Home Blog Page 344

எச்சரிக்கை.. கோதுமை பூரி மற்றும் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு தலையில் வழுக்கை விழும்!!

0

இந்தியாவில் வட மாநிலங்களில் கோதுமை பயன்பாடு அதிகமாக இருக்கிறது.கோதுமையில் செய்யப்பட்ட பூரி,சப்பாத்தி போன்றவை வட மாநில மக்களின் பிரதான உணவாக இருக்கின்றது.கோதுமையில் நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரையிலான நோய் பாதிப்புகளுக்கு கோதுமை உணவுகள் அருமருந்தாக திகழ்கிறது.செரிமான பாதிப்பு,இரத்த அழுத்தம்,கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் குணமாக கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.

இப்படி கோதுமை உணவால் கிடைக்கும் நன்மைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் இந்த கோதுமையை உட்கொண்டு தலைமுடி உதிர்வு,வாந்தி,நகம் உடைதல் போன்ற பிரச்சனைகளை ஒரு கிராமமே சந்தித்திருக்கிறது.மகாராஸ்டிராவில் புல்தானா என்ற மாவட்டத்தில் உள்ள மக்கள் ரேசன் கோதுமை உணவை சாப்பிட்டதால் தலை முடி உதிர்ந்து வழுக்கை பிரச்சனையை சந்தித்தனர்.சிலருக்கு வாந்தி,மயக்கம் போன்ற பாதிப்பு உண்டானது.

இது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் அளவிற்கு அதிகமாக செலினியம் இருப்பது உறுதியானது.இந்த செலினியம் அளவில் 600 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இந்த செலினியத்தின் அளவு அதிகமாக இருந்ததன் விளைவாகத் தான் மக்கள் இதுபோன்ற உடல் நலப் பிரச்சனையை சந்தித்தனர்.

நமது உடலுக்கு தேவையான கனிமங்களின் ஒன்றான செலினியம் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது.சர்க்கரை நோய்,புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து செலினியம் நம்மை காக்கிறது.இருப்பினும் செலினியத்தின் அளவு அதிகரித்தால் தோல் எரிச்சல்,சொறி,முடி உதிர்வு,நகம் சேதமடைதல்,நரம்பு மண்டல பாதிப்பு,சுவாச துர்நாற்றம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

கோடையில் உங்கள் உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் 10 வகை ஆரோக்கிய உணவுகள்!!

0

உடலில் அதிகமாக சூடு ஏற்படுவது கோடை கால பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது.தட்ப வெட்பநிலை,நீர்ச்சத்து குறைபாடு,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் உடல் சூடு அதிகமாகிறது.உடல் சூட்டால் தோல் அலர்ஜி,சூட்டு கொப்பளம்,அம்மை,வியர்க்குரு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உடல் சூட்டை குறைப்பதில் உணவிற்கு முக்கிய பங்குண்டு.உடல் சூட்டை தணித்து சீரான வெப்பநிலையை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்னெ என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1)தண்ணீர்

உடல் சூட்டை தணிக்க நீங்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும்.உடலுக்கு தேவையான தண்ணீர் பருகுவதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்படுகிறது.

2)தண்ணீர் பழம்

கிட்டத்தட்ட 90 சதவீதம் தண்ணீர் சத்து கொண்டிருக்கும் தர்பூசணி பழத்தை உட்கொண்டால் உடல் சூடு தணியும்.

3)சின்ன வெங்காயம்

குளிர்ச்சி நிறைந்த சின்ன வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.பருவ கால நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்க சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம்.

4)வெள்ளரி

நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.

5)தயிர்

பால் பொருளான தயிர் அதிக குளிர்ச்சி நிறைந்த உணவாகும்.இந்த தயிரை மோராக மாற்றி குடித்தால் உடல் சூடு,வயிறு எரிச்சல் குணமாகும்.

6)இளநீர் மற்றும் தேங்காய் நீர்

தினமும் ஒரு இளநீர் குடித்தால் வெயில் கால நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துவிடலாம்.தண்ணீரை போன்று இளநீரும் அதிக குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாகும்.

7)புதினா

தினமும் காலையில் ஒரு கிளாஸ் புதினா தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணிவதோடு புத்துணர்வு கிடைக்கும்.

8)கற்றாழை ஜூஸ்

குளிர்ச்சி நிறைந்த கற்றாழையை கொண்டு ஜூஸ் தயாரித்து பருகினால் உடல் சூடு முழுமையாக தணியும்.

9)கீரை வகைகள்

வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கீரை உணவுகளை சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.

10)எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.

BP மற்றும் SUGAR குணமாக சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ!!

0

தற்பொழுது உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,கெட்ட கொலஸ்ட்ரால் பாதிப்பு போன்றவை அதிகரித்து வரும் உடல் நலப் பிரச்சனையாக இருக்கின்றது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள நீங்கள் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பிபி,சுகர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

பழங்கள்

1)ஆரஞ்சு
2)எலுமிச்சை
3)சாத்துக்குடி
4)பேரிக்காய்
5)ஆப்பிள்
6)மாதுளை
7)பெர்ரி
8)அவகேடோ

காய்கறிகள்

1)பாகற்காய்
2)சுரைக்காய்
3)பீட்ரூட்
4)கேரட்
5)பீர்க்கங்காய்
6)முட்டைகோஸ்
7)காலிஃப்ளவர்
8)ப்ரோக்கலி

கீரைகள்

1)சிறுகீரை
2)முருங்கை கீரை
3)வெந்தயக் கீரை
4)முளைக்கீரை
5)மணத்தக்காளி கீரை
6)அரைக்கீரை

முழு தானிய உணவுகள்

1)பார்லி
2)ஓட்ஸ்
3)குதிரைவாலி
4)பழுப்பு அரிசி
5)சாமை
6)தினை

பருப்பு வகைகள்

1)கடலை பருப்பு
2)கொண்டைக்கடலை
3)பாசிப்பயறு
4)ராஜ்மா

உலர் விதைகள்

1)பாதாம் பருப்பு
2)முந்திரி பருப்பு
3)வால்நட்
4)பூசணி விதை
5)சூரியகாந்தி விதை
6)பிஸ்தா

ஒமேகா 3 கொழுப்பு

1)மத்தி மீன்
2)சால்மன்
3)அயில மீன்

நல்ல கொழுப்பு

1)நல்லெண்ணெய்
2)வேர்க்கடலை எண்ணெய்
3)நெய்
4)ஆலிவ் ஆயில்

பிபி மற்றும் சுகர் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1)வெள்ளை அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதற்கு மாற்றாக பழுப்பு அரிசி,கருப்பு கவுனி அரிசி போன்றவற்றை சாப்பிடலாம்.

2)மைதா மற்றும் மைதா பொருட்களை தவிர்க்க வேண்டும்.இந்த உணவுகள் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

3)பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.அதேபோல் எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4)உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை நிறைந்த பானங்கள்,சூடான டீ,காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.

5)சிவப்பு இறைச்சி உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.ஜங்க் புட்ஸ் மற்றும் பாக்கட் ஸ்னாக்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6)அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.உணவுப் பொருளை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடல் வியாதிகளுக்கு மருந்து இந்த உலர் விதைகள்!! இதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன?

0

மருத்துவ நிபுணர்கள் தினமும் உலர் விதைகள் உட்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் என்று உலர் விதைகளில் இல்லாத ஊட்டசத்துக்களே இல்லை என்று சொல்லலாம்.

பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா,வேர்க்கடலை,பூசணி விதை,சூரிய காந்தி விதைகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த உலர் விதைகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறம் மேம்படும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாமில் இருக்கின்ற கால்சியம் எலும்பை வலிமையாக்குகிறது.

முந்திரி பருப்பில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.முந்திரி சாப்பிடுவதால் உடல் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.இதய ஆரோக்கியம் மேம்பட முந்திரி சாப்பிடலாம்.

கால்சியம்,புரதம்,ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள வால்நட்டை சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.

வேர்க்கடையில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,இரும்பு,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிஸ்தாவை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

நார்ச்சத்து,மெக்னீசியம்,ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.முடி வளர்ச்சி அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.சருமப் பிரச்சனைகள் மற்றும் முடி உதிர்வு பாதிப்புகள் குணமாகும்.

இதய நரம்பு அடைப்பு காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! இதை தடுக்கும் வழிகள்!!

0

நமது இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதை நரம்பு அடைப்பு என்கிறோம்.இதனால் உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி,மார்பு வீக்கம்,மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதயத்திற்கு கொண்டு செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் நரம்பு அடைப்பு ஏற்படும்.

தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.அதுமட்டுமின்றி நரம்பு அடைப்பால் இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் போகும்.இந்த பிரச்சனையால் உடல் சோர்வு,மார்பு வீக்கம்,மார்பு வலி,சுவாசிப்பதில் சிரமம் உண்டதால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதய நரம்பு அடைப்பு எதனால் ஏற்படுகிறது?

1)இதய தமனிகளில் கொழுப்பு படிதல்

2)சர்க்கரை நோய் பாதிப்பு

3)அதிக புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கம்

4)உடல் உழைப்பு இல்லாமை

5)குடும்ப வரலாறு

6)உயர் இரத்த அழுத்த பாதிப்பு

இதய நரம்பு அடைப்பு அறிகுறிகள்:

1)மார்பு இறுக்கம்

2)நெஞ்சு வலி

3)தோள்பட்டை வலி

4)செரிமானப் பிரச்சனை

5)உடல் வலி

6)மூச்சுத் திணறல்

7)மார்பு அழுத்தம்

8)அதிகம் வியர்த்தல்

9)தலைசுற்றல் உணர்வு

இதய நரம்பு அடைப்பு குணமாக வழிகள்:

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.ஆரோக்கிய உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் இதய நரம்பு அடைப்பு பாதிப்பை சரி செய்யலாம்.

இதய நரம்பு அடைப்பு பாதிப்பு குணமாக வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கம்
2)பட்டை
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

இலவங்கம் மற்றும் பட்டை 10 கிராம் அளவிற்கு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த இலவங்கம் மற்றும் பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இதய நரம்பு அடைப்பு குணமாகும்.தினமும் காலையில் எழுந்ததும் கிராம்பு ஊறவைத்த நீரை பருகினால் இதய நரம்பு பிரச்சனை குணமாகும்.

இதய நோயை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணமாக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

0

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதயம் சம்மந்தப்பட்ட நோய்களால் அவதியடைந்து வருகின்றனர்.இதயம் நம் உடலில் இருக்கின்ற மிக முக்கிய உள்ளுறுப்பாகும்.இதயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இருதய அடைப்பு,இதய நரம்பு அடைப்பு,உயர் இரத்த அழுத்தம்,இரத்தத்தில் கொழுப்பு படிதல்,கார்டியாக் அரெஸ்ட்,ஹார்ட் அட்டாக் போன்றவை இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பாகும்.இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)கோதுமை,முழு தானிய உணவுகள்,ஓட்ஸ்,பழுப்பு அரிசி உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

2)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.பொரித்த மீன்களுக்கு பதில் குழம்பில் போட்ட மீன்களை சாப்பிட வேண்டும்.

3)முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட வேண்டும்.கொட்டை வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

4)பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ள வேண்டும்.சோயா உணவுகளை சாப்பிட வேண்டும்.அசைவ உணவுகளை வாரம் ஒருமுறை குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்:

1)அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2)அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.வறுத்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

இதய நோய் பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

2)மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.போதிய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பரீட்சைக்கு ஆர்வமுடன் படிக்க.. படித்தது மறக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

0

தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க,படிப்பில் ஆர்வம் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ.

டார்க் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.டார்க் சாக்லேட் மூளை செயல்திறனை மேம்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

தண்ணீர்

தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.அதேபோல் தயிர்,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.

பழங்கள்

ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை,அத்தி போன்ற பழங்களை ஜூஸாக அரைத்து பருக வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.டீ,காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.காபி மூளைக்கு நல்லது என்றாலும் அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காய்கறி மற்றும் கீரைகள்

பாகற்காய்,வல்லாரை,வெண்டைக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.அதேபோல் உலர் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.கால்சியம் சத்து நிறைந்த பாலை உட்கொள்ளலாம்.

மூச்சு பயிற்சி

தினமும் 15 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.சிறிது நேரம் சூரிய ஒளியில் நடக்கலாம்.காலை நேரத்தில் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள்

சால்மன்,மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த மீன்களை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.

புரத உணவுகள்

பாதாம் பருப்பு,முட்டை போன்றவற்றில் புரதம் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த புரத உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மஞ்சள்

பசும் பாலில் மஞ்சள் கலந்து பருகினால் நினைவாற்றல் பெருகும்.மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஞாபகத் திறன் மேம்படும்.

வாக்கிங் போறவங்க இதை செய்தால்.. உடல் எடையியில் ஒரு கிராம் கூட குறையாது!! நீங்க என்ன தப்பு பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கோங்க!!

0

குழந்தைகள்,இளம் வயதினர்,முதியவர்கள் என்று அனைவரும் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்தினால் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஆரோக்கிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அணைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.அதேபோல் நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

ஓட்டப்பயிற்சியைவிட நடைபயிற்சியை மேற்கொண்டால் உடலில் அதிகளவு கலோரி எரிக்கப்படும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடந்தால் 400 கலோரிகள் வரை குறையும்.

அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.அதிகாலை நேரத்தில் நடப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சிலர் மணி கணக்கில் நடைபயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்று புலம்புகின்றனர்.இதற்கு காரணம் அவர்கள் சரியான உணவுமுறை பழக்கத்தை கடை பிடிக்காததுதான்.

நடைபயிற்சியுடன் நாம் ஆரோக்கிய உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.எண்ணெய் இல்லாத உணவுகள்,ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.ஆனால் சிலர் கஷ்டப்பட்டு நடைபயிற்சி செய்துவிட்டு உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுகின்றனர.இதற்கு காரணம் அவர்கள் சரியான டயட் மற்றும் தூக்கத்தை கடைபிடிப்பதில்லை.

தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை மற்றும் இதய நோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

வாக்கிங் சென்று வந்த பிறகு எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல்,தூங்குதல்,அதிக உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை செய்தால் நடைபயிற்சி பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பகல் நேரத்தில் உறங்குதல்,அதிக உணவு சாப்பிடுதல்,நொறுக்கு தீனி சாப்பிடுதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் விடாப்பிடியான அடத்தை எப்படி கண்ட்ரோல் செய்ய வேண்டும் தெரியுமா?

0

பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிடிவாத குணம் இருப்பது இயல்பான ஒரு விஷயமாக உள்ளது.குறிப்பாக குழந்தைகளின் பிடிவாத குணம் அதிகமாகே இருக்கின்றது.குழந்தைகள் தங்கள் பிடிவாத குணத்தால் நினைத்த காரியத்தை சாதித்து விடுகின்றனர்.அழுது அடம் பிடித்து நினைக்கும் விஷயத்தை அடையும் குழந்தைகளை ஆரம்ப நிலையில் திருத்த தவறினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் குணம் வர காரணம் அவர்கள் பெற்றோர்தான்.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பதால் அவர்கள் கேட்கும் விஷயங்களுக்கு எல்லாம் பெற்றோர் தலையாட்டுகின்றனர்.குறும்பு,பிடிவாதம் போன்றவை இருந்தால்தான் அது குழந்தை என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இந்த குணங்களே அவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்.குழந்தைகளுடன் அவர்களின் பிடிவாத குணம் வளர்வது வாழ்க்கைக்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குழந்தைகள் பெரும்பாலும் டாய்ஸ்,ஸ்னாக்ஸ் போன்றவற்றிற்குதான் அடம் பிடிப்பார்கள்.

அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை கேட்டால் தவறாமல் வாங்கிக் கொடுங்கள்.ஆனால் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று எந்தஒரு ஆரோக்கியமும் இல்லாத உணவுகளை வாங்கிக் கொடுத்தால் அது அவர்களின் பழக்கத்தை மோசமாக்கிவிடும்.

குழந்தைகள் கேட்கிறார்கள் என்று அவர்கள் விருப்பப்பட்டதை எல்லாம் செய்தால் பின்னாளில் அவர்கள் இதை சத்தமாக பயன்படுத்தி எதையும் வாங்கி விடுவார்கள்.குழந்தைகள் தேவையில்லாத விஷயங்களுக்கு அழுது அடம் பிடித்தால் அவர்களை சமாதானப்படுத்த அவர்களின் போக்கில் பெற்றோர் செல்லக் கூடாது.குழந்தைகள் அதிக அடம் பிடித்தால் அவர்களை கண்டு கொள்ளக் கூடாது.நாம் இப்படி செய்தால் அவர்களுக்கு பிடிவாத குணம் ஏற்படுவது மெல்ல மெல்ல குறையும்.அவர்களின் பிடிவாத குணத்திற்கு
முக்கியத்தும் கொடுக்காமல் இருந்தாலே அவர்கள் தானாக தங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.

கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

0

1. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக:

*தினமும் நமது வீட்டில் விளக்கு ஏற்றுவதால் கடவுளின் ஆசியை பெறுவதோடு அக்னி பகவானின் ஆசியையும் பெறலாம். இப்படி கடவுளுக்காக நமது வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெரிய யாகம் செய்த பலன் கிடைக்கும்.

*மனைவி என்பவள் மகாலட்சுமியின் அம்சம் ஆவாள். எனவே ஏதேனும் முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது, மனைவியை எதிரே வர சொல்லி விட்டுப் போனால் செய்யக் கூடிய காரியம் கண்டிப்பாக வெற்றியில் முடியும்.

*செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு, வீட்டிற்கு வந்து சாம்பிராணி தூபம் போட்டு தீப தூப ஆராதனை காட்டி வீட்டில் உள்ள தெய்வத்தை வணங்கினால், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி மற்றும் பண பிரச்சனைகள் நீங்கும்.

2. வீட்டில் வறுமை நீங்கி பணப் புழக்கம் பெருக:

*வீட்டில் உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை இடித்து அதை ஒரு வெள்ளை நிற துணியில் கட்டி வீட்டில் தென்மேற்கு மூலையில் கட்டி விட்டால், வறுமை நீங்கி வரவேண்டிய பணம் வந்து சேரும். இதை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். பணத் தட்டுப்பாடு என்பது வராது.

3. வீடு துடைக்கும் பொழுது கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை:

*வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும், அது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கும்.

*செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பை போடக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.

*வீட்டை துடைக்கும் பொழுது வடக்கு திசையிலிருந்து ஆரம்பித்து வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டும். மதிய நேரத்திற்குப் பிறகு வீட்டை துடைக்க கூடாது. காலை நேரத்தில் மட்டுமே துடைக்க வேண்டும்.

4. காலையில் எழுந்தவுடன் எதை பார்க்க கூடாது:

*காலையில் எழுந்தவுடன் அழுக்கு பாத்திரங்களை பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் பண இழப்பு மற்றும் வறுமை ஏற்படும்.

*காலை எழுந்தவுடன் அடுத்தவர் நிழலையோ அல்லது உங்களது நிழலையோ பார்த்தால் ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படும்.

*காலையில் எழுந்தவுடன் ஓடாத கடிகாரத்தை பார்க்க கூடாது. அது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

*காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

5. வாங்கின கடனை அடைக்கவும், கடன் வாங்கவும் உகந்த நாட்கள்:

*நீங்கள் வாங்கின கடனை செவ்வாய்க் கிழமையும், செவ்வாய் ஓரையில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் மதியம் ஒரு மணி முதல் 2:00 மணி வரையிலும் வாங்கின கடனை திரும்ப கொடுத்தால் சீக்கிரம் கடனை அடைத்து விடுவீர்கள். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது.

*கேது மற்றும் செவ்வாய் இணைந்த நேரமான மைத்ர முகூர்த்த நேரமும் கடனை அடைக்க சிறந்த நேரம்.

*அதேபோன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் கடனை அடைக்க சிறந்த நேரம்.

*மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வரக்கூடிய கறி நாட்களிலும் கடனை அடைக்கலாம். இது கடனை அடைக்க மிகவும் சிறந்த நாளாக இருக்கும்.