Home Blog Page 342

சாப்பிட்டாலே அவசரமாக மலம் வருதா? கவலையை விடுங்க.. காலையில் இதை சாப்பிட்டால் எல்லாம் ஓவர்!!

0

நமது குடல் பகுதியில் அதிக நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் கெட்ட பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிவிடும்.இதனால் குடற்புழுக்கள் உருவாகி பலவித தொந்தரவுகளை கொடுக்கும்.நமது குடலில் கழிவுகள் தேங்கி இருந்தால் குடல் அலர்ஜி பாதிப்பு உண்டாகும்.

அதோடு வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை சேர்த்து அனுபவிக்க நேரிடும்.குடலில் தேவையற்ற கழிவுகள் குவிந்தால் வயிற்று வலி,வயிறு பிடிப்பு,உடல் மந்த பிரச்சனை அதிகமாக ஏற்படும்.

குடலில் உள்ள கழிவுகள் வெளியேற,குடல் புண்கள் குணமாக,அசிடிட்டி பிரச்சனை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

வயிற்றில் அதிக கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க ஓட நேரிடும்.குடலில் உள்ள கழிவுகளை அகற்ற எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.இதனால் எளிதில் மலக் கழிவுகள் வெளியேறும்.

குடலில் உள்ள புண்கள் குணமாக மணத்தக்காளி,சுண்டைக்காய் போன்றவற்றை தினசரி சாப்பிட வேண்டும்.வயிறு எரிச்சல் குணமாக தினமும் காலையில் ஒரு பழைய சாதம் குடிக்க வேண்டும்.துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.வாழைப்பூவில் கசாயம் செய்து குடித்தால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

வயிறு எரிச்சல் குணமாக காலையில் தயிர் மற்றும் மோர் சாப்பிட வேண்டும்.அத்தி பிஞ்சை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.சாப்பிட்ட உடன் மலம் கழிக்க காரணம் குடற்புழுதான்.இதற்கு மணத்தக்காளி காயை,வேப்பிலை,பாகற்காய் போன்ற கசப்பானவற்றை வைத்து ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கசப்பு உணவுகள் குடலில் உள்ள புழுக்களை அழிக்கும்.அதிக இனிப்பு உணவுகள்,காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுகபேதி முறையை முயற்சிக்க வேண்டும்.வயிற்றை குளிர்ச்சியாக்கும் இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும்.இவற்றை செய்து வந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை ஏற்படாது.

சமையலறை மேடையின் மேல் வைக்கக் கூடாத 5 பொருட்கள்..!! பணக் கஷ்டத்தை ஏற்படுத்துமாம்..!!

0

ஒரு வீடு என்பது தெய்வ கடாட்சமாக திகழ வேண்டும் என்றால், அந்த வீட்டின் சமையல் அறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். சமையலறையில் பலவிதமான பொருட்களை வைத்திருப்போம். அவற்றை நல்லவை தீயவை என பிரிக்க முடியாது. அனைத்து பொருட்களையும் நமது உணவை சமைப்பதற்காகவே வைத்திருப்போம்.

அன்ன லட்சுமியின் ஆசீர்வாதம் பெற்ற பொருட்கள் என சில பொருட்கள் உள்ளன. அவற்றை நமது சமையலறை மேடையில் வைக்கும் போது நமது வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படாது. ஆனால் சில பொருட்களை வைக்கக் கூடாது. அவை எந்தெந்த பொருட்கள் என்பது குறித்து தற்போது காண்போம்.

நமது வீட்டின் சமையல் அறை என்பது தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பு. நாம் சமைக்க கூடிய அடுப்பிற்கு அருகில் ஒரு சிறிய சொம்பு அல்லது பாத்திரத்தில் நீரை நிரப்பி எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று நமது அடுப்பின் வலது பக்கத்தில் கல் உப்பு, நெய், தண்ணீர் இது போன்ற பொருட்களை வைக்க வேண்டும்.

இவ்வாறு வைக்கும் பொழுது நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலும் அதிகரிக்கும். சிலர் கல் உப்பை சமையல் மேடைக்கு கீழே அல்லது வேறு இடங்களில் வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருந்தாலும் கூட ஒரு சிறிய ஜாடியில் ஆவது கல் உப்பை போட்டு அடுப்பிற்கு வலது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் கருவாடு இது போன்ற பொருட்களை வைக்கக்கூடாது. மேலே உள்ள அலமாரிகளிலும் இந்த கருவாட்டை வைக்கக் கூடாது. சமையல் மேடைக்கு கீழே உள்ள அலமாரிகளில் மட்டுமே கருவாட்டை வைக்க வேண்டும்.

இரண்டாவதாக கருப்பு உளுந்து, கருப்பு எள் இது போன்ற பொருட்களையும் சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. இந்த பொருட்களையும் சமையல் மேடைக்கு கீழே தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும். பணக் கஷ்டமும் ஏற்படாது.

மூன்றாவதாக சமையல் மேடையின் வலது பக்கத்தில் கூர்மையான பொருட்களை வைக்கக் கூடாது. அதாவது கத்தி, கத்திரிக்கோல் இது போன்ற பொருட்களை வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. இதை தவிர்த்து வேறு இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

நான்காவதாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நல்லெண்ணெய். இதையும் சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் வைக்காமல் சமையல் மேடையின் கீழ் பகுதியில் வைக்க வேண்டும். ஏனென்றால் எண்ணெய் என்பது சனி பகவானின் ஆதிக்கம் கொண்டது, எனவே அதனை சமையல் மேடையின் வலது பக்கத்தில் வைக்க கூடாது.

ஐந்தாவது நாம் வாங்கி வரக்கூடிய அசைவம் சம்பந்தமான எந்த ஒரு பொருட்களையும் திறந்த நிலையில் சமையல் மேடையின் வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. ஒரு சில பொருட்களை இந்த இடத்தில் இருந்து எடுத்து புலங்கும் பொழுது அதற்கான சக்தி என்பது நமக்கு கிடைக்கும்.

எனவே சமையல் மேடையில் வலது பக்கம் என்பது அன்ன லட்சுமிக்கு மிகவும் உகந்த ஒரு இடமாகும். எனவே அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகக்கூடிய பொருட்களை மட்டுமே வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து நாம் நமது சமையலறையை பயன்படுத்தும் பொழுது வீட்டில் அன்ன குறைவு மற்றும் பண குறைவு ஏற்படாது.

நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

0

சரும பராமரிப்பில் தீவிரமாக ஈடுபட்டாலும் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதில்லை என்று பலரும் குமுறுகின்றனர்.சீக்கிரம் வெள்ளையாக,நடிகைகள் போன்று சருமம் ஜொலிக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.செயற்கை முறையில் சருமத்தை ஜொலிக்க வைக்க நினைத்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் சருமச் செல்களை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.எனவே உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்துக் கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள உணவுமுறையை பின்பற்றுங்கள்.

1)வைட்டமின் சி

எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களின் சாறை பருகினால் சருமம் பளபளப்பாக மாறும்.

2)நீர்ச்சத்து

தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இயற்கையான ஈரப்பதம் மற்றும் பொலிவு காணப்படும்.

3)கீரை உணவுகள்

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கீரை உணவுகளை சாப்பிட வேண்டும்.கீரையில் வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

4)ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

மீன்,வால்நட்,பாதாம் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்திருக்கிறது.இவற்றை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.இந்த உணவுகள்
சருமத்திற்கு இயற்கை பொலிவை கொடுக்கிறது.

5)குங்குமப் பூ பால்

தினமும் ஒரு கிளாஸ் குங்குமப் பூ சேர்த்த பால் குடித்து வந்தால் சரும நிறத்தில் நல்ல மாற்றம்
ஏற்படும்.

6)பழங்கள்

பப்பாளி,மாதுளை,ஆப்பிள்,வாழைப்பழம் போன்ற பழங்களை தினசரி சாப்பிட்டு வந்தால் சரும நிறத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

7)கிழங்கு

பீட்ரூட்,கேரட் போன்ற கிழங்குகளை வெட்டி ஜூஸ் குடித்து வந்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

8)பால் பொருட்கள்

பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் தயிர்,மோர் போன்ற பானங்களை குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

9)வைட்டமின் ஈ உணவுகள்

நாம் சாப்பிடும் உணவில் வைட்டமின் ஈ சத்து இருக்க வேண்டும்.இந்த வைட்டமின் ஈ சருமத்திற்கு இயற்கை பளபளப்பை கொடுக்கிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

0

1. இயற்கையுடன் நேரம் செலவிடுதல்:

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் நமது அதிகப்படியான நேரம் என்பது திரைகளின் மீது தான் உள்ளது. இதனால்தான் இயற்கையில் இருந்து நாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். ஒரு மனிதனுடைய மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டும் எப்பொழுது இயற்கையுடன் இணைந்து இருக்கிறதோ, அப்பொழுது மட்டும்தான் அந்த மனிதன் புத்துணர்ச்சியை பெறுவான்.

நமது மூளை மற்றும் உடலுக்கு சார்ஜ் ஏற்றுவதே இந்த இயற்கை தான். எனவே நம்முடைய நேரத்தை இயற்கையுடன் செலவிட முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் இது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எனவே முடிந்த அளவிற்கு நம்முடைய நேரத்தை இயற்கையுடன் செலவிட முயற்சிக்க வேண்டும்.

சரியான அளவு சூரிய ஒளி நமது உடலில் படவில்லை என்றால் விட்டமின் D குறைபாடு ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த விட்டமின் குறைபாட்டால் Stress,Anxiety,Depression போன்ற பிரச்சினைகளையும் நமது உடம்பில் ஏற்படுத்தும் என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றோம். எனவேதான் சூரிய ஒளி என்பது உடல் மற்றும் மனதிற்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

எனது சூரிய ஒளி மற்றும் நிலவின் ஒளியில் நேரம் செலவிடுவதை பழகிக் கொள்ளுங்கள். வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் சேர்ந்து நிலவின் ஒளியை காணும் பொழுது குடும்பம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

2. ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:

நமது நேரத்தை பெரும்பாலும் மற்றவர்கள் செல்போனில் போடக்கூடிய கன்டென்ட் களை பார்ப்பதற்காகவே செலவிடுகிறோம். ஆனால் அவ்வாறு மற்றவர்கள் உருவாக்குவதை நாம் பார்ப்பதை தவிர்த்து, நமக்கு தெரிந்த கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, டைலரிங், தோட்டக்கலை, டிராயிங் இது போன்றவைகளை நாமாக உருவாக்க பழகிக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பதை விட, நாம் புதியதாக ஏதேனும் ஒன்றை உருவாக்க வேண்டும். நமது மனம் மற்றும் மூளையை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களது பாராட்டுகளையும், கைதட்டல்களையும் பெற வேண்டும் என எண்ணாமல், நமது மன திருப்திக்காக நமக்குத் தெரிந்ததை புதிதாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

3. மூச்சை நிதானப்படுத்துங்கள்:

நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் அல்லது நெகட்டிவ் ஆக உணர்ந்து கொண்டிருக்கும் பொழுது உங்களது மூச்சானது மிகவும் சிறியதாக இருக்கும், அதாவது ஆழமான மூச்சாக இருக்காது. நீங்கள் எப்பொழுது ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறீர்களோ அப்பொழுது உங்களது மூச்சை கவனிக்க வேண்டும்.

அதாவது மூச்சை வயிறு வரை இழுத்துச் சென்று வெளியே விட வேண்டும். நாம் விடக்கூடிய மூச்சானது ஆழ்ந்த மூச்சாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது உங்களது பாதி மன அழுத்தம் குறைந்து விடும். இவ்வாறு உங்களது உடல் சிறிது மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்த பிறகு, உங்களது மூளையும் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர தொடங்கி விடும்.

4. தொண்டு செய்யுங்கள்:

நாம் நெகட்டிவ் ஆக யோசிப்பதற்கு காரணம் நாம் நம்மை பற்றி மட்டும் யோசிப்பதனால் தான். மற்றவர்கள் நம்மை குறை கூறி விட்டார்கள், நாம் நினைத்தது நடக்கவில்லை என்று தொடர்ந்து நம்மைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பதால்தான் நெகட்டிவ் திங்கிங் நமக்குள் வந்துவிடுகிறது.

எனவே உங்களைக் குறித்த எண்ணங்களை மாற்றி விட்டு மற்றவர்களை குறித்தும் யோசிக்க தொடங்க வேண்டும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தொடங்க வேண்டும். உங்களை சுற்றி உதவி தேவைப்படுவோர் நிறைய பேர் இருப்பார்கள், அவர்களுக்கு நீங்களாகவே சென்று உதவிகளை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய ஆர்கனைசேஷன் உடன் இணைந்தும் தொண்டுகளை செய்யலாம்.

இந்த ஒரு வைட்டமின் உங்கள் உடலில் குறைந்தால் என்னாகும் தெரியுமா? உடனே இதை செய்யாவிட்டால் விபரீதமாகிவிடும்!!

0

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின்.இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.உடல் சீராக இயங்க வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது.

இந்த வைட்டமின் DNA மற்றும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.வைட்டமின் பி12 இரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.நம் நரம்பு செல்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்
பி12 அவசியமாகிறது.

இந்த வைட்டமின் பி12 நாளொன்றில் 2.4 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வைட்டமின் பி12 அதிகமாக தேவைப்படுகின்றது.இந்த வைட்டமின் குறைபாடு பிரச்சனை எந்த வயது உள்ளவர்களுக்கும் ஏற்படும்.குறிப்பாக 60 வயதை கடந்தவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது.

40 வயதிற்குள் இருக்கும் சுமார் 3 சதவீத நபர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை சந்திக்கின்றனர்.அதேபோல் 60 வயதிற்குள் இருக்கும் நபர்களில் சுமார் 4 சதவீத மக்கள் இந்த குறைபாட்டை அனுபவிக்கின்றனர்.60 வயதை கடந்தவர்களில் 6 சதவீத நபர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்:

1)இரத்த சோகை
2)இரைப்பை அலர்ஜி
3)செரிமானப் பிரச்சனை
4)உடல் வலி
5)நகம் சிதைதல்
6)சருமப் பிரச்சனைகள்
7)இரத்தம் உறைதல்
8)கண் பார்வை குறைபாடு
9)நரம்பு வலி,நரம்பு புடைப்பு,நரம்பு வீக்கம்

வைட்டமின் பி12 உணவுகள்:

அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி இறைச்சி,மீன்,முட்டை போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது.

பால் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி12 சத்து நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் சோயா மற்றும் சோயா பொருட்களான சோயா சீஸ்,சோயா பன்னீர்,சோயா பால் போன்றவற்றில் வைட்டமின் பி12 நிறைந்து காணப்படுகிறது.

முழு தானிய உணவுகள்,ஈஸ்ட் உணவுகளில் வைட்டமின் பி12 அதிகளவு நிறைந்திருக்கிறது.பார்லி புல்,கடல் பாசி,சுருள் பாசி போன்றவற்றில் வைட்டமின் பி12 சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.

பாலடைக்கட்டை,ப்ரோக்கலி,அவகேடோ போன்றவற்றிலும் வைட்டமின் பி12 நிறைந்திருக்கிறது.இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

0

1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வையுங்கள்.. அஷ்டலட்சுமியின் வருகை இருக்கும்:

*அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது, ஒரு மந்திரத்தை 8 முறை கூறிவிட்டு அதன் பிறகு திறந்தோம் என்றால், அஷ்ட லட்சுமிகளின் வருகை நமது வீட்டிற்கு கண்டிப்பாக இருக்கும்.

*ஒரு வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், வெறும் பணத்தால் மட்டும் கிடைத்து விடாது. பணத்தோடு சேர்ந்து மற்ற ஐஸ்வர்யங்களும் நமது வீட்டிற்கு கிடைக்க வேண்டும்.

*தினமும் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது அஷ்ட லட்சுமிகளின் வருகையும் எங்களது வீட்டிற்கு இருக்க வேண்டும் என மனதில் நினைத்து “ஸ்ரீம்” என்ற மந்திரத்தை 8 முறை கூற வேண்டும்.

2. மளிகை பொருட்களை எந்த நாளில் வாங்கலாம்:

*பூரம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூசம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் மற்றும் செல்வ செழிப்பும் பெருகும்.

*மளிகை பொருட்களை சமையலறையில் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைத்தால் சுபிட்சம் ஏற்படும். தினமும் குளித்துவிட்டு பூஜை அறைக்குள் செல்வதைப் போன்று, சமையல் அறைக்குள் சென்றோம் என்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.

3. வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்:

*தினமும் பூஜை செய்யும் பொழுது கற்பூரம் ஏற்றுவதனால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும், செல்வமும் கிடைக்கும்.

*கற்பூரத்தை தினமும் வீட்டில் ஏற்றுவதால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தருவார்.

*தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் கற்பூரத்தை ஏற்றுவதால் தொழில் செழிப்படையும்.

*கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிப்பதால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி விலகும்.

4. திருமண யோகத்தை தரக்கூடிய பங்குனி உத்திர பூஜைகள்:

*பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் தான் பங்குனி உத்திரம்.

*பங்குனி உத்திர நாளில் திருமண வரம் வேண்டுவோர், வேலை கிடைக்க வேண்டும் என்றும், கடன் தீர வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்.

*பங்குனி உத்திர நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

*இந்நாளில் விரதம் இருந்து சிவபெருமான் சன்னதிக்கும், முருகப்பெருமான் சன்னதிக்கும் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

5. சனிக்கிழமை நாட்களில் இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்:

*வாஸ்துபடி சனிக்கிழமை நாட்களில் அரச மரத்தின் அடியில் விளக்கு ஏற்றுவது புனிதமாக கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி சனிக் கிழமைகளில் மரத்தின் அடியில் விளக்கேற்றினால் உங்களது விருப்பங்கள் நிறைவேறும் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பை காண்பீர்கள்.

6. கண் திருஷ்டி விலக:

*ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஊர் அடங்கிய பிறகு ஒரு வெள்ளை துணியில் வெண்கடுகு, பச்சைக் கற்பூரம், கல் உப்பு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

*இதனை நல்லெண்ணெயில் நனைத்து நம் வீட்டு வாசப்படி அருகில், தெருவில் இதை போட்டுக் கொளுத்த வேண்டும். இந்த மூட்டை முழுவதும் எரிந்து முடிந்தால் வீட்டில் இருக்கும் ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி ஆகிய அனைத்தும் விலகும்.

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

0

நாய்களை பெரும்பாலும் நமது செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றோம். ஆனால் சில வகை நாய்கள் காடுகளிலும், தெருக்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்த உலகில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது பூமியிலே மிகவும் சிறந்த செல்லப் பிராணியாக இந்த நாய்கள் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த நாய்கள் இரவு நேரங்களில் மட்டும் சத்தமிட்டு எதற்காக ஊளையிடுகிறது என்று யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? அதிலும் நாய்களின் அழுகை சத்தம் ஒரு வினோதமான சத்தமாக நம்மை பயமுறுத்தவும் செய்கிறது. இந்து மதத்தில் நாய்கள் ஊளை இடக்கூடிய இந்த சத்தம் கெட்ட சகுனமாக கூறப்படுகிறது.

மேலும் நாய்கள் கெட்ட ஆவிகளை பார்த்தால் தான் இது மாதிரியான சத்தங்களை எழுப்பும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு பின்னாடி இருக்கும் உண்மை என்ன? நாய்கள் அழுவதற்கான உண்மையான காரணம் என்ன? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான விடைகளை தற்போது காண்போம்.

இந்த பூமியில் மனிதனுக்கு மிகவும் விசுவாசமான ஒரு ஜீவன் இருக்கிறது என்றால் அது நாய் தான். தெருக்களில் திரியும் நாய்களுக்கு ஏதேனும் ஒரு நாள் ரொட்டித் துண்டினை உணவாக கொடுத்தோம் என்றால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை மறவாமல் இருக்கும். ஆனால் இந்த நன்றியுள்ள ஜீவனின் பெயரை வைத்து தான் மற்றவர்களை திட்டவும் செய்கின்றோம்.

நாய்கள் என்பது மனிதர்களின் சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல, சிறந்த உதவி புரியும் ஜீவனாகவும் இருக்கும். இந்த நாய்கள் நமது வீடுகளை பாதுகாக்கவும், நாட்டின் எல்லைகளில் இருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கவும் என பல விதங்களில் உதவி செய்து வருகிறது. இவை அனைத்தையும் மீறி, நாய்கள் இரவு நேரத்தில் சத்தம் போடுவதை மட்டும் ஏன் கெட்ட சகுனம் என கூறுகிறார்கள்.

சிலர் நாய்கள் ஊளையிட்டால், மரணம் நமது வீட்டின் கதவை தட்ட போகிறது என்றும் நம்புவார்கள். மேலும் இந்த நாய்கள் மரணம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்திருப்பதால் தான், அதனை நமக்கு உணர்த்துகிறது என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரங்களின்படி நமது முன்னோர்களின் ஆவிகளை பார்த்தது தான் நாய்கள் இவ்வாறு சத்தமிடுகிறது என்று கூறப்படுகிறது.

நாய்களின் பார்வை திறன் மற்றும் நுண்ணறிவு மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், அது நமது முன்னோர்களின் ஆவிகளை பார்த்ததும் அழுகைகளின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறது என்றும் கூறி வருகின்றனர். நமது கண்களுக்கு தெரியாத ஆவிகளை நாய்கள் பார்ப்பதை நமக்கு தெரிவிப்பதற்கு தான் இவ்வாறு சத்தம் விடுகின்றன.

வீடுகளில் வளர்க்கும் நாய்கள் ஊளையிட்டு கொண்டே இருந்தாலும், கண்களில் நீர் வடித்தாலும், திடீரென உணவு உண்ணாமல் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போவதை உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

இது போன்ற கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவரது நம்பிக்கைகள். ஒரு சிலர் இதனை உண்மை என்றும், ஒரு சிலர் இதனை மூடநம்பிக்கை எனவும் கூறுவர். எனவே நாய்கள் இவ்வாறு ஏன் சத்தம் போடுகின்றன என்பது குறித்து அறிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நாய்களானது ஓநாய்களின் நெருங்கிய உறவுகள் என்பதால், ஓநாய்கள் மாதிரியே நாய்களும் அதுங்களுக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பு கொள்ள இவ்வாறு சத்தம் போடுகின்றன என்பதை கண்டறிந்தனர். அதாவது இந்த சத்தத்தின் மூலம் நாய்கள் எங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றன.

இதனால் மற்ற நாய்களால் அந்த சத்தம் போடக்கூடிய நாய் இருக்கக்கூடிய இடத்தை அறிந்து கொள்ள முடியும். வேறு சில விஞ்ஞானிகள் நாய்கள் வலியில் இருக்கும் பொழுது இது போன்ற சத்தத்தை எழுப்பும் எனவும், நாய்கள் ஒரு சமூக விலங்காக இருப்பதால் அதன் தனிமையை தனது சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.

கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…

0

ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். அந்த கும்பமேளாவில் மோனலிசா என்கிற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ருத்ராட்ச மாலை விற்று வந்தார்.

sanoj

அவரின் கண்களும், முகமும் மிகவும் வசீகரமாக இருந்ததால் ஒரு யூடியூபர் அப்பெண்ணை வீடீயோ எடுத்த போட அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவருடன் செல்பி எடுக்க பலரும் ஆசைப்பட்டு அவரை துரத்தினர். மேலும், பல ஊடகங்களும் பேட்டியெடுக்க அவரை விரட்ட ஆளை விட்டால் போதும் என சொந்த ஊருக்கே போனார் மோனாலிசா.

அதைத்தொடர்ந்து பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா தான் இயக்கவுள்ள தி டைரி ஆப் மணிப்பூர் என்கிற படத்தில் மோனாலிசாவை கதாநாயகியாக நடிக்க வைக்க போகிறேன் என அறிவித்தார். மோனாலிசாவும் அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா வாய்ப்பு கேட்ட தன்னை மிஸ்ரா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிற்கு வரவழைத்து போதை பொருள் கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சனோஜ் மிஸ்ரா தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். எனவே, சனோஜ் இயக்கத்தில் மோனாலிசா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

0

தமிழகம் முழுவதும் 1,331 விடுதிகளில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது, மேலும், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், உண்மையில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் அதை உணவருந்துவதில்லை. பலர் சுவை இல்லாத உணவை தவிர்த்துவிடுகின்றனர்.

விடுதி ஊழியர்கள், அந்த உணவை அருகிலுள்ள பண்ணைகளுக்கு விற்பனை செய்கின்றனர். சென்னை சைதாப்பேட்டை, மயிலாப்பூர் விடுதி மாணவர்கள், “ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை கைவிட வேண்டும். உணவுப் படியை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி தரமான உணவு வழங்க வேண்டும்” என கோருகின்றனர்.

மாணவர்கள் நேரத்திற்கு வரவில்லை என்றால், உணவை ‘வேஸ்டேஜ்’ எனக் கூறி விற்கப்படுகிறது. தினசரி 1-2 டிரம் உணவு பன்றி பண்ணைகளுக்கு செல்லும். திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், உணவு தரக்குறைவாக இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வராவிட்டால் உணவு வழங்க மறுக்கப்படுவதாகவும் மாணவர்கள் புகார் அளிக்கின்றனர்.

ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

0

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.

அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய கிரேன் கீழே விழுந்தது. கட்டிடத்தின் உச்சியில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் தழும்பி தழும்பி கீழே கொட்டிய வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும், பல கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தது. பாங்காங் நகரத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டது.

myanmar

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1700 பேர் வரை இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மியான்மர் ரம்ஜான் பண்டிகைக்காக ஒரே இடத்தில் தொழுகை செய்து கொண்டிருந்த 700 பேர் நிலநடுக்கத்தின் காரணமாக பூமியில் புதைந்து மரணமடைந்துவிட்டதாக மியான்மரில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவித்திருக்கிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மியான்மர் மட்டுமில்லாமல் தாய்லாந்து பாங்காக் ஆகியவற்றில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில், அங்கும் பல நூறு பேர் உயிரிழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு இந்தியாவும் நிவாரண பொருட்களை அனுப்பவதோடு, மீட்பு பணியிலும் கைகார்க்கவுள்ளது. இதுவரை இந்த அளவுக்கு மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இவ்வளவு உயிர்கள் பறிபோனதில்லை என்கிறார்கள். இந்த நில நடுக்கத்தால் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். அதேபோல், பலரும் தங்கள் வீடுகளையும், சொந்தங்களையும் இழந்துள்ளனர்.