Home Blog Page 347

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

0

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது.

ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை கெடுத்தும் கொள்கின்றனர்.

பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு, நல்லபடியாக நடந்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற்று அடுத்த நிலைக்கு உயர முடியும். ஆனால் பள்ளிக்கு செல்லக்கூடிய காலத்திலேயே பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் பல தீய செயல்களில் இறங்கவும் சென்று விடுகின்றனர்.

இவ்வாறு பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் அவர்களது வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திருத்துவதற்கு, ஒரு எளிய வழிபாட்டை பெற்றோர்களாகிய நீங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பார்கள்.

பள்ளிக்கு செல்லக்கூடிய காலத்திலேயே பிள்ளைகள் கேட்கக்கூடிய அனைத்தையும், பெற்றோர்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அதனை பெற்றோர்கள் செய்ய மறுத்தால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் அல்லது தவறான முடிவை எடுத்துக் கொள்வேன் என மிரட்டவும் செய்கின்றனர்.

இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இது மிகவும் எளிதான ஒரு பரிகாரம் இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் வீதம் வாரத்திற்கு ஒரு முறை, அதாவது 11 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் நாள் திங்கள் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால், அடுத்த வாரம் அதே திங்கள் கிழமை அதே நேரத்தில் செய்து கொள்ளலாம், ஆனால் எந்த கிழமையில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிக் கொள்ளலாம்.

ஒரு தட்டில் சிறிதளவு மஞ்சள், குங்குமம் போட்டு இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்கிற்க்கும் மஞ்சள், குங்குமம், புஷ்பம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அகல் விளக்கிற்க்கும் நடுவில் கற்றாழையை சிறிதளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அந்த அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபத்தை ஏற்றி உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, நமது வேண்டுதல்களை கூற வேண்டும்.

இவ்வாறு குலதெய்வத்தை நினைத்து கற்றாலை தீபத்தை ஏற்றும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள தீய சக்திகள், தீய எண்ணங்கள் ஆகிய அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களது பிள்ளைகளின் மனநிலை மாறும்.

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

0

நம் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை காண நேரிடும்.சில வைட்டமின்கள் கம்மியாக இருந்தால் நம் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நம் உடல் கட்டமைப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாக இருக்கிறது.

வைட்டமின் பி 12 நன்மைகள்:

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்திக்கு உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்:

எலும்பு பலவீனமாதல் பிரச்சனை ஏற்படும்.மன அழுத்த பாதிப்பு அதிகமாகும்.இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும்.உடலில் அதீத சோர்வு ஏற்படும்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.கண் பார்வை பாதிக்கப்படும்.நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

உடலில் ​வைட்டமின் பி 12 அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)யோகர்ட்

இதில் வைட்டமின் பி 12 அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அசைவ உணவுகளைவிட தயிரில் வைட்டமின் பி 12 அதிகம் உள்ளது.

2)பால் பொருட்கள்

பாலில் கால்சியம்,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்க கூடிய சீஸ்,வெண்ணெய்,நெய் போன்றவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கிறது.

​3)மீன்

கடல் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்திருக்கிறது.இதில் சால்மன் மீனில் வைட்டமின் பி 12 என்ற சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் பி 12 கிடைக்கும்.

4)சோயா மற்றும் சோயா பொருள்

பாலுக்கு இணையான கால்சியம்,புரத சத்து கொண்டிருக்கும் சோயாவை உட்கொண்டால் உடலில் வைட்டமின் பி 12 சத்து அதிகமாகும்.

5)காளான் மற்றும் கடல் பாசி

இந்த உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் 12 சத்து அதிகரிக்கும்.

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

0

நாம் உட்கொள்ளும் வேர்கடலை,சோளம் போன்ற பயிர்களில் வளரும் பூஞ்சைகளில் ஒன்றுதான் அஃப்லாடாக்சின்.இந்த அஃப்லாடாக்சின் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த அஃப்லாடாக்சின் நாம் பயன்படுத்தும் மிளகாய்,ஜாதிக்காய் போன்றவற்றிலும் காணப்படுகிறது.நன்கு சிவந்த விதைகள் உள்ள வர மிளகாயை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.மிளகாயில் மஞ்சள் அல்லது கருப்பு நிற பூஞ்சை தென்பட்டால் அதனை வாங்கக் கூடாது.இந்த வகை மிளகாயில் உள்ள அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நமது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.

அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.உங்களில் சிலர் மிளகாய் வற்றலை வாங்கி பொடியாக அரைத்து பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.இப்படி மிளகாய் வற்றல் வாங்கும் பொழுது நல்லவற்றை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

ஒரு கிலோ மிளகாய் வற்றல் வாங்கினால் அதில் அரை கிலோ அளவிற்கு அஃப்லாடாக்சின் தொற்று ஏற்பட்ட மிளகாய் வந்துவிடுகிறது என்பது மக்களின் குமுறலாக இருக்கிறது.மிளகாய் மட்டுமின்றி ஜாதிக்காய்,வேர்க்கடலை,சோளம்,குச்சி கிழங்கு,கோதுமை போன்றகளிலும் அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று காணப்படுகிறது.

இந்த அஃப்லாடாக்சின் பூஞ்சை நிறைந்த பொருட்களை உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,பருவ கால பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

அஃப்லாடாக்சின் நம் உடலில் சென்றால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும்?

தோல் அரிப்பு
கல்லீரல் பாதிப்பு
உடல் சோர்வு
வயிற்று வலி
வாந்தி உணர்வு
பசியின்மை
வலிப்பு

அஃப்லாடாக்சின் அதிகம் உள்ள உணவுகள்:

சோளம்,அரிசி,கோதுமை,மிளகாய்,வேர்க்கடலை,மசாலா பொருட்களில் அஃப்லாடாக்சின் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.தற்பொழுது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.எனவே வாங்கும் பொருட்களில் பூஞ்சை,சொத்தல் போன்றவை இருந்தால் அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

0

ஒருவர் அவரது ராசிக்கு ஏற்ற குறியீடுகளை அணிந்து கொள்வதன் மூலம் பல அதிர்ஷ்டங்களை பெற முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் இந்த குறியீடுகளை நமது உடம்பில் படும்படி அணிந்து கொள்வது பல யோகங்களை தரும் என்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக மீனம் ராசிக்காரர்கள் மீனின் படத்தை அடிக்கடி பார்ப்பதும், மீன் தொட்டிகளை வைத்து வளர்ப்பதும், மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் அதிர்ஷ்டத்தை தரும். இதுபோலவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த ராசிக்கு ஏற்ற குறியீடுகளை பயன்படுத்துவது உத்தமம்.

அதேபோன்று நட்சத்திரங்களுக்கு ஏற்ற விருட்சகங்களும், நட்சத்திர சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் பல யோகங்களை தேடித் தரும். பொதுவாக ஓம், வேல், திரிசூலம் இது போன்ற சின்னங்களை டாலராக கழுத்தில் அணிந்து வருபவர்களுக்கு அதிக மன வலிமை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நாம் அணிந்து கொள்ள கூடிய சாமி டாலர் நமது ராசிக்கு எவை அதிர்ஷ்டத்தை கொடுக்கும், எந்த சாமியின் படத்தை டாலராக நமது கழுத்தில் அணிந்து கொண்டால் நமக்கு யோகத்தை கொடுக்கும் என்பது குறித்த விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம்.

1. கும்பம் ராசி:
கும்ப ராசிக்காரர்கள் விருட்சங்கள் அதாவது மரங்கள் பொறித்த சின்னங்களை தாராளமாக அணிந்து கொள்ளலாம். அதேபோன்று இலைகள், பூரண கும்பம் இது போன்ற சின்னங்களை அணிந்து கொள்வதும் யோகங்களைத் தரும்.

2. ரிஷபம் ராசி:
ரிஷபம் ராசிக்காரர்கள் மகாலட்சுமி தாயின் சின்னம் பொறித்த டாலரை வெள்ளி அல்லது தங்கத்தில் அணிந்து கொள்வது பல சிறப்புகளை தேடித் தரும்.

3. தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்கள் மகாலட்சுமி தாயின் திருவுருவப் படத்தை அணிந்து கொள்வது மேலும் பல அதிர்ஷ்டங்களை தேடித்தரும்.

4. கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்கள் அம்பாள் அல்லது உங்களது குலதெய்வத்தின் படத்தை அணிந்து கொள்வது சிறப்பை கொடுக்கும். மேலும் ராகவேந்திரா திருவுருவப் படத்தையும் அணிந்து கொள்ளலாம்.

5. மேஷம் ராசி:
மேஷம் ராசியில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணு மற்றும் முருகனின் டாலரை அணிந்து கொள்ளலாம்.

6. மீனம் ராசி:
மீனம் ராசிக்காரர்கள் ஓம் என்ற மந்திரத்தை டாலராக அணிந்து கொள்வது மேலும் பல அதிர்ஷ்டத்தை தேடி தரும். மேலும் சுவஸ்திக் சின்னம், வேல் சின்னம், திரிசூலம் ஆகியவற்றையும் அணியலாம்.

7. மிதுனம் ராசி:
மிதுன ராசிக்காரர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் திருவுருவம் பதித்த டாலரை அணியலாம். மேலும் ஹயக்ரீவர், மகாவிஷ்ணு ஆகிய படத்தையும் அணியலாம்.

8. விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிக்காரர்கள் முருகன், நரசிம்ம பெருமாள், திருப்பதி வெங்கடாஜலபதி, வேல் ஆகிய சின்னங்களை அணியலாம்.

9. சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமான், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி ஆகிய திருவுருவப் படங்களை அணியலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் சரஸ்வதியின் படத்தை அணிவது நல்லது.

10. கடகம் ராசி:
கடக ராசிக்காரர்கள் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணர், மகாலட்சுமி, குருவாயூரப்பர் ஆகிய படங்களை அணியலாம்.

11. மகரம் ராசி:
மகர ராசிக்காரர்கள் அவர்களது குலதெய்வம், முருகன், விஷ்ணு, நரசிம்மர், குபேரர் ஆகிய திருவுருவ படங்களை அணிந்து கொள்ளலாம்.

12. துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்கள் சூலம், வேல், மகாலட்சுமி, சிவபெருமான் ஆகிய படங்களை அணிந்து கொள்ளலாம்.

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது.இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோருக்கு காய்கறி,பழங்கள் சாப்பிடுவது பிடிக்காத விஷயமாக இருக்கின்றது.ஆரோக்கியம் இல்லாத பாக்கட் உணவுகள்,ஜங்க் புட்ஸ்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் இளம் வயதில் ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே காய்கறி மற்றும் பழங்கள் பிடிக்காதவர்களை அவற்றை விரும்பி சாப்பிட வைக்க நாம் ஆரோக்கிய வழிகளை பின்பற்றலாம்.சிலருக்கு சில பழங்கள் பிடிக்காமல் இருக்கும்.அந்த பழங்களை மால்ட் பவுடராக பாலில் கலந்து கொடுக்கலாம்.

தற்பொழுது மால்ட் பவுடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.பீட்ரூட்,கேரட்,ஆப்பிள்,பருத்தி விதை,கொய்யா,அத்தி என்று பலவற்றில் மால்ட் பவுடர் தயாரிக்கப்படுகிறது.பழங்கள் சாப்பிடாதவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மால்ட் பவுடரை சாப்பிட கொடுக்கலாம்.

அதேபோல் காய்களை சரியான முறையில் உலர்த்தி பவுடராக அரைத்து குழம்பு,கூட்டில் கலந்து சாப்பிடலாம்.காய்களை பவுடராக அரைத்து தண்ணீர்,பால் போன்றவற்றில் கலந்து குடித்தால் அதன் முழு சத்தும் கிடைத்துவிடும்.

ஒரு பழம் மற்றும் காய்கறியில் கிடைக்கும் சத்துதான் மால்ட் பவுடரில் கிடைக்கிறது.இயற்கையான முறையில் மருந்து அடிக்கப்படாத காய்கள் மற்றும் பழங்களை சரியான பக்குவத்தில் உலர்த்தி பொடித்து பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.உங்கள் வீட்டில் சிலருக்கு சிலவகைஇ காய்கள் பிடிக்காமல் இருக்கலாம்.அவர்களுக்கு அந்த காயின் சத்து கிடைக்க அந்த காயை சாப்பிட வைக்க மேலே சொல்லியபடி செய்யலாம்.

அதேபோல் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரசி வகைகளை அரைத்து பவுடராக்கி தோசை,இட்லி,கஞ்சி,கூழ் போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம்.

உங்கள் குழந்தை ஒழுக்கம், படிப்பு என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்க வேண்டுமா..?? இந்த 5 பழக்கங்களை மட்டும் கற்றுக் கொடுங்கள்..!!

0

குழந்தைகளது பழக்க வழக்கங்கள் என்பது பெற்றோர்களாகிய நாம் வளர்க்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய மற்றும் பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தில் தான் குழந்தைகளும் வளர்வார்கள். எனவே சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தேவையான ஒழுக்க முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு தேவையான சூழ்நிலைகளை பெற்றோர்கள் தான் அமைத்து தர வேண்டும்.

குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெற்றோர்கள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி தற்போது காண்போம்.

1. பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய வீட்டுப்பாடத்தை மறுபரிசீலனை செய்வது:

தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் குழந்தைகள் தங்களுடைய வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முந்தைய நாள் கற்றதை திருப்பி பார்ப்பதால் அவர்களுடைய நினைவாற்றல் மேம்படும். முந்தைய நாள் பாடங்களை ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்வதால், அன்றைய தினம் பள்ளியில் நடத்தப் போகும் பாடங்களின் அறிமுகத்திற்கு தயாராகிவிடுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், காலையில் படித்தவற்றை திருப்பி பார்க்கும் குழந்தைகள் 30 சதவீதம் அறிவுச் செறிவுடன் வளர்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

2. காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது:

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டில் கொடுத்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளுடைய உடலில் நீர்ச்சத்து இருந்தால் அவர்களுடைய மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்படாது.

கடந்தாண்டில் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படும் குழந்தைகள் 25% விழிப்புடன் கற்பதாக தெரியவந்துள்ளது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால் அவர்களுடைய படிப்பு கெட்டுவிடும் வாய்ப்புள்ளது.

3. செல்போன் கொடுப்பதை தவிர்ப்பது:

காலையில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். டிவி, லேப்டாப் மற்ற கேஜட்டுகளில் இருந்தும் அவர்களை விலக்கி வைக்க வேண்டும். அதிகமாக டிஜிட்டல் திரைகளை காண்பது அவர்களுடைய மூளையை சோர்வடையச் செய்யும். இதனால் கவனச் சிதறல் ஏற்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் காலையில் அதிக திரைநேரத்தை கொண்டிருக்கும் குழந்தைகள் கவனம் 40 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுடைய ஆர்வம் குறையும். காலையில் குழந்தைகளை புத்தகம் படிப்பது, தோட்ட வேலைகள் செய்வது என ஆக்டிவாக வைக்கலாம்.

4. அதிகாலை சீக்கிரம் எழுவது:

குழந்தைகளை அதிகாலை சீக்கிரம் விழிக்க பழக்க வேண்டும். குழந்தைகள் சீக்கிரம் எழுந்தால்தான் பள்ளிக்கு செல்ல தயாராக அதிகமான நேரம் கிடைக்கும். அமைதியாகவும், உற்சாகமாகவும் அந்த நாளை தொடங்க முடியும். தாமதமாக எழுந்தால் எல்லாவற்றையும் அவசர அவசரமாக செய்துவிட்டு கிளம்ப வேண்டியிருக்கும்.

சில குழந்தைகள் காலை உணவையே தவிர்க்கும் சூழல் ஏற்படும். இதனால் எரிச்சலுடன் பள்ளிக்கு கிளம்புவார்கள். 2023இல் செய்யப்பட்ட கணக்கெடுப்பில், காலை 7 மணிக்கு முன்பாக எழும் குழந்தைகள் பள்ளியில் அதிக ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பதாக தெரிய வந்தது.

5. ஆரோக்கியமான உணவை கொடுப்பது:

குழந்தைகளுக்கு காலையில் ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் காலை உணவுதான் மூளை உணவு எனப்படும். முட்டை, ஓட்ஸ், பழங்கள், பாதம், பிஸ்தா போன்ற கொட்டைகள், உலர் பழங்கள் போன்றவை கொடுக்க வேண்டும். இவற்றில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு ஆகியவை உள்ளன. இவை மூளைக்கு உற்சாகத்தை கொடுத்து படிப்புக்கு உதவும். குழந்தைகள் பள்ளியில் சிறந்து விளங்க ஆரோக்கியமான உணவும் காரணம்.

மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

0

பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக இறங்கி சாமி வந்து ஆடி தனது பக்தர்களது குறைகளை போக்க, அருள்வாக்கு சொல்வது என்பது எந்த அளவிற்கு உண்மை? சாதாரண மனிதர்கள் மீது கடவுள் வருவது உண்மையா? அவர்கள் கூறும் அருள்வாக்குகள் உண்மையா? என்பது குறித்து தற்போது காண்போம்.

ஒரு நாணயத்திற்கு எப்படி இரண்டு பக்கங்கள் உள்ளதோ அதே மாதிரி தான் இந்த உலக மக்களும். கடவுளை நம்ப கூடியவர்கள் ஒரு பக்கம், தெய்வபக்தியில் மூழ்கி இருப்பார்கள். கடவுளை நம்பாதவர்கள் இன்னொரு பக்கம், இது அனைத்தும் ஒரு மூடநம்பிக்கை, நரம்பு தளர்ச்சி, அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் இருப்பார்கள்.

பொதுவாக மற்றவர்களுக்கு சாமியை வரவழைக்க இரண்டு முறைகளை பின்பற்றுவார்கள்.
1. வர்ணித்து வரவழைத்தல்-அந்த சாமிக்கு உகந்த பாடல்களைப் பாடி சாமியை வரவழைப்பார்கள்.

2. உடுக்கை அடித்து வரவழைத்தல்-கோவில்களில் பால்குடம், தீர்த்த குடம் போன்ற நிகழ்ச்சிகள் உறுமி மேளம் அடுத்து தான் நடைபெறும். எனவே தான் கோவில்களில் பெரும்பாலானோருக்கு சாமி வருவது என்பது நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த உறுமி மேளத்தின் சத்தம் தான்.

இசை ஆனது ஒரு மனிதனை எளிமையாக ஊடுருவி கொள்ளும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சத்தத்தின் பொழுது உணர்ச்சிவசப்பட்டு, தன்னை அறியாமல் தான் பலரும் ஆடுகின்றனர். எனவே இந்த சப்தத்தின் பொழுது ஒன்று காதை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.

இவை அல்லாமல் தெய்வத்தின் மீது கொண்ட பக்தியால் அந்த உறுமி மேளத்தை நாம் ஆழ்ந்து கேட்கும் பொழுது, அந்த இசை நம்மை ஆட்டிப்படைத்து விடும். இதுதான் இசையின் வலிமையும் ஆகும். இசையிலிருந்து வரும் ஒலியின் அதிர்வெண்ணும், சாமி வந்து ஆட கூடியவர்களின் ஆழ்மனதில் இருக்கக்கூடிய அதிர்வெண்ணும் ஒன்று சேரும்பொழுது அவர்கள் தன்னை மறந்து ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அப்படியே வெளிப்படுத்துவார்கள்.

இசையின் வேகம் அதிகமாகும் பொழுது அவர்களது வேகமும் அதிகமாகும். அதேபோன்று இசையின் வேகம் குறையும்பொழுது அவர்களது வேகமும் குறையும். அந்த நேரத்தில் அவர்கள் கூறக்கூடிய அருள் வாக்குகள் அனைத்தும் அவர்களது ஆழ்மனதிலிருந்து கூறக் கூடியவைகள்.

அந்த இடத்தில் கண்களை மூடி அவர்களது ஆழ் மனதில் இருக்கக்கூடிய அதீத கற்பனை மற்றும் அதீத கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாக தான் சாமி வந்து அருள்வாக்கு கூறுவது. சாமி ஆடும் மனிதர்கள் தன்னை கடவுளின் மறு உருவமாகவே கற்பனை செய்து வைத்துக் கொள்கின்றனர்.

சிலர் வசியம், மாந்திரீகம், ஒருவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மற்றவர்களுக்கு கெட்டதை செய்யவும் நிறைய பேர் சாமி வந்து அருள்வாக்கு சொல்வதாக பலரை ஏமாற்றி வருகின்றனர். யார் ஒருவர் நல்லதே செய்கிறார்களோ அவர்களுக்கு நல்லதே நடக்கும். அவர்கள் கூறும் அருள்வாக்கும், ஜாதகமும் சரியாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி அவர்கள் கூறும் பொழுது அவர்களது வாக்கு பலிக்கும்.

ஆன்மீக நாட்டமும், முறையான இறைவழிபாடும், தியானம், தவம் இருப்பவர்களுக்கும் உண்மையாகவே சாமி வந்து அருள் வாக்கு கூறும் பொழுது அவை பலிக்கும். இவ்வாறு இல்லாதவர்கள் கூறக்கூடிய வாக்கு பலிக்காது.

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

0

அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது.

நமது விளக்கில் ஊற்றக்கூடிய எண்ணையும், திரியும் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் ஏற்றக்கூடிய தீபத்தினை ஒருபோதும் வாயினால் ஊதி அணைக்க கூடாது. அவ்வாறு ஊதி தீபத்தினை அணைத்தால் நமது வீடுகளில் தரித்திரம் வந்து குடியேறும் என்பது சாஸ்திரத்தின் கருத்து.

அவ்வாறு வாயினால் ஊதி தீபத்தினை அணைப்பது இறைவனை அவமதிப்பதற்கு சமமாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு நமது வீட்டில் தீபம் இயற்றிய பிறகு அந்த விளக்கில் மீதம் இருக்கும் திரியை பலரும் தூக்கி எறிந்து விடுவர். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. இந்த மீதமுள்ள திரியை என்ன செய்யலாம்? என்பது குறித்த தகவல்களை தற்போது காண்போம்.

வீட்டிலோ அல்லது கோவிலிலோ தீபம் ஏற்றும் பொழுது பருத்தியால் செய்யப்பட்ட திரியை நெய், நல்லெண்ணெய் மற்றும் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றுவார்கள். தினமும் நமது வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு அந்த விளக்கில் உள்ள திரியானது முழுமையாக எரிந்து, சாம்பலாக மாறி இருக்கும் அல்லது பாதி அளவு திரி அப்படியே விளக்கில் மீதம் இருக்கும்.

இந்த மீதம் உள்ள விளக்கு திரியின் சாம்பல் மற்றும் திரிகளை எக்காரணம் கொண்டும் குப்பையில் போடக்கூடாது. இது சாஸ்திரத்தின் படி தவறு என்றும் கூறப்படுகிறது. விளக்கில் மீதம் இருக்கும் சாம்பல் மற்றும் திரிகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திரிகள் நமது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்க பயன்படுகிறது.

இந்து மதத்தில் பூஜையின் பொழுது வீட்டு தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம். இந்த வழக்கமானது பல நூற்றாண்டு காலங்களாக தொடர்ந்து வருகிறது. பூஜைக்குப் பிறகு மீதம் இருக்கும் பருத்தி திரிகளை ஒரு இடத்தில் சேகரித்து வையுங்கள். திரிகள் அதிகமாகி விட்டால் அவற்றை எரித்து சாம்பலாக மாற்றி, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சாம்பலை குழந்தைகளுக்கு தினமும் நெற்றியில் வைத்து விடுவதன் மூலம் எந்த வித தீய சக்திகளும் குழந்தைகளிடம் நெருங்காது. இந்த மீதம் இருக்கும் விளக்கு திரிகளை கற்பூரத்துடன் சேர்த்து நமது வீட்டின் ஈசானி மூலையில் வைத்து எரிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். எக்காரணம் கொண்டும் கழிவறை பகுதியில் இந்த திரிகளை எரிக்கக் கூடாது.

பூஜையில் பயன்படுத்தப்பட்ட இந்த திரிகள் மந்திரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவை. இந்த திரிகளை கற்பூரத்துடன் சேர்த்து நமது வீட்டில் எரிப்பதால் எதிர்மறை சக்திகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது அதனுடன் கற்பூரம், கிராம்பு மற்றும் இந்த திரிகளை போட்டு தூபம் போடுவதன் மூலம், நமது வீட்டில் காற்றில் பரவி இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும். இந்த முறைகளில் விளக்கு திரிகளை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் இந்த திரிகளை எரித்து மண் தொட்டிகளில் போட்டு விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் குப்பைத் தொட்டியில் மட்டும் போட்டு விடக்கூடாது.

1000 கோடி வருமானம்!. ஆனா வரி கட்டினது இவ்ளோதான்!.. விஜயை பொளக்கும் சபாநாயகர்!…

0

ரசிகர்களால் தளபதி என என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். அதாவது, வெள்ளை சட்டை அணிந்து அரசியல்வாதியாக மாறிவிட்டார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

ஜனநாயகன் படத்தை முடித்தபின்னர் தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். விஜயின் அரசியல் வருகை அதிமுக, திமுக, பாஜக, நாதக போன்ற எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எனவே, எல்லோருமே விஜயை விமர்சிக்கவும், திட்டவும் துவங்கிவிட்டனர்.

பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘தலைவர் வருஷத்துக்கு 1000 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார்’ என பேசினார். இதை கையில் எடுத்த திமுகவினர் விஜயின் வருமானத்தை வருமான வரித்துறையோடு ஒப்பிட்டு பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அய்யாவு ‘ விஜய் 1000 கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக கட்சி நிர்வாகிகள் பேசுகிறார்கள். அப்படியெனில் 300 கோடியை அவர் வரியாக கட்டியிருக்க வேண்டும். ஆனால், விஜய் கடந்த வருடம் 80 கோடி மட்டுமே வரி கட்டியிருக்கிறார். மீதமுள்ள 220 கோடியை வருமான வரித்துறை வசூல் செய்யுமா?. அப்படி இல்லையெனில் பாஜக சொல்லித்தான் விஜய் கட்சியை துவங்கியுள்ளார் என்பது உண்மையாகிவிடும்’ என பேசியிருக்கிறார்.

4 சுவற்றுக்குள் அரசியல்!. 2 வருஷம் ஓடிப்போச்சி!.. விஜயை கலாய்க்கும் கே.பி.முனுசாமி!…

0

Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

விஜயின் அரசியல் வருகை அதிமுக, திமுக, பாஜக, நாதக போன்ற எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எனவே, எல்லோருமே விஜயை விமர்சிக்கவும், திட்டவும் துவங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜய் இன்னும் மக்களையே சந்திக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள் இரண்டு ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார். களத்தில் இறங்கி அவர் அரசியல் செய்ய வேண்டும்’ என பேசியிருக்கிறார்.