Home Blog Page 341

இந்த நான்கு பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மார்பு சளி இளகி மலத்தில் வரும்!!

0

முன்பெல்லாம் மழை மற்றும் குளிர் காலத்தில்தான் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஆனால் தற்பொழுது கொளுத்தி எடுக்கும் கோடையிலும் மூக்கில் சளி ஒழுகுகிறது.மாறி வரும் பருவநிலை மற்றும் நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால்தான் வெயில் காலத்திலும் சளி வருகிறது.

இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இருக்கின்றது.கோடை காலத்தில் அனுபவிக்கும் இந்த சளி தொந்தரவை செலவின்றி எளிமையாக குணப்படுத்திக் கொள்வது குறித்த வழிமுறை இதோ.

சளியை கரைக்கும் கசாயம் செய்முறை:

1)மஞ்சள் தூள்
2)வேப்பிலை பொடி
3)துளசி இலைகள்
4)மிளகு

நான்கு ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடியை அந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும்.அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி துளசிகள் மற்றும் தட்டி வைத்துள்ள மிளகை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இறக்கும் சமயத்தில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

150 மில்லி தண்ணீர் 100 மில்லியாக குறைந்து வரும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து சிறிது தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு 10 மில்லி அளவு மூன்றுவேளைக்கு கொடுத்தால் இரண்டு நாட்களில் மார்பு சளி நீங்கிவிடும்.இந்த கஷாயத்தில் கற்பூரவல்லி,வெற்றிலை,தூதுவளை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்று வேப்பிலை பானம்,துளசி பானம்,மஞ்சள் பானம் போன்றவற்றை குடித்தால் சளி பிரச்சனை சரியாகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

0

நம் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் தொற்று பாதிப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.உடலில் அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் தேங்கினால் துர்நாற்றம் வீசுவதோடு தேமல்,படர் தாமரை,வெண்புள்ளி,கரும்புள்ளி ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

இதில் படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த படர் தாமரை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தீர்வு 01:

பூவரசங்காய்

பூவரசு மரத்தில் இருந்து கிடைக்கும் பூவரசங்காயை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பூவரசு காயில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவத்தை படர் தாமரை மீது அப்ளை செய்ய வேண்டும்.சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை சாறு சேர்த்து படர் தாமரை பாதிப்பு உள்ள இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் நிச்சயம் படர் தாமரை பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

சந்தனக் கட்டை
எலுமிச்சை சாறு

ஒரு சந்தன கட்டையை தண்ணீரில் ஊறவைத்து தரையில் வைத்து தேய்க்க வேண்டும்.பிறகு இந்த சந்தன பேஸ்டை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை படர் தாமரை மீது அப்ளை செய்தால் சீக்கிரமாக அவை குணமாகிவிடும்.

தீர்வு 03:

தேங்காய் எண்ணெய்
குப்பைமேனி இலை
கீழாநெல்லி இலை

குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலையை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 100 மில்லி தேங்காய் எண்ணையை கடாயில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் அரைத்த குப்பைமேனி கீழாநெல்லி விழுதை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து படர் தாமரை மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 04:

தும்பை இலை
திரிபலா சூரணம்
மஞ்சள் தூள்

தும்பை இலை தேவையான அளவு எடுத்து வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை படர் தாமரை மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

0

ரணகள்ளி என்று அழைக்கப்படும் தாவரம் நமது சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.இந்த ரணகள்ளி மலைக்கள்ளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.இந்த தாவர இலையின் சாறை பருகினால் சிறுநீரக கல் காணாமல் போகும்.

சிறுநீரக கல் பாதிப்பு இந்த காலத்தில் பொதுவான நோயாக மாறிவிட்டது.சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றில்லை.நமது பாரம்பரிய வைத்தியத்தை செய்தும் சிறுநீரக கற்களை முழுமையாக கரைத்து வெளியேற்றலாம்.

தேவையான பொருட்கள:-

1)ரணகள்ளி இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒன்று அல்லது இரண்டு ரணகள்ளி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை காலையில் வெறும் வாயில் மென்று சாப்பிட வேண்டும்.

ரணகள்ளி இலையை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் ஐஸ்கட்டி போல் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ரணகள்ளி இலை – ஒன்று
2)தண்ணீர் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் ரணகள்ளி இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு 100 மில்லி தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த ரணகள்ளி ஜூஸை தினமும் ஒரு கிளாஸ் அளவு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் காணாமல் போய்விடும்.

தேனில் இந்த விதையை ஊறவைத்து சாப்பிட்டால்.. 60 வயதில் 20 வயது இளமை கிடைக்கும்!!

0

வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.ஆனால் அதற்கு நாம் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் மட்டுமே இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.இதனுடன் மிளகு,நெல்லி,ஆவாரம் பூ போன்றவற்றை கலந்து சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
2)தூயத் தேன் – 50 மில்லி

பயன்படுத்தும் முறை:-

ஒரு கண்ணாடி பாட்டிலில் தூயத் தேன் 50 மில்லி அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கரு மிளகு போட்டு ஊற வையுங்கள்.

இரண்டு நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த மிளகை காலை நேரத்தில் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் இளமை தோற்றம் மாறாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை கண்ணாடி பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு சாப்பிட வேண்டும்.

இப்படி தினமும் தேனில் பெரிய நெல்லிக்காய் போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இளமை பொலிவு அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – 50 மில்லி
2)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

கண்ணாடி கிண்ணத்தில் 50 மில்லி தேன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து உலர்ந்த ஆவாரம் பூ இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருப்பீர்கள்.

தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!

0

நாம் அடிக்கடி சாப்பிடும் கனிகளில் முக்கிய இடத்தில் இருப்பது பெரிய நெல்லிக்காய்தான்.இந்த காயில் ஏகப்பட்ட வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது தவிர வைட்டமின் ஈ,இரும்பு,பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதைவிட அதை உலர்த்தி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.சீசனில் கிடைக்கும் பெரிய நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒவ்வொரு நெல்லிக்கையையும் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உலர் நெல்லியை பொடியாக எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் தேனில் ஊறவைத்து சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரிய நெல்லிக்காயை பொடித்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

உலர் நெல்லிக்காய் நன்மைகள்:

1)இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சளி,இருமல் குணமாக உலர் நெல்லிக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

2)நெல்லிக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது.இதை பவுடராக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.

3)இரத்த அழுத்தம் கட்டுப்பட நெல்லிக்காய் கஷாயம் செய்து குடிக்கலாம்.நெல்லி வற்றலில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.இந்த உலர் நெல்லியை காலை நேரத்தில் சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.

4)இருதய நோய் பாதிப்பு குணமாக நெல்லிக்காய் வற்றலை பொடித்து டீ போட்டு குடிக்கலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.

5)சிறுநீரக கற்களை கரைக்க பெரிய நெல்லிக்காயை உலர்த்தி தேனில் கலந்து சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகள் குணமாக உலர் நெல்லி சாப்பிடலாம்.தினமும் இரண்டு உலர் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.முதுமையை தள்ளிப்போட தினமும் நெல்லிக்காய் வற்றலை சாப்பிடலாம்.

2 நிமிடம் இதை செய்தால் இடுப்பு வலிக்கு வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!! கூடவே இதையும் சாப்பிடுங்கள்!!

0

இடுப்பு வலி பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் சந்திக்கின்றனர்.இந்த இடுப்பு வலி மட்டும் வந்துவிட்டால் படாத பாடு பட்டுவிடுவோம்,எந்த ஒரு பணியை செய்வதிலும் சிரமம் ஏற்படும்.குனிந்தால் இடுப்பு பகுதியில் சுளீர் என்று வலி வருதல்,வேகமாக நடந்தால் இடுப்பு வலித்தல்,நீண்ட நேரம் அமர்ந்தால் இடுப்பு பகுதியில் வலித்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

முதுமை காலத்தில் வந்த இடுப்பு வலி பிரச்சனை தற்பொழுது சிறு குழந்தைகளுக்கு கூட ஏற்படுகிறது.கால்சியம் குறைபாடு,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்நிலை வாழ்க்கை முறை,முதுகு பகுதியில் அடிபடுதல்,பிரசவம் போன்ற காரணங்களால் இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

இந்த இடுப்பு வலி குணமாக மருந்து தேவையில்லை.இதை செலவு இல்லாமல் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.அதற்கு முதலில் நீங்கள் தரையில் குப்புற படுக்க வேண்டும்.பின்னர் கீழ் முதுகு பகுதியில் கை கட்டை விரல் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் என்று 10 முறை அழுத்தி தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.அதேபோல் ராகியை வைத்து இடுப்பு வலி பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – ஒரு கப்
2)வெண்ணெய் – 25 மில்லி
3)கருப்பட்டி – 50 கிராம்
4)முந்திரி – 10 கிராம்
5)பாதாம் பருப்பு – 10 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் ராகியை பவுடர் பதத்திற்கு பிரஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து ராகி மாவு போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

ராகி மாவு நன்றாக வறுபட்டு வந்த பின்னர் 25 மில்லி வெண்ணெய் சேர்த்து கிளற வேண்டும.அதன் பிறகு 50 கிராம் அளவிற்கு கருப்பட்டி தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சிறிது வெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு போட்டு வறுக்க வேண்டும்.

இதை ராகி மாவில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ராகி உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை அதிகரிக்கும்.இடுப்பு வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை இந்த ராகி உருண்டை சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம்.

வியர்க்குரு தோல் எரிச்சல் போன்ற சம்மர் நோய்கள் வராமல் இருக்க இந்த பூசணி ஜூஸை குடிங்க!!

0

அடிக்கும் வெயிலுக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்ற செயற்கை பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவை சுவையாகவும்,குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மோசமாகிவிடும.

எனவே இயற்கை முறையில் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள்.இளநீர்,நுங்கு,நன்னாரி சர்பத்,சப்ஜா நீர்,தர்பூசணி சாறு,முலாம் பழச்சாறு போன்றவை உடல் சூட்டை தணிக்கும்.

அதேபோல் வெண் பூசணியில் நீர்ச்சத்து அளவிற்கு அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணியை அரைத்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,வைட்டமின்கள்,பொட்டாசியம்,நார்ச்சத்து ஆகியவை அதிகம் நிறைந்து காணப்படும் வெண் பூசணியை ஜூஸ் செய்து சாப்பிட்டால் சரும நோய்கள் அகலும்.இந்த வெண் பூசணியை அரைத்து பருகினால் குடல் புண்கள் குணமாகும்.

வெண் பூசணியை அரைத்து தோல் தடவி குளித்தால் வெயில் கொப்பளம்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் குணமாகும்.வெண் பூசணி சாறு பருகினால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.அல்சர் புண்களை குணமாக்கும் அருமருந்து சாம்பல் பூசணி.

இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க வெண் பூசணி சாறு குடிக்கலாம்.கெட்ட கொழுப்புகளை கரைத்து தள்ளும் மூலிகை பானமாக வெண் பூசணி ஜூஸ் திகழ்கிறது.சிறுநீரக கல் மற்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு இருந்தால் இந்த வெண் பூசணியை கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

வெண் பூசணி சாறு குடித்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை குணமாக செரிமான பாதிப்பு சரியாக வெண் பூசணி சாறு செய்து குடிக்கலாம்.

எது சாப்பிட்டாலும் வயிறு எரியுதா? இதற்கு ஏல அரிசியில் தீர்வு இருக்கு!! ட்ரை பண்ணுங்க!!

0

வயிற்றில் அல்சர் இருந்தால் என்ன உணவு சாப்பிட்டாலும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.அல்சர் பிரச்சனை இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கத் தோன்றும்.அதேபோல் வயிறு கடுப்பு பிரச்சனை,ஆசனவாய் பகுதியில் எரிச்சல்,வாய் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.

இந்த அல்சர் பாதிப்பை குணமாக்க முதலில் நாம் அதற்கு ஏற்றவாறு உணவுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த மற்றும் இயற்கையான குளிர்ச்சி பொருட்களை சாப்பிட வேண்டும்.அல்சர் பாதிப்பை நாம் சித்த வைத்திய முறையை பின்பற்றியும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

சித்த வைத்தியத்தில் ஏல அரிசி அல்சருக்கு அருமருந்தாக திகழ்கிறது.ஏல அரிசியில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஏல அரிசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிவோம்.

தேவையான பொருட்கள்:-

1)ஏல அரிசி
2பசு நெய்

செய்முறை விளக்கம்:-

ஏல அரிசி என்பது முத்திய ஏலக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் விதையாகும்.இந்த ஏல அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது.

தரமான ஏல அரிசியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.25 கிராம் அளவு கொண்ட ஏல அரிசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

ஏல அரிசி அரை தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜார் அல்லது உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை கிண்ணம் ஒன்றில் போட்டு ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,அல்சர் புண்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஏல அரிசி எண்ணெய் – 10 மில்லி
2)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

10 மில்லி ஏல எண்ணையை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து காலை நேரத்தில் குடித்தால் வயிறு எரிச்சல்,அல்சர்,வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

அல்சர் குணமாக வெந்தயம்,கற்றாழை போன்ற குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும்.காரமான உணவுகள் மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எடை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளுடன் இதையும் பாலோ பாண்ணுங்க!!

0

உங்கள் உடல் எடையை குறைக்க உடலை வருத்தி கடின உடற்பயிற்சி செய்தல்,ஆபாத்தான உணவு முறைகளை கடைபிடித்தல் போன்ற எதையும் செய்ய தேவையில்லை.நீங்கள் சாப்பிட்டே உடல் எடையை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

உடல் எடை கூடினால் சோம்பேறித் தனம் தானாக வந்துவிடும்.இதனால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முதலில் என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ன விஷயங்களை செய்யக் கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஜங்க் புட்ஸ்,கடை உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தி சாப்பிடக் கூடிய உணவுகள்,வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்புள்ள அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.சர்க்கரையை எதிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் நன்றாக உறங்க வேண்டும்.மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்றிவிட வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.முட்டையின் வெள்ளைக்கரு,குறைந்த எண்ணையில் செய்த கோழி இறைச்சி,முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு மூலிகை பானம் பருக வேண்டும்.

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நீச்சல்,நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி,சைக்கிளிங் போன்றவற்றை செய்ய வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு நீங்கள் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.மன அழுத்தம் குறைய யோகா,தியானம் போன்றவற்றை செய்யலாம்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க பருக வேண்டிய பானம்:

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை நேரத்தில் குடித்தால் உடல் எடை சீக்கிரம் கட்டுப்படும்.

உடல் வெப்பம் தணிய நீங்கள் குடிக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய பானங்கள் இவை!!

0

இன்று பெரும்பாலானோர் உடல் சூட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த உடல் சூடு சிலருக்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் உடல் சூடு அதிகரித்து காணப்படுகிறது.

உடல் சூடு அதிகரித்தலால் வயிறு வலி,வயிறு எரிச்சல்,அம்மை நோய்,தோல் எரிச்சல்,முகப்பரு,வியர்க்குரு,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த உடல் சூட்டை தணிக்க இயற்கை பானங்கள் செய்து பருகலாம்.

மாதுளை:

தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தக் கழிவுகளை அகற்றுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

சோம்பு பானம்:

குளிர்ச்சி தன்மை நிறைந்த சோம்பு அதாவது பெருஞ்சீரகத்தை 10 கிராம் அளவிற்கு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சோம்பு பானத்தை வடிகட்டி குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

நெல்லிக்காய் பானம்:

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக பருகினால் உடல் சூடு குறையும்.நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

கற்றாழை பானம்:

காலை நேரத்தில் கற்றாழை ஜெல்லில் ஜூஸ் போட்டு குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து ஜூஸ் போட்டு குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

புதினா பானம்:

ஒரு கைப்பிடி புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து தேன் சேர்த்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

மோர்:

பசுந்தயிரில் இருந்து மோர் எடுத்து வெந்தயப் பொடி மற்றும் கொத்தமல்லி தழை போட்டு குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெந்தய தண்ணீர்:

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

தர்ப்பூசணி:

தினமும் ஒரு கீற்று தர்பூசணி சாப்பிடலாம்.தர்பூசணியை ஜூஸாக அரைத்து குடிக்கலாம்.இதனால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெள்ளரி ஜூஸ்:

பழுத்த வெள்ளரியை கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.முலாம் பழத்தை அரைத்து ஜூஸாக பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.