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு காய்கறிகளை கொண்டு செய்யப்படும் வெஜ் பிரியாணிதான் பெஸ்டாக இருக்கும்.காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இந்த காய்கறிகளை வைத்து பிரியாணி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பிரியாணி சாப்பிட தோன்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வெஜ் பிரியாணி செய்து சாப்பிடலாம்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

0

உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு – கால் கப்
2)பார்லி அரிசி – கால் கப்
3)மிளகு – அரை தேக்கரண்டி
4)சீரகம் – அரை தேக்கரண்டி
5)பூண்டு பற்கள் – நான்கு
6)உப்பு – சிறிதளவு
7)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கால் கப் கொள்ளு பருப்பு மற்றும் கால் கப் பார்லி அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

2.அதன் பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்சர் ஜாரில் கொள்ளு பருப்பு மற்றும் பார்லி அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

3.பிறகு குக்கர் ஒன்றில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி கருப்பு மிளகு,அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து நான்கு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நான்கு விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.பிறகு இந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.விசில் நின்றதும் தயாரான கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து பருக வேண்டும்.

இந்த கொள்ளு பார்லி கஞ்சி உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.கொள்ளு பார்லி கஞ்சி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஒரு மாதத்தில் ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய இந்த பானத்தை பருகலாம்.

உடல் எடை குறைய மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு – 50 கிராம்
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)சின்ன வெங்காயம் – நான்கு
4)உப்பு – சிறிதளவு
5)பூண்டு பல் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

1.குக்கரில் 50 கிராம் கொள்ளு பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

2.பிறகு அதில் கால் தேக்கரண்டி சீரகம்,நான்கு தோல் உரித்த சின்ன வெங்காயத்தை போட வேண்டும்.

3.அதன் பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட வேண்டும்.பிறகு சிறிதளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில்விட்டு இறக்க வேண்டும்.

4.இந்த கொள்ளு கஞ்சியை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

0

சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனை அர்ப்பணிப்புடன் வழிபட்டு விரதமும் இருப்பார்கள். துர்க்கை அம்மனின் அருளை பெறவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்க்கை அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மன் எப்பொழுதும் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த ராசிகளை துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ராசிகளுக்கு எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் படி துர்க்கை அம்மன் பார்த்துக் கொள்வார்.

துர்க்கை அம்மனின் அருள் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்? துர்க்கை அம்மனுக்கு எந்த ராசிகளை மிகவும் பிடிக்கும்? போன்ற விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

துர்க்கை அம்மனின் அருள் கிடைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும், செல்வமும், வெற்றியும் கிடைக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். பண பிரச்சினைகள் இருக்காது. பொருளாதார பிரச்சினைகளும் ஏற்படாது. உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. ரிஷபம் ராசி:
ரிஷப ராசிக்காரர்கள் மீது துர்க்கை அம்மனுக்கு மிகுந்த அன்பு உண்டு. ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் எப்போதும் நிறைந்து இருக்கும். நீங்கள் எப்போதும் வெற்றியை அடைவீர்கள். புகழ் மற்றும் கௌரவத்தை பெறுவதோடு, நீங்கள் பணத்தையும் பெறுவீர்கள். நிதி சிக்கல்களும் இருக்காது.

2. சிம்மம் ராசி:
துர்க்கை அம்மன் சிங்கத்தின் மீதுதான் சவாரி செய்வார். எனவே துர்க்கை அம்மனின் அருள் சிம்ம ராசிக் காரர்களுக்கும் உண்டு. இந்த ராசிக்காரர்கள் எப்போதும் வெற்றியை அடைவார்கள். மேலும் சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைவர்கள். நல்ல பணம் சம்பாதிப்பதோடு, அவர்கள் புகழையும் கௌரவத்தையும் பெறுவார்கள். அவர்கள் அரசியல் மற்றும் வணிகத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

3. துலாம் ராசி:
அடுத்ததாக துர்க்கை அம்மனின் அருள் துலாம் ராசிக் காரர்களுக்கும் உண்டு. இந்த ராசிக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மனின் அருள் எப்போதும் இருக்கும். துர்க்கை அம்மனின் அருளால் அவர்கள் எப்போதும், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் புகழும், கௌரவமும் கிடைக்கும். நிதி சிக்கல்களும் இருக்காது, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

0

நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு கவசம். எனவே இதனை வீட்டின் வாசலில் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருப்பார்கள்.

இந்த படிகாரம் என்பது ஆன்மீகம் ரீதியாகவும், தாந்த்ரீகம் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது கெட்ட சக்திகளின் எண்ணங்கள் அல்லது கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் இரவில் தூங்க முடியாத நிலைமை ஏற்படும். இவ்வாறு இருப்பவர்கள் இந்த படிகார கல்லை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் எந்தவித கெட்ட கனவுகளும், தீய எண்ணங்களும் உருவாகாது.

அதேபோன்று சிறு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அழுகும். இதுபோன்ற சூழ்நிலைகளிலும் இந்த படிகார கல்லை குழந்தைகளுக்கு அருகில் வைக்கும் பொழுது, குழந்தைகள் நிம்மதியாக தூங்கும். வீடு முழுவதும் எதிர்மறை ஆற்றல்கள் பரவி இருப்பதாக நினைத்தால் அதற்கும் இந்த படிகாரத்தை வைத்து பலன் பெறலாம்.

வீட்டின் தெற்கு பகுதியில் இந்த படிகாரத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைக்கலாம். இதேபோன்று ஒவ்வொரு அறையிலும் தெற்கு பகுதியில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் வீடு முழுவதும் நேர்மறையான எண்ணங்கள் பரவும். மேலும் வீட்டில் உள்ள தீய சத்துகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அதேபோன்று காரிய தடைகள், தொழிலில் தடைகள், முன்னேற்றத்தில் தடைகள், யாரேனும் ஒருவரால் கெடுதல்கள் ஏற்படுகிறது என்றாலும் திங்கள் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் இரவு நேரத்தில் ஒரு சிறிய அளவு அடுப்புக்கரி மற்றும் படிகாரத்தை கருப்பு நிற துணியில் கட்டி, வலது உள்ளங்கையில் வைத்து நமது பிரச்சனைகள் மற்றும் என்ன பலன் கிடைக்க வேண்டும் என்பதை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அதனை நமது தலையணைக்கு அருகில் அல்லது கீழே வைத்து ஒரு நாள் இரவு முழுவதும் தூங்க வேண்டும். இவ்வாறு ஒரு முறை செய்தால் போதும் தடைகள் அனைத்தும் விலகும். இவ்வாறு செய்து அடுத்த நாள் காலையில் அதனை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விட வேண்டும்.

வீட்டில் பணம், நகைகள் வைக்கக்கூடிய இடத்தில் சரியாக 60 கிராம் அளவுள்ள படிகாரத்தை வைக்கும் பொழுது பணவரவு அதிகரிக்கும். படிகாரத்திற்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகம். எனவே பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்தால் பண பற்றாக்குறை ஏற்படாது.

வீட்டின் நிலை வாசலில் கருப்பு நிற கயிறைக் கொண்டு இந்த பரிகாரக் கல்லை கட்டி தொங்க விடலாம். இதனால் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும், கண் திருஷ்டிகளும் உள்ளே நுழையாது.

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

0

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும்.

குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை கட்டுப்படுத்த முடியாது.இதில் எச்சில் வடிவதை அவர்களால் தடுக்க முடியாது.

ஆனால் நன்கு வளர்ந்த ஒருவருக்கு தூக்கத்தில் தானாக எச்சில் வடிகிறது என்றால் அது பெருமூளை வாத அறிகுறியாக இருக்கலாம்.நீங்கள் ஒருபக்கமாக சாய்ந்து படுக்கும் பொழுது வாயில் இருந்து தானாக எச்சில் வடியும்.

வாயில் இருந்து எச்சில் வடிய காரணம்?

நாம் தூங்கும் பொழுது வாய் ஓரத்தில் உள்ள தசைகள் தளர்வடையும.இதனால் வாயில் அதிக உமிழ்நீர் உற்பத்தியாகி வெளியேறுகிறது.

உங்களுக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் தூக்கத்தில் எச்சில் வடியும்.பகல் நேரத்தில் அதிக உடல் சோர்வு,சத்தமாக குறட்டைவிட்டு உறங்குபவர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும்.அதேபோல் இரைப்பை அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடியும்.

அதேபோல் மூளை பக்கவாதம்,பெருமூளை வாதம்,மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடுதல் போன்ற காரணங்களால் வாயில் எச்சில் வடியும்.ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் தூங்கும் பொழுது எச்சில் வடியும்.

தூக்கத்தில் வாயில் எச்சில் வடிவதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மல்லாந்து படுப்பதை தவிர்த்தால் எச்சில் வடியாமல் இருக்கும்.உறக்கத்தின் போது வாயில் சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.தலையணையை உயரமாக வைத்து படுக்க வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் தூக்கத்தில் வாயில் எச்சில் வடிவது கட்டுப்படும்.

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

0

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர்.

சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.

வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி குடிக்கின்றனர்.ஊழியர்கள் சோர்வை போக்க அலுவலகத்தில் மெஷின் காபி குடிக்கின்றனர்.இப்படி தினசரி வாழ்வில் காபி குடிப்பது இரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக மாறிவருகிறது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்னர் வரை காபியை ஒரு உணவாகவே சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.காபி உடலுக்கு சில நன்மைகள் கொடுக்கும் என்றாலும் இதை அதிகமாக குடித்தால் உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.

அதேபோல் காபியில் உள்ள காஃபின் என்ற கெமிக்கல் இதய ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்யும்.அதிக காஃபின் நிறைந்த பனமான காபி தலைவலி,குமட்டல்,வாந்தி,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அளவிற்கு அதிகமாக காபி குடித்தால் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும்.காஃபின் நிறைந்த காபி மன அழுத்தத்தை அதிகரிக்கும்.அளவிற்கு அதிகமாக காபி குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.காபியில் உள்ள சர்க்கரை உடலில் குளுக்கோஸ் அளவை உயர்த்தி நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று கப் காபி குடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை.அதைவிட அதிகமாக குடித்தால் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் பால்,சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி செய்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

0

இந்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை, மூடநம்பிக்கைகள் என புரியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அதனை என்ன காரணத்தால்? எந்த அர்த்தத்தினால்? அதனை கூறியுள்ளார்கள் என்பதை அனுபவம் ரீதியாக காலப்போக்கில் தான் அதனை உணர்ந்து கொள்வோம்.

அந்த வகையில் கருவண்டு என்று சொல்லக்கூடிய உயிரினம், வீட்டிற்குள் வரக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார், உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றியுள்ள பலர் பொறாமை கொள்வார்கள். அவர் அவரது கடின உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி இருப்பார். ஆனால் மற்றவர்கள் நம்மால் முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கத்துடனும், பொறாமை குணத்துடனும் பார்ப்பார்கள்.

நம்மிடம் அதிகப்படியான நேர்மறையான எண்ணங்களும், தெய்வீக சக்திகளும் இருக்கிறது என்றால் நம்மை நோக்கி வரும் பொறாமைகளையும், கெட்ட எண்ணங்களையும் நீக்கிவிட முடியும். ஆனால் ஒரு வேளை நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் குறைவாகவும், தெய்வீக சக்திகள் குறைவாகவும் இருக்கின்ற பொழுது இந்த தீய சக்திகள் நம்மிடம் விரைவாக வந்து சேர்ந்து விடும்.

இவ்வாறு தீய சக்திகள் நம்மிடம் வந்து விட்டால் நமது குடும்பத்தில் பலவிதமான சண்டை சச்சரவுகள், நோய்வாய்ப்படுதல், வருமானம் குறைதல் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும். இவ்வாறு நடக்கும் பொழுது நம்மை பிடிக்காத யாரோ ஒருவர் நமது குடும்பத்திற்கு பில்லி, சூனியம், ஏவல் இது போன்ற ஏதேனும் ஒன்றை செய்து விட்டார்கள் என்று நினைப்போம்.

இதனை உணர்த்தக்கூடிய விதமாகத்தான் கருவண்டு நமது வீட்டிற்கு வருகிறது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் மனிதர்களின் நடமாட்டம் இல்லாத வீடுகளில் இந்த பூச்சியானது வரும் என்றும், இனச்சேர்க்கைக்காக ஒரு இடத்தை தேடி வரும் என்றும், அந்தப் பூச்சிக்கு தேவையான உணவு அதிகப்படியாக கிடைக்கக்கூடிய இடத்திற்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

அதிகப்படியான தேன் இருக்கக்கூடிய பூக்களை கொண்ட செடிகள் நமது வீட்டில் இருக்கிறது என்றாலும் இந்த கருவண்டு வரும். இவை அனைத்தும் இயற்கை சார்ந்து கூறக்கூடிய காரணங்கள். ஆனால் நமது முன்னோர்கள் உங்களது வீட்டின் மேல் அதிகப்படியான கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்களின் அதிர்வலைகள் இருப்பதை உணர்த்தக்கூடிய விதமாகத்தான் இந்த கருவண்டு வீட்டிற்கு வருகிறது என கூறியுள்ளனர்.

இந்தக் கருவண்டு நமது வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஒரு அறிகுறி. எனவே இந்த கருவண்டு நமது வீட்டிற்கு வந்தால் கொல்லக் கூடாது. அதற்கு பதிலாக துரத்தி விட வேண்டும். இவை நம்பிக்கை சார்ந்து கூறக்கூடிய ஒரு காரணம்.

இந்தக் கருவண்டு நமது வீட்டிற்கு வருவதற்கு கூறக்கூடிய காரணம் மூடநம்பிக்கையாக இருந்தாலும் கூட, இதனை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது நல்லது. இந்தக் கருவண்டு நமது வீட்டிற்கு வருகிறது என்றால் கணவன் மனைவி முன்னெச்சரிக்கையாக இருந்து, பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கும் பொழுது அல்லது முதலீடு செய்யக்கூடிய காரியங்களில் சற்று கவனமாக இருந்து கொள்ள வேண்டும். இதேபோன்று அனைத்து விஷயங்களிலும் சற்று யோசித்து கவனமாக செயல்படுவது நல்லது.

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

0

உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொண்டையில் உறுத்தல் காரணங்கள்:

**சளி மற்றும் இருமல்
**ஒவ்வாமை
**தொண்டை வறட்சி
**இரைப்பை குழாயில் எரிச்சல்
**பாக்டீரியா தொற்று

தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்:

தீர்வு 01:

பால்
மஞ்சள் தூள்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த மஞ்சள் பானத்தை கிளாஸில் ஊற்றி இரவு நேரத்தில் குடித்தால் தொண்டையில் உறுத்தல் ஏற்படுவது குணமாகும்.

தீர்வு 02:

உலர் பழம்
தண்ணீர்

திராட்சை,அத்தி போன்ற உலர் பழங்களை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.

இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் தண்ணீரை குடித்துவிட்டு உலர் பழத்தை சாப்பிட வேண்டும்.இந்த உலர் பானம் தொண்டையில் உறுத்தல் ஏற்படுவதை குறைக்கிறது.

தீர்வு 03:

உப்பு
தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலக்கி தொண்டை பகுதியில் படும்படி வாய் கொப்பளத்தால் உறுத்தல் ஏற்படாமல் இருக்கும்.

தீர்வு 04:

தேன்
தண்ணீர்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பானத்தை இரவு நேரத்தில் குடித்தால் தொண்டை உறுத்தல் குணமாகும்.

தீர்வு 05:

தண்ணீர்
எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்துவிட வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பருகினால் தொண்டை உறுத்தல் சரியாகும்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

0

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் மற்றும் மனதளவில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய செயல்களில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நடைபெறும்.

நம் அம்மா,பாட்டி காலத்தில் சுகப் பிரசவங்கள் மூலமே அதிக குழந்தைகள் பெற்றெக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது சுகப்பிரசவங்கள் ஏற்படுவது அரிதான விஷயமாக இருக்கின்றது.இன்றைய இளம் தலைமுறை பெண்களால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது.

தற்பொழுது நவீன மருத்துவ சிகிச்சைகள் அதிகரித்துவிட்டது.முன்பைப்போல் கஷ்ட்டப்பட்டு சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள இன்றைய காலத்து அம்மாக்கள் விரும்புவதில்லை.சிசேரியன் மூலம் கஷ்டப்படாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.

சில அப்பத்தான நேரங்களில் தாய் மற்றும் சிசுவின் உயிரை காப்பாற்ற சிசேரியன் செய்யப்படுகிறது.ஒருமுறை சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால் அதன் பிறகு சுகப் பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.முதல் குழந்தை சிசேரியன் மூலம் பெற்றால் இரண்டாவது குழந்தையும் சிசேரியனில் தான் பெற்றெடுக்க முடியும்.ஒரு பெண் அதிகபட்சம் 4 அல்லது 5 முறை சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் 3 சிசேரியன்தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று சிசேரியன் செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.அதற்கு மேல் சிசேரியன் செய்து குழந்தை பெற்றால் அது தாயின் உடல் நலத்தில் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும்.

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

0

அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு கீழ் பகுதியில் உணர்ச்சி மற்றும் வலி தெரியாமல் இருக்க முதுகெலும்பு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இது அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

இந்த மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு இடுப்புக்கு கீழ் மரத்து போதல் ஏற்படுகிறது.இதனால் அறுவை சிகிச்சையின் போது எந்தஒரு உணர்வும் ஏற்படாது.இந்த முதுகெலும்பு மயக்க மருந்து பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.

மூட்டு அறுவை சிகிச்சை,பிரசவம்,இடுப்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை,கால் எலும்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கு முன்னர் முதுகெலும்பு தண்டு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இந்த முதுகெலும்பு தண்டு மயக்க ஊசி செலுத்தப்படுவது பாதுகாப்பானது என்றாலும் இதனால் உடலுக்கு பெரிய ஆபத்துக்களும் ஏற்படும்.

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:

1)மயக்க ஊசி செலுத்திய பிறகு தலைவலி வருதல்

2)மயக்க ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் வலி வருதல்

3)நரம்புகளில் கடுமையான சேதம் ஏற்படுதல்

4)இரத்தக்கசிவு ஏற்படுதல்

5)சிலருக்கு மயக்க ஊசிக்கு பின்னர் நரம்பு பகுதியில் செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு

6)உடல் பாகங்களில் உணர்வின்மை

7)சளி,இருமல்,உடல் சோர்வு அதிகரித்தல்

8)வாந்தி,மயக்கம் ஏற்படுதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

மயக்க ஊசி செலுத்துவதால் உங்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனை ஏற்படும் என்பது தெரிந்தால் நீங்கள் சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு மருத்துவர் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.மயக்க ஊசியால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.மயக்க ஊசி செலுத்திய பிறகு இடுப்பு பகுதியில் அதிக வலி மற்றும் அசைய முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.