Home Blog Page 346

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

0

உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும்.

இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த உலர் திராட்சையை நீருடன் மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

அதன் பிறகு முகத்தை கழுவ இந்த நீரை உபயோகிக்கலாம்.உலர் திராட்சையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து முகத்தில் பூசினால் கருவளையம் நீங்கும்.

அதேபோல் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் குணமாகும்.உலர் திராட்சை பேஸ்டை முகத்தில் பூசினால் சருமத்திற்கு இயற்கை பொலிவு கிடைக்கும்.

உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் நீங்க உலர் திராட்சை பேஸ் பேக் ட்ரை பண்ணலாம்.

ஊறவைத்த உலர் திராட்சையை அரைத்து தேன் சேர்த்து முகத்தில் தடவினால் இயற்கை ஈர்ப்பதம் தக்கவைக்கப்படும்.உலர் திராட்சை பேஸ்ட்டை உடலில் பூசி மசாஜ் செய்து குளித்தால் ஒருவித பொலிவு கிடைக்கும்.

கருப்பு உலர் திராட்சை ஊறவைத்த நீரில் காட்டன் பஞ்சு போட்டு நினைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.இப்படி செய்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும்.உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சரும பளபளப்பை அதிகரிக்க உலர் திராட்சை ஊறவைத்த நீர் கொண்டு முகம் கழுவலாம்.முகப்பரு மற்றும் தழும்புகள் மறைந்து போக உலர் திராட்சை நீரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

இளம் வயதில் வரும் சரும வறட்சி,சுருக்கங்கள் அனைத்தும் குணமாக உலர் திராட்சை தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தலாம்.

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

0

மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம்.

சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி மூலம் குணப்படுத்த முடியும்.

தலைவலி பாதிப்பு ஏற்பட்டால் அதை கட்டைவிரல் கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.அதாவது கை கட்டை விரலின் சதைப்பகுதியில் அருகில் இருக்கின்ற விரல் கொண்டு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

ஒருவர் மயக்கம் போட்டு விட்டால் அவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மயக்கம் அடைந்தவரின் உள்ளங்கால் கட்டை விரல் மற்றும் அருகில் இருக்கின்ற விரலுக்கு இடையில் உள்ள எலும்பின் மீது நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மயக்கம் அடைந்தவரின் மூக்கு பகுதிக்கு கீழ் உதடு பள்ளம் உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் மயக்கம் தெளிந்துவிடும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கால் நடு விரல் மற்றும் இரண்டாவது விரலுக்கு இடையில் உள்ள எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வயறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

இதுபோன்ற அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மயக்கம்,தலைவலி,வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.இது தவிர பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.எனவே அக்கு பஞ்சர் சிகிச்சையால் குணமாகும் நோய்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

0

நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்பு மூளைதான்.மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.மூளையின் செயல்திறன் அதிகமாக இருந்தால் எதையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும்.

அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்ய முடியும்.படிக்கும் மாணவர்களுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

உடல் இயக்கத்தையும்,எண்ணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியம்.நம் சிந்தனைகள் தெளிவு இல்லாமல் இருந்தால் நம்மை முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள்.ஒருவர் முட்டாள்,புத்திசாலி என்பது அவரின் மூளையின் செயல்திறனை பொறுத்துள்ளது.

நம் மூளை இரண்டு வகையாக உள்ளது.ஒன்று பெரு மூளை மற்றொன்று சிறு மூளை.நாம் மேற்கொள்ளும் எல்லா விஷயங்களும் மூளையின் கட்டளையால் தான் நடைபெறுகின்றது.இப்படி பல்வேறு வேலைகளை செய்யும் மூளையின் செயல்திறன் குறைய நாம் செய்யும் தவறுகளே காரணம்.

அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டால் நமது மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.அதேபோல் அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் மோசமாவதோடு மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.

தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக நேரம் மொபைல் பயன்படுத்துதல்,ஹெட் செட்,ஹெட் போன் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் மூளையின் செயல்திறன் குறைகிறது.

மூளையின் செயல்திறன் அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:

பாதாம்,வால்நட் போன்ற உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

0

ஆண்களுக்கு விந்து தரம் மற்றும் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆணின் விந்து தரத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும்.பொதுவாக உடலுறவில் ஈடுபடும் பொழுதும்,சுய இன்பம் செய்யும் பொழுதுதான் ஆண்களுக்கு விந்து வெளியேறும்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தானாக விந்து வெளியேறுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் தங்கள் பருவ வயதில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பருவ வயதில் வரும் இயல்பான பாதிப்புதான்.அதேபோல் இந்த தானாக விந்து வெளியேறும் நிகழ்வு எந்த வயதிலும் ஏற்படலாம்.

தூக்கத்தில் உடலுறவு குறித்த கனவு வந்தால் விந்து வெளியேறும்.ஆனால் அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால் அது தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கும்.இப்படி தானாக விந்து வெளியேற உணவு முறைகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.

தானாக விந்து வெளியேற காரணமான உணவுகள்:

1)எலுமிச்சை
2)கோதுமை
3)மஞ்சள்

எலுமிச்சையில் ஜூஸ்,சாதம் போன்ற எலுமிச்சை சார்ந்த உணவுகளை சாப்பிடும் நாட்களில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை ஆண்கள் சந்திக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது.எனவே அடிக்கடி எலுமிச்சை உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கோதுமை ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும்.இந்த கோதுமையில் சப்பாத்தி,பூரி,தோசை,பிஸ்கட் என்று வகை வகையான உணவுகள் செய்து உட்கொள்ளப்படுகிறது.ஆனால் கோதுமை உணவுகளை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை ஆண்கள் சந்திக்க நேரிடும்.

மஞ்சள் குர்குமின் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது.நமது உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவும் மஞ்சளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு தானாக விந்து வெளியேறும் பிரச்சனை ஏற்படும்.மஞ்சள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதை குறைவாக பயன்படுத்துவது நல்லது.

மேலும் அதிக உடல் சூடு பிரச்சனை இருப்பவர்களுக்கு தூக்கத்தில் தானாக விந்து வெளியேறும்.இவர்களெல்லாம் உடல் சூட்டை தணிக்கும் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

0

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குடலில் அதிக கெட்ட கழிவுகள் தேங்கி வாயுத் தொல்லை,வயிறு உப்பச பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவை பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.

எனவே உங்கள் மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.குடலில் துளியளவும் கழிவுகள் இருக்காது.

தேவையான பொருட்கள்:-

1)பிரஸ் கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜெல்லை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.

இந்த கற்றாழை ஜூஸை கிண்ணம் ஒன்றில் ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்த கற்றாழை ஜூஸ் செய்து குடித்து வந்தால் குடலில் உள்ள கெட்ட கழிவுகள் முழுமையாக வெளியேறி வயிறு சுத்தமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)விளக்கெண்ணெய் – மூன்று துளி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை துண்டு எடுத்து அதில் இருந்து ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த
கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.அதன் பிறகு சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த கற்றாழை பானத்தை பருகினால் பெருங்குடலில் இருக்கின்ற கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் குடல் கழிவுகள் வெளியேறும்.

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

0

குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கவலைகள் என இருக்கும் பொழுது குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து, நமது வீட்டில் வைத்து வழிபட்டோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறுவர். ஆனால் குலதெய்வத்தின் மண்ணை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் என்பதுதான் ஆணிவேராக திகழும். எனவே தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, குலதெய்வத்தின் காலடியில் இருக்கக்கூடிய மண்ணை நமது வீட்டில் எடுத்து வந்து வைத்திருப்போம். அவ்வாறு குலதெய்வத்தின் மண்ணை நமது வீட்டிற்கு எடுத்து வரலாமா? நமது வீட்டில் வைத்து அதனை வழிபடலாமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.

பொதுவாக குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து நமது வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஏனென்றால் குலதெய்வ கோவிலில் இருக்கக்கூடிய ஒரு சிறு துளி மண்ணிற்கும், அந்த தெய்வத்தினுடைய சக்தி நிறைந்து இருக்கும். அத்தகைய சக்தி நிறைந்த மண்ணை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது அதிகப்படியான சுத்தபத்தம் என்பதும் அவசியம்.

நமது குலதெய்வம் மண்ணிற்கு தேவையான சுத்தபத்தத்தை நம்மால் ஒருபோதும் கண்டிப்பாக கொடுக்க முடியாது. ஏதேனும் ஒரு வகையிலாவது ஏதேனும் ஒரு தீட்டை செய்து விடுவோம். அல்லது வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு வகையிலாவது அந்த மண்ணிற்கு தீங்கு விளைத்து விடுவோம்.

வீட்டினை மற்ற ஆட்களை கொண்டு சுத்தம் செய்கிறோம் என்கின்ற பொழுது, அவர்கள் சுத்தபத்தமாக இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பது நமக்கு தெரியாது, அதனாலும் தீட்டு ஏற்படலாம். மேலும் நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது, கண்டிப்பாக எந்த வித தீட்டும் ஏற்படாதவாறு அந்த மண்ணை வைத்திருக்க முடியாது.

இவ்வாறு ஏதேனும் ஒரு தீட்டை ஏற்படுத்தி விட்டாலோ அல்லது வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது நமக்குத் தெரியாமலே அந்த மண்ணை தூக்கி எறிந்து விட்டாலோ, அது மிகப் பெரிய பாவச் செயலாக மாறிவிடும். எந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக அந்த மண்ணை கொண்டு வந்து நமது வீட்டில் வைத்திருக்கிறோமோ அதைவிட பெரிய பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி விடும்.

ஏனென்றால் குலதெய்வம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். எனவே அந்த குலதெய்வ மண்ணிற்கு நாம் தீங்கு விளைவிக்கும் பொழுது, அதனால் மிகப்பெரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு குலதெய்வ மண்ணை நமது வீட்டில் எடுத்து வைத்து இருப்பதற்கு பதிலாக, குலதெய்வ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதியை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்து, உடல்நிலை சரியில்லாத பொழுதோ அல்லது கெட்ட கனவுகள் வரும்பொழுது அல்லது முக்கியமான விஷயங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது அந்த விபூதியை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் பொழுது நமது குலதெய்வத்தின் அருளும், பாதுகாப்பும் நமக்கு கிடைக்கும். இதனால் குலதெய்வத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் குலதெய்வ மண்ணை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது அந்த குலதெய்வம் நமது வீடும் முழுவதும் நிறைந்து இருக்கும்.

அவ்வாறு இருக்கையில் நமது வீட்டில் ஏதேனும் தப்பு தவறுகள் செய்யும்பொழுது, ஒழுக்கம் இல்லாமல் நடக்கும் பொழுது கண்டிப்பாக அதனால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும். ஏனென்றால் ஒரு வீட்டை எப்பொழுதும் சுத்தபத்தமாகவும், எந்தவித தீட்டை ஏற்படுத்தாமலும் வைத்துக்கொள்ள முடியாது. எனவே குலதெய்வ கோவிலின் மண்ணை எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

0

இந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பாதிப்பை சந்திக்கின்றனர்.தைராய்டு பாதிப்பின் காரணமாக கருவுறுதல் தள்ளிப்போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தைராய்டு பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு,மாதவிடாய் பிரச்சனை,சரும வறட்சி,உடல் எடை அதிகமாதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தைராய்டில் ஹைப்பர் மற்றும் ஹைப்போ என்று இரு வகைகள் இருக்கிறது.இதில் தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் தைராய்டு குறைவாக சுரப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் ஏற்படுகிறது.

இந்த இரண்டு பாதிப்புகளும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த தைராய்டு பிரச்சனை பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் மாத்திரை சாப்பிட்டு அதை கட்டுப்பாட்டில் வைக்கின்றனர்.ஆனால் இப்படி தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் சில விஷயங்களை செய்தால் மாத்திரையின் பலன் குறைந்துவிடும்.

தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்ளும் சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

நீங்கள் தைராய்டு மாத்திரை சாப்பிடும் பொழுது கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

முள்ளங்கி,முட்டைகோஸ் போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு தைராய்டு மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சோயாவில் செய்யப்படும் பால்,பன்னீர்,சீஸ் போன்றவற்றை தைராய்டு மாத்திரை சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டும்.

காஃபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தைராய்டு மாத்திரை சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் மது பழக்கத்தை கைவிட வேண்டும்.தைராய்டு மாத்திரையை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

0

மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான்.

மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய பறவை என்றால், அதுவும் இந்த மயில் தான்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த மயிலிறகை பண்டைய காலத்தில் இருந்தே, அதுவும் அரசர்கள் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த மயிலிறகின் முக்கியத்துவத்தை அறிந்து பயன்படுத்தி வருகின்றோம். பண்டைய காலத்தில் அரசர்களின் விசிறியாகவும் இந்த மயிலிறகு பயன்பட்டு வந்தது.

இன்றைய காலத்திலும் இந்த மயிலிறகு விசிறியை பயன்படுத்துவர்களும் உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மயில் இறகு நமது வீட்டில் எங்கு இருக்க வேண்டும்? எந்த திசையில் இருக்க வேண்டும்? எந்த அறையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து காண்போம்.

இந்த மயில் இறகு என்பது ஆன்மீகம் ரீதியாக மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மயில் இறகு என்பது ஒரு வீட்டில் இருந்தாலே போதும், அந்த வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் என்பது பரவி இருக்கும். மேலும் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதையும், அந்த வீட்டிற்குள் நுழைவதையும் இந்த மயிலிறகு தடுக்கும்.

அப்படிப்பட்ட இந்த மயிலிறகை வீட்டின் நிலை வாசலில் வைத்தால் கண் திருஷ்டி ஆனது தடுக்கப்படும். மேலும் பில்லி, சூனியம், ஏவல் இது போன்ற எந்த வித தீய சக்திகளையும் இந்த மயிலிறகு உள்ளே நுழைய விடாமல் தடுத்துவிடும்.

மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதை அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியாது. அந்த அற்புதமான காட்சி இந்த மயிலிறகை பார்க்கும் பொழுதெல்லாம் நமது நினைவிற்கு வரும். மேலும் இந்த மயிலிறகை பார்க்கும்பொழுது ஒரு விதமான சந்தோசம், மன அமைதி என்பது கிடைக்கும்.

மன அழுத்தம், கவலைகள், கோபம் என எதுவாக இருந்தாலும் இந்த மயில் இறகை நமது கையில் வைத்து, சிறிது நேரம் பார்த்தாலே போதும் அனைத்து கவலைகளும் ஓடிவிடும். இந்த மயில் இறகை கொண்டு காற்று வீசும் பொழுது காற்றை சுத்தப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால்தான் பண்டைய காலங்களில் அரசர்கள் இதனை பயன்படுத்தினர்.

இத்தகைய மயில் இறகை நமது படுக்கை அறையில் வைப்பதன் மூலம் நிம்மதியான தூக்கம் என்பது ஏற்படும். மேலும் தூங்கும் பொழுது எந்தவித கெட்ட கனவுகளும், தீய எண்ணங்களும் உருவாகாது எனவும் கூறப்படுகிறது. மயிலிறகு இருக்கக்கூடிய இடத்தில் எந்தவித விஷப் பூச்சிகளும் வராது எனவும் கூறப்படுகிறது.

குழந்தைகள் எதுவும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்கிறது என்றால், அந்த குழந்தைகளின் மேல் இந்த மயில் இறகை வைத்து தடவி விடும் பொழுது, அந்த குழந்தையிடம் உள்ள தீய சக்திகள் விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்தவித கண் திருஷ்டிகள், தோஷங்கள் இருந்தாலும் விலகி விடும்.

குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் இந்த மயிலிறகை வைப்பதன் மூலம், குழந்தைகளிடம் கவன சிதைவு ஏற்படாமல் ஒரு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் எனவும், எதிர்மறை ஆற்றல்கள் அந்த அறைக்குள் செல்லாது எனவும் கூறப்படுகிறது. இதனால் கல்வியில் சிறந்த ஆர்வத்துடனும், கவனத்துடனும் படிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மகாலட்சுமியின் அம்சமாக கருதக்கூடிய இந்த மயிலிறகை பணம், நகை, பத்திரம் ஆகியவை வைக்கக்கூடிய பீரோ மற்றும் அறைகளில் இந்த மயிலிறகை வைப்பதன் மூலம் பணவரவானது இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தியும் இந்த மயிலிறகுக்கு உண்டு.

இந்த மயிலிறகை பூஜை அறையில் வைப்பதன் மூலம், வீடு முழுவதும் தெய்வீக அம்சமாக திகழும். மேலும் நேர்மறை ஆற்றல்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். லட்சுமி கடாட்சமும் நிறைந்து காணப்படும்.

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

0

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம்.

அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் தனது தோகையை விரித்து ஆடும். அதே போன்று பூகம்பம், சுனாமி இது போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்பாக, விலங்குகளிடம் ஒரு விதமான மாற்றங்களை நம்மால் காண முடியும்.

மனிதன் தனது அறிவினால் இது போன்ற நிகழ்வுகளை கண்டறிய பல கருவிகளை கண்டறிந்து வைத்திருந்தாலும் கூட, தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனால் இதனை முன்கூட்டியே உணர முடியுமா என்றால், அது கண்டிப்பாக முடியாது.
ஜோதிடத்தில் பஞ்சபூதங்களின் அடிப்படையில் தான் ராசிகளை பிரித்து வைத்துள்ளனர். அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். ஆகாயம் என்பதை அளவிட முடியாது என்பதால் அது அனைத்திற்கும் பொதுவாக அமையும்.

மீன்கள் என்பது மிகவும் சென்சிடிவ் ஆன உயிரினம். எனவே வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை உடனே ஈர்க்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. ஜோதிடத்தில் நீர் ராசிகள் என்பவை கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஆகும்.

இதில் கடகம் என்பது நண்டு. இது நீர், நிலம் ஆகிய இரண்டிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது எனவே இது மூன்றாவது அமைப்பை கொண்டது. விருச்சிகம் என்பது அறிய முடியாத ஆழ்கடல் உயிரினத்தை குறிக்கும் என்பதால் இது இரண்டாவது அமைப்பை கொண்டது. மீனம் என்பது மீனைக் குறிப்பதால் இது முதல் அமைப்பை பெறும்.

எனவே விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மீனை வளர்க்கலாம். ஜோதிடத்தில் உயர்நிலை சுப ஸ்தானம் என்பது 1,5,9. அதாவது இது திரிகோண ஸ்தானம் எனப்படும். இந்த ஸ்தானத்தில் இந்த மூன்று ராசிகளும் வருவதால் மீன் வளர்ப்பதற்கு உகந்த ராசியாகவும் திகழ்கிறது.

மீன்களைப் பார்க்கும் பொழுது ஒரு விதமான சந்தோசம் மனதில் ஏற்படுகிறது. மன அமைதியும் கிடைக்கிறது. ஆனால் நீருக்கு எதிரி நெருப்பு என்பதால் நெருப்பு ராசிக்காரர்கள் ஆன மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களும், நிலம் ராசிக்காரர்கள் ஆன ரிஷபம் கன்னி மகரம் ஆகிய ராசிக்காரர்களும் மீனை வளர்க்கக் கூடாது.

அவ்வாறு அவர்கள் மீனை வளர்த்தாலும் அவ்வளவு யோகமாக அவர்களுக்கு அமையாது. காற்று ராசிக்காரர்களான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் மீனை வளர்க்கலாம்.

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

0

ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம்.

அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

சிலர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் காட்டுவதில்லை.பொருளாதார சூழல்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட தயக்கம் காட்டுகின்றனர்.முதல் குழந்தையை வளர்ப்பதற்குள் நிறைய சவால்களை சந்திக்க நேரிடுவதால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான விருப்பம் இளம் அம்மாக்களிடையே குறைகின்றது.

குழந்தையை பராமரிக்க குடும்ப உறவுகள் துணை இருந்தால் நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடலாம்.உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கிறது என்றால் நீங்கள் தாராளமாக இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடலாம்.

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு குழந்தைகளுக்காக முழு நேரத்தையும் செலவிடுங்கள்.முதல் குழந்தையை கவனித்துக் கொண்டது போல் இரண்டாவது குழந்தையையும் கவனியுங்கள்.

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துங்கள்.இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில்லை பிரச்சனை இல்லையென்றால் தாராளமாக திட்டமிடலாம்.இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி தரும் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடலாம்.